புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_vote_lcapவேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_voting_barவேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_vote_lcapவேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_voting_barவேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_vote_lcapவேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_voting_barவேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_vote_lcapவேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_voting_barவேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_vote_lcapவேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_voting_barவேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_vote_lcapவேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_voting_barவேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_vote_lcapவேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_voting_barவேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_vote_lcapவேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_voting_barவேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_vote_lcapவேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_voting_barவேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Aug 08, 2010 12:06 pm

வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !
* ----அண்ணாமலை சுகுமாரன்
இது திருவாசகத்தில் சிவபுராணத்தில் வரும் ஒரு புகழ் பெற்ற வைர வரிகள் .
இதில் வேகம் என்று மாணிக்க வாசகர் எதை குறிப்பிடுகிறார் ,
வேகமேன்பது நாம் நடை முறையில் குறிப்பிடும் தூல பொருளின் வேகமா ?அல்லது நாம் நடை முறையில் தினசரி செய்யும் காரியங்களில் இருக்கும் வேகம்மா ?அல்லது ராஜச நிலையில்
இல்லாது தாமச நிலையில் வேகம் இல்லாது இருக்கச்சொல்கிறாரா ?

மேலும் இறைவனை வேகம் கெடுத்த வேந்தன் என்கிறார்
,ஆக வேகம் கெடுப்பது இறைவனின் சிறப்பா ?
அவர் காரியத்தில் வேகம் இல்லது அமைதியாக செய்ய வேண்டும் என்கிறாரா /

புலன்களின் வேகத்தைக் குறைக்கச் சொல்கிறாரா ?
அதைத்தான் கள்ள புலன்கள் என்று வேறு இடத்தில் கூறுகிறாரா ?
அல்லது அந்தக் காரணங்களான புத்தி ,மனம் சித்தம் அகங்காரம் இவைகளின்
வேகம் குறைய வேண்டும் என்கிறா ?
கண்ணுக்கு தெரியாத புலன்களின் வேகத்தை குறைக்கச் சொல்கிறாரா ?
தூல புலன்களின் வேகத்தை குறைக்கச் சொல்கிறாரா ?
ஆனால் கண்ணுக்கு தெரியாத புலன்களின் வேகத்தை குறைத்தாலே ,புறப் புலன்களின்
வேகம் தானே குறைத்துவிடும் !

எனவே மனோ வேகத்தை குறைத்து அல்லது அகற்றி என்னை ஆட்கொண்ட இறைவா என்கிறார்
என்றுதான் கொள்ளவேண்டும் .
மனம் தான் ஒளியைவிட வேகம் ஆயிற்றே ஒளியின் வேகம்
1,86,000 miles/sec என்றல் மனம் அதைவிட வேகமாக தான் நினைக்கும் பொருளை சென்று பற்றும் ஆற்றல் உடையது ஆயிற்றே ?
அந்த மனதின் வேகத்தை கெடுப்பது என்றால் என்ன ?
இந்த குரங்கு மனம் அங்கும் இங்கும் சென்று எதையும் பற்ற ஒரு எண்ணம் வேண்டும் .
இந்த உள்ளத்தில் எண்ணம் என்னும் கொத்திப்பு ஓயாமல் பொங்கி வருகிறது .

எண்ணம் வரும் வேகம் தான் அதன் கொதிப்பு,
புசு புசு என எண்ணங்கள் கிளைத்து வரும் வேகம் இருக்கிறதே ! அப்பப்பா !
அந்த கொதிப்பை பொறுத்தே
எண்ணம் வேகம் வேகம் ஆக முளைத்து வருகிறது .

எண்ணங்களை நிறைவேற்ற பிறவிகளும் பெரிகி வருகிறாது .
இத்தகைய எண்ணங்களை ஓயாமல் உண்டாக்கும் கொத்திப்ப்தான் என்ன ?
அதை உண்டாக்குவது எது ?
அந்தக் கொதிப்பை வேகத்தை உண்டாக்குவது ஆசை எனும் தீதான் !

எண்ணங்களுக்கு வலிவு கொடுப்பது ஆசைதான் .
ஆகையால் ஆசையையே வேகம் எனலாம் !
மனதில் ஆசை என்னும் விருத்தி இருந்தால்
பந்த பாசம் என்னும் அழுக்கு உண்டாகும்
ஆசை அகன்றால் மனத்திற்கு
மூலப் பொருள் ஆன ஆத்ம தர்சினம் கிடைக்கும்

இந்த ஆசைக்கு இருப்பிடம் அஞானம் .
இந்த அஞானம் அகன்றுடன் ஆசை அகன்று விடுகிறது .
அது அத்தனை சுலபமா ?
அந்த அஞானம் எப்படி அகலும் ?
இறைவனது அருள் கிடைத்ததும் அஞானம்
அகலுகிறது ?
அது என்ன ஞானம் ?
அதை அருளும் இறைவன் எங்கே இருக்கிறார் ?
இதை யாரிடம் கேட்ப்பது ?
வீட்டில் உள்ளவரில் யார் வயதில் மூத்தவரோ அவர் கூறியததான்
நாம் உண்மை சரி என்று எடுத்து கொள்ளவோம் .அப்படியே
நமது பண்டைய முதுசெம் உபநிஷங்கள் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம் .
*ஹ்ர்தி ஹ்யேஷ் ஆத்மா !*
இந்த ஆத்மாவானது ஹிர்தயத்தில் வசிக்கிறது என்கிறது
பிரச்நோபதிஷதம் 3-6
*யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வியோமன் !
ஸ்மாஸ்னுதே ஸாவான் கர்மான் ஸ !*
பரம ஆகாசமாகிய ஹிர்தய குகையில் வீற்றுஇருக்கும்
பிருமத்தை யார் அறிகின்றானோ அவன் ஆசைகள் அனைத்தையும்
நிறைவேறப் பெற்றவன் ஆகிறார் என்கிறது
தைத்திரீயோபநிஷாதம் 2-1 கூறுகிறது .

அதாவது வேகத்தை அடக்க எண்ணத்தை அடக்க வேண்டும் .
எண்ணங்களின் கொதிப்பை அடக்க ஆசையை அடக்க வேண்டும்
ஆசையை அடக்க
அஞானம் போகவேண்டும்
அஞானம் போக ஒரே வழி ஞானம் வரவேண்டும் .
ஒளி வந்தால் தான் இருள் விலகும் !
வேறு வழி இல்லை .
ஞானம் வர இறைவன் அருள் வேண்டும்
அந்த இறைவன் ஒவ்வொருவர் உள்ளத்தில்
இருக்கிறான் .


அவன் அங்கே இருக்கிறான் என்பதை
அந்த ஞானத்தை அறிந்த உடனே
அவன் ஆசைகளுக்கு அப்பால் பட்டவன் ஆகிறான் .
அவன் வேகம் தானே குறைகிறது !
ஆழ்ந்த ஒரு அமைதி அவனை ஆட்கொள்கிறது
ஆனால் அறிவது என்பது பூரணமாக உணர்தலே !
சும்மா அரை குறை எல்லாம் அறிதல் ஆகாது .
அறிந்துடனே அது வயமாதல் நடைபெறுகிறது .

இது வேகம் கெடுக்கும் வழி என மாணிக்க வாசகர் கூறுகிறார் .
ஆனால் இந்தக் கூற்றை அப்படியே ஒப்புக் கொள்லாதவர்க்கு இதில் சந்தேகம்
உடையவர்களுக்கு
நவீன விஞானம் மூளைப் பற்றி விளக்கும் போது என்ன கூறுகிறது என்று பார்ப்போம்
.அது நமது
முளை நான்கு நிலைகளில் வேலை செய்வதாக குறிப்பிடுகிறது .
நமது மூளையின் முழு வேலையே அது விழிப்புணர்வில் இருப்பது தான்
அந்த விழிப்புணர்வு அல்லது பிரக்ஞையின் மட்டங்கள் நான்காகப் பிரிக்கப்படுகிறது.
இந்த வெவ்வேறு பிரக்ஞையின் மட்டங்களில் மூளை அலைகளின் இயக்கம் வெவ்வேறு
அளவுகளில் உள்ளது.
மேல் பரப்பில் உள்ள பிரக்ஞை அல்லது விழித்திருக்கும் போது இருக்கும் பிரக்ஞை,
பீட்டா மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப் படுகிறது. இந்த பீட்டா நிலையில்
மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 14 முதல் 21 சைக்கிள் என்ற அளவில் உள்ளது.
அடுத்து ஆழ்மன பிரக்ஞையின் போது அதாவது கனவு நிலையில் உள்ள பிரக்ஞையின் போது
உள்ள நிலை ஆல்பா மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ஆல்பா
நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 7 முதல் 14 சைக்கிள் என்ற அளவிள்
உள்ளது.
அடுத்து ஹிப்னோதெராபி வேலை செய்யும் நிலை அல்லது யோசனைகள் ஆற்றலுடன் செயல்படும்
நிலையில் உள்ள பிரக்ஞை தீட்டா மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த தீட்டா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 4 முதல் 7 சைக்கிள்
என்ற அளவில் உள்ளது.
இறுதியாக ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பிரக்ஞை நிலை டெல்டா மட்டத்தில் உள்ளதாகக்
குறிப்பிடப்படுகிறது. இந்த டெல்டா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு
1.5 முதல் 4 சைக்கிள் என்ற அளவில் உள்ளது.
மூளை முழுதுமாக இயங்குவதற்காகச் செய்யப்படும் பயிற்சிகள் பீட்டா நிலையிலிருந்து
மிக சுலபமாக ஆல்பா மட்டத்திற்கும் பிறகு தீட்டா மட்டத்திற்கும் நம்மை ஏற்றி
விடுகிறது. இதைப் புரிந்து கொண்டு விட்டால் நாம் தீட்டா நிலையை எய்துவதற்காக
முழு முயற்சியை எடுத்து வெற்றி பெறுவோம்.
தியானம் செய்யும் யோகிகள் மிக சுலபமாக அதி வேகத்தில் டெல்டா நிலையை அடைவதாக
ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.
எனவே யோகம் ,தியானம் என்பதெலாம் நமது மூளையின் திறனை வேலை செய்யும் நிலை அல்லது
யோசனைகள் ஆற்றலுடன் செயல்படும் நிலையில் உள்ள பிரக்ஞை தீட்டா மட்டத்தில்
கொண்டு வருவதற்காக செய்யும் முயற்சிகளே .
இதிலும் நாம் வேகத்தை குறைப்பதற்கே முயற்சி செய்கிறோம் .
எனவே வேகம் கெடுவது நமது ஆன்மீக பயணத்தில் ஒரு படி முன் செல்வது தான்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மட்டத்தில் வேலை செய்கிறோம் ,அந்ததந்த மட்டத்திற்கு
தகுந்த படி அதற்க்கு ஒத்த படி ஒரே உண்மையை ,புரியும் படி அவரவர் நிலைக்கு
தகுந்ததா படி நமது பண்டைய ஞானிகள் விளக்கங்கள் கூறி வழி நடத்து கிறார்கள் .
ஆயிராம் ஆயிரம் ஆண்டுகளாக நமது ஞானிகள் நமது பரிணாம நிலை மனித தோற்றத்தோடு
மட்டும் முடியவதில்லை என்பதை புரிந்து கொண்டு ,நமது அடுத்த பரிணாம நிலைக்க்கு
மனித இனத்தை கொண்டு போக ஓயாமல் உழைத்து வந்துள்ளனர் .இது இன்றும் வாழையடி
வாழையாக தொடர்கிறது .
இந்தியாவில் கும்ப மேளாவில் கூடும் சாதுக்கள் ,சாதகர்கள் எண்ணிக்கை
ஒருக்கோடிக்கு மேல் .
அதாவது நமது மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் பேர் ஆன்மீகத்தொண்டில்
தங்களை ஈடு படுத்தி மக்களை மேம்படுத்த , மனித குலத்தை ஒரு படி மேலே கொண்டுபோக
,மனிதனை தேவனாக்க
உழைத்து வருகிறார்கள் .
இது சாதாரணக் காரியமா ?
வேறு எங்காவது இது சாத்தியமா ?
சும்மா இருப்பது ஒன்றும் சாதாரண காரியம் இல்லைங்க !
'வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !
அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 08, 2010 12:18 pm

வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  678642 வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  678642 வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  677196




வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !  Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக