ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி?

Go down

காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Empty காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி?

Post by நவீன் Sat Aug 07, 2010 4:43 pm

காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Kkkkko



ஸ்ரீநகர்,


காஷ்மீர்
மாநிலத்தின் வடகிழக்குப்பகுதியில் லடாக் பிராந்தியத்தில் உள்ள லே நகரில்
நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த பேய் மழை அந்த நகரையைப் புரட்டி போட்டு
விட்டது.


இந்த பேய் மழையை ஆங்கிலத்தில் கிளவுட் பர்ஸ்ட் என்று சொல்கிறார்கள்.

லே
நகரில் இன்று சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோக்லும்சர் என்ற
ஊரில் கிளவுட் பர்ஸ்ட் மேகம் மையம் கொண்டிருந்தது. நள்ளிரவு அது வெடித்து
சிதறியதும் சில மணி நேரத்துக்கு பேய் மழை பெய்தது. அயர்ந்துதூங்கிக்
கொண்டிருந்த லே நகர மக்கள் இந்த பேய் மழையை எதிர்பார்க்க வில்லை.


சிறிது
நேரத்தில் மழை நின்று விடும் என்று நினைத்துக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு
நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டபிறகே பேய் மழையின் கொடூரதாண்டவம்
புரியத்தொடங்கியது. பாதுகாப்பான இடங்களுக்கு பலர் தப்பிச்செல்ல,
மலைச்சரிவில் வசித்தவர்களால் தப்பஇயல வில்லை. அவர்களது வீடுகள் நொறுங்கி
விழுந்தன.


மழை
பெய்யத்தொடங்கிய சில மணி நேரத்துக்குள் லே நகரின் தெருக்களிலும்,
சாலைகளிலும் வெள்ளம் கரை புரண்டோடியது. தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த
கார்கள், மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. இதைக் கண்டு லே நகர
மக்கள் மிரண்டு போனார்கள்.


இந்த
நிலையில் லே நகரின் பல பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. சிறு, சிறு
குன்றுகளுடன் மேடும், பள்ளமும் நிறைந்த லே நகரில் பேய் மழை சீற்றம்
தாங்காமல் பல குன்றுகள் தண்ணீரில் கரைந்து சரிந்தன. இதன்காரணமாக மழை
வெள்ளம் சேறும், சகதியும் நிறைந்த புதை மணல் வெள்ளமாக மாறியது.


சகதி
வெள்ளம் லே நகரின் தாழ்வான பகுதிகளில் பாய்ந்து நிறைந்தது. இதன் காரணமாக
நூற்றுக்கணக்கான வீடுகளும், கார்களும் சகதி வெள்ளத் தில் புதை மணலில்
புதைவது போல புதைந்தன. சகதி வெள்ளம் நாலா பக்கமும் புகுந்த நிலையில்
மின்சார தொடர்பு துண்டிக்கப்பட்டது.


செல்போன்களும்
செயல் இழந்தன. இரவில் இந்த கொடூரம் நிகழ்ந்ததால் மக்கள் மிகவும்
திணறினார்கள். மலைச்சரிவில் சிக்கித் தவித்த மக்களை அரசு எந்திரங்களாலும்
உடனே காப்பாற்ற இயலவில்லை.


லே
நகரம் பழைய நகரம், புதிய லே நகரம் என்று இருவிதமாக உள்ளது. இருலே
நகரங்களும் மழை வெள்ளத்தில் மூழ்கியது. குறிப்பாக கிளவுட் பர்ஸ்ட் மேகம்
மையம் கொண்டிருந்த சோக்லும்சர், சபு, பியாங், நிம்மூ மற்றும் லே புறநகர்
ஆகிய 5 பகுதியில் இந்த பல்லாயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கின.


அரசு
கட்டிடங்கள், விமான நிலையம், பஸ் நிலையங்கள், போலீஸ் படை முகாம்கள்,
சிதைந்தன. சகதி கலந்த வெள்ளம் பல பகுதிகளை மண்மேடாக்கி விட்டது. இந்த
இயற்கை சீற்றத்தால் பிறபகுதிகளுடன் இருந்து லே நகரம் துண்டிக்கப்பட்டது.


பேய்
மழையில் சிக்கி 120-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். மழை
வெள்ளத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட அவர்களில் 115 பேர் உடல்கள்
மீட்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்
சிக்கிகாயம் அடைந்தனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி? Empty Re: காஷ்மீரில் பேய் மழை இன்றும் நீடிப்பு: வீடுகள் புதைந்ததால் 500 பேர் பலி?

Post by நவீன் Sat Aug 07, 2010 4:43 pm

அவர்களில்
420 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அதில்பலரது நிலை
கவலைக்கிடமாக உள்ளது. லே நகரில் எங்குபார்த்தாலும் மக்களின் அழுகுரல்
கேட்கிறது.


லே
நகருக்குள் உடனடியாக மீட்புப்படையினரால் செல்ல இயலவில்லை. ஏராளமான
இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கார்கில்-லே, மனாலி-லே தேசிய
நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து சகதி வெள்ளத்தால் நிறைந்திருந்த
லே நகர விமான நிலையம் முதல்கட்டமாக சீரமைக்கப்பட்டது.


உடனடியாக
அங்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உதவிப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
பேரழிவு மீட்புப்படையினரும், ராணுவ வீரர்களும் சுமார் 6 ஆயிரம் பேர் அங்கு
விரைந்தனர். தற்போது லே நகர் முழுவதும் மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன.


ஒவ்வொரு
பகுதியாக மீட்புப்பணிகள் நடக்க, நடக்கத்தான் எத்தனை பேர் காணாமல்
போனார்கள் என்பது தெரிய வந்தது. இது வரை சுமார் 500 பேர் காணவில்லை என்று
தெரிய வந்துள்ளது. அவர்களில் 25 பேர் ராணுவ வீரர்களாகும்.


இவர்கள்
கதிஎன்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணிதீவிரமாக நடந்து
வருகிறது. லே நகரில் விட்டு, விட்டு மழை பெய்வதால் மீட்புப்பணிகளை ராணுவ
வீரர்களால் வேகமாக செய்ய இயலவில்லை.


இன்று
காலையிலும் பேய் மழை நீடித்தது. இதனால் ராணுவ வீரர்களால் எந்தவித
மீட்புப்பணியிலும் ஈடுபட முடியவில்லை. இதையடுத்து மீட்புப்பணி
நிறுத்தப்பட்டது.


மழை
முடிந்த பிறகே மீட்புப்பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே காஷ்மீர் முதல்- மந்திரி உமர் அப்துல்லா லே நகருக்கு சென்று
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

சீரமைப்பு பணிகளுக்காக முதல்கட்டமாக அவர் ரூ.5 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

ஸ்ரீநகரில்
இருந்து 424 கிலோ மீட்டர் தொலைவில் லே நகரம் கடல் மட்டத்தில் இருந்து 11
ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ளது. அங்குள்ள சிறு, சிறு மலைக்குன்றுகள்
மலையேற்ற பயிற் சிக்கு ஏதுவாக உள்ளன. இது தவிர இயற்கை எழில் கொஞ்சும்
பகுதி என்பதால் உலக அளவில் சிறந்த சுற்றுலா தல மாகவும் லே உள்ளது.


நேற்று
முன்தினம் இரவு பேய் மழை லே நகரை சின்னா பின்னாமாக்கியபோது சுமார் 2
ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அங்கிருந் தனர். அவர்களில் பெரும்பா
லானவர்கள் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களும் சகதி வெள்ளத்தில்
சிக்கிக் கொண்டனர்.


அவர்களில்
120 பேரை ராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
வெளிநாட்டு பயணிகள் நிலை குறித்து அறிய 00870763613623 என்ற அவசர உதவி
போன் எண்ணை காஷ்மீர் மாநில அரசு அறிவித்துள்ளது.


இது
தவிரகட்டுப்பாட்டு அறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அதை 09906990787 மற்றும்
09906990835 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உதவிகள், தகவல்கள் பெறலாம்.


லே
நகரில் ஏற்பட்ட சகதி வெள்ளத்தில் சிக்கியகார்கள் சுமார் 60 மைல்
தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டிருந்தன. பலகார்கள் கடுமையாக சேதம்
அடைந்து விட்டன. ஆயிரக்கணக்கான வீடுகளும் பலமைல் தொலைவுக்கு இழுத்து
செல்லப்பட்டுகிடந்தன.


இதனால்
லட்சக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு உதவி செய்யும் நடவடிக்கை களை மத்திய- மாநில அரசுகள்
தொடங்கியுள்ளன.


முதல்
கட்டமாக 2 ஆயிரம் குடும்பத்தினர் அரசு கட்டிடங்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் சாலைகள் நிலச்சரிவால் மூடப்பட்டு
கிடப்பதால் மக்களை, நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரும் பணியும் மெல்ல
நடந்து வருகிறது.






1
1
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» மழை சேதங்களை பார்வையிட்டார் காஷ்மீரில் வீடு இழந்தவர்களுக்கு மீண்டும் புதிய வீடுகள் பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு
» வன்முறையில் 25 பேர் பலி: தாய்லாந்தில் கலவரம் நீடிப்பு
» காஷ்மீரில் சாலை விபத்து: 9 பேர் சாவு
» காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
» காஷ்மீரில் இரட்டை தாக்குதல்: 6 போலீசார் உள்பட 12 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum