ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீர் பிரச்னை: பின்னணியில் பாகிஸ்தான்: நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

Go down

காஷ்மீர் பிரச்னை: பின்னணியில் பாகிஸ்தான்: நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு Empty காஷ்மீர் பிரச்னை: பின்னணியில் பாகிஸ்தான்: நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

Post by நவீன் Sat Aug 07, 2010 12:53 pm

புது தில்லி,

காஷ்மீர் பிரச்னையில், பின்னணியில் இருந்து பாகிஸ்தான் செயல்படுகிறது என
மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், எதிர்க்கட்சித் தலைவர்
அருண் ஜேட்லி ஆகியோர் குற்றம்சாட்டினர். பல்வேறு பிரச்னைகளில்
எதிரெதிர் நிலையைக் கொண்டுள்ள காங்கிரஸýம், பாஜகவும் இப் பிரச்னை தொடர்பாக
ஒரே விதமான கருத்தை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.காஷ்மீர் பிரச்னை தொடர்பாக மாநிலங்களவையில் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை பேசியதாவது:காஷ்மீர்
பிரச்னையில் பாகிஸ்தான் தனது உத்தியை மாற்றிக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
பயங்கரவாதிகளை அனுப்புவதைவிட சாதாரண மனிதர்களை கிளர்ச்சி செய்யத்
தூண்டுவதன் மூலம் அதிக பலன் கிடைக்கும் என பாகிஸ்தான் கருதத்
தொடங்கியுள்ளது.இந்நிலையில், நாம் அனைவரும் முனைந்து வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.ஜம்மு- காஷ்மீர் மக்களின் மனதை வெல்வது மிக முக்கியம். இப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காணமுடியும்.ஏற்கெனவே தொடங்கிய அமைதிப் பேச்சு, ஒரு தலைவர் மீதான கொலைவெறித் தாக்குதலைத் தொடர்ந்து 2009 டிசம்பர் 4-ல் தடைப்பட்டது.இப்போதும்
பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்.
இப்பேச்சுவார்த்தையில் ஹுரியத் தலைவர் சையத் அலி ஷா ஜீலானி உள்ளிட்டவர்கள்
பங்கேற்க வேண்டும்.வன்முறையைக் கைவிட வேண்டும் ஜீலானி வேண்டுகோள் விடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. இது நல்ல அறிகுறி.சமநீதி, கௌரவத்துடன் கூடிய ஒரு தீர்வு அரசியல்ரீதியாக எட்டப்படுவதற்கு நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியம்.இப் பிரச்னை தொடர்பாக மத்திய அரசு சில வாக்குறுதிகளை அளித்துள்ளது. அவற்றை நிறைவேற்ற முழு முயற்சிகளை மேற்கொள்வேன்.இப்போதுள்ள
நிலையில், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதே முன்னுரிமைப் பணியாகும்.
சட்டம் - ஒழுங்கு சீர்குலைவதற்கு எந்தவோர் அரசும் அனுமதிக்காது.மாநிலத்தில்
நிலைமை மேம்பட்டால், கடந்த ஆண்டைப் போல பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை
குறைக்கப்படும். தேவைப்படும்பட்சத்தில், கூடுதலாகவும் பாதுகாப்புப்
படையினர் அனுப்பிவைக்கப்படுவர்.ஓங்குகிறது பிரிவினைக் குரல்: கடந்த
காலங்களில் காஷ்மீருக்கு ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.கள் வேண்டும் என குரல்கள்
ஒலித்தன. ஆனால், அந்தக் குரல்களை சுதந்திரம் வேண்டும் என ஒலிக்கும்
குரல்கள் இப்போது அடக்கிவிட்டன. ஆனால், இது தாற்காலிக நிலைதான். ஐ.ஐ.டி. வேண்டும் என்ற குரல் மீண்டும் ஓங்கி ஒலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இந்தியாவுடன் இருப்பதே தங்கள் எதிர்காலத்துக்கு நன்மை என்பதை காஷ்மீரிகள் மீண்டும் கூறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.ஆயிரத்துக்கும்
மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தபோதும், மழைபோல பொழியும் கற்களுக்கு இடையே
மிகுந்த பொறுமையை பாதுகாப்புப் படையினர் கடைப்பிடித்து வருகின்றனர்.காஷ்மீரில் தற்போது வன்முறை குறையத் தொடங்கியுள்ளது. ஆனால், அமைதியின்மை முடிவுக்கு வரத் தொடங்கியுள்ளது என கூற முடியாது.பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தாலும் அது அரசின் நம்பகத்தன்மையைக் குறைத்துவிடும்.திங்கள்கிழமை
அனைத்துக் கட்சிக் கூட்டம்: இப் பிரச்னை தொடர்பாக அனைத்துக்
கட்சியினரையும் பிரதமர் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.காஷ்மீரைச்
சேர்ந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் மன்மோகன் சிங்
ஒப்புக் கொண்டுள்ளார். அந்த சந்திப்பு வரும் திங்கள்கிழமையே நிகழ
வாய்ப்புள்ளது.அதேபோல, நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் பிரதமர் விரைவில் ஆலோசனை நடத்துவார்.370-ஐ
ரத்து செய்ய முடியாது: எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி கோரியது போல,
மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துள்ள அரசமைப்புச் சட்டத்தின்
370-வது பிரிவை ரத்து செய்ய முடியாது.63 ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்னைக்கு 370-வது பிரிவை நீக்குவது தீர்வாக அமையாது. இந்தியாவுக்கு
எதிராகப் பேசவில்லை ஐ.நா. பொதுச் செயலர்: காஷ்மீர் பிரச்னை தொடர்பாக
இந்தியாவுக்கு எதிரான எந்தக் கருத்தையும் ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ
மூன் தெரிவிக்கவில்லை. அவரது அலுவலகத்தில் பணிபுரியும்
அதிகாரிகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர்தான் இந்தியாவுக்கு எதிராக
அறிக்கை அளித்துள்ளார் என்றார் ப.சிதம்பரம்.

சலுகைகள் கூடாது


மாநிலங்களவையில் பாஜக தலைவர் அருண் ஜேட்லி பேசியதாவது:காஷ்மீரில் நிலைமை எல்லைமீறிப் போய்விட்டதையே அங்கு நடைபெறும் சம்பவங்கள் காட்டுகின்றன.இந்நிலையில்,
அவசரப்பட்டு எந்தவிதமான சலுகை அறிவிப்புகளையும் அரசு வெளியிடக் கூடாது.
அப்படி அறிவித்தால், நமது கனவு என்றாவது நிறைவேறும் என்ற எண்ணத்தை
பிரிவினைவாதிகளுக்கு உருவாக்கிவிடும்.பயங்கரவாதிகள் மூலம் தீவிரவாத
நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, வன்முறையில் ஈடுபட மக்களை
பாகிஸ்தான் தூண்டுகிறது என்றார் ஜேட்லி.

முழு சுயாட்சி அளிக்க வேண்டும்


மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலர் டி.ராஜா பேசியதாவது: பாதுகாப்புப்
படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அமல்படுத்துவதிலிருந்து குறைந்தபட்சம்
ஸ்ரீநகருக்காவது விலக்கு அளிக்க வேண்டும். மாநிலத்துக்கு முழு சுயாட்சி
அளிக்கப்பட வேண்டும். அத்துடன் மாநிலத்தின் 3 பிரதேசங்களுக்கும் தனித்தனியாக சுயாட்சி அதிகாரம் அளிப்பது குறித்தும் பரிசீலிக்கலாம் என்றார்.

370-ஐ அமல்படுத்த வேண்டும்

அரசமைப்புச்
சட்டத்தின் 370-வது பிரிவை நீக்குவதற்கு பதிலாக தீவிரமாக அமல்படுத்துவதான்
பிரச்னைக்குத் தீர்வாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம்
யெச்சூரி குறிப்பிட்டார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரை
» பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் இருந்து சபாநாயகர் வெளிநடப்பு
» காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி
» காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறல் - இந்திய வீரர் மரணம்
» 1300 முறை அத்துமீறி தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum