ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன?

Go down

மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Empty மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன?

Post by நிலாசகி Tue Jul 21, 2009 7:45 pm

மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிப்பெரியவர் கூறுவது என்ன?

அரூபமான
ஒரே பரமாத்மா பல ரூபங்களில் பல தேவதைகளாக வருகிறதென்று சொல்லி,
அவற்றுக்காக விக்கிரக ஆராதனையை ஏற்படுத்தியிருப்பது நம் மதத்தின் இன்னொரு
பிரத்யேக(ஸ்பெஷல்)அம்சம்.இதனால் அந்நியர்கள் நம்மை பல தெய்வ
வழிபாட்டிக்கொள்கையினர்(Poly thesis) என்கிறார்கள்.இப்படிச் சொல்வது
சுத்தத்தப்பு. ஒரே தெய்வத்தைப் பல ரூபத்தில் வழிபடுவது பல தெய்வங்கள்
இருப்பதாக எண்ணுவதாகாது.அவ்வாறே ‘ஹிந்துக்கள் விக்ரகம்தான் ஸ்வாமி என்று
நினைத்து,விக்ரக ஆராதனை(Idolatry)செய்கிறார்கள் என்பதும்
முழுப்பிசகு.விக்ரஹம் மட்டும் தான் ஸ்வாமி என்று விஷயமறிந்த ஹிந்து எவனும்
நினைக்கமாட்டான்.எங்குமுள்ள ஸ்வாமி இவன் மனசை ஒருமுகப்படுத்தி ஆராதிக்க
வசதியாக இந்த விக்ரகத்தில் இருப்பதாகத் தான் நினைத்து ஆராதிக்கிறான்.எந்த
மதமானாலும் சின்னங்கள் வைத்துப் பூஜிப்பதையோ,தியானிப்பதையே
பார்க்கிறோம்.அப்படி இருக்க, ஹிந்துக்களின் மூர்த்தி பூஜையை மட்டும்
உருவவழிபாடு என்பதோ, அதற்காகப் பரிகசிப்பதோ துளிகூட நியாயமற்றதாகும்.

ஹிந்துமதத்தினர்கள்
ரொம்பவும் பெருமைப்பட வேண்டிய அம்சம், இந்த மதம் ஒன்றுதான் தன்னை
அனுசரிப்பதன்மூலமே ஒரு ஜீவன் உய்வு பெற முடியும் என்று ஒரு தனி
உரிமை(exclusive right) கொண்டாடிக் கொள்ளாமலிருப்பதேயாகும்.யார் யார்
எந்தெந்த சமய மார்க்கத்தில் போனாலும் கடைசியில் ஒரே பரமாத்மாவிடம் வந்து
சேர்வார்கள் என்பதை ஒப்புக்கொள்ளுகிற விசால மனப்பான்மை(catholic outlook)
நம் சாஸ்திரங்களிலேயே காணப்படுகிறது.இதனால் பிறரை ஹிந்துவாக மதமாற்றம்
செய்ய நம் சாஸ்திரங்களில் இடம் கொடுக்கவில்லை.

இயேசு கிறிஸ்துவின்
உபதேசங்களைப் பின்பற்றாதவர்களெல்லாம் நரகத்துக்குத்தான் போவார்கள்;முகமது
நபியின் உபதேசத்தை அனுசரிக்காதவர்களுக்கு கதி மோட்சம் கிடையாது
என்றெல்லாம்தான் அந்தந்த மதத்தினர்சொல்லுகிறார்கள்.அவர்களிடம் நாம்
கோபப்படக்கூடாது. அந்தந்த மதத்தில் இருப்பதால் தங்களுக்குக்
கிடைத்திருக்கிற நிறைவைப் பார்த்து(உணர்ந்து), மற்றவர்களுக்கு இத்தனை
நிறைவு இருக்கமுடியாது என்று நினைத்து, நல்லெண்ணத்தின் பேரிலேயே
மற்றவர்களையும் தங்கள் வழிக்கு மாற்ற ஆசைப்படுகிறார்கள் என்றே
வைத்துக்கொள்வோம்.வெளிப்பார்வைக்கு கெடுதலாகத் தோன்றுகிற வழிகளைக்
கடைபிடித்தாவது ஒரு நல்ல லட்சியத்தை சாதிக்கலாம் என்று நினைத்தே அவர்கள்
பலவிதமான முறைகளைக் கையாண்டு மற்றவர்களைத் தங்கள் மதத்துக்கு
இழுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.அவர்கள் படை எடுத்து, சண்டை
போட்டு, வாள் மூலம்கூட மதமாற்றத்தைச் செய்தது இப்படித்தான் என்று
வைத்துக்கொள்ளலாம்.இஸ்லாம் பெரும்பாலும் ஆயுதபலத்தாலேயே
விஸ்தரிக்கப்பட்டது.கிறிஸ்துவ மதம் பணபலத்தால் விஸ்தரிக்கப்பட்டது என்று
சொல்லுவதுமுண்டு.கிறிஸ்துவர்களும் படை எடுப்புகள் செய்தார்கள்.ஆனால்
மிஷனரிகள் பரோபகாரப்பணியும் சேர்ந்து கொண்டது. பாலைவனமான அரேபிய தேசத்தைச்
சேர்ந்த முஸ்லீம்களுக்கு இல்லாத பணவசதி வெள்ளைக்காரர்களுக்கு
இருந்தது.மிஷனரிகள் பள்ளிக்கூடம்,ஆஸ்பத்திரி என்றெல்லாம் வைத்து,ஏழை
எளியவர்களை அழைத்து அப்படியே அவர்களை தங்கள் மதத்தில் தள்ளிக் கொண்டார்கள்.

பலவந்தத்தையோ
அல்லது உதவியைக் காட்டி வசியப்படுத்துவதையோ நாம் ஏற்காமலிருக்கலாம்.ஆனால்
தங்கள் மதத்தைப்பரப்பினால் எல்லோருக்கும் நன்மை உண்டாகும் என்று அவர்கள்
நிஜமாகவே நம்பியிருப்பார்கள் என்பதை நாம் சந்தேகப்படவேண்டாம்.


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Empty Re: மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன?

Post by நிலாசகி Tue Jul 21, 2009 7:46 pm

ஆனால்,
அவர்கள் நம்பிக்கை சரிதானா?கிறிஸ்துவை,நபியைப் பின்பற்றாவிட்டால்
நரகந்தானா? பார்த்தால் இந்த தனியுரிமை செல்லுபடியாகாது என்று
தெரிகிறது.ஏனென்றால், கிறிஸ்து வந்து 2000 ஆண்டுகளும்,நபி வந்து 1400
ஆண்டுகளும் தான் ஆகிறது.அதற்கு முன் ஆயிரம், பதினாயிரம்,லட்சம்
வருடங்களாகப் பிறந்து செத்துப் போனவர்கள் எல்லோரும் என்ன ஆனார்கள்?
இவர்களுடைய சித்தாந்தப்படி அவர்கள் கிறிஸ்து அல்லது நபியைத் தங்கள்
ரட்சகராக கொள்ளாததால், சிருஷ்டி தோன்றிய நாளிலிருந்து அன்றுவரை
வந்தவர்களெல்லாம் நரகத்துக்குப் போயிருக்கவேண்டும்.இப்போது இந்த மதங்களில்
இருக்கிறவர்களின் முன்னோர்கள் இந்த மத ஸ்தாபகர்களின் முன்னோர்கூடத்தான்
ஸ்வர்க்கம் போயிருக்க முடியாது.
இவர்கள் ஹிந்துக்களைப்போல பல ஜன்மங்கள்
உண்டு என்பதையும் ஒப்புக்கொள்ளவில்லை.அப்படி ஓப்புக்கொண்டாலாவது
கிறிஸ்துவுக்கும் நபிக்கும் முற்பட்டவர்கள் மறுபடி மறுபடி இந்த இரண்டு
பேருக்கும் பிற்பாடும் ஜன்மா எடுத்து,இவர்களை அனுசரிக்கிற வாய்ப்பு பெற்று
கதிமோட்சம் அடடய வழி இருக்கிறது என்று சமாதானம் சொல்லலாம். ஆனால் இந்த
மதங்களிலோ ஜீவனுக்கு ஒரே ஆன்மாதான் என்று சொல்லியிருக்கிறது.ஆதலினால்,
எத்தனையோ ஆயிரம் பல்லாயிரம் தலைமுறைகளாகத் தோன்றிய இத்தனை ஜன்மங்களும்
கூண்டோடு நரகத்துக்குத்தான் போயிருக்கவேண்டும் என்றாகிறது.தான் உருவாக்கிய
ஜனங்களுக்கு லட்சோப லட்சம் வருடங்களாக வழிகாட்டுகிற ஆச்சாரியார்களையே
அனுப்பி வைக்காமல், அவர்களை மீளாத நரகத்தில் போடுபவனாக ஒரு கடவுள்
இருக்கிறான் என்றால், அப்படிப்பட்ட இரக்கமே இல்லாத கடவுளை எதற்காக
ஆராதிக்கவேண்டும்? எதற்காக அவனை அடைய வேண்டும்? அதாவது கடவுளை அடைவதற்காக
ஏற்பட்ட மதமே வேண்டாம் என்று சொல்லிவிடலாம்.
ஆதாரம்:தெய்வத்தின் குரல்,பாகம்-1 ,பக்கம் 185-187
அதே
சமயம் கி.பி.2000 வாக்கில் இந்தியாவிற்கு வந்த வாடிகன் போப்
புதுடெல்லியில் விட்ட அறிக்கை:இந்துக்களை மதம் மாற்றும் உரிமை எனக்கு
உண்டு(இதன் அர்த்தம் மேலே கூறிய காஞ்சிப்பெரியவரின் உரையை மீண்டும்
படியுங்கள்.விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்)

http://aanmigakkadal.blogspot.com
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Empty Re: மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன?

Post by Guest Tue Jul 21, 2009 7:48 pm

சூப்பர்

அருமையான தொகுப்பு

ஆழ்ந்த கருத்துக்கள்

தீர்ந்தது சந்தேகம்
avatar
Guest
Guest


Back to top Go down

மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன? Empty Re: மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum