ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு

2 posters

Go down

ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Empty ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு

Post by நிசாந்தன் Wed Aug 04, 2010 4:30 pm

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை பரவி வருகிறது. இதுவரை 27 பேர் பலியாகி விட்டனர். எனவே கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதல் துணை ராணுவ படையினர் ஸ்ரீநகருக்கு விரைந்தனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 9 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த போதிலும், அதையும் மீறி தெருக்களில் பிரிவினைவாத ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடுகின்றனர். அரசுக்கு எதிராக கோஷம் எழுப்புவதோடு, துணை ராணுவ படையினர் மீது கற்களை வீசி தாக்குகின்றனர். இளைஞர்களும், பெண்களும் அதிக அளவில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, வன்முறையாளர்களை கலைப்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது. இதனால், ஏராளமானோர் பலியாகி உள்ளனர். அவர்களுக்கு இறுதி தொழுகை நடத்துவதற்கு ஸ்ரீநகரில் உள்ள ஈத்கா பகுதிக்கு வருமாறு பிரிவினைவாத ஹூரியத் மாநாடு கட்சியின் தலைவர் கிலானி அழைப்பு விடுத்திருந்தார்.

ஊரடங்கு உத்தரவையும் மீறி ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஈத்கா நோக்கி ஏராளமானோர் செல்ல முயற்சித்தனர். ஈத்கா பகுதியில் போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. அப்போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அனீஸ் அகமது கனி (வயது 17) என்ற இளைஞர் தலையில் காயம் பட்டு இறந்தார். மேலும், 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுதவிர, கமார்வாரி என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மேராஜ் அகமது என்ற (25 வயது) வாலிபர் பலியானார். மேலும், பட்காம் மாவட்டத்தில் உள்ள சேக்புரா, ராம்பா பாலம் மற்றும் ஸ்ரீநகரில் உள்ள பார்த்தனா, நாடிகால், திரெகம் உள்ளிட்ட இடங்களிலும் துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் மொத்தம் 10 பேர் காயமடைந்தனர். அதில், முகமது அக்பர் வானி என்ற இளைஞரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதுபோல, குல்காம் மாவட்டத்தில் உள்ள பிரிசால் என்ற இடத்தில் மெயின்ரோடு நோக்கி நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். அவர்களை துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் கலைத்தனர். அதில், 10 பேர் காயமடைந்தனர். அவர்களில், ஜகாங்கீர் அகமது என்பவர் மருத்துவமனையில் இறந்தார்.

சால்டீங் என்ற இடத்தில் ஸ்ரீநகர்-யுரி நெடுஞ்சாலையில், துப்பாக்கிச்சூட்டில் பலியானோருக்காக கூட்டம் நடத்த முயற்சி நடந்தது. உடனே, துணை ராணுவப்படையினர் அவர்களை கலைந்து போகுமாறு கூறினார்கள். ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில், சகில் அகமது தார் என்ற இளைஞர் பலியானார். மேலும், 5 பேர் காயமடைந்தனர்.

இதற்கிடையே, கிரெவ் பகுதியில் கடந்த 1-ந் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ரியாஸ் அகமது என்பவர் மருத்துவமனையில் நேற்று இறந்தார். இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெறும் காஷ்மீர் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில், நேற்று மட்டும் மொத்தம் 50 பேர் காயமடைந்துள்ளனர். யுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் தொடர்ந்து கலவரம் நீடிப்பதாலும், ஊரடங்கு உத்தரவை மீறி பிரிவினைவாதிகள் தெருவுக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாலும், கலவரக்காரர்களை `கண்டதும் சுட` உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் வீதிக்கு வர வேண்டாம் என்றும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்பை `மைக்`குகள் மூலமாக போலீசார் தெரிவித்து வருகின்றனர். இதற்காக, `மைக்` பொருத்தப்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களில் போலீசார் ரோந்து சுற்றுகின்றனர். டால்கேட், ஈத்கா, கன்யார் உட்பட ஸ்ரீநகரில் உள்ள பல்வேறு இடங்களிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

காஷ்மீரில் நிலைமை மோசமாகி வருவதால், முதல்-மந்திரி உமர் அப்துல்லா வேண்டுகோளை ஏற்று கூடுதல் துணை ராணுவப் படைகளை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்னும் ஓரிரு நாட்களில் 19 கம்பெனி (1900 வீரர்கள்) துணை ராணுவப் படை காஷ்மீர் விரைகிறது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் 32 கம்பெனி (3200 வீரர்கள்) துணை ராணுவப் படை, ஏற்கனவே முகாமிட்டுள்ளது. அந்த படைகளும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் கலவரம் நடைபெறும் 10 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

அதே நேரத்தில், காஷ்மீர் நிலைமை குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இடதுசாரி தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு Empty Re: ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு

Post by கோவை ராம் Wed Aug 04, 2010 4:49 pm

அப்பாவி மக்கள் மூலம் தீவிரவாதிகள் நடத்தும்
சதி இது


ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum