ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம்

Go down

'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம் Empty 'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம்

Post by ரபீக் Wed Aug 04, 2010 10:22 am

சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிக்க தொடர்ந்து வாய்தா வாங்கி வரும் ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக இளைஞர் அணி நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க மதுரை உயர் நீதிமன்றக் கிளை மறுத்துவிட்டது.

பழனி ஆயக்குடியை சேர்ந்த சசிகுமார் என்பவர் இது தொடர்பாக தாக்கல் பொது நல மனுவில்,

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்டுள்ள சொத்து குவிப்பு வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அவர் தொடர்ந்து வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடிப்பதாகவும், அதை எதிர்த்து திமுக இளைஞர் அணி சார்பில் 4ம் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு சட்டரீதியாகத் தான் தீர்வு காண வேண்டுமே தவிர பொது இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

இதுபோன்ற போராட்டங்களை நீதித்துறை அனுமதித்தால் நீதிமன்றத்தின் மீது உள்ள மதிப்பு, மரியாதை கேள்விக்குறியாகிவிடும். ஜெயலலிதாவை காரணமாக வைத்து போராட்டம் நடத்துவது நீதிபதியை குற்றம் சாட்டுவது போன்றதாகும். எனவே திமுக நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.சுகுணா, சி.எஸ்.கர்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த விவாதம்:

மனுதாரின் வழக்கறிஞர் சங்கர்கணேஷ்: திமுக இளைஞரணி சார்பில் நடத்தப்படும் இந்தப் போராட்டம் நீதிமன்ற நடவடிக்கையில் குறுக்கிடுவது போன்றதாகும். வழக்கில் வாய்தா கொடுப்பதும் மறுப்பதும் நீதிமன்றத்தின் உரிமை. அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. வாய்தா கேட்பவரை குற்றம்சாட்டுவது சம்பந்தப்பட்ட நீதிபதியை குற்றம் சாட்டுவது போலாகும். இது நீதிமன்ற அவமதிப்பு. எனவே திமுக இளைஞரணி நடத்தும் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

திமுக இளைஞரணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வீராகதிரவன்: ஜெயலலிதா மீதான வழக்கை தினமும் விசாரித்து விரைவில் முடிக்கவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். 13 வருடங்களாக இந்த வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது. வாய்தா கேட்டு வழக்கை இழுத்தடிப்பதை கண்டிக்கிறோமே தவிர நீதிமன்றத்தை குறை கூறவில்லை.

அரசு கூடுதல் வழக்கறிஞர் அட்வகேட் ஜெனரல் ராமசாமி: ஜெயலலிதா மீதான வழக்கு கர்நாடக மாநிலத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதை எதிர்த்து தமிழ்நாட்டில் போராட்டம் நடத்துவதால், நீதிமன்ற நடவடிக்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த மனுவில் பொதுநலன் எதுவும் இல்லை. விளம்பரத்திற்காகவும், அரசியலுக்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் மனுதாரருக்கு உச்சபட்ச அபராதம் விதிக்க வேண்டும்.

இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து ஜெயலலிதாவுக்கு ஆதரவான இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

தங்கள் உத்தரவில் நீதிபதிகள் கூறியதாவது: இந்த வழக்கை பொறுத்தவரை முக்கியமான அம்சம் திமுக இளைஞரணி நிறைவேற்றியுள்ள தீர்மானம் தான். அதை பார்க்கும்போது 13 வருடங்களாக அந்த வழக்கில் வாய்தா வாங்குபவர்களை கண்டித்து தான் போராட்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

`முன்னாள் முதல்வரின் நடவடிக்கைகளை எதிர்த்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. வாய்தா வாங்குவதை மக்களின் கவனத்திற்கு எடுத்து செல்கிறோம்' என்று அவர்கள் கூறுகின்றனர். இதை நீதிமன்ற அவமதிப்பாக கூறமுடியாது. மேலும் அந்த வழக்கு கர்நாடகத்தில் நடந்து வருகிறது.

அந்த வழக்கில் வாய்தா வாங்குவதை எதிர்த்து தமிழ்நாட்டில் போராட்டம் நடத்துவது நீதிமன்ற நடவடிக்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றே நீதிமன்றம் கருதுகிறது.

பொதுநல வழக்குகள் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் சில வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அதன்படி பார்த்தால் இதை பொதுநல வழக்காக ஏற்க முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறினர்.

இதையடுத்து திட்டமிட்டபடி திமுக போராட்டம் நடக்கிறது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்
» தாலி அகற்றும் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
» நளினிக்கு பொதுமன்னிப்பு இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்.
» கனிமொழி ஜாமீன் மனு-சிபிஐக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum