புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_rcap 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_rcap 
6 Posts - 4%
prajai
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_rcap 
4 Posts - 3%
Saravananj
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_lcapதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_voting_barதி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை


   
   

Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:37 pm

First topic message reminder :

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 Kadal-thamarai


முன்னுரை



டி.வி. இராமசுப்பையர் அதிசய மனிதருள் ஒருவர்.


நண்பர் தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை எனும் டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு நூலுக்கு முன்னுரை ஒன்று எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது, தயக்கமும், மகிழ்ச்சியும் ஊடாட ஒப்புக் கொண்டேன்.

நான் பிறந்து வளர்ந்து, இப்போது வாழ்ந்து வரும் வெள்ளாங்குடியின் அருகில் உள்ள தடிமார் கோவில் கிராமத்தில் டி.வி.ஆர்., பிறந்தார். இளமைப் பருவத்தின் பெரும் பங்கை அங்கே தான் செலவழித்தார். வடிவீசுவரத்திற்கு தனது இருக்கையை மாற்றிய போதும், வட சேரி கிராமத்திற்கு மாதத்தில் பலமுறை வந்து செல்வார். எனவே, ஊர்ப்பற்றுக் காரணமாக, சார்புடன் முன்னுரையை எழுதி விடுவேனோ என்ற பயத்தால் தயக்கம் எழுந்தது.

டி.வி.ஆரையும், அவர், தன்னுடன் அழைத்துச் செல்லும் மக்களையும் - ஒன்றிரண்டு நாள் அவர் மருமகனையும் - நான் அகல நின்று 1941ம் ஆண்டிற்கு முன் பார்த்து இருந்தாலும், நாகர்கோவில் கிளப்பில் உறுப்பினன் ஆன பின்தான் அந்த கிளப்பின் செயலாளர் என்ற நிலையில் டி.வி.ஆரை அறிந்திட முடிந்தது. சமுதாய நன்மைக்கு அவர் செய்த பணிகளைத் தெரிந்திடவும் வாய்ப்பு ஏற்பட்டது. 1963ம் ஆண்டு, காசி சர்வ கலாசாலை போல் கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைக்கும் ஆலோசனைக்கு டி.வி.ஆர்., மிகவும் துணை நின்றார். அவர்தான் அந்த ஆலோசனைக் குழுவின் தலைவர். எனவே, நட்புறவாலும், அன்பாலும் கட்டுப்பட்ட என்னிடம், டி.வி.ஆரைப் பற்றி எழுதுவதில் இனந்தெரியாத மகிழ்ச்சி எழுந்தது.

ஆய்வு நிறுவனம், அறநிலையங்கள் முதலியவற்றைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மார்ச் மாதம் கெடுபிடியானது. அம்மாத முதலில் தான் இந்த வரலாற்று நூல் கிடைத்தது. கிடைத்த நாள் மாலை, நூலின் ஒரு சில பகுதிகளைப் படித்தேன். மிக சுவையாக நூல் வளர்ந்து சென்றது. தெளிவுகளைத் திரட்டி, சம காலத்தவர்களின் எண்ணங்களை இடை இடையே கொடுத்து நூல் உருவாக்கியுள்ள திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பிற பணிகளை ஒதுக்கி விட்டு, அன்றும், அடுத்த நாளும் நூல் முழுவதும் படித்து முடித்தேன். செம்மையாக முத்துகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார் என்ற எண்ணமே என் உள்ளத்தில் மேலோங்கி நின்றது.

நூலின் செம் பாதிக்கு மேல், தினமலர் பத்திரிகையை டி.வி.ஆர்., நிறுவி வெற்றி கண்டதைப் பற்றியதாகும். அந்த நிறுவனத்தை டி.வி.ஆரின் மக்களும், பேரப் பிள்ளைகளும் இன்று ஒற்றுமையுடன் வளர்த்து வருகின்றனர். தனது மக்களை இந்தப் பணியில் ஈடுபடுமாறு செய்தது டி.வி.ஆரின் குடும்பத் தலைமைக்குத்தக்க உதாரணமாகும்.

எஸ்.வையாபுரிப்பிள்ளை, "தினமலர்' இதழை செப்., 6,1951 வெளியிட்ட அன்று, அவருடன் நானும் சென்றிருந்தேன். சி.ஓ.மாதவன் தலைமை தாங்கினார். கவிமணி ஒரு வாழ்த்துப் பாவால் தினமலர் இதழை வரவேற்றார்.அன்று சாதாரண நிலையில் உருவான, "தினமலர்', திருவிதாங்கூர் தமிழர் எழுச்சியால் பிரபலம் அடைந்து, இன்று, ஆலமரம் போல் படர்ந்து அனேகமாக ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் வெளியிடப்படுகிறது. அந்த வளர்ச்சி, பாராட்டத்தக்கது; பெருமைப்படத்தக்கது.

டி.வி.ஆர்., பத்திரிக்கை வளர்ப்பதில் காட்டிய ஆர்வம், வகுத்த நெறிமுறைகள், அரசியல், தனிமனித எதிர்ப்புகள், அஞ்சா நெஞ்சம், பிறரை அணைத்துச் செல்லும் ஆற்றல், மன்னித்து மறக்கும் பெருந்தன்மை முதலியவற்றை முத்துகிருஷ்ணன் திறம்படக் கூறி இருக்கிறார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:41 am

எஸ்.துரைசாமி நாடார்

நாகர்கோவிலில் 1949ல் ரோட்டரி "கிளப்' ஸ்தாபகர்களில் ஒருவர். '59 - '60 ஆண்டுகளில் ரோட்டரியின் தலைவர். கன்னியாகுமரி மாவட்டம் தனியாக உருவானதும், மாவட்ட "கிளப்' ஸ்தாபகர். '53 முதல் ரெட் கிராஸ் சொசைட்டி மெம்பர். அகில இந்திய ரெட் கிராஸ் மாநாட்டு உறுப்பினராக டில்லிக்குச் சென்று வந்தார்.


'56 முதல் அகில இந்திய குழந்தைகள் நலக் குழுவின் நிர்வாகக் குழு உறுப்பினர். '60ல் உலகக் குழந்தைகள் நல விழாவின் உறுப்பினர். கன்னியாகுமரி தேவஸ்தானம், திருச்செந்தூர் திருக்கோயில் இவற்றின் நிர்வாகக் குழுக்களில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். ரோட்டரி இயக்கத்தின் சார்பில் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் பல் வேறு அமைப்புகளுக்குச் சென்று வந்தவர்.

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 PHOTO_05h


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:41 am

பிரபல பண்ணையாரும், பழம்பெரும் "ரோட்டரி கிளப்' தலைவருமான துரைசாமி நாடார் தமது நினைவுகளைக் கூறுகையில்:

எனக்கும், டி.வி.ஆருக்கும் உள்ள பழக்கம் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்டதாகவே இருக்கும். அவர் திருநெல்வேலி செல்லும் முன், அவரில்லாமல் எந்த ஒரு பொதுக் காரியமும் இந்தப் பகுதியில் நடைபெற்றதில்லை. "ரோட்டரி" இயக்கத்தில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. நாகர்கோவிலில் "ரோட்டரி' சங்கத்தை 1949ல் ஆரம்பித்தபோது, அதில் முதன்மையானவராகவும், தீர்க்கமாகவும் இருந்து, தன் பணத்தைச் செலவழித்து அதை உருவாக்கிய தூண்களில் அவருமொருவர். கடைசி வரை அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காக அவர் உதவியது பற்றி சொல்லித் தீராது. அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் அவருடன் நானும் சேர்ந்து பல இடங்களில் "ரோட்டரி' இயக்கத்தை ஸ்தாபித்தோம். நாகர்கோவிலில் "ரோட்டரி' சங்கம் மே 14, 1949ல் 21 "மெம்பர்'களுடன் கேப் ரோட்டில் தொடங்கப்பட்டது. நகரில் சுகாதார வாரம், பேபிஷோ எல்லாம் தொடர்ந்து நடக்கும். திருவனந்தபுரத்தில் இருந்து பல மந்திரிகள் வந்து இதில் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி ஸ்தாபித்தவுடன் ஜில்லாவிற்கு ஒரு "கிளப்' வேண்டுமென்று முழு மூச்சுடன் பாடுபட்டார். அதை ஸ்தாபிக்கவும் செய்தார்'

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:42 am

விவேகானந்தர் நினைவாலயம்

சுவாமி விவேகானந்தர் இமயம் முதல் குமரி வரை மக்களைச் சந்தித்து, கடைசியாக 1892 டிசம்பர் முடிவில் கன்னியாகுமரி வந்து சேர்ந்தார். டிசம்பர் 25ம் தேதி கடலை நீந்திக் கடந்து, மாலையில் பாறையை அடைந்து, இரவு முழுவதும் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். இந்தப் பாறையில் தியான நிலையில் அமர்ந்ததும், பாரத நாட்டின் பழம் பெருமைகள், பல நூற்றாண்டுகளாக ஓயாத படை எடுப்புக்கள், வீழ்ச்சிகளை எல்லாம் அந்த இளம் துறவிக்குக் கதை கதையாகப் போதித்தன கடல் அலைகள். இதிலிருந்து புதிய உத்வேகத்தை சுவாமிகள் பெற்றார்.

சுவாமிகளின் நூற்றாண்டு விழா 1963 - 64ல் தேசமெங்கிலும் விரிந்த அளவில் கொண்டாடப்பட்டது. சுவாமி விவேகானந்தருக்கு ஞானோதயம் தந்த அந்த இரட்டைப் பாறைகளில் நூற்றாண்டு விழா நினைவாக ஒரு ஆலயம் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டது. அதற்காக, "சுவாமி விவேகானந்தா நூற்றாண்டு விழா விவேகானந்தா பாறை நினைவுச் சின்னக் குழு' என்று மாவட்டம் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டது. திருநெல்வேலி ஜில்லாக் கமிட்டிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., கே.ராமசுப்பு ரெட்டியார் தலைவர். இதன் நிதியாளராக டி.வி.ஆர்., தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான திட்டச் செலவு 1963ம் ஆண்டு ஆறு லட்சம் ரூபாய். இக்குழுக்களின் அயராத பணிகள் காரணமாகவே நாம் இன்று கன்னியாகுமரி கடல் பாறைகளில் ஓர் அழகான விவேகானந்தர் நினைவாலயத்தைக் காண்கிறோம். டி.வி.ஆருக்கு, சுவாமி விவேகானந்தரிடம் மிகுந்த ஈடுபாடு உண்டு. நினைவாலயம் ஒன்று அகில இந்திய முக்கியத்துவத்துடன் கன்னியாகுமரியில் அமைக்கப்படுவதில் அவருக்குப் பெரும் மகிழ்ச்சி. குமரி மாவட்டப் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டோடு, இப்பெரும் பணியிலும் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:42 am

கோவில்பட்டி நிலவரி போராட்டம்

டி.வி.ஆருடைய சமுதாயப் பார்வையில் கிராமத்துப் பிரச்னைகள் மிகவும் ஆழமாக அவரைச் சிந்திக்க வைத்து இருந்தது என்பதற்கு கோவில்பட்டி நிலவரி போராட்டம் ஒரு உதாரணம். வறட்சிக்குப் பேர் பெற்ற கோவில்பட்டி தாலுகா விவசாயிகள் ஒரு போராட்டம் பிப்.,'66ல் நடத்தினர். பக்தவச்சலம் முதல்வர். அவருக்குச் சட்டம்தான் முக்கியம். நியாயம் என்றே உணர்ந்தாலும் கூட, சட்டத்தை விடாப்பிடியாகக் காத்து நிற்கப் பாடுபடுவது அவர் குணம். அங்கும் ஜப்தி எல்லாம் வந்தது. விவசாயிகளின் குரலாக அன்றைக்கும் "தினமலர்' ஒலித்தது. அரசியல் உத்தரவுகள் எடுபடவில்லை. ஜப்தி செய்த பொருட்களை வீடு வீடாக அதிகாரிகள் கொண்டு போய் கொடுக்க வேண்டிய நிலை உருவானது. இந்தப் போராட்ட வெற்றிக்கு மணியகரம் பிரச்னையில் பெற்ற வெற்றியே காரணமாக அமைந்துள்ளது.

அதன்பின்னர் தி.மு.க., ஆட்சிக் காலத்தில் கெடுபிடியாக நெல் கொள்முதல் நடைபெற்றது. விவசாயக் கூலிகளின் சில படி நெல் கூட அளக்கப்பட்டது. மதுரை மாவட்டம் இதில் மிகவும் சிக்கித் தவித்தது. இரவு 3 மணிக்குத்தான் நெல் அள்ளும் சூரத்தனம் நடக்கும். 4 மணிக்குக் கிராம மக்கள் மதுரைத் "தினமலர்' அலுவலகத்திற்கு வருவர், இங்குதான் முதல் புகார். உடனே புகைப்படமெடுப்பவருடன் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு "டாக்சி' பறக்கும். நாம் போய் விவரம் சேகரித்த பின் கலெக்டர் வருவார். "தினமலர்' க்காரன்ட சொல்லியாச்சு இல்லையா?' என்று கலெக்டரே கிண்டல் செய்வதைக் கேட்டு இருக்கிறோம்.

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, போடிக்கு இடையே பெரும் மணல் காற்று. நிலம் பாலைவனமாக மாறி மணல் மூடிப் போனது. கிணறுகள் பம்பு செட்டுகளுடன் மூழ்கியது. நிலம் புனரமைக்கப் பெரும் எடுப்பில் புல்டோசர்களின் உதவியுடன் அரசாங்கம் முயன்றால்தான் மீண்டும் அங்கு வாழ்க்கை. இதை ஒரு பக்க கட்டுரையாகத் "தினமலர்' வெளியிட்டது. அவசர நிலை காலத்தில் கவர்னரின் ஆலோசகர் "தாவே' அங்குப் போய்ப் பார்த்து புல்டோசர்கள் உதவியுடன் நிலங்களை மீட்டுக் கொடுத்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:43 am

"இவையே மிகவும் அவசியமான செய்திகள். குடிகாரன் குடி வெறியில் யாரையாவது வெட்டி வீழ்த்தினால் அது முக்கிய செய்தியல்ல. வாழ வேண்டிய, வாழ்விக்க வேண்டிய, மனிதன் சாகும் நிலைக்கு வந்தால் செய்தி எழுதுங்கள்' என்று நிருபர்களிடம் டி.வி.ஆர்., அடிக்கடி கூறுவார். இன்றைக்குத் "தினமலர்' கிராமங்களில் கால் ஊன்றி நிற்பதற்கு டி.வி.ஆரின் இந்த உன்னதமான கொள்கைதான் காரணம்.

தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் கடுமையான விவசாயப் போராட்டம். பல இடங்களில் துப்பாக்கிச்சூடு. பஸ்சோ, லாரியோ எதுவும் சாலையில் ஓடமுடியாத நிலை. அப்போதும் "தினமலர்' என்று போஸ்டர் ஒட்டி "தினமலர்' வேன் சென்றால், "அட இது நம்ம வண்டிடா. போகவிடுங்கள்' எனக்கூறித் தடைகளை நீக்கி, கிராமத்தார் வழிவிட்டதற்கு டி.வி.ஆரின் இந்த அபிமானம், உறுதியான போக்குமே காரணம்.

கிராமங்கள், அவற்றின் முன்னேற்றம்- - இது ஒன்றே ஒரு நாட்டை முன்னேற்றும் என்பதில் டி.வி.ஆர்., அசைக்க முடியாத பிடிப்பு வைத்திருந்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:45 am

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்



கன்னியாகுமரி மாவட்டத்து மக்கள் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றுதல், மற்ற மாவட்டக்காரர்களைக் காட்டிலும் சற்றுக் கூடுதலாகும். இதற்குச் சில அடிப்படைக் காரணங்கள் உள்ளன. குமரி மாவட்டம் நீண்ட நெடுங்காலம், மலையாள ஆட்சியில் இருந்தது. இங்கு மலையாள மொழியின் நெருக்குதலில் ஒவ்வொரு நாளும் சிக்கித் தவித்தவர்கள் இவர்கள். பள்ளிகளில் மலையாள மொழிக்கே முதலிடம். தமிழ்மொழி இங்கு தாழ்த்தப்பட்ட வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற காரணங்களே, இங்குள்ள தமிழர்களுக்குத் தமிழ் மொழியின் மீது கூடுதல் பற்று ஏற்படக் காரணமாக இருந்தது.

தமிழ் புறக்கணிக்கப்படும் வேதனையைக் கவிமணி அழகாகக் கூறியிருக்கிறார். நாஞ்சில் நாட்டில் பிறந்த பெரும் கவிஞர் கவிமணிக்கு ஆரம்பப் பள்ளிகளில் கூடத் தமிழ்மொழி இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையை உண்டாக்கியது. நாஞ்சில் நாட்டுத் தமிழர்கள் தாய்த் தமிழகத்துடன் இணைய, அம்மக்களைத் தயாரித்த பெருமை கவிமணிக்கே உண்டு. அவரது வேதனையை 1917ம் ஆண்டே திருவனந்தபுரத்தில் இருந்து வெளியிடப்பட்ட, "தமிழன்' பத்திரிக்கையில் வெளிவந்த, "மருமக்கள் வழி மான்மியத்தில்' கிண்டலாகக் குறிப்பிடுகிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:46 am

ஒருவர் மரணமடைந்து விடுகிறார். அங்கு வந்தவர்கள் மரணமடைந்தவர் மகனை நோக்கி :



தம்பி! உன் தந்தை தலைமாட்டிலிருந்து திருவாசகத்தில் சிற்சில பதிகம்படி, எனச் சொல்லி, பண்ணை வீட்டிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்தனர். பயலும் அதைத் திறந்து பார்த்தான். "ஆரே தமிழை அறிபவர்?' என்றான். "பள்ளியில் தமிழும் படித்தேனோ?' என்றான். "பரீட்சையில் தமிழுமொருபாடமோ?' என்றான். "என்னால் படிக்க இயலாது' என சுவரில் சாய்ந்து சும்மா இருந்தான்!'




- என்று தமிழ் அன்று ஒதுக்கப்பட்டதை வேதனையுடன் கூறினார்.

டி.வி.ஆர்., பற்றி, கேரளப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஏசுதாசன் கூறுகையில்:

அன்றைக்குக் கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவில் "விரிவுரையாளர்' பதவி தான் இருந்தது. தமிழ்த்துறைக்கு "விரிவுரையாளர்' பதவி மட்டும் இருப்பது போதாது, பேராசிரியர் பதவியும் தர வேண்டும் என்று டி.வி.ஆர்., எடுத்த முயற்சியே அப் பல்கலைக்கழகத்தின் முதல் பேராசிரியர் என்ற தகுதியை எனக்குத் தேடித் தந்தது.

கேரளாவில் இருந்த தமிழ் ஆசிரியர்களின் நிலை அன்றைக்கு மிகவும் பரிதாபமானது. அவர்களுக்கு மதிப்புக் கிடைக்கத் தனது பத்திரிக்கை மூலம் தொடர்ந்து போராடி வெற்றி கண்டவர் டி.வி.ஆர்., அவர் தமிழ் மொழியைப் பழைய காலப் போக்கில் இருந்து, புதிய பார்வையில் பார்த்தவர்.

திவானாக இருந்த போது தமிழர்கள் பிரச்னைகளுக்கு சர்.சி.பி., உதவியது உண்டு. சுதந்திரத்திற்குப் பின் சர்.சி.பி., பதவியில் இல்லாதபோது, ஒரு பெரிய இடைவெளி. அதை நிரப்புவது சாமான்யமன்று. அந்தப் பணியை ஏற்று நடத்தி வெற்றியும் கண்டவர் டி.வி.ஆர்., திருவிதாங்கூர் தமிழர்கள் பற்றி ஓர் ஆய்வு நடத்தப்படுமானால், அதில் டி.வி.ஆரின் தனிப்பெரும் சக்திகளும் வெற்றிகளும் தெரிய வரும்' என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:47 am

தமிழ் மொழியும், வரலாறும் மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் செய்வதைப் போல விஞ்ஞானப் பூர்வமாக ஆராயப்பட வேண்டும். பத்தாம் பசலித்தனமாக அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கக் கூடாது. நவீனங்கள் அதிகம் வர வேண்டும். உலகம் நமது மொழியை ஏற்றுக் கொண்டு பாராட்டும் வகையில் நமது பார்வையும் பணியும் இருக்க வேண்டும் என்பது டி.வி.ஆர்., கொள்கை. இதன் காரணமாகவே தனது பத்திரிக்கையைப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையைக் கொண்டு துவக்கி வைத்தார் என்றால், தமிழ் மொழி மீதும், உண்மையான தமிழ் அறிஞர்கள் மீதும் டி.வி.ஆருக்கு எத்தனை பெரிய மதிப்பு இருந்தது என்று சொல்லவும் வேண்டுமோ?


தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 PHOTO_06a


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:47 am

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 11 PHOTO_06b

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:48 am

குமரி மாவட்டத்தில் ஆறாவது தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு

தமிழ் எழுத்தாளர்களின் ஆறாவது மாநில மாநாடு மே 31, ஜூன் 1, 1958ல் குமரி மாவட்டத்தில் நடைபெற்றது. அதுவரை தலைநகர் சென்னையில் மட்டுமே நடைபெற்ற இம்மாநாடு, முதல் முறையாக ஒரு மாவட்டத்தில் நடைபெற்றது என்பதால் இதற்குப் பல சிறப்புக்கள் உண்டு. இம்மாநாட்டை நடத்துவதில் பெரும் பொறுப்புகளை ஏற்றவர் டி.வி.ஆர்.,

இவ்வளவு பெரிய மாநாட்டை குமரி மாவட்டத்தில் நடத்த ஏற்றுக்கொண்டது ஏன் என்ற கேள்வி நமக்கு எழுவது இயற்கையே ! குமரி மாவட்டம் என்ற தமிழர்கள் வாழும் பகுதி, தங்களைச் சார்ந்தது தான் என்ற உணர்வே இல்லாமல் இருந்தனர் தமிழ் மக்கள். தாய்த் தமிழகத்துடன் இணைய வேண்டும் என்று இப்பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்றபோது கூட, இப்பிரச்னையில் தமிழகப் பத்திரிக்கைள் தங்களது உணர்வுகளைச் சரியான முறையில் வெளிப்படுத்தவில்லை.

தலைநகரில் உள்ள பிரபலமான பத்திரிக்கைகள் இந்து, எக்ஸ்பிரஸ், தினமணி, கல்கி, விகடன் இவற்றின் பிரதிநிதிகளை, குமரி மாவட்டத்திற்கு அழைத்துப் போராட்ட காலத்தில் மாவட்டம் முழுவதும் அவர்களைச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளச் செய்து நிலைமைகளை அவர்களும் உணரச் செய்தவர் டி.வி.ஆர்., பத்திரிக்கைகள் நினைத்தால் உண்மையான மாற்றம் கொண்டு வர முடியும் என்பது அவரது அசைக்க முடியாத கொள்கை.

தாய்த் தமிழகத்துடன் இணைந்துவிட்ட குமரி மாவட்டம் பற்றி இனியாவது தமிழ் எழுத்தாளர்கள் முழுக்கவனம் செலுத்த முன்வரவேண்டும். அவர்கள் எழுத்து வன்மையால் மட்டுமே புதிய குமரி மாவட்டம் பல துறைகளில் முன்னேற்றம் காண முடியும் என்று முழுக்க முழுக்க நம்பினார். இந்த எண்ணத்தின் எதிரொலிதான் தமிழ் எழுத்தாளர் மாநில மாநாட்டைக் குமரி மாவட்டத்தில் நடத்த ஏற்றுக் கொண்டார் என்பது நிச்சயமாகிறது.

Sponsored content

PostSponsored content



Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக