ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்:புது மண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புது தாலி- மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு

4 posters

Go down

காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்:புது மண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புது தாலி- மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு Empty காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்:புது மண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புது தாலி- மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு

Post by நவீன் Tue Aug 03, 2010 4:51 pm

ஆடி மாதம் 18-ந்தேதியே, ஆடிபெருக்கு விழாவாக ஒவ்வொரு ஆண்டும், காவிரி கரையோர மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆடிபெருக்கை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமான பெண்கள் குவிந்தனர். புதுமண
தம்பதிகள் பட்டு வேட்டி- பட்டுசேலை அணிந்து காலையிலே வந்தனர். பின்னர்
திருமண மாலைகளை ஆற்றில் மிதக்கவிட்டு, சூரியனை வழிபட்டனர்.

காவிரி
வெள்ளம்போல், எங்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி வெள்ளம் ஏற்பட வேண்டும்
என்று வேண்டினர். பின்னர் திருமணமான பெண்களுக்கு கணவர்கள் புது தாலி
கட்டினர். அதைத் தொடர்ந்து படித்துறையில் பூ, பழங்கள் வைத்து குடம் ஏந்தி
சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

ஸ்ரீரங்கம்
அம்மா மண்டபத்தில், திருமணமாகாத ஏராளமான கன்னி பெண்களும் குவிந்தனர்.
விரைவில் தங்களுக்கு திருமணம் நடைபெற வேண்டியும் நல்ல கணவன் அமைய
வேண்டியும், தங்களது கழுத்தில் கன்னி பெண்கள் மஞ்சள் கயிறு அணிந்து
வழிபட்டனர். இதனால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஒரே நேரத்தில் புதுமண
தம்பதிகள் கன்னி பெண்கள் வழிபாடும் பக்தர்கள் புனித நீராடுதலும் நடந்ததால்
அப்பகுதி உற்சாக களை கட்டியது.

இதே
போல் திருச்சி சிந்தாமணி படித்துறை, ஒடத்துறை, படித்துறை தில்லை நாயகம்
படித்துறை ஆகிய இடங்களில் ஆடிபெருக்கு விழா நடந்தது. இதில் ஏராளமான
பெண்கள் வழிபாடு நடத்தி சிறப்பு பூஜை நடத்தினர்.

திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான புதுமண தம்பதிகள், சுற்றுலா தலமான முக்கொம்பிலும் இன்று குவிந்தனர். அங்குள்ள காவிரி ஆற்றில் புனித நீராடி, புதுமண தம்பதிகள் கட்டி சோறு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

இதே
போல் தஞ்சை பெரியகோவில் படித்துறை, காவிரி படித்துறை, திருவையாறு புஷ்ப
மண்டப படித்துறை ஆகிய இடங்¢களில் இன்று காலை முதலே ஏராளமான புதுமண
தம்பதிகள்-கன்னி பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

அம்மனுக்கு
உகந்த மாதம் ஆடி மாதம் என்பார்கள். இன்று ஆடி 18 செவ்வாய்க்கிழமை அன்று
வந்துள்ளதால் அம்மன் கோவில்களுக்கு ஏராளமான பெண்கள் வந்து வழிபட்டனர்.

திருச்சி
சமயபுரம் மாரியம்மன் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில், தஞ்சை
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம்
துர்க்கை ஸ்தலம், திருக்கருகாவூர் கர்ப்பராட் சாம்பிகை கோவில், வலங்கைமான்
மகா மாரியம்மன் கோவில்களில், இன்று காலை முதலே ஆடி செவ்வாய்கிழமை ஆடி 18-ஐ
முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடநதன.

ஆடி மாதத்தில் விதைத்தால்தான் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதனால்தான் ஆடி பட்டம் தேடி விதைக்கணும் என்பார்கள்.

இந்த
ஆண்டு காவிரியில் தண்ணீர் வருமா, வராதா என்று ஏங்கி தவித்த டெல்டா மாவட்ட
விவசாயிகளுக்காக, கடந்த 28-ந்தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர்
விடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் இருகரைகளை தொட்டப்படி தண்ணீர்
செல்வதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் குறுவை சாகுபடி
பணிகளில், மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆடிபெருக்கை முன்னிட்டு இன்று, டெல்டா பாசன விவசாயிகள், வாழ்வளிக்கும காவிரி தாய்க்கு நன்றி தெரிவித்து வழிபட்டனர்.

காவிரி
கரையோர பகுதிகளில், ஆடிபெருக்கு விழா விவசாயிகள், புதுமண தம்பதிகள்,
கன்னிபெண்கள் மற்றும் பக்தர்கள் வழிபாடுகளால்களை கட்டியது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்:புது மண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புது தாலி- மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு Empty Re: காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்:புது மண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புது தாலி- மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு

Post by பிரபாகரன் Tue Aug 03, 2010 4:57 pm

காவிரி
கரையோர பகுதிகளில், ஆடிபெருக்கு விழா விவசாயிகள், புதுமண தம்பதிகள்,
கன்னிபெண்கள் மற்றும் பக்தர்கள் வழிபாடுகளால்களை கட்டியது.
பிரபாகரன்
பிரபாகரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 21/07/2010

http://wellgaatamil.blogspot.com/

Back to top Go down

காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்:புது மண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புது தாலி- மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு Empty Re: காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்:புது மண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புது தாலி- மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு

Post by பிளேடு பக்கிரி Tue Aug 03, 2010 5:35 pm

காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்:புது மண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புது தாலி- மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு 678642 காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்:புது மண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புது தாலி- மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு 678642



காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்:புது மண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புது தாலி- மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்:புது மண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புது தாலி- மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு Empty Re: காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்:புது மண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புது தாலி- மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு

Post by அன்பு தளபதி Tue Aug 03, 2010 6:58 pm

நம்ம ஊர்ல தண்ணி வரல கிணற்று பக்கத்தில் பூஜை நடந்தது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்:புது மண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புது தாலி- மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு Empty Re: காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்:புது மண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டு புது தாலி- மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum