ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்த்தப்படும்: மு.க.ஸ்டாலின்

2 posters

Go down

தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்த்தப்படும்: மு.க.ஸ்டாலின் Empty தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்த்தப்படும்: மு.க.ஸ்டாலின்

Post by நவீன் Mon Aug 02, 2010 5:49 pm

கோவை,
அடுத்த ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாட்டில்
தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்த்தப்படும் என்று துணை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களின் "ஸ்டிக்கான்-2010" என்ற
பெயரில் 19-வது மாநில மாநாடு கோவை பீளமேடு கொடிசியா வளாகத்தில் நேற்று
நடைபெற்றது. மாநாட்டுக்கு தமிழக ஊரகத் தொழில் துறை மற்றும் கால்நடை துறை
அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி தலைமை தாங்கினார். இந்த மாநாட்டை தமிழக
துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர்
பேசியதாவது:-
தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் என்கிற பொறுப்பை நான் ஏற்ற பிறகு
கடந்த 13.6.2006 அன்று தலைமை செயலகத்தில் ஒரு கூட்டத்தை நடத்தினேன். அந்த
கூட்டத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து தொழில் கூட்டமைப்புகளின்
நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பெரிய
தொழிற்கூட்டமைப்புகள் மட்டுமல்ல. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்
முனைவோர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கருத்தை தெரிவித்தனர்.
அதன்பிறகு கடந்த 13.10.2009 அன்று நெல்லையிலும், 10.12.2009 அன்று
கோவையிலும் நடைபெற்ற மண்டல அளவிலான தொழில் வளர்ச்சி கலந்தாலோசனை
கூட்டத்திலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின்
பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். ஆக தமிழக
அரசு பெருந்தொழில் முனைவோர் சிறு தொழில் முனைவோர் என பாகுபாடு பாராமல்
எத்தகைய தொழில் முனைவோராக இருந்தாலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை,
சலுகைகளை, ஒத்துழைப்பை அளித்து தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை உறுதி
செய்து வருகிறது.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி உலகளாவிய பொருளாதார மந்த நிலையில்
பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகள்
எடுத்து வருகிறது. தொழில் வளர்ச்சிக்கான சலுகைகள் தொடர்ந்து
வழங்கப்படுகின்றன. மின்சார பற்றாக்குறையை சமாளிக்க, அனைத்து
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழில் அமைதி நிலவுவது உறுதி
செய்யப்பட்டுள்ளது. அமைப்பு முறையிலான தொகுப்பு சலுகைகள்
வழங்கப்படுகின்றன. தற்போது தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மிக வேகமாக
உள்ளது. குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 37 பெரிய தொழில்
நிறுவனங்கள் சுமார் 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய் முதலீட்டில் தங்களது
உற்பத்தியை தொடங்கி தமிழகத்தில் உள்ள 2 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு
வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளன. தமிழகத்தில் உள்ள குறு மற்றும் சிறு
தொழில்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே தமிழக அரசு தொழில் வளர்ச்சியை
ஊக்குவிக்கின்றது. பெருந்தொழில்களுக்கு என அதிக சலுகைகள்
அளிக்கப்படுவதில்லை.
தமிழக அரசு சிறு தொழில் வரலாற்றில் ஒரு சிறப்பான முயற்சியாக கடந்த
2008-ம் ஆண்டு சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கான கொள்கையை
வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே மாநில அளவில் இத்தகைய கொள்கையை வெளியிட்ட
ஒரே மாநிலம் தமிழ்நாடாகும். சிறு தொழில் வளர்ச்சிக்காக சிட்கோவை
நிறுவியவர் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி ஆவார். 1970-ம் ஆண்டு
நிறுவப்பட்ட சிட்கோ நிறுவனத்தின் கீழ் 2006-ம் ஆண்டு அளவில் 78
தொழிற்பேட்டைகள் இயங்கி வந்தன. 2011-ம் ஆண்டு முடிவுக்குள் இந்த எண்ணிக்கை
108 ஆக உயர்த்தப்படும். தொழில்பேட்டைகளில் தொழில் நகரிய சட்டத்தில்
அமுல்படுத்துவதில் சில பிரச்சினைகள் உள்ளதால், தற்போது இந்த
இடங்களிலிருந்து வசூலிக்கப்படும் தொகையை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி
அமைப்பிற்கும் சிட்கோவிற்கும் பிரித்து அளித்து தேவையான உள்கட்டமைப்பு
வசதிகளை ஏற்படுத்தி பராமரிக்கலாம் என்று கருதப்பட்டுள்ளது. அடுக்குமாடி
தொழில் வளாகங்களை பொறுத்தவரை நில கிரயம் தொடர்பான பரிசீலனையில் சில
திட்டங்கள் உள்ளன. கட்டிடப் பரப்பு அதற்கான கட்டுமான செலவு, தொழில்
மனைக்கான விலை இவற்றிற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளை பொறுத்து
இடத்திற்கேற்ப நிதி வசதிக்கேற்ப இந்த கோரிக்கை செயல்படுத்தப்படும்.
தமிழக அரசை பொறுத்தவரை சிறு தொழில் பெருந்தொழில் என்று வேறுபாடு என்பதை
பார்ப்பதில்லை. இரண்டுமே தொழில் வளர்ச்சியை பொறுத்து இரண்டு கண்களை
போன்றவை. சிறு துளி தான் பெரு வெள்ளமாகிறது. இன்றைக்கு சிறு, குறு மற்றும்
நடுத்தர தொழில் அதிபராக உள்ள நீங்கள் எல்லாம் பெருந்தொழில் அதிபர்களாக ஆக
வேண்டும் என்பது என் விருப்பம். தமிழ்நாடு இந்தியாவில் தொழில்
வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ளது. தமிழக தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும்
பொருட்கள் உலகம் எங்கும் விற்பனை செய்யப்படுகின்றன என்ற நிலை ஏற்பட
வேண்டும். அதுவே நம் அனைவரின் விருப்பமாகும். அதற்கு நாம் அனைவரும்
ஒருங்கிணைந்து தொடர்ந்து முயற்சி செய்ய இந்த மாநாடு வழி வகுக்கும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்த்தப்படும்: மு.க.ஸ்டாலின் Empty Re: தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்த்தப்படும்: மு.க.ஸ்டாலின்

Post by ரபீக் Mon Aug 02, 2010 5:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்கு பிறகு ஓட்டு எண்ணிக்கை ஏன்?
» தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு விரைவில் தீரும் மு.க.ஸ்டாலின் உறுதி
» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
» ஊர்க்காவல் படையினருக்கு தினப்படி ரூ.500 ஆக உயர்த்தப்படும்
» 5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்: மோடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum