புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_c10திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_m10திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_c10திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_m10திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_c10திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_m10திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_c10திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_m10திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_c10திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_m10திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_c10 
19 Posts - 3%
prajai
திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_c10திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_m10திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_c10திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_m10திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_c10திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_m10திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_c10திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_m10திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_c10திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_m10திருமணச் சடங்குகளும் திருமணமும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணச் சடங்குகளும் திருமணமும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 31, 2010 11:55 pm

திருமணச் சடங்குகளைப் பரிபூரணமாக நடத்துவதும் ஈற்றில் திருமண பந்தத்தில் நுழைவதும் இன்று இரு வேறு வித்தியாசமான கருத்தியல்களாகப் பரிணமித்துள்ளன. திருமண பந்தத்தினுள் நுழைவதன் ஆரம்பத்தைக் குறித்துக் காட்டுகின்ற வைபவங்கள் முன்னதாகவே நிகழ்ந்து விடுகின்றன. எல்லாமே வர்த்தக மயமாகிவிட்ட இந்தக் காலத்தில், ஆயுள் முழுவதும் நிலைத்திருக்கும் உறவினை உருவாக்குவதில் காட்டப்படும் கரிசனையை விட இச்சடங்குகளுக்கே அதிக கரிசனையும் முக்கியத்துவமும் வழங்கப்படுகின்றது.

மணப்பெண் அவளின் கற்பின் சின்னமாக வெள்ளை ஆடை அணிந்திருக்கின்றாளா அல்லது அவளின் கருவளத்தின் அடையாளமாக சிவப்பு ஆடை அணிந்திருக்கிறாளா என்பது நவீன திருமணங்களில் ஒரு பொருட்டாகக் கருதப்படுவதில்லை.அவை வெறும் சமுதாய ஒன்றுகூடல்களே. திருமணம் என்பது தாமே இரண்டு தனி நபர்கள் அவர்கள் பிறந்த குடும்பங்களில் இருந்து விலகி ஒன்றாக வருவதாகும். திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவும் பிணைப்புமாகும். இதுவே பல குடும்பங்களினதும் வரைவிலக்கணத்தில் பிரதான பாத்திரத்தினை வகிக்கின்றது.

திருமணமானது இரு மனிதர்களுக் கிடையிலான தனிப்பட்ட உறவாக இருப்பதுடன் அது சமூகத்தின் மிகவும் முக்கியமான மற்றும் அடிப்படையான நிறுவனங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது. எவ்வாறாயினும், இலங்கையில் மிகவும் பிரசித்தமான நடைமுறை என்ற ரீதியில் திருமணம் தாமே, தமக்கு இடையில் வாக்குறுதி எடுத்துக் கௌளும் இரு மனிதர்கள் மீதான முக்கியத்துவத்தினைத் தாண்டி மலர் அலங்காரம், திருமண மண்டபங்கள் மற்றும் ஒப்பனைக் கலைஞர்கள் என்பவற்றின் மீது படிந்து விடுகின்றது.

கிறிஸ்தவத் திருமணங்களிலே, திருமண பந்தத்தில் நுழைபவர்கள் பின்வருமாறு வாக்குறுதி எடுத்துக் கொள்வர்: “இன்பத்திலும், துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் வாழ்வின் முடிவு வரை ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாய் இருப்போம்! திருமண உறவின் முக்கியத்துவத்தினைப் புரிந்து கொண்ட கோயில், ஒரு நிறுவனம் என்ற ரீதியில், கிறிஸ்தவத் திருமணங்களுக்கான ஒரு முன்தேவையாக, திருமணத்திற்கு முன்பான வகுப்புகளை நடத்துகின்றது. எவ்வாறாயினும், இதன் முக்கியத்துவமானது இன்று எழுந்துள்ள கவர்ச்சிகரமான திருமண ஏற்பாடுகளினால் பெருமளவிற்கு மறைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் திருமணம் என்பது பெருமளவிற்கு சீதனம், மணப் பெண்ணிற்கான கிரயம், மற்றும் ஒருவரின் அந்தஸ்தினை உறுதிப் படுத்தல் என்பவற்றின் மீதான ஒரு ஒப்பந்தத்தினையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. திருமணம் என்பது பல சமுதாயங்களினாலும் சமூகத்தின் மேல் மட்டத்தினை நோக்கிய நகர்விற்கான ஒரு வழியாக, அல்லது இருக்கின்ற பிணைப்புக்களை வலுப்படுத்துவதற்கான ஒரு வழியாகவே நோக்கப்படுகின்றது. பொருத்தமான பிள்ளைகளை உடைய பெற்றோர் தமது பிள்ளைகளுக்குச் சிறந்த துணைகளைத் தேடுவதற்காக வலையமைப்புக்களை அமைத்துக் கொள்கின்றனர்.

ஒரு சமுதாயத்திலே கல்யாணத் தரகர் என்பவர் மிகவும் முனைப்பான பாத்திரத்தினை வகிக்கும் ஒருவராவார். அவரே இலங்கையில் திருமணங்களை நடத்தி வைக்கும் ஏற்பாடுகளைச் செய்வதில் முயற்சி எடுப்பவராக இருக்கின்றார். மோதிரம் மாற்றுவது, தம்பதிகளின் ஆடைகளைச் சேர்த்துக் கட்டி விடுவது, தாலி கட்டுவது, திலகமிடுவது அல்லது தம்பதிகளின் விரல்களைப் பிணைத்து விடுவது போன்றவை ஒன்று சேரலைக் குறிப்பதாகவே இருக்கின்றன. திருமண வைபவத்தின் முக்கியத்துவம் காலத்துடன் சேர்ந்து மாறிவிட்டது. திருமணம் என்பதன் முக்கியத்துவம் அதனை ஒட்டி நடக்கும் சடங்குகளால் மழுங்கடிக்கப்பட்டுள்ளது. 1847 ம் ஆண்டின் திருமணச் சட்டவாக்கத்திற்கு முன்பு, இலங்கையிலுள்ள கிராமப் புறங்களில், பாரம்பரியத், திருமணங் களுக்கு, இவ்வாறான வைபவங்களோ அல்லது இணைவின் சட்டபூர்வமான பதிவுகளோ தேவைப்படுவனவாக இருக்கவில்லை. இன்றோ இவை எல்லாம் பரிபூரணமாக நிகழ்த்தப்படுகின்ற திருமணத்திற்கே முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.


அவ்வாறாயின் நடக்கும் பரிபூரணமான சம்பிரதாயங்கள் யாவை?


நான் இரண்டு காரணிகளின் மீது கவனம் குவிக்க விரும்புகின்றேன்: வைபவத்திற்கு முன்னர் நடக்கும் சம்பிரதாயங்களும் ஏற்பாடுகளும், வைபவமும். என்னுடைய பதிவுகள், நான் கலந்து கொண்ட, அதில் பகுதியாயிருந்த கேள்விப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். இச்சம்பிரதாயங்களின் ஏற்பாடுகள் பல செயற்பாடுகளின் ஆரவாரங்களினால் நிறைந்திருக்கின்றன. ஆடை, அணி கலன், திருமண மண்டபம் போன்றவற்றிற்கான தெரிவுகள் எல்லையற்றவையாக இருக்கின்றன. மணவாளன் மற்றும் மணப்பெண் பரிவாரம் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றது. மணப் பெண்ணின் தோழியர் மணப் பெண்ணின் உயரம் மற்றும் நிறம் என்பவற்றிற்கு பொருத்தமானவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகையில் மணமகனின் தோழர்களும் அவ்வாறே மணமகனின் உயரம் மற்றும் நிறம் என்பவற்றிற்கு பொருந்துபவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சம்பிரதாயங்களை கச்சிதமாகவும், கவர்ச்சிகரமாகவும் நடத்துவதே முக்கியம் என்கின்ற காரணத்தினாலும், மணப்பெண்ணின் தோழியரையும் மணவாளனின் தோழர்களையும் தெரிவு செய்வது தோற்றத்தினை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதாலும் கடந்த காலங்களைப் போல் உறவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது அருகிவிட்டது. வகை வகையாக இனிப்புப் பதார்த்தங்கள் வைபவத்திற்கெனத் தயாரிக்கப் படுகின்றன. பாரம்பரிய உணவு வகைகளான முறுக்குகள், பணியாரங்கள் மற்றும் பாற்சோறு போன்றவற்றின் இடத்தை நவீன திருமணங்களில் திருமண கேக்குகளும், பாதாம் பருப்புகளும், சொக்லேற்றுகளும் எடுத்துக் கொண்டு விட்டன.

திருமணத்திற்கு முன் நடக்கும் சம்பிரதாயங்களை ஏற்பாடு செய்ய திருமண ஏற்பாட்டாளர் நியமிக்கப்படுகின்றார். அவரே இச்சம்பிரதாயங்களுக்கான ஓர் அடிப்படையை உருவாக்குகின்றார். இனிப்புப் பண்டங்களை எவ்வாறு அலங்காரத் தாளினால் சுற்றுவது என்பது கூட இந்த அடிப்படையின் பிரகாரமே தீர்மானிக்கப்படுகின்றது. ஒப்பனைகள், சிகை அலங்காரம் மற்றும் ஆடைத் தெரிவு போன்றவை பற்றிய ஆலோசனைகளைப் பெறுவதற்கு அழகுபடுத்தல் நிபுணர்களின் ஆலோசனையே பெறப்படுகின்றது. வைபவத்திற்கு பல மாதங்களிற்கு முன்பே முகஅழகுச் சிகிச்சையும் ஏனைய அழகுச் சிகிச்சைகளும் திட்டமிடப்படுகின்றன. நகைகளைத் தயாரித்து வழங்குவதற்கான கட்டளைகள் வழங்கப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் பிரத்தியேகமாக மணமகளுக்கென்றே நகைகளை வடிவமைக்கவும் கட்டளைகள் வழங்கப்படுகின்றன.

வைபவத்திற்கான மண்டபம் ஏற்கனவே ஒதுக்கப்படுகின்றது. பரிமாறப்பட வேண்டிய உணவு வகைகள் தெரிவு செய்யப்படுகின்றன. தெரிவு செய்யப்பட முன்பு அவற்றின் மாதிரிகள் ருசி பார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன. திருமண மோதிரங்களும் பல வகைகளிலும் பல உலோகங்களிலும் மாணிக்கக்கற்கள் பதிக்கப்பட்ட வையாகத் தெரிவு செய்யப்படுகின்றன. இவற்றினையெல்லாம் தொடர்ந்து, திருமண நாள் நெருங்க தம்பதியினர் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் ஓர் ஒற்றுமை காணப்படும். அதுதான் காலியாகிவிட்ட பணப்பை. திருமண நாளன்று தாமே பல்வேறு சமயக் குழுக்களுக்கு மத்தியில் பல்வேறு விதமான சமயச் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. மங்கள நேரம் குறிக்கப்பட்டால், மணமகள் சில வேளைகளில் அதிகாலை மூன்று மணியில் இருந்தே ஆடை அணியத் தயாராகத் தொடங்கி விடுகின்றார். அழகுபடுத்தல் நிபுணர்களின் வேலை முடிந்ததும், புகைப்படக் கலைஞர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கி விடுவர்.

புகைப்படங்கள் சிறப்பான முறையில் அமைய வேண்டும் என்பதற்காக மணப்பெண்ணும் அவரது பரிவாரங்களும் மணமகனும் அவரது பரிவாரங்களும் பல்வேறு கோணங்களில் நிறுத்தப்படுகின்றார்கள். வைபவம் முழுவதுமாகப் படம் பிடிக்கப்படுகின்றது. சமயவைபவங்களும் உத்தியோகபூர்வ வைபவமும் முழுவதுமே படம் பிடிக்கப்படுகின்றது. சமய வைபவங்களும், உத்தியோகபூர்வ வைபவமும் முடிவடைந்ததன் பின்னர், வரவேற்பு நிகழ்ச்சி ஆரம்பிக்கின்றது. தாள வாத்தியங்கள் முழங்க, கேக் வெட்டப்படும், கேக் பரிமாறப்படும், மதுபானங்கள் பரிமாறப்படும். களிப்பினைக் குறித்து மதுபானம் அருந்த அழைப்பு விடுக்கப்படும். நடனமாடத் தொடங்கி ஈற்றில் இரவு விருந்துபசாரம் நடக்கும். வைபவம் நடனத்துடன் முடிவடைந்ததும் தம்பதிகள் வரவேற்பு மண்டபத்திற்கு வெளியே, அலங்காரக் குழை வண்ணத் துணுக்குகள் வீசி அழைத்து வரப்படுகின்றனர். அவர்களுக்கு அங்கே வாழ்த்துக்கள் கூறப்படுகின்றன.

திருமண வைபவத்தைத் தொடர்ந்து வருகின்ற மாதங்களில் தான், தம்பதியினர் தமது திருமண வைபவ ஏற்பாடுகளின் தீவிர ஈடுபாட்டு ஆர்வத்திலிருந்து விடுபட்டு தம் வாழ்வினைப் பற்றிச் சிந்திப்பார்கள் என ஒருவர் எதிர்பார்க்கலாம். திருமணத்திற்கான ஏற்பாடுகளில் செலவிடப்பட்ட ஆர்வமும் சக்தியும் உறவினை வளர்ப்பதிலும் செலவிடப்படும் எனவும் ஒருவர் எதிர்பார்க்கலாம்.

மிஹிரி பர்டிநான்டோ



திருமணச் சடங்குகளும் திருமணமும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக