புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஒரு பழத்தின் விலை ரூ. 2000! I_vote_lcap ஒரு பழத்தின் விலை ரூ. 2000! I_voting_bar ஒரு பழத்தின் விலை ரூ. 2000! I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
 ஒரு பழத்தின் விலை ரூ. 2000! I_vote_lcap ஒரு பழத்தின் விலை ரூ. 2000! I_voting_bar ஒரு பழத்தின் விலை ரூ. 2000! I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
 ஒரு பழத்தின் விலை ரூ. 2000! I_vote_lcap ஒரு பழத்தின் விலை ரூ. 2000! I_voting_bar ஒரு பழத்தின் விலை ரூ. 2000! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பழத்தின் விலை ரூ. 2000!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 30, 2010 2:06 pm

 ஒரு பழத்தின் விலை ரூ. 2000! 25konda3


உலகில் எண்ணற்ற வகையான பழங்கள் உள்ளன.​ ஆனால்,​​ நீலகிரி மாவட்டத்தில் ​ விளையும் ஒரு பழத்திற்காக முன்பதிவு செய்து மாதக்கணக்கில் காத்திருப்பது ​வினோதமானது.​ அந்தப் பழம் துரியன் பழம்தான்!

ஆங்கிலேயர் காலத்தில் நீலகிரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பழ மரங்கள் "பர்லியார்' பகுதியில் காணப்படுகின்றன.​ "துரியோ ஜெபித்னஸ்' என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட துரியன் மரங்கள் உலகில் சுமத்ரா,​​ போர்னியோ,​​ தாய்லாந்து,​​ பர்மா,​​ வியட்நாம்,​​ மலேசியா,​​ சிங்கப்பூர் மற்றும் சிலி ஆகிய நாடுகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

சிறிய அளவிலான பலாப்பழத்தைப்போலத் தோற்றமளிக்கும் இப்பழங்களைப் பிரித்துப் பார்த்தால் உள்ளே அதிகபட்சமாக 7 சுளைகள் வரை காணப்படும்.​ இந்தப் பழம் மரத்திலேயே பழுத்து கீழே விழும்.​ பழம் பழுக்கும்போது அழுகிய முட்டையிலிருந்து வரும் துர்நாற்றத்தைப்போல அதன் மணம் இருக்கும்.​ இதன் காரணமாகவே பெரும்பாலானோர் இப்பழத்தை விரும்புவதில்லை.​ இப்பழத்தைக் குறித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குநர் டாக்டர் வி.ராம்சுந்தர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து...

""இப்பழத்திற்குள் இருக்கும் இண்டோல் என்ற ரசாயனப் பொருள் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.​ அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டோர் இப்பழத்தை உண்டால் உடல் சுகவீனம் நீங்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.​ அத்துடன் இப்பழத்திற்கு "அப்ரோடைசிக்' குணமுள்ளதால் வீரியத்தன்மையை உருவாக்குவதாக கருதப்படுகிறது.​ இப்பழம் பழுத்த பின்னர் அதிக நாட்களுக்கு வைக்க முடியாது.

"புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது' என்பது பழமொழி.​ ஆனால் மலேசிய நாட்டு வனத்துறையினர் வித்தியாசமான ஆராய்ச்சி ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.​ துரியன் பழம் பழுக்கும் காலங்களில் இதன் மரத்திற்கடியில் புலிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.​ அதனால் இப்பழத்தை புலிகள் விரும்பி சாப்பிடுவதாக இருக்கலாம்.​ அல்லது இப்பழத்தை சாப்பிடுவதற்காக இம்மரத்திற்கு வரும் பிற விலங்கினங்களை தங்களுக்கு இரையாக்கிக் கொள்வதற்காகவும் இம்மரங்களுக்கடியில் புலிகள் கூட்டம் இருக்கலாம் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.​ இதுதொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

துரியன் பழங்களுக்குச் சீனாவில் அதிக கிராக்கி உள்ளது.​ அதேபோல,​​ தமிழகத்தில் சென்னை பகுதிகளில் இப்பழத்திற்கு அதிக வரவேற்பு உள்ளது.​ பெண்களின் "ஈஸ்ட்ரோஜென்' என்ற ஹார்மோன் சுரப்பியை இப்பழங்கள் ஊக்குவிப்பதால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளதாக நம்பப்படுகிறது.

தாய்லாந்து நாட்டில் சந்தாபுரி என்ற இடத்தில் ஆண்டுதோறும் பழங்களுக்கான திருவிழா நடைபெறும்.​ இதில் முக்கிய பழமாக துரியன் இடம் பெறும்.​ சந்தாபுரியே துரியன் பழங்களின் தலைநகராக கருதப்படுகிறது.

மிதவெப்ப மண்டல பயிரான துரியன் பழங்கள் மட்டுமின்றி அந்த மரமும் மருத்துவக் குணம் வாய்ந்ததாகும்.​ இதன் இலைகளின் சாறு காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.​ அதேபோல,​​ மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இம்மரத்தின் இலைகளை வெந்நீரில் போட்டுக் குளிக்கலாம்.​

இதன் இலைச்சாறு தோல் நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது.​ இம்மரத்தின் பசுமையான இளம் தளிர்கள் மற்றும் தண்டுகள் சாலட் செய்வதற்கும் உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன.​ இப்பழத்திலுள்ள கொட்டைகளைப் பலாக்கொட்டைகளைப் போல வேக வைத்தும்,​​ வறுத்தும் சாப்பிடுகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் துரியன் பழ மரங்கள் பர்லியார் மற்றும் கல்லார் பழப்பண்ணைகளில் மட்டும் காணப்படுகிறது.​ இங்கு குறைந்த எண்ணிக்கையிலேயே துரியன் பழ மரங்கள் இருப்பதால் இப்பழங்களுக்காக முன்பதிவு செய்து கொள்கின்றனர்.​ இம்மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தமிழக அரசின் தோட்டக்கலைத்துறையும் பதியன் மற்றும் ஒட்டு முறைகளின் மூலம் நாற்றுகளை உற்பத்தி செய்து வருகிறது.

இறக்குமதி செய்யப்படும் துரியன் பழங்களைவிட நீலகிரி மாவட்டத்தில் விளையும் துரியன் பழங்கள் வீரியம் கொண்டவையாக இருப்பதால் இதற்கான கிராக்கியும் அதிகரித்துள்ளது.​ வழக்கமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் துரியன் பழங்கள் ஒரு பழத்திற்கு ரூ.800 வரை விலை போகின்றன.​

ஆனால் பர்லியார் பகுதியில் கிடைக்கும் பழங்கள் ஒரு பழத்திற்கு ரூ.2,000 வரை விற்பனையாகின்றன.​ இதுவே இப்பழத்திற்கு மக்கள் மத்தியிலுள்ள வரவேற்பை உணர்த்துவதற்கு சாட்சி!​ பல்வேறு மருத்துவக் குணங்களையும்,​​ உள்ளூர் வெளியூர் வெளிநாட்டு மக்களிடம் அமோக வரவேற்பையும் பெற்றுள்ள துரியன் பழத்திற்கு,​​ சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.​ ​ இந்தத் துரியன் பழம் மலைகளின் அரசியான நீலகிரியிலும் விளைவது இம்மாவட்டத்திற்கு மேலும் பெருமையளிப்பதாகும்.

கடைசியாக ஒரு தகவல்.​ இப்பழங்களிலிருந்து வெளியாகும் மணம் ஒவ்வாததால்,​​ சிங்கப்பூரில் இப்பழங்களை பொது இடங்களில் உண்பதற்குத் தடை விதித்துள்ளனர்.

ஏ.பேட்ரிக்​​​​​​​​​



 ஒரு பழத்தின் விலை ரூ. 2000! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Jul 30, 2010 2:11 pm

அரிய தகவல் தந்த தலைக்கு நன்றி .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 2:31 pm

 ஒரு பழத்தின் விலை ரூ. 2000! 678642  ஒரு பழத்தின் விலை ரூ. 2000! 678642




 ஒரு பழத்தின் விலை ரூ. 2000! Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 2:33 pm

kalaimoon70 wrote:அரிய தகவல் தந்த தலைக்கு நன்றி .
சியர்ஸ்



thiva
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Jul 30, 2010 2:59 pm

பணமும் நிறைய காய்ச்சு தொங்கினால் தான் அதிகம் சாப்பிட முடியும்.  ஒரு பழத்தின் விலை ரூ. 2000! Icon_eek  ஒரு பழத்தின் விலை ரூ. 2000! 440806

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jul 30, 2010 5:21 pm

 ஒரு பழத்தின் விலை ரூ. 2000! 677196  ஒரு பழத்தின் விலை ரூ. 2000! 678642  ஒரு பழத்தின் விலை ரூ. 2000! 678642  ஒரு பழத்தின் விலை ரூ. 2000! 678642  ஒரு பழத்தின் விலை ரூ. 2000! 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Fri Jul 30, 2010 5:25 pm

 ஒரு பழத்தின் விலை ரூ. 2000! 678642  ஒரு பழத்தின் விலை ரூ. 2000! 678642  ஒரு பழத்தின் விலை ரூ. 2000! 678642  ஒரு பழத்தின் விலை ரூ. 2000! 678642  ஒரு பழத்தின் விலை ரூ. 2000! 678642  ஒரு பழத்தின் விலை ரூ. 2000! 677196



அன்புடன்
மீனா
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Jul 30, 2010 5:43 pm

அரிய தகவல்  ஒரு பழத்தின் விலை ரூ. 2000! 677196  ஒரு பழத்தின் விலை ரூ. 2000! 677196  ஒரு பழத்தின் விலை ரூ. 2000! 677196  ஒரு பழத்தின் விலை ரூ. 2000! 678642  ஒரு பழத்தின் விலை ரூ. 2000! 678642  ஒரு பழத்தின் விலை ரூ. 2000! 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக