ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புவி வெப்பமாதல்...

3 posters

Go down

புவி வெப்பமாதல்... Empty புவி வெப்பமாதல்...

Post by அன்பு தளபதி Wed Jul 28, 2010 9:13 pm

இயற்கையின் அருட்கொடையை நாம் அளவிட முடியாது. எந்த ஒரு சூழலிலும் அந்த சூழ்நிலைக்கேற்ப எல்லா உயிரிகளும் வாழ்வதற்கு அடிப்படை ஆதாரங்களை இயற்கை கொடுத்துள்ளது.

பஞ்ச பூதங்களே இயற்கையின் உயிர் நாடிகள், இயற்கை மலை, மழை, காடு, கடல், பனி சிகரங்கள், நல்ல நீர் ஊற்றுக்கள், வெந்நீர் ஊற்றுக்கள், என ஒவ்வொன்றும் வியக்கத்தக்கவைதான்.

இன்றைய நவீன விஞ்ஞானம் அனைத்தும் இயற்கையிலிருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டவை. ஆனால் இயற்கை அதிகம் கொடுக்கிறதே என்பதற்காக இயற்கையையே நாசப்படுத்த மனிதன் விழைகிறான். 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி மற்றும் 6ம் தேதி இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா தனது ஏகாதிபத்திய முரட்டுத்தனத்தால் ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டு வீசியது. இன்று அதாவது 68 ஆண்டுகளுக்குப் பிறகும் அப்பகுதியில் புல் பூண்டு ஏதும் முளைக்கவில்லை. அங்கு பிறக்கும் குழந்தைகள் ஊனமாகவும், மனநலம் குன்றியும் பிறக்கின்றனர். இந்நிலை இப்படியென்றால், இங்கு மேற்கித்திய கலாச்சாரம் ஆடையில் மட்டுமின்றி, பழம் பெருமை வாய்ந்த இந்திய கலாச்சாரத்தை அழித்ததுடன், அதன் பெருமைவாய்ந்த இந்திய விவசாயத்தை வேரோடு அழிக்கத் தொடங்கியிருக்கிறது. பொதுவாக இந்திய தட்ப வெப்ப நிலையில் அரிய பல மூலிகைகள் வளரும் தன்மை கொண்டவை. இவை எண்ணற்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டவை. தற்போது தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய விளை நிலங்கள் அனைத்தும் தரிசு காடுகளாக மாறி வருகின்றன. இதற்கான காரணங்களை ஆராய்ந்தோமானால் சில உண்மைகள் புலப்படும்.

கலாச்சாரத்திற்கும், விருந்தோம்பலுக்கும் நீண்ட பாரம்பரியம் கொண்ட நம் தமிழகத்தின் 69 சதவீத நிலங்கள் இன்று தரிசாகவும், மனை நிலங்களாகவும் மாற்றப் பட்டுள்ளன.

கிராம மக்கள் தங்களின் பிழைப்பு தேடி நகரங்களுக்கு குடியேறி வருகின்றனர். காரணம் வறுமைதான். வானம் பார்த்த பூமியாக இருக்கும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஒரு போகம் நெல், அடுத்து தானிய வகைகள், என பயிரிட்டு முன்பு விவசாயம் செய்து வந்தனர். அவர்கள் வீட்டைச்“ சுற்றியும், கண்மாய், ஏரிக்கரையிலும் மரங்களை நட்டு வைத்தனர். நீர்த் தேக்கங்களை மக்களே தூர்வாரி சீராக்கினர்.

நீர் வரும் கால்வாய்களை நன்கு பராமரித்தனர். ஏரிகளின் மாவட்டமாக செங்கல்பட்டு முன்பு விளங்கியது. தற்போது ஆக்கிரமிப்பால் எதிர்காலத்தில் ஏரியில்லா மாவட்டமாக ஆகும் நிலையில் உள்ளது.

பின்தங்கிய இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மாவட்டங்களில் அதிகளவு ஏரி குளங்களை அக்காலத்தில் ஏற்படுத்தி மழை நீரை சேமித்தனர். ஆனால் இன்றோ ஏரிகள் அனைத்தும் தனியார்களின் ஆக்கிரமிப்பிற்கு ஆளாகி மனை நிலங்களாக மாறிவிட்டன. விளை நிலங்கள் அனைத்தையும் பன்னாட்டு கம்பெனிகள் அபகரித்துக்கொண்டன. இதனால் மழைநீர் சேமிப்பு இல்லாமல் போய்விட்டது. மரங்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டன.

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்பது வெறும் வாசகமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. மரத்தை இழந்ததால் புவியின் வெப்பம் அதிகரிக்கிறது.

இரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகளால் ஆற்றுப் படுகைகள் உவர் நிலமாக மாறிவிட்டன. அரிய பல மூலிகைகள் பல அழிந்துவிட்டன. விவசாயத்தில் அதிகளவு ரசாயன உரங்கள், விஷமருந்துகள், களைக்கொல்லி போன்றவற்றால் விவசாய நிலங்கள் முற்றிலும் தரம் குன்றிவிட்டன. ஏற்கனவே வேலிக் கருவை, யூகலிப்டஸ் போன்றவற்றால் நிலத்தை மாசுபடுத்தி புவி வெப்பத்தை அதிகரித்தது போல், நிலங்கள் இந்த இரசாயன உரங்களால் புல் பூண்டு முளைக்காமல் அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட இடங்களைப் போல் மாறிவிட்டன.

இதனால் பசுமை படர்ந்த நிலங்களிலிருந்து உற்பத்தியான ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. காற்றில் கரியமில வாயு அதிகரித்து புவி வெப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு தமிழகத்தில் கோடைவெயிலின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகில் எங்கும் அனுமதிக்கப்படாத தொழில் நிறுவனங்கள் இன்று தமிழ்நாட்டில் காலூன்றி நிற்கின்றன. இவை வெளியிடும் புகை, நீரால் புவியின் வெப்பம் அதிகரிக்கிறது.

வீட்டின் முன்புறத்தில் உள்ள வேப்பமரத்தின் நிழலில் கோடையை கழித்தவர்கள் இன்று குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறைகளில் வாழ்கின்றனர்.

பிளாஸ்டிக் பொருட்கள், மக்காத குப்பைகளை அதிகம் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் கழிவுகளாக வெளியேற்றுகின்றன. இவை தமிழகத்தை வறட்சிப் பாதைக்கு இட்டுச் செல்கின்றன.

இந்நிலை மாற அரசு விளைநிலங்களை கடுமையான சட்டங்கள் இயற்றி ரியல் எஸ்டேட் என்ற பெயரில் விவசாய நிலங்களை வாங்கிக் குவிப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து அந்த நிலங்களை தரிசு நிலங்களாக மாற்றாமல், மீண்டும் விவசாய நிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மரம் வளர்ப்பதற்கு பள்ளி முதல் கல்லூரி வரை அனைவருக்கும் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தி மரத்தை வளர்த்தால் புவி வெப்பத்தின் பாதிப்பிலிருந்து நாம் விடுபடலாம்.

ஆண்டுக்கொருமுறை நிலங்களை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து அவற்றின் தன்மையை அறிந்து கடுமையான நடவடிக்கை எடுத்தால் விவசாய நிலங்கள் காப்பாற்றப்படும்.
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

புவி வெப்பமாதல்... Empty Re: புவி வெப்பமாதல்...

Post by gunashan Wed Jul 28, 2010 9:25 pm

கட்டுரை அற்புதம் நண்பா. தமிழ் நாட்டில் அனைவரும் படித்து பயன்பெற வேண்டிய கட்டுரை. யார் சொல்லி யார் கேட்கப் போவது. ஆமாம் நண்பா, நீங்கள் எத்தனை மரம் நட்டு வளர்க்கிறீர்கள்.. அன்பு மலர் அன்பு மலர்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

புவி வெப்பமாதல்... Empty Re: புவி வெப்பமாதல்...

Post by ப்ரியா Thu Jul 29, 2010 7:32 am

என்ன இப்பிடி கேட்டுட்டீங்க குணா அண்ணா ...
மணி ஒரு ஆலமரம் இல்லையா மணி ....
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

புவி வெப்பமாதல்... Empty Re: புவி வெப்பமாதல்...

Post by gunashan Thu Jul 29, 2010 7:39 am

மணி ஆலமரமாகவே இருக்கட்டும் பிரியா, அவர் எத்தனை மரம் நட்டு வளர்க்கிறார் என்பதுதான் இப்போது கேள்வி. அது சரி மணி ஏன் திடீர்னு புத்தரா மாறிட்டாரு. ஞானம் பிறந்திருச்சோ.... அன்பு மலர் ஐ லவ் யூ
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

புவி வெப்பமாதல்... Empty Re: புவி வெப்பமாதல்...

Post by ப்ரியா Thu Jul 29, 2010 7:45 am

gunashan wrote:மணி ஆலமரமாகவே இருக்கட்டும் பிரியா, அவர் எத்தனை மரம் நட்டு வளர்க்கிறார் என்பதுதான் இப்போது கேள்வி. அது சரி மணி ஏன் திடீர்னு புத்தரா மாறிட்டாரு. ஞானம் பிறந்திருச்சோ.... அன்பு மலர் ஐ லவ் யூ

அவர் மாறல குணா அண்ணா ,அவர்ட நிழலில்தான் புத்தர் இருக்காராம் எண்டு ஒரு பிட்ட போடத்தான் ..
மணி இது ரொம்ம்ப ஓவரப்பா
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

புவி வெப்பமாதல்... Empty Re: புவி வெப்பமாதல்...

Post by gunashan Thu Jul 29, 2010 7:53 am

அது சரி ப்ரியா,... நீங்க பெண்ணா, ஆணா ? இல்ல........!!
ஒழுங்கா உண்மையை சொல்லிபுடுங்க ஆமா... ஜாலி புவி வெப்பமாதல்... 676261
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

புவி வெப்பமாதல்... Empty Re: புவி வெப்பமாதல்...

Post by ப்ரியா Thu Jul 29, 2010 7:54 am

gunashan wrote:அது சரி ப்ரியா,... நீங்க பெண்ணா, ஆணா ? இல்ல........!!
ஒழுங்கா உண்மையை சொல்லிபுடுங்க ஆமா... ஜாலி புவி வெப்பமாதல்... 676261

என்ன அண்ணா ...ஏனிந்த குழப்பம் ..
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

புவி வெப்பமாதல்... Empty Re: புவி வெப்பமாதல்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum