புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_m10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_m10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_m10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_m10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_m10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_m10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_m10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_m10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல்


   
   
ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Wed Jul 28, 2010 9:03 am

புதுடில்லி :விலைவாசி பிரச்னையை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் ஒட்டு
மொத்தமாக பார்லிமென்டில் அமளியில் இறங்கின. "ஒத்திவைப்பு தீர்மானத்தை
ஏற்றுக்கொண்டு, விலைவாசி உயர்வு பிரச்னை குறித்து அவையில் விவாதம் நடத்த
அனுமதிக்க வேண்டும்' என, ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் போர்க்கோலம்
பூண்டன. இதனால், ஆளுங்கட்சி செய்வதறியாது திணறியது. இதையடுத்து,
பார்லிமென்டின் இரு சபைகளும், அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டன.
மழைக்கால கூட்டத்தொடருக்காக, பார்லிமென்ட் நேற்று முன்தினம் கூடியது.
முதல் நாளில், புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் இறந்தவர்களுக்கு
அஞ்சலி என அலுவல்கள் முடிந்து, இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்தி
வைக்கப்பட்டன. இது வழக்கமான நடைமுறை தான் என்றாலும், இரண்டாம் நாளான
நேற்று, கொந்தளிப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.எதிர்பார்ப்பு
நிஜமாகும் வகையில் நேற்று முழுவதும் பார்லிமென்டின் இரு அவைகளிலும் அனல்
பறந்தது.காலை 11 மணிக்கு லோக்சபா அலுவல்கள் துவங்கியதும் பா.ஜ.,
இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், ராஷ்டிரீய ஜனதாதளம், சமாஜ்வாடி, அ.தி.மு.க.,
தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம் என முக்கிய கட்சிகளின் உறுப்பினர்கள்,
ஒட்டு மொத்தமாக எழுந்தனர்.
விலைவாசி பிரச்னை குறித்து, சபையில் விவாதம் நடத்தி விட்டுத்தான்
மறுவேலை பார்க்க வேண்டுமென எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர்ந்து
வலியுறுத்தினர். சில எம்.பி.,க்கள், சபாநாயகர் இருக்கை அருகே வந்து
கோஷங்கள் எழுப்பினர். ஆளும் தரப்பு எம்.பி.,க்கள் அமைதியாக கவனித்தபடி
இருக்க, கூச்சல் குழப்பம் அதிகமானது.சபாநாயகர் மீரா குமார் தலையிட்டு,
எதிர்க்கட்சி எம்.பி.,க்களை சமாதானப்படுத்தினார். இந்த அமளிக்கு மத்தியில்
எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ் எழுந்து பேசினார்.
அவர் பேசியதாவது:அனைத்துப் பொருட்களின் விலை, விஷம் போல
ஏறியுள்ளது. சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெந்த புண்ணில்
வேலைப் பாய்ச்சுவது போல, டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்
ஆகியவற்றின் விலைகளை அரசு உயர்த்தியுள்ளது.கடந்த மாதம் தான் இந்த விலை
உயர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை காரணம் காட்டி, ஒத்திவைப்பு
தீர்மானம் கொண்டு வர, எதிர்க்கட்சிகளுக்கு முழு உரிமை உள்ளது.இப்பிரச்னை,
ஒத்திவைப்பு தீர்மானத்திற்குண்டான விதிகளுக்குள் பொருந்தி வருகிறது. எனவே,
சபாநாயகர் அனுமதிக்க வேண்டும். கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு,
விலைவாசி பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும்.இவ்வாறு சுஷ்மா பேசினார்.
இது குறித்து, சபாநாயகர் எந்த பதிலும் அளிக்கவில்லை. அமளி அதிகரித்துக்
கொண்டே போனதால், சபை, 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோது,
அமளி ஆரம்பமானது. இருப்பினும், பிரணாப் முகர்ஜி ஒரு மசோதாவை தாக்கல்
செய்தார்.பின், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதற்கான காரணங்களை
பட்டியலிட்டு, அமைச்சர் முரளி தியோரா ஒரு அறிக்கை வாசித்தார். கடும்
அமளிக்கு மத்தியில் அவர் பேசியது யாருக்குமே கேட்கவில்லை.ஒரு கட்டத்தில்,
லாலுவும், முலாயமும், சபாநாயகர் இருக்கை அருகே சென்று கோஷமிட்டனர். நிலைமை
மோசமாகவே, சபை, 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோதும் இதே
நிலை நீடிக்கவே, வேறு வழியின்றி நாள் முழுவதற்கும் ஒத்தி வைக்கப்பட்டது.
ராஜ்ய சபாவிலும் அமளி:ராஜ்ய சபாவில் காலையில் சபை கூடியதும்,
புதிய உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி
நடந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடனே, கேள்வி நேரத்தை எடுத்துக் கொள்வதாக
ராஜ்ய சபா தலைவர் அன்சாரி அறிவித்தார். பிரச்னை துவங்கியது. பா.ஜ.,
இடதுசாரிகள், அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே ரகளையில்
இறங்கின.இந்த நேரத்தில், பாப்லி அணை பிரச்னையை வலியுறுத்தி, சிவசேனா கட்சி
எம்.பி.,க்கள், பேனர் ஒன்றை உயர்த்தி பிடித்தபடி கோஷமிட்டனர். இதைப்
பார்த்த சபை தலைவர் அன்சாரி, அதிருப்தி அடைந்தார்.
அவர் கூறுகையில், "சபைக்குள் பேனர்களைக் காட்டுவது சரியான
நடவடிக்கை அல்ல. இது, விதிமுறைகளை மீறிய செயல்; இதை அனுமதிக்க முடியாது.
எம்.பி.,க்கள் அவரவர் இருக்கையில் அமர வேண்டும்' என்றார்.இருந்தாலும்,
"விலைவாசி உயர்வு பிரச்னையை பேசிவிட்டு, பிறகு வேறு பணிகளைப் பார்க்கலாம்'
என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிடிவாதமாக இருந்தனர். இதனால், சபை ஒரு மணி
நேரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியதும், தொடர்ந்து அமளி
ஏற்பட்டது. வேறு வழியின்றி நாள் முழுவதும் ராஜ்ய சபாவை ஒத்தி வைப்பதாக
அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க., எம்.பி.,க்கள் பதவியேற்றனர் : நேற்று முன்தினம்
ராஜ்ய சபாவில் பதவியேற்றுக் கொள்ளாதவர்கள், நேற்று பதவியேற்க
வாய்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்திலிருந்து தேர்வு
செய்யப்பட்டிருந்த அ.தி.மு.க., எம்.பி.,க்கள் இரண்டு பேரும்
பதவியேற்றனர்.முதலில் மனோஜ் பாண்டியன் அழைக்கப்பட்டார். தமிழில் பதவிப்
பிரமாணத்தை வாசித்து பதவியேற்றுக் கொண்டார். பின்னர் ராமலிங்கமும்
தமிழிலேயே வாசித்து, கடவுளின் பெயரால் பதவியேற்றுக் கொண்டார். நல்ல நாளாக
இல்லை என்பதால், இவர்கள் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொள்ளவில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக