Latest topics
» நாவல்கள் வேண்டும்by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
Jenila |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லா பொறுப்பும் இறைவனுக்கே!
Page 1 of 1
எல்லா பொறுப்பும் இறைவனுக்கே!
'பாலுக்கும் காவல்,
பூனைக்கும் தோழன்' என்கிற பழமொழி கச்சிதமாகப் பொருந்துவது பாகிஸ்தானுக்கா
இல்லை அமெரிக்காவுக்கா என்று சர்வதேச அளவில் ஒரு பட்டிமன்றமே நடத்தி
விவாதித்தாலும்கூட முடிவுகாண முடியாது. அமெரிக்கா ஒருபுறம் மும்பைத்
தாக்குதலிலும், தீவிரவாதிகள் ஊடுருவுவதிலும் பாகிஸ்தானுக்குப் பங்கு
இருப்பதாகவும், குற்றவாளிகளை பாகிஸ்தான் அடையாளம் கண்டு கண்டித்தே தீர
வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. இன்னொருபுறத்தில், தனது
ஆப்கானிஸ்தான், ராணுவ நடவடிக்கைக்கு பாகிஸ்தானின் துணையை நாடுகிறது. அதனால்
நட்புப் பாராட்டுகிறது.பாகிஸ்தானும் சரி, அமெரிக்காவின் நட்பு
நாடாக ஆப்கானிஸ்தான் நடவடிக்கைகளில் முழுமையான ஈடுபாட்டுடன் உதவுவதாகக்
கூறிக் கொள்கிறது. அதேநேரத்தில், பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ.
தலிபான்களுக்கும், தீவிரவாத அமைப்பான அல்-காய்தாவுக்கும் மறைமுகமாக
எல்லாவித உதவிகளையும் செய்து வருகிறது.அமெரிக்காவின் இரட்டை வேடம்
கலைகிறதோ இல்லையோ, பாகிஸ்தானின் இரட்டை வேடத்தைக் கலைத்துவிட்டிருக்கிறது
"விக்கி லீக்ஸ்' இணையதளம் அம்பலப்படுத்தி இருக்கும் ஆவணங்கள். அமெரிக்க
சரித்திரத்தில், ஏன் உலக சரித்திரத்தில் என்றுகூட வர்ணிக்கலாம்,
வெளிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மிகப்பெரிய ராணுவ ரகசியக் குறிப்புகள்
அமெரிக்காவின் பலவீனங்களையும், பாகிஸ்தானின் சதிகளையும் அம்பலப்படுத்தி
இருக்கின்றன. சுமார் 90,000 வெவ்வேறு செய்திக் குறிப்புகளும், ரகசியச்
செய்திப் பரிமாற்றங்களும், புலனாய்வுத் துறையின் அவ்வப்போதைய தகவல்களும்,
ராணுவச் செயல்பாடுகள் பற்றிய ரகசியங்களும் இந்த ஆவணங்களில் காணப்படுகின்றன.நேட்டோ
அமைப்பின் சர்வதேசப் படைகள், ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராகப்
போராடி வருகின்றன. அமெரிக்காவின் தலைமையில் நடைபெறும் இந்தத்
தீவிரவாதத்துக்கு எதிரான போரில், பாகிஸ்தான் அமெரிக்காவின் கூட்டாளியாக
எல்லாவித உதவிகளையும் அளிக்க முன்வந்திருப்பதுடன், ஆப்கானிஸ்தானுக்குச்
செல்லும் நேட்டோ படைகள் வந்து இறங்கவும், தளவாடங்களை எடுத்துச் செல்லவும்
உதவவும் செய்கிறது.அமெரிக்காவின் கூட்டாளியாகத் தன்னை இணைத்துக்
கொண்டுள்ள பாகிஸ்தான் தனது ஒற்றர்களை ரகசிய இடங்களில் தலிபான்
தீவிரவாதிகளைச் சந்திக்க அனுமதிப்பது, அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ படைகளை
எதிர்கொள்ளத் தீவிரவாத அமைப்புகளைத் தயார் செய்வது, தாக்குதல் நடத்தவும்
சதித் திட்டங்களைத் தீட்டுவது என்று மறைமுகமாகச் செயல்படுவது இணையதளத்தின்
மூலம் வெளியாகி இருக்கிறது.அமெரிக்க அதிகாரிகள் எந்தவிதத்
தீவிரவாதத் தாக்குதல்களுடனும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு இருக்கும்
நேரடியான தொடர்பை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடிந்ததில்லை. ஆனால், 2008 ஜூலை
மாதம், அமெரிக்கப் புலனாய்வுத் துறையான சி.ஐ.ஏ.வின் துணைத்தலைவர் ஸ்டீபன்.
ஆர். கேப்ஸ், காபூலிலுள்ள இந்தியத் தூதரகத்தின்மீது நடந்த தற்கொலைப் படைத்
தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.யின் நேரடி உதவி இருந்ததை ஆதாரங்களுடன் பாகிஸ்தானிய
அதிகாரிகளுக்குக் காட்டி அவர்களது கருத்தைக் கேட்டதாக ஒரு தகவல்
தெரிவிக்கிறது.சர்வதேசத் தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட
வேண்டியவர் என்று அமெரிக்காவால் இப்போது ஐக்கிய நாடுகள் சபைக்குப்
பரிந்துரைக்கப்பட்டிருப்பவர் பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ.யின் முன்னாள் தலைவரான
லெப்டினன்ட் ஜெனரல் ஹமீத் கல் என்பவர். 1987 முதல் 1989 வரை, அமெரிக்க உளவு
நிறுவனமான சி.ஐ.ஏ.வுடன் கரம்கோத்து ஆப்கானிஸ்தானியத் தீவிரவாத அமைப்புகளான
அல்-காய்தா மற்றும் தலிபான்களுக்கு சோவியத் படைகளுக்கு எதிராகப் போராடப்
பணமும் தளவாடங்களும் அமெரிக்கா தந்து உதவிய காலகட்டத்தில் ஐ.எஸ்.ஐ.யின்
தலைவராக இருந்தவர்தான் இந்த லெப். ஜெனரல் கல்.இருபது ஆண்டுகளுக்குப்
பிறகும் லெப். ஜெனரல் கல் இப்போதும் செயல்பட்டு வருவதை வெளியாகி இருக்கும்
இணையதளத் தகவல்கள் வெளிக்கொணர்ந்திருக்கின்றன. தான் இப்போது ஓய்வு பெற்று
நிம்மதியாக வாழ்வதாகக் கூறிக்கொள்ளும் கல் இப்போதும் தனது ஐ.எஸ்.ஐ.
சகாக்களுடன் தொடர்பில் இருப்பதும், ராணுவத் தலைமையிடத்தில் கலந்தாலோசனைக்கு
அழைக்கப்படுவதும், பாகிஸ்தானிய ராணுவத்துக்கும், அதிகாரிகளுக்கும்
தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புக்குப் பாலமாகச் செயலாற்றுவதும் இப்போது
உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.ஜெனரல் கல்லுக்குப் பிறகு மிகவும்
சக்திவாய்ந்த மனிதராகப் பாகிஸ்தானிய உளவு நிறுவனத்தின் தலைமைப் பதவியை
வகித்தவர் ஜெனரல் பர்வீஸ் கயானி. இவர்தான் இப்போதைய பாகிஸ்தானிய
ராணுவத்தின் தலைமைப் பதவியில் இருப்பவர். முன்னாள் பாகிஸ்தான் அதிபர்
ஜெனரல் பர்வீஸ் முஷாரபுக்கு நெருக்கமான இவருக்கு சமீபத்தில் பதவி
நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஜெனரல் கயானி ஐ.எஸ்.ஐ. தலைவராக இருந்த
2004 முதல் 2007 வரையிலான காலகட்டத்தைச் சார்ந்ததுதான் இப்போது வெளியாகி
இருக்கும் ரகசியக் குறிப்புகள். தனது ஆப்கானிஸ்தான் நடவடிக்கைகளுக்கு
அமெரிக்கா பக்கபலமாக நம்பிக் கொண்டிருக்கும் ஜெனரல் பர்வீஸ் கயானி
தீவிரவாதிகளுக்கு உதவிய தகவல்கள் வெட்டவெளிச்சமாகி இருக்கிறதே, அமெரிக்கா
இப்போது என்ன செய்யப் போகிறது?பாகிஸ்தானின் நயவஞ்சகமும்,
நாடகங்களும் அம்பலமாகி இருக்கின்றன. மும்பைத் தாக்குதலிலும், இந்தியாவில்
நடந்த வேறு பல தீவிரவாதத் தாக்குதல்களிலும் தொடர்புடைய தீவிரவாதிகள்மீது
நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக, இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை
முறித்துக் கொள்ள ஏதாவது நொண்டிச் சாக்கை ஏற்படுத்திக் கொள்ளும் பாகிஸ்தான்
வருந்துவதாகவும் தெரியவில்லை, திருந்துவதாகவும் தெரியவில்லை.
அமெரிக்காவும் "நாயர் பிடித்த புலிவால்' கதையாக ஆப்கானிஸ்தானிலிருந்து
வெளியேறவும் வழியில்லாமல், அதனால் பாகிஸ்தானைத் தட்டிக் கேட்கவோ, தட்டி
வைக்கவோ துணிவில்லாமல் தவிக்கும் நிலை.இந்தியாவின் நிலைமைதான்
அதைவிடப் பரிதாபம். தகுந்த ஆதாரங்கள் கிடைத்தும், நியாயம் கேட்கும்
தைரியமும், தெம்பும் நமக்கு இல்லை. பாகிஸ்தானைச் சகித்துக் கொள்ளவும்
முடியாது. பகைத்துக் கொள்ளவும் கூடாது என்கிற தர்மசங்கடம்.இந்தியா
அமெரிக்காவை நம்புகிறது, பாகிஸ்தானின் தொந்தரவு இல்லாமல் நிம்மதியாக
வாழ்வதற்கு. அமெரிக்கா பாகிஸ்தானை நம்புகிறது, ஆப்கானிஸ்தானில் தான்
நடத்தும் தீவிரவாதத்தை ஒழிக்கும் போராட்டத்துக்கு உதவுவதற்கு. பாகிஸ்தான்
தீவிரவாதிகளை நம்புகிறது தன்னை நிறுத்திக்கொள்ள. இந்த இடியாப்பச் சிக்கலை
மேலும் சிக்கலாக்கி இருக்கிறது இணையதளம் வெளிக்கொணர்ந்திருக்கும் ரகசியக்
குறிப்புகள்.உலகை அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். எல்லா பொறுப்பும் இறைவனுக்கே!
பூனைக்கும் தோழன்' என்கிற பழமொழி கச்சிதமாகப் பொருந்துவது பாகிஸ்தானுக்கா
இல்லை அமெரிக்காவுக்கா என்று சர்வதேச அளவில் ஒரு பட்டிமன்றமே நடத்தி
விவாதித்தாலும்கூட முடிவுகாண முடியாது. அமெரிக்கா ஒருபுறம் மும்பைத்
தாக்குதலிலும், தீவிரவாதிகள் ஊடுருவுவதிலும் பாகிஸ்தானுக்குப் பங்கு
இருப்பதாகவும், குற்றவாளிகளை பாகிஸ்தான் அடையாளம் கண்டு கண்டித்தே தீர
வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. இன்னொருபுறத்தில், தனது
ஆப்கானிஸ்தான், ராணுவ நடவடிக்கைக்கு பாகிஸ்தானின் துணையை நாடுகிறது. அதனால்
நட்புப் பாராட்டுகிறது.பாகிஸ்தானும் சரி, அமெரிக்காவின் நட்பு
நாடாக ஆப்கானிஸ்தான் நடவடிக்கைகளில் முழுமையான ஈடுபாட்டுடன் உதவுவதாகக்
கூறிக் கொள்கிறது. அதேநேரத்தில், பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ.
தலிபான்களுக்கும், தீவிரவாத அமைப்பான அல்-காய்தாவுக்கும் மறைமுகமாக
எல்லாவித உதவிகளையும் செய்து வருகிறது.அமெரிக்காவின் இரட்டை வேடம்
கலைகிறதோ இல்லையோ, பாகிஸ்தானின் இரட்டை வேடத்தைக் கலைத்துவிட்டிருக்கிறது
"விக்கி லீக்ஸ்' இணையதளம் அம்பலப்படுத்தி இருக்கும் ஆவணங்கள். அமெரிக்க
சரித்திரத்தில், ஏன் உலக சரித்திரத்தில் என்றுகூட வர்ணிக்கலாம்,
வெளிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மிகப்பெரிய ராணுவ ரகசியக் குறிப்புகள்
அமெரிக்காவின் பலவீனங்களையும், பாகிஸ்தானின் சதிகளையும் அம்பலப்படுத்தி
இருக்கின்றன. சுமார் 90,000 வெவ்வேறு செய்திக் குறிப்புகளும், ரகசியச்
செய்திப் பரிமாற்றங்களும், புலனாய்வுத் துறையின் அவ்வப்போதைய தகவல்களும்,
ராணுவச் செயல்பாடுகள் பற்றிய ரகசியங்களும் இந்த ஆவணங்களில் காணப்படுகின்றன.நேட்டோ
அமைப்பின் சர்வதேசப் படைகள், ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராகப்
போராடி வருகின்றன. அமெரிக்காவின் தலைமையில் நடைபெறும் இந்தத்
தீவிரவாதத்துக்கு எதிரான போரில், பாகிஸ்தான் அமெரிக்காவின் கூட்டாளியாக
எல்லாவித உதவிகளையும் அளிக்க முன்வந்திருப்பதுடன், ஆப்கானிஸ்தானுக்குச்
செல்லும் நேட்டோ படைகள் வந்து இறங்கவும், தளவாடங்களை எடுத்துச் செல்லவும்
உதவவும் செய்கிறது.அமெரிக்காவின் கூட்டாளியாகத் தன்னை இணைத்துக்
கொண்டுள்ள பாகிஸ்தான் தனது ஒற்றர்களை ரகசிய இடங்களில் தலிபான்
தீவிரவாதிகளைச் சந்திக்க அனுமதிப்பது, அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ படைகளை
எதிர்கொள்ளத் தீவிரவாத அமைப்புகளைத் தயார் செய்வது, தாக்குதல் நடத்தவும்
சதித் திட்டங்களைத் தீட்டுவது என்று மறைமுகமாகச் செயல்படுவது இணையதளத்தின்
மூலம் வெளியாகி இருக்கிறது.அமெரிக்க அதிகாரிகள் எந்தவிதத்
தீவிரவாதத் தாக்குதல்களுடனும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு இருக்கும்
நேரடியான தொடர்பை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடிந்ததில்லை. ஆனால், 2008 ஜூலை
மாதம், அமெரிக்கப் புலனாய்வுத் துறையான சி.ஐ.ஏ.வின் துணைத்தலைவர் ஸ்டீபன்.
ஆர். கேப்ஸ், காபூலிலுள்ள இந்தியத் தூதரகத்தின்மீது நடந்த தற்கொலைப் படைத்
தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.யின் நேரடி உதவி இருந்ததை ஆதாரங்களுடன் பாகிஸ்தானிய
அதிகாரிகளுக்குக் காட்டி அவர்களது கருத்தைக் கேட்டதாக ஒரு தகவல்
தெரிவிக்கிறது.சர்வதேசத் தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட
வேண்டியவர் என்று அமெரிக்காவால் இப்போது ஐக்கிய நாடுகள் சபைக்குப்
பரிந்துரைக்கப்பட்டிருப்பவர் பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ.யின் முன்னாள் தலைவரான
லெப்டினன்ட் ஜெனரல் ஹமீத் கல் என்பவர். 1987 முதல் 1989 வரை, அமெரிக்க உளவு
நிறுவனமான சி.ஐ.ஏ.வுடன் கரம்கோத்து ஆப்கானிஸ்தானியத் தீவிரவாத அமைப்புகளான
அல்-காய்தா மற்றும் தலிபான்களுக்கு சோவியத் படைகளுக்கு எதிராகப் போராடப்
பணமும் தளவாடங்களும் அமெரிக்கா தந்து உதவிய காலகட்டத்தில் ஐ.எஸ்.ஐ.யின்
தலைவராக இருந்தவர்தான் இந்த லெப். ஜெனரல் கல்.இருபது ஆண்டுகளுக்குப்
பிறகும் லெப். ஜெனரல் கல் இப்போதும் செயல்பட்டு வருவதை வெளியாகி இருக்கும்
இணையதளத் தகவல்கள் வெளிக்கொணர்ந்திருக்கின்றன. தான் இப்போது ஓய்வு பெற்று
நிம்மதியாக வாழ்வதாகக் கூறிக்கொள்ளும் கல் இப்போதும் தனது ஐ.எஸ்.ஐ.
சகாக்களுடன் தொடர்பில் இருப்பதும், ராணுவத் தலைமையிடத்தில் கலந்தாலோசனைக்கு
அழைக்கப்படுவதும், பாகிஸ்தானிய ராணுவத்துக்கும், அதிகாரிகளுக்கும்
தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புக்குப் பாலமாகச் செயலாற்றுவதும் இப்போது
உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.ஜெனரல் கல்லுக்குப் பிறகு மிகவும்
சக்திவாய்ந்த மனிதராகப் பாகிஸ்தானிய உளவு நிறுவனத்தின் தலைமைப் பதவியை
வகித்தவர் ஜெனரல் பர்வீஸ் கயானி. இவர்தான் இப்போதைய பாகிஸ்தானிய
ராணுவத்தின் தலைமைப் பதவியில் இருப்பவர். முன்னாள் பாகிஸ்தான் அதிபர்
ஜெனரல் பர்வீஸ் முஷாரபுக்கு நெருக்கமான இவருக்கு சமீபத்தில் பதவி
நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஜெனரல் கயானி ஐ.எஸ்.ஐ. தலைவராக இருந்த
2004 முதல் 2007 வரையிலான காலகட்டத்தைச் சார்ந்ததுதான் இப்போது வெளியாகி
இருக்கும் ரகசியக் குறிப்புகள். தனது ஆப்கானிஸ்தான் நடவடிக்கைகளுக்கு
அமெரிக்கா பக்கபலமாக நம்பிக் கொண்டிருக்கும் ஜெனரல் பர்வீஸ் கயானி
தீவிரவாதிகளுக்கு உதவிய தகவல்கள் வெட்டவெளிச்சமாகி இருக்கிறதே, அமெரிக்கா
இப்போது என்ன செய்யப் போகிறது?பாகிஸ்தானின் நயவஞ்சகமும்,
நாடகங்களும் அம்பலமாகி இருக்கின்றன. மும்பைத் தாக்குதலிலும், இந்தியாவில்
நடந்த வேறு பல தீவிரவாதத் தாக்குதல்களிலும் தொடர்புடைய தீவிரவாதிகள்மீது
நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக, இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை
முறித்துக் கொள்ள ஏதாவது நொண்டிச் சாக்கை ஏற்படுத்திக் கொள்ளும் பாகிஸ்தான்
வருந்துவதாகவும் தெரியவில்லை, திருந்துவதாகவும் தெரியவில்லை.
அமெரிக்காவும் "நாயர் பிடித்த புலிவால்' கதையாக ஆப்கானிஸ்தானிலிருந்து
வெளியேறவும் வழியில்லாமல், அதனால் பாகிஸ்தானைத் தட்டிக் கேட்கவோ, தட்டி
வைக்கவோ துணிவில்லாமல் தவிக்கும் நிலை.இந்தியாவின் நிலைமைதான்
அதைவிடப் பரிதாபம். தகுந்த ஆதாரங்கள் கிடைத்தும், நியாயம் கேட்கும்
தைரியமும், தெம்பும் நமக்கு இல்லை. பாகிஸ்தானைச் சகித்துக் கொள்ளவும்
முடியாது. பகைத்துக் கொள்ளவும் கூடாது என்கிற தர்மசங்கடம்.இந்தியா
அமெரிக்காவை நம்புகிறது, பாகிஸ்தானின் தொந்தரவு இல்லாமல் நிம்மதியாக
வாழ்வதற்கு. அமெரிக்கா பாகிஸ்தானை நம்புகிறது, ஆப்கானிஸ்தானில் தான்
நடத்தும் தீவிரவாதத்தை ஒழிக்கும் போராட்டத்துக்கு உதவுவதற்கு. பாகிஸ்தான்
தீவிரவாதிகளை நம்புகிறது தன்னை நிறுத்திக்கொள்ள. இந்த இடியாப்பச் சிக்கலை
மேலும் சிக்கலாக்கி இருக்கிறது இணையதளம் வெளிக்கொணர்ந்திருக்கும் ரகசியக்
குறிப்புகள்.உலகை அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். எல்லா பொறுப்பும் இறைவனுக்கே!
ganie006- பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நோவார்டிஸ் - இந்தியாவின் பொறுப்பும் வழக்கும்
» மனைவி அமைதியாக இருப்பதெல்லாம் இறைவனுக்கே கிடைக்காத வரம்...!!
» 'மகிழ்ச்சியும், பொறுப்பும் அதிகரித்துள்ளது' விருது பெற்ற ராகவா லாரன்ஸ்
» போராட்டத்தைத் தலைமையேற்று நடாத்தவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர்ந்த
» ''எல்லாப் புகழும் இறைவனுக்கே'': ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசிய ரஹ்மான்
» மனைவி அமைதியாக இருப்பதெல்லாம் இறைவனுக்கே கிடைக்காத வரம்...!!
» 'மகிழ்ச்சியும், பொறுப்பும் அதிகரித்துள்ளது' விருது பெற்ற ராகவா லாரன்ஸ்
» போராட்டத்தைத் தலைமையேற்று நடாத்தவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர்ந்த
» ''எல்லாப் புகழும் இறைவனுக்கே'': ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசிய ரஹ்மான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|