புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருவமானவர்கள் Poll_c10பருவமானவர்கள் Poll_m10பருவமானவர்கள் Poll_c10 
91 Posts - 63%
heezulia
பருவமானவர்கள் Poll_c10பருவமானவர்கள் Poll_m10பருவமானவர்கள் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
பருவமானவர்கள் Poll_c10பருவமானவர்கள் Poll_m10பருவமானவர்கள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பருவமானவர்கள் Poll_c10பருவமானவர்கள் Poll_m10பருவமானவர்கள் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பருவமானவர்கள் Poll_c10பருவமானவர்கள் Poll_m10பருவமானவர்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
பருவமானவர்கள் Poll_c10பருவமானவர்கள் Poll_m10பருவமானவர்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
பருவமானவர்கள் Poll_c10பருவமானவர்கள் Poll_m10பருவமானவர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருவமானவர்கள் Poll_c10பருவமானவர்கள் Poll_m10பருவமானவர்கள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
பருவமானவர்கள் Poll_c10பருவமானவர்கள் Poll_m10பருவமானவர்கள் Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
பருவமானவர்கள் Poll_c10பருவமானவர்கள் Poll_m10பருவமானவர்கள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பருவமானவர்கள் Poll_c10பருவமானவர்கள் Poll_m10பருவமானவர்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பருவமானவர்கள் Poll_c10பருவமானவர்கள் Poll_m10பருவமானவர்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
பருவமானவர்கள் Poll_c10பருவமானவர்கள் Poll_m10பருவமானவர்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பருவமானவர்கள் Poll_c10பருவமானவர்கள் Poll_m10பருவமானவர்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பருவமானவர்கள் Poll_c10பருவமானவர்கள் Poll_m10பருவமானவர்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பருவமானவர்கள் Poll_c10பருவமானவர்கள் Poll_m10பருவமானவர்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பருவமானவர்கள் Poll_c10பருவமானவர்கள் Poll_m10பருவமானவர்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருவமானவர்கள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2010 11:27 pm

----------------------------------------------------------------------

பருவமானவர்கள்

மூலம்: பெக்கி மோகன் Ph.D

தமிழில்: க. நடனசபாபதி

தேசிய கலை இலக்கியப் பேரவை

--------------------------------------------------------------------------





பருவமானவர்கள்: (ADOLESCENCE)


பருவமானவர்கள் பற்றிய புத்தகம் ஒன்று இரண்டாம் தசாப்த வயதை எட்டிய பிள்ளைகளுக்குத் தேவை தானா?

பருவமானவர்கள் பற்றிய அந்நிய தேசத்து புத்தகமொன்றை மேலெழுந்த வாரியாக வாசிக்கின்ற இரண்டாம் தசாப்த வயதை நோக்கி நடைபோடும் பிள்ளைகள் சுவாரசியமானதுதான் என்று கூறுவர். ஆனால் இவை எமக்குப் பழக்கப்படாதவை. இதைப்பற்றி நாம் ஏன் இங்கு கவலைப்பட வேண்டும்?

டில்லியில் வாழும் பெண்ணொருத்தி இதனை இப்படிக் கூறினாள். இரண்டாம் தசாப்த வயதை நோக்கி நடைபோடும் பிறநாட்டவருக்கு இவையெல்லாம் பிரச்சினைகளாக இருக்கலாம். ஏனென்றால் அவர்கள் தாம் விரும்பியபடி எதனையும் செய்யலாம். ஆனால் எங்களைப் பொறுத்தமட்டில் எங்கள் பெற்றோர் எம்மை எதனையும் செய்ய விடுவதில்லை. இது எங்கள் பிரச்சினை. பருவமான இலங்கையர்கள் தாங்கள் அடைந்து வரும் மாற்றங்களைப் பற்றிய சாதாரணமாக தகவல்களைக் கூட அறியாது பருவமாற்றம் பற்றி கற்பனா உலகில் உலாவருகின்றனர். இந்தக் கற்பனைகள் எல்லாம் இரண்டாம் தசாத்த வயதை நோக்கி நடைபோடுவோரை நம்பிக்கை இழந்த நிலைக்கும் அழகீனமான நிலைக்கும் கவலை தோய்ந்த நிலைக்கும் இட்டுச் செல்கிறது. பிற நாடுகளில் வாழும் பருவமானவர்களின் கற்பனைகளோ பெரிதும் மாறுபட்டவை.

பருவமானவர்கள் என்றால் என்ன?

சிறுபிள்ளைப் பிராயத்திலிருந்து பிள்ளையைப் பெற்றுத்தரக்கூடிய நிலையை வாழ்க்கையில் அடையும் பருவமாகும்.

இதன் படி பெருமளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல் ரீதியானதும் உளரீதியானதுமான மாற்றங்கள் எம்மை புதிய உறவுகளை ஏற்று பொறுப்புடையோராக ஆக்குகிறது.

இப்புத்தகம் எப்படி உதவ எண்ணியுள்ளது?


முதலாவதாக, பருவமாகின்ற போது உடல் தோற்ற ரீதியான மாற்றங்களைப் பற்றிய சாதாரண தகவல்களை தருகின்றோம். இதன் காரணமாக பாதுகாப்பு இழந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோமோ என்ற அச்சம் அகலுகிறது. எம்மைப் போலவே அநேகர் உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

இரண்டாவதாக, உளரீதியான மாற்றத்தால் உலக வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் உள்ளது. அனுபவம் நல்லதோர் ஆசிரியன். ஏற்படும் தோல்விகள் பயனுள்ள பாடங்களைத் தருகின்றன. சில சம்பவங்கள் உங்களுக்கு கவலையைத் தரும். இப்புத்தகம் உங்களுக்கு நண்பனாகச் செயல்பட்டு உங்களை வழிநடத்திச் செல்லும்.



பருவமானவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2010 11:28 pm


உடல் மாற்றங்கள்; (பெண்களே முதலில்) (PHYSICAL CHANGES - GIRLS)


ஏன் பெண்கள் முதலில்?

ஏனெனில் பெண்கள் ஆண்களுக்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பருவமாகி விடுகின்றனர்.

எப்பொழுது பருவ வளர்ச்சியடைதல் (Growth) ஆரம்பமாகிறது?

ஒன்பது அல்லது பத்து வயதிலேயே இம் மாற்றங்களைக் காணக்கூடியதாய் இருக்கும். இது சற்று முன்பாகவோ பின்பாகவோ நிகழலாம். இம்மாற்றம் ஏற்படும் சராசரி வயது பத்து ஆகும்.

பருவமாவதற்கு எது காரணமாகிறது?

இதெல்லாம் ஏற்படக் காரணமாய் இருப்பது மூளையின் ஒரு பகுதியான உப தலமஸ் ஆகும். இந்த உபதலமஸ் ஓமோன்கள் என்கின்ற இரசாயனப் பதார்த்தங்களைச் சுரக்கின்றது. இவை பருவமாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வேறு ஓமோன்களைத் தட்டி எழுப்புகிறது. இவை உங்களை வளர்ந்த பெண் ஆக்குகின்றன.

நீங்கள் ஏழுவயதாய் இருக்கும் போதே இந்த ஓமோன்கள் முதன் முதலாகச் சுரக்கத் தொடங்குகின்றன.

ஓமோன்கள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் உரியவை. பெண்களின் உடல் கூடுதலான பெண் ஓமோன்களையும் சிறிதளவு ஆண் ஓமோன்களையும் சுரக்கின்றன.

சில பெண்கள் பருவமாவதற்கு முன் பொருமிக் காணப்படுவதேன்?


பருவமாவதற்கு சற்று முன்பாக ஏற்படும் திடீர் வளர்ச்சியின் போது சற்று பருமனாகிறார்கள். இதனை இளமைக் கொழுப்பு என்பார்கள். கூடுதலான இளமைக் கொழுப்பு பெண் பருவமாகப்போகிறாள் என்பதை மூளைக்கு அறிவுறுத்தும் அறிகுறியாகும். மெல்லிய பெண்கள் இந்த அறிவுறுத்தலைச் செய்யாதபடியால் காலம் தாழ்த்தியே பருவமாகின்றனர். வளர்ச்சி முகிழ்ந்ததும் இளமைக் கொழுப்பு மறைகிறது. 15,16 வயதைப் பெண் அடையும் போது சாதாரணமாக இது போய்விடுகிறது. அதற்குப் பிறகு ஏற்படும் பருமனை இளமைக் கொழுப்பு என்பதில்லை.

முதலில் தோன்றும் மாற்றம் என்ன?

வளர்ச்சி, நீங்கள் உயர்ந்து இருப்பீர்கள். இது நாடகம் போன்று நடைபெறுகிறது. ஏனெனில் முன்னிரு ஆண்டுகளாக வளர்ச்சி குன்றியிருக்கும். இது ஆகாய விமானம் இறங்கு பாதையில் ஓடி மேலே எழுவதற்குமுன் உள்ள நிலையை ஒத்திருக்கிறது. வளர்ச்சி ஆரம்பிக்குமுன் அநேக பெண்கள் எவ்வளவு உணவை உட்கொண்ட போதிலும் மெலிந்தும் கால்கள் நீண்டும் காணப்படுவர்.

இத்தகைய வளர்ச்சியின் போது சற்று கூடுதலாக நித்திரை கொள்ள விரும்புவர். கிழமை முடிவு நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சற்று நேரங்கழித்தே நித்திரை விட்டு எழ விரும்புவர். பிற்பகல் நேரமும் சற்று நேரம் நித்திரை கொள்ள விருப்பம் கொள்வர். ஏனெனில் வளர்ச்சிக்குரிய ஓமோன் நித்திரை கொள்ளும் போதுதான் சற்று அதிகமாகச் செயல்படுகிறது.

இந்த வளர்ச்சி ஓமோனால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது உண்மையில் அன்றோஜன் என்கிற ஆண் ஓமோன் ஆகும். இதில் ஆச்சரியமானது என்னவென்றால் எந்த ஓமோன் வளர்ச்சியைத் தூண்டக் காரணமாயுள்ளதோ அதே ஓமோன் வளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருகிறது. அதன் காரணமாகத்தான் சிலர் முன்னரே வளரத்தொடங்கி விரைவிலேயே அவர்களது வளர்ச்சி முடிவுக்கு வருகிறது. அதனால்தான் நன்றாக உயருவதில்லை. அதன் காரணமாகவே காலம் தாழ்ந்து வளர ஆரம்பித்தால் காலம் கடந்தே வளர்ச்சி முடிவுறுகிறது. அதனாலேயே அவர்கள் உயர்ந்து வளர்கின்றனர்.

அதோடு அதிகமாகப் பசிதோன்றி பலமுறை பசி எடுக்கிறது. அதனால் கூடுதலான உணவு உண்கின்றனர். குழந்தைப் பருவம் மாறுவதையும் புதியவகை உணவில் விருப்பமும் ஏற்படுவதைக் கண்டு தயார் பூரிப்படைகிறார். இதனால் இப்பெண்ணிற்கு உணவு தயாரிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறாள். ஏனெனில் பெண் பருவமாகிவிட்டாள். காய்கறிகளிலுள்ள நச்சுத்தன்மையை நடுநிலையாக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டாள். அதன் நிமித்தமே சிறுபராயத்தில் வெறுப்பு ஏற்பட்டது. காய்கறிகளும் உயிர் உள்ளவையே. அதனால் அவற்றை நீங்கள் உண்ண வேண்டும் என்பதில் அவற்றிற்கு ஆர்வமில்லை. அதனால் அவை அவற்றை நச்சுப் பொருள்களாக்கி வெறுக்கச் செய்கின்றன. அவற்றை உண்டால் வயிற்றுவலியோ தலைவலியோ ஏற்படுகிறது. அவர்கள் வளர்ச்சியுறும் போது இந்த நச்சுப் பொருள்களைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுகின்றனர். சிறுபிள்ளைகள் சில காய்கறிகளை விரும்பாதற்குக் காரணம் அதில் காணப்படும் நச்சுத் தன்மையே. கர்ப்பிணிகள் சிலருக்கு சிலவற்றை உட்கொண்டபின் சுகவீனம் ஏற்படுவதற்குக் காரணம் கருவிலுள்ளவை அவற்றைத் தவிர்க்க விரும்புவதே. அந்தக் கருவிலுள்ள அவனோ அவளோ கர்ப்பிணிகள் அவற்றை உண்டால் தமக்குத் தீங்கு விளையும் என்று கருதுகிறது.

இந்தத் திடீர் வளர்ச்சி அவளுக்கு மாதவிடாய் ஏற்படும் போது குன்ற ஆரம்பிக்கிறது. அவளுக்கு 16 முதல் 18 வயது ஏற்பட அவளுடைய வளர்ச்சி முற்றாக நின்றுவிடுகிறது.

இந்தத் திடீர் வளர்ச்சி உயரமாக்குவது மட்டுந்தான் செய்கிறதா?


உண்மையில் இல்லை. திடீர் வளர்ச்சி தோன்று முன்பிருந்தே பெண் ஓமோன் செயல்படத் தொடங்குகின்றன. அது உடலில் வேலை செய்ய ஆரம்பித்து பருவமான பெண்ணாக மாற்றுகிறது.

நீங்கள் அவதானிக்கும் முதல் மாறுதல் என்ன?

நீங்கள் உயரமாக வளரும் போது உங்கள் இடுப்புகள் அகன்று இடுப்பு என்புகள் மாற்றமடைகின்றன. உங்கள் இடுப்பு வெறும் என்பாக மட்டுமாக இராது. பெண் ஓமோன் கொழுப்பு இடுப்பில் படியத் தொடங்கி அதற்கு வட்ட வடிவத் தோற்றத்தைத் தருகிறது. முலைக்காம்புகள் வளர்வதையோ அரும்புவதையோ அவதானிக்கலாம்.

அடுத்த மாற்றம் என்ன?

யோனிப் பிரதேசத்தில் உரோமங்கள் தோன்றத் தொடங்கும். இதனை பூப்பு உரோமம் என்பர். குழந்தையாய் இருந்தபோது இருந்த உரோமம் சற்று கருமையடைந்து அதன் பிறகு மேலும் தடிப்பமாகி முரட்டுத்தன்மை அடைந்து தலைமயிரைக் காட்டிலும் கூடிய சுருளாக மாறுகிறது.

இதற்கு அடுத்த மாற்றம் என்ன?

அடுத்தபடியாக ஒரு நாள் முலைக்காம்பிற்குக் கீழே காயப்பட்டதனால் ஏற்படுவது போன்ற நோவு தென்படுகிறது. ஏதேனும் அடிபட்டுவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றில் பக்கவாட்டாகப் பார்க்கும் போது ஒரு மாற்றம் தென்படுகிறது. முலைக்காம்பின் கீழ்ப் பகுதி வளர்ந்துள்ளது. உங்களுக்கு மார்பகங்கள் வந்துவிட்டன.

இதே காலக்கட்டத்தில் உங்கள் உள்ளாடையில் தெளிவான வழுவழுப்பான திரவம் படிகிறது. உங்கள் யோனிப் பகுதியில் ஈரமும் வழுவழுப்புத் தன்மையையும் உணர முடிகிறது. இந்தக் கசிவு யோனி மடலிலிருந்து வெளிவருகிறது. குதப் பகுதிக்கு அருகிலுள்ள யோனிப் பிரதேசத்தின் பெரிய இடைவெளி ஊடாக வெளிப்படுகிறது.



பருவமானவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2010 11:29 pm

கண்ணிற்குப் புலப்படாத மாற்றமும் உண்டா?

ஆம். உடலினுள் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த வேளையில் தான் கருப்பை, சூலகங்கள், யோனி ஆகியவை உருவாகத் தொடங்குகின்றன.

கருப்பை என்றால் என்ன?

இது பெண்ணின் வயிற்றிலிருக்கும் தலைகுப்புறப் பிடித்தகாய் போன்ற ஒரு பை ஆகும். இது மிருதுவான தசையால் ஆனது. இதில் தான் பிறப்பதற்கு முன்பு குழந்தை வளருகிறது. குழந்தை பிறப்பதற்குத் தயார் ஆனதும் தசை மெல்ல மெல்லச் சுருங்கி குழந்தையை கருப்பையிலிருந்து கழுத்துப்போன்ற பகுதியினூடாகத் தள்ளுகிறது. இக்கழுத்துப் போன்ற பகுதியை யோனிவழியாக சுத்தமான விரலை விட்டுத் தடவி அறியலாம். அது கூம்பு வடிவத்தில் கடினமாகவும், தசைப்பிடிப்பாகவும் இருக்கும்.

யோனி என்றால் என்ன?

யோனி என்பது கழுத்துப் போன்ற கருப்பையின் கீழ்ப்பகுதிக்கும் புறத்தேயுள்ள பிறப்புறுப்புக்கும் இடைப்பட்ட பாதையாகும். யோனியில் நுழைவிடம் பிறப்புறுப்பின் பின்புறம் குதத்திற்கு முன்பாக உள்ளது. குழந்தை பிறக்கும் போது யோனி ஊடாகத்தான் வெளிவருகிறது. இதன் வழியாகத்தான் மாதவிடாய் வெளிவருகிறது. இதன் வழியாகத்தான் பெண் ஆணுடன் பாலுறவு கொள்கிறாள்.

சூலகங்கள் என்றால் என்ன?

கருப்பைக்கு சற்று மேலாக அதற்கு இரு புறங்களிலும் பக்கத்திற்கு ஒன்று வீதம் இரு சூலகங்கள் உள்ளன. இச்சூலகங்கள்தான் சூலக முட்டைகளை உருவாக்குகின்றன. இம்முட்டை ஆணின் விந்துடன் சேர்கையில் கருக்கட்டிக் குழந்தை ஏற்படுகிறது. இதனால்தான் குழந்தை தாயையும் தந்தையையும் ஒத்திருக்கிறது. பருவமானபின்பு சூலகங்கள் மாதம் ஒரு முட்டையை வெளிவிடுகிறது. சிலவேளைகளில் ஒன்றிற்கு மேற்பட்ட முட்டையையும் வெளிவிடும். இம்முட்டை கருப்பையை அடைந்து ஆணின் விந்துடன் சேர்ந்து கருக்கட்டி குழந்தை உருவாகிறது.

கருமுட்டை என்றால் என்ன?

கருமுட்டை என்பது பெண்ணிடமிருந்து வெளிவரும் நுண்ணியகலம். இது ஆணின் விந்தோடு சேர்ந்து குழந்தையை உருவாக்குகின்றது. அது அந்தப் பெண்ணிற்குரிய சகல அம்சங்களையும் கொண்டுள்ளது. அதனால்தான் அந்தப் பெண்ணின் பிரதி அவளின் குழந்தையில் காணப்படுகிறது.

பிறப்புறுப்புகளும் வளர்ச்சி அடைகின்றனவா?

ஆம். வெளிப்படையான வளர்ச்சியாக தோல் மடிப்புகள் நீள்கின்றன. இது ஒவ்வொரு பெண்ணிற்கும் ஏற்படுகின்றது. தோல் மடிப்புகள் சிறு பெண்பிள்ளையாக இருந்த போது இருந்தது போல் இராது. இதனால் அழகு அற்றோ வேறு விதமாகவோ போவதில்லை. தேவையற்ற போதிலும் புற பிறப்புறுப்புகள் வளர்ச்சி அடைவதேன்? ஆண்களின் பிறப்புறுப்புகள் வளர்ச்சி அடைகின்றன. இயற்கை, ஆணையும் பெண்ணையும் ஒரே அடிப்படையில்தான் அமைத்துள்ளது. ஆனால் சற்று மாறுபட்டுள்ளது. அவசியம் அற்ற போதிலும் பிறப்புறுப்புகள் வளர்ச்சி அடைகின்றன. அதேபோல்தான் ஆணுக்கும் முலைக் காம்புகள் தேவையற்ற போதிலும் சற்று வளர்ச்சி அடைகின்றன.

அடுத்து நடப்பதென்ன?

எல்லாம் பெரிய மாறுதல்கள். பூப்பு உரோமம் தடிப்பாகி கூடுதலான பரப்புக்கு வியாபிக்கின்றது. நீளமாகவும் கறுப்பாகவும் மாற்றம் அடைகிறது. கைக்குளச்ச வளைவு (அக்கிள் ) பகுதியிலும் மயிர் முளைக்கிறது. அநேக பெண்களுக்கு முகப் பரு ஏற்படுகிறது. மாதவிடாய் வரத்தொடங்குகிறது.



பருவமானவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2010 11:31 pm

மாதவிடாய் (PERIODS)

மாதவிடாய் என்றால் என்ன?

ஒவ்வொரு மாதமும் கருப்பை மடிப்புகளில் போதிய இரத்தம் நிரம்பி இருக்கிறது என்ற தகவலை பெண் ஓமோன் ஆன புறோ ஜெஸ் ரெறோன் உறுதி செய்து கொள்கிறது. கருப்பமானதும் கருக்கட்டிய முட்டை போதிய ஊட்டச் சக்தியைப் பெறுகிறது. தனக்கான உணவை கருப்பை மடிப்புகளிலிருந்து பெறுகிறது.

கர்ப்பம் தரியாத பட்சத்தில் இம் மடிப்புகளில் சேர்ந்த குருதியோடு மடிப்புகள் முறிவடையும் போது நுண்ணிய குருதிக்குழாய்களிலிருந்து வெளிவரும் குருதியும் வெளியே தள்ளப்படுகிறது. இந்நிகழ்வு மாதந் தோறும் சுமார் ஐந்து நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனையே மாதவிடாய் என்கிறோம். இந்த மாதவிடாய் வெளியேற்றம் மாதம் தோறும் யோனிமடல் ஊடாக நடைபெறுகிறது.

மாதவிடாய் மாதவிடாய்ச் சங்கிலியின் ஒரு பகுதியாகும். சங்கிலி என்பது மீண்டும் மீண்டும் நடைபெறும் நிகழ்வாகும். இந்நிகழ்வு 21 நாட்களிலிருந் 35 நாள் இடைவெளியில் இச்சங்கிலி நிகழ்கிறது. இறுதி நாளோ அல்லது கடைசி இரு நாட்களோ வெளியேற்றம் குறைவாக இருக்கும். சில வேளைகளில் முதல் நாள் குறைவாக இருக்கும்.

முதன் முறையாக எந்த வயதில் மாதவிடாய் ஏற்படுகிறது?

சாதாரணமாக 10 வயதிற்கும் 16 வயதிற்கும் இடையே நடக்கிறது. இந்தத் தலைமுறையில் சற்று முன்பே ஏற்படுகிறது. மெல்லியவர்களுக்கும், உடற் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கும் பிந்தியே நடைபெறுகிறது.

கால இடைவெளி மிகவும் கூடுதலானது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அநேக பெண்கள் கூறக்கேட்டிருக்கிறோம். தாம் தமது தாய்மாரிடமிருந்து தூர உள்ள போதோ, பாடசாலையிலோ, சுற்றுலாவில் உள்ள போதோ, உறவினர்; வீட்டில் உள்ள போதோ இடம்பெற்றது என்று. தூர இடங்களுக்கு பருவம் அடையாத பெண்களை அழைத்துப் போவோர் இந்நிலை ஏற்படக் கூடும் என்று தாய்மார்களை எச்சரித்து எதை எதை தம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிந்திருப்பர்.

ஆகவே தமக்கு ஏற்படக் கூடியதை முன்கூட்டியே அறிந்து உதவிக்கு வரத் தாய் அருகில் இருக்க மாட்டார் என்பதற்கு ஏற்ப என்ன செய்ய வேண்டிவரும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

முதல் மாதவிடாய் ஏற்படும் போது நீங்கள் செய்ய வேண்டுவது என்ன?

முதலில் உள்ளாடை கறைபடிந்து காணப்படும். முதன் முதலில் மிகவும் மங்கலாகவும் பின் கபில நிறமாகவும் (சிவப்பு நிறமாகவல்ல) வெளியேறும். அடுத்த முறையும் தொடர்ந்து ஏற்படும் அடுத்த நாள் சற்று சிவப்பு நிறமடையும். நீண்ட நாட்களுக்கு முன்பும், கிராமப் பகுதிகளில் பெண்கள் இன்றுங்கூட மாதவிடாய்க் குருதியை உறிஞ்சி விட துணித்துண்டுகளைப் பயன்படுத்துவார்கள். இத்துணித் துண்டுகளைக் பயன்படுத்திய பிறகு தோய்த்து எடுத்தல் வேண்டும். ஆனால் இந் நாட்களில் பலசரக்குக் கடைகளில் பயன்படுத்திய பின் வீசிவிடக்கூடிய சுகாதாரமான துண்டுகள் விற்கப்படுகின்றன. மாதவிடாய் ஏற்பட்ட பின் ஓடித்திரியாமல் முன் கூட்டியே ஒரு பொட்டலத்தை வீட்டில் வாங்கி வைத்திருப்பது புத்திசாலித்தனமான செயலாகும். ஆரம்ப கட்டத்திற்காவது வழமையான அளவினையே பயன்படுத்துவது உத்தமமானது. அடிப்புறத்தில் பிளாஸ்ரிக் படையுடைய பட்டைகளும் தற்போது கிடைக்கின்றன. இவை மாதவிடாய்த் திரவ வெளியேற்றங்களை உறிஞ்சி உள்ளாடைகளை நனைவதிலிருந்து தடுக்கிறது. சிலவிதப் பட்டைகளில் ஒட்டிப் பிடிக்கக்கூடிய நாடாக்கள் உள்ளாடைகளில் ஒட்டிவிட முடிவதால் உரிய இடத்திலேயே அமைந்து விடுகின்றன.

தற்போது மேல் நாடுகளில் பெண்கள் துணித் துண்டுகளையே பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அவற்றைத் தோய்த்து உலர்த்தி மீண்டும் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இத்துணிகள் தாம் பயன்படுத்திவிட்டு வீசிவிடும் பட்டைகளைக் காட்டிலும் சுற்றாடலுக்குச் சிநேகமானவை.

பட்டைகளை கழுவுக்குழிக்குள் போட்டு நீரைப் பாய்ச்சாதீர்கள். ஏன் எனில் அவை குழாயை அடைத்துவிடும். அவற்றை ஒன்று சேர்த்து அழுக்கு கூடையில் போடுங்கள்.

உங்கள் உள்ளாடையில் கசிவு படிந்து விடின் படிந்த இடத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள். இத்தினங்களில் கறுப்பு நிற உள்ளாடை அணிவது புத்திசாலித்தனமானது. குறிப்பிட்ட பகுதியில் உள்ளாடை படும் இடத்தில் பட்டையைச் சுற்றி பொலித்தீனால் சுற்றிவிடுவது பாதுகாப்பானது.

தம்பன்களைப் பயன்படுத்தலாமா?

ஆம். ஆனால், அவை மிகவும் இளம் பெண்களுக்கு சிபார்சு செய்யப்படவில்லை.

தம்பன்கள் இறுக்கப்பட்ட றேயன் நூலாலானது. மாதவிடாய் வெளியேற்றத்தை உறிஞ்சும் போது விரிவடைகிறது. தம்பனைப் பயன்படுத்தும் போது அதன் வட்ட வடிவ முனையை யோனியின் மேற்பகுதிக்கு விரல் ஆழத்திற்குத் தள்ளிவிடுங்கள். சரியாக உள்ளே தள்ளப்பட்டு இருக்கும் போது இருப்பதே உபயோகிப்போருக்குத் தோற்றாது. போதிய ஆழத்தில் வைக்கப்படாவிட்டால் வெளியே வரப்பார்க்கும். வெளியே நாடாவொன்று தொங்கும். இதனை இழுப்பதனால் தம்பனை வெளியே எடுக்கலாம். ஆரம்ப கட்டத்தில் சிறிய அல்லது சாதாரண அளவானதையே பயன்படுத்த வேண்டும்.

மிகவும் இளமையான பெண்களுக்கு தம்பன்கள் ஏன் சிபார்சு செய்வதில்லை?

இளம் பெண்களுக்கு யோனித்துவாரத்தில் மென்சவ்வு ஒன்றுண்டு. இதனை ‘ஹைமன்’ என்பர். இது தெறிக்காமல் இருப்பது பெண்ணின் கன்னித் தன்மைக்கு ஊறு ஏற்படவில்லை என்பதற்கு அறிகுறியாகக் கொள்ளப்படுவதனால் தம்பன் பாவிக்கும் போது ஹைமன் தெறிப்படைய ஏதுவாகிறது. ஹைமனுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தம்பனைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

சில பெண்களுக்கு தம்பனை உள்ளே செருகுவதில் சிரமம் ஏற்படுகிறது.

அதிர்ச்சி நச்சுத்தன்மைத் தொகுப்பு நோய் அபாயமும் ஓரளவு உள்ளது. இது மரணம் சம்பவிக்கவும் ஏதுவாகும். 25,000க்கு ஒன்றைவிட குறைவானவர் இதற்கு இலக்காகின்றனராம்.

அதிர்ச்சி நச்சுத்தன்மைத் தொகுப்பு நோய் யோனி முகிழில் பக்hPறியா தொற்றுநோய் பரவுவதால் ஏற்படுகிறது. உடலில் தோலெங்கும் சிவப்பு சிரங்குத் தன்மை அடைந்து சொடுகுபோல உதிர்ந்து விடுகிறது. இதன் பிறகு இரத்த அமுக்கம் வீழ்ச்சியடைகிறது. பெண்ணிற்கு அதிர்ச்சியும் ஏற்படுகிறது.

அதிர்ச்சி நச்சுத்தன்மை தொகுப்பு நோய் காணப்படின் உடனடியாக வைத்தியர் ஒருவரை அணுக வேண்டும்.

அதிர்ச்சி நச்சுத்தன்மைத் தொகுப்பு நோய் வெளிநாடுகளில் விற்கப்படும் அதி உயர் உறிஞ்சுத்தன்மை கொண்ட தம்பன்களோடு தொடர்புடையது. ஏனெனில் இத் தம்பன்கள் நீண்ட நேரம் உள்ளே இருப்பது தான். இந்நோய் வராமல் தடுக்க வேண்டுமாயின் சிறிய அளவினதான தம்பன்களையே பாவிக்க வேண்டும். நான்கு மணிநேரத்திற்கு ஒரு முறைமாற்ற வேண்டும். அதனால், இரவு வேளைகளில் பட்டைகளைப் பயன்படுத்துவது நல்லது.



பருவமானவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2010 11:32 pm

மாதவிடாய் சிலவேளைகளில் நோவை உண்டு பண்ணுவதேன்?

யோசித்துப் பாருங்கள். முதலில் ஏற்படும் மாதவிடாய் நோவை உண்டுபண்ணுவதில்லை. இரண்டாண்டுகளுக்குப் பின்பே நோவு ஏற்படுகின்றது அல்லவா?

மாதவிடாய் நோவுகள் பல்வேறு இரசாயனப் பதார்த்தங்கள் இரத்தக் குழாய்க்குள் புறஸ்ரோ கிளான்டின்களிலிருந்து பாய்வதால் ஏற்படுகிறது. இது கருப்பையைப் பலமாக சுருக்குவதால் உண்டாகிறது. குழந்தை பிறக்கும் போது குழந்தையை வெளியே தள்ள கருப்பை சுருங்குவதை ஒத்திருக்கும். இது முட்டை உருவாகி கருக்கட்டக் கூடிய தகுதி பெறும்போது ஏற்படுகிறது. முதல் சில மாதவிடாயின் போது முட்டை உருவாகாது. அப்போதெல்லாம் சுருக்கம் ஏற்படாது.

இப்படியான தசைச் சுருக்கம் மாதவிடாய்க்கு முதல் நாள் ஆரம்பமாகி மாதவிடாய் நின்ற மறுநாள் முடிவுறும்.

மாதவிடாய் நோவை நிறுத்துவது எப்படி?

ஒரு சுலபமான வழி நோவுகொல்லியான அஸ்பிறினையோ பரசிட்ரமோலையோ உட்கொள்வது.

மற்றவழி வெந்நீர்ப் போத்தலை வயிற்றின் மீது வைப்பது. இது சுருங்கிய தசையை ஓய்வுபெறச் செய்கிறது.

சாதாரண வழி, தேகப்பியாசம் தேவையாயின், வழமையான காரியங்களையே செய்யுங்கள். இது தசைச் சுருக்கலிலிருந்து திசைதிருப்பி விடுகிறது. தேகப்பயிற்சி மூளையிலிருந்து நோவு கொல்லி பதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது. இது இயற்கையான நோவுகொல்லியாகும்.

தசைச்சுருக்கம் காரணமாக நோவு கூடுதலாக ஏற்பட்டு அதனைத் தொடர்ந்து வாந்தியும் கண்ணொளி இருண்டும் இருப்பின் வைத்தியர் ஒருவரை நாடவேண்டும். அவர் உங்கள் உடல் உருவாக்கும் புறஸ்ரா கிளான்டின்களின் இரசாயனப் பதார்த்த சுரப்பைத் தடைசெய்யும் மருந்தைக் குறிப்பிடுவார். நீங்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்தவர்களாயின் உங்களை மாத்திரைக்கு (கருத்தடை மாத்திரை) உட்படுத்த வைத்தியருக்கு முடியும். கருத்தடை மாத்திரை தசைச் சுருக்கத்தை ஏற்படுத்தும். புறஸ்ராகிளான்டின் சுரப்பை முற்றாகத் தடைசெய்யும். ஏனெனில் மாத்திரை கருமுட்டை உருவாக விடாது. மாத்திரையை பயன்படுத்துமுன்பு நீங்கள் முழுமையாக வளர்ச்சியடைந்து விட்டீர்கள் என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். ஏனெனில் மாத்திரை பாவிக்க ஆரம்பித்தால் வளர்ச்சிக்கு நிரந்தர முற்று ஏற்பட்டுவிடுகிறது.

மாதவிடாய் நாட்களில் தொடர்ந்தும் வயிற்றுவலி, வாந்தி, கண்ணொளி இருண்டும் வேறேதும் காரணங்களுக்காக இருப்பின் நரம்பு வைத்தியர் ஒருவரை அணுகுவது நல்லது.

மாதவிடாய் ஒழுங்காக ஏற்படாவிட்டால்?

இது முதல் சில வருஷங்களுக்குச் சாதாரணமாகவே இருக்கும். அச்சம் கொள்ளத் தேவையில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகும் கூட மாதவிடாய் வருவது ஒழுங்கு முறைப்படி இல்லாவிட்டால் வைத்தியரின் ஆலோசனை பெறுவது நல்லது. அவர் ஒழுங்காக வரச் செய்வார். மூன்று மாதங்களுக்கு (கருத்தடை) மாத்திரைகளை உபயோகிக்க வேண்டியிருக்கும். இது எப்படி மாதவிடாயை ஒழுங்கு படுத்துகிறது என்றால் தினமும் ஒரு மாத்திரை வீதம் 23 நாட்களுக்குப் பயன்படுத்திய பின் ஐந்து தினங்களுக்கு மாத்திரையை உபயோகியாமல் இருக்க வேண்டும். அப்பொழுது மாதவிடாய் ஏற்படும். ஐந்துநாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாத்திரைப் பாவனையை ஆரம்பிக்க வேண்டும். இது உடலில் ஒரு சீரான அமைப்பை ஏற்படுத்துகிறது.

உங்கள் வளர்ச்சி முழுமையாகிவிட்டது என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்ட பின்பே மாத்திரையைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அது வளர்ச்சியை நிரந்தரமாக நிறுத்தி விடும்.

சில நேரங்கள் வித்தியாசமான சமயங்களில மாதவிடாய் ஏற்படுவதற்கு காரணம் பெண்கள் சேர்ந்து இருக்கும் போது ஒரே அறையில் இருந்தால் ஒரே சமயத்தில் மாதவிடாய் ஏற்படுகிறது. மற்றவரின் மாதவிடாய் வரும் திகதி தெரியாதிருந்த போதிலும் அவர்களுடைய உடல்கள் ஒன்றோடொன்று இரண்டறக் கலந்துள்ளது போலுள்ளன.

எல்லாப் பெண்களும் தங்களுடைய மாதவிடாய்த் திகதியைக் கணக்கிட்டுக் கூற இயலுமா?


முடியாது.

சில பெண்கள் தமது முழுவாழ்நாளையும் ஆராய்ந்த போதிலும் சரியான மாதவிடாய் திகதியைக் கணித்துக் கொள்ள இயலாது இருக்கின்றனர். மாதவிடாய் வந்ததும் ஆம், இது வரவேண்டிய நாள் என்று கூறுகின்றனர். அப்படி வராவிட்டால் கர்ப்பமாகிவிட்டார் என்ற செய்தி வெளிவருகிறது. இதனால் பிரச்சினை ஏதும் ஏற்படுவதில்லை.

மாதவிடாய் எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்டால்.....

அநேக பெண்களுக்கு முதல் நாள் அவ்வளவு கடுமையான போக்கு இராது. அதனால் உள்ளாடைகளில் படிவதில்லை. ஆனால் பெண்கள் ஒரு பாதுகாப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். எப்பொழுதும் ஒரு பட்டையை தம்முடன் வைத்திருக்க வேண்டும். அதனை தமது பாடசாலைப் பையில் வைத்திருக்க வேண்டும். பிளாஸ்ரிக் சுற்றப்பட்டது சிறந்தது. இல்லாது போனால் பாடசாலைப் பையில் பட்டை உருக்குலைந்துவிடும்.



பருவமானவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2010 11:33 pm

பருக்கள் (PIMPLES)

பருவமானவர்களுக்கு பருக்கள் தோன்றுவதேன்?

அன்ட்ரோஜன் என்னும் ஆணுக்குரிய ஓமோனே பருவமாகின்ற போது ஏற்படும் மற்ற மாற்றங்களைப் போலவே பருக்கள் தோன்றுவதற்கும் காரணம். பெண்களின் திடீர் வளர்ச்சிக்கும் உரோமங்கள் தடிப்படைவதற்கும் நீளுவதற்கும் கை இடுக்குகளிலும் கால்களிலும் உரோமங்கள் முளைப்பதற்கும் பாலுணர்வு பெருக்கெடுப்பதற்கும் இந்த ஓமோனே காரணமாகியுள்ளது.

பருக்கள்அன்ட்ரோஜன் ஓமோனின் பக்கவிளைவே ஆகும். முகத்திலுள்ள தோலில் அநேக கொழுப்பை வெளிப்படுத்தும் செபாஷியஸ் சுரப்பிகள் உள்ளன. அவை நெய்யைச் சுரக்கின்றன. அன்டறோஜன் செய்வதெல்லாம் செபம் என்கின்ற இயற்கையான நெய் சுரப்பதை அதிகரிக்கிறது. அதன் காரணமாகவே முகத்தில் கூடுதலான நெய்த்தன்மை ஏற்படுகிறது. அதே வேளை நெய்ச் சுரப்பிகளுக்கும், முகத்தளத்திற்கும் இடைப்பட்ட கலக்கோடுகளில் அதியுயர் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதனால் நெய்ச் சுரப்பிகளுக்குரிய சிறுநாளங்கள் தடைப்படுகின்றன. அதனால் பரு ஏற்படுகிறது. சில பருவமானவர்க்கு தோளிலும் முதுகிலும் கூட பருக்கள் ஏற்படுகின்றன.

இலேசான பருக்கள் குளிர்காலங்களில் குறைந்தளவு பிரச்சினையையே தருகிறது. கோடை காலங்களில் தோல் வெப்பமாகவும் நெய்ப்பற்றுடனும் இருக்கும் போது முழுவலுவுடன் வீசும். நோவு அதிகம் தரும். பருக்கள் மாதவிடாய்க்கு சற்றுமுன்பும் பாPட்சைக்கு தயாராவதற்கு முன்பும், ஏதாவது முக்கிய நிகழ்ச்சிக்கு முன்பும் அதாவது உணர்ச்சி வசப்படும் போதும் ஏற்படுகின்றது. உடல் கூடுதலான அன்ட்றோஜன் சுரக்கிறது. அண்ட்றோஜனால் தானோ பரு ஏற்படுகிறது?

பருக்களை அகற்றுவது எப்படி?


உண்ணுகின்ற உணவுகளால் பருக்கள் ஏற்படுவதில்லை. ஆகவே உணவுப் பழக்கங்களை உடனடியாக மாற்றிவிடுவதனால் பயனொன்றுமில்லை. சொக்கலேற் உண்ணுவதை கைவிடத் தேவையில்லை.

தோலிலுள்ள கொழுப்புத் தன்மையைப் போக்க நாளுக்கு நாள் இருமுறை கழுவுவது பருக்களைப் போக்க ஓரளவுக்கு உதவும். அதோடு அழுக்குகளை அகற்றி விடுகிறது. அழுக்கு, நாளங்களை அடைத்து விடுவதனால் கரும்புள்ளிகள் உருவாகின்றன. சிறிய கடுமையான தொற்றும் தன்மையற்ற பருக்கள் மேற்பகுதியில் கருந்தன்மையை ஏற்படுத்துகிறது.

முக்கிய பருக்குழம்புகளால் எவ்வித பிரயோசனமுமில்லை. ஏன் நெய்ச் சுரப்பிகள் அடைபட்டு தொற்றுநிலையை அடைகிறது என்பதன் காரணத்தை ஆராய வேண்டும். பெரும்பாலும் முகத்தின் மேற்பகுதியிலுள்ள நெய்யை உலர்த்தி விட வேண்டும். (குளிர் காலம் போன்ற நிலை தோலிற்கு ஏற்படவேண்டும்)

கட்டாயம் பருக்கள் அகற்றப்படத்தான் வேண்டுமாயின் இதற்குக் காரணமான ஓமோன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதோடு நெய்நாளங்கள் அடைபட்டு பக்கங்களில் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஓமோன் மருந்துகளும் அன்ட்றோஜன் தடைகளும் அன்ட்றோஜனை எதிர்த்து செயல்படவும் பரவுவதைத் தடைசெய்யவும் நுண்ணுயிர் கொல்லிகளும் வேண்டும். இவை நீண்டகாலத்திற்குரிய நிவாரணிகள். தொடர்ந்தும் பாவித்த வண்ணம் இருக்க வேண்டும். கருத்தடை மாத்திரைகூட சக்திவாய்ந்த ஓமோன் சிகிச்சை நிவாரணியாகும். சிலவேளைகளில் கூடுதலான பருக்கள் தோன்றிவிடலாம். எச்சரிக்கையாய் இருங்கள்.

வைத்தியர்கள் சிபார்சு செய்யும் நிவாரணி றெரிநோயிக் அமிலம். இது பீடா கறோரின். அதாவது கறடிலுள்ள விற்றமின் யுயிலிருந்து பெறப்படுகிறது. றெரினோயிக் அமிலம் செய்வதென்னவென்றால் தோலை புத்துயிர் ஊட்டி மேலும் வளரவிட்டு மிக விரைவாக நெய்நாளங்களை தடைசெய்யும் கலங்களைக் கொண்ட தோலைப் பிதுங்கச் செய்துவிடுகிறது. வயோதிபப் பெண்கள் றெற்ரினோயிக் அமிலம் போன்று தோலை உதிரச் செய்து, புதியதை விரைவாக வளர வைத்தால் தோல் இறுக்கமடைந்து இளமைத் தோற்றத்தைத் தரும். இதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். தோலால் சூரிய ஒளியை இனிமேல் தாங்க இயலாது. ஆகவே சூரிய ஒளியைப் படவிடாமல் தடுக்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இத்தனை சிக்கல்களுக்குமான தீர்வுக்கு வைத்தியர்களுடைய சிபார்சு தேவை.



பருவமானவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2010 11:35 pm

மணம் (ODOR)

உடலில் மணம் வீசுவதற்கு காரணமும் ஓமோன்தானா?

இது உண்மைதான். இது திட்டமிடப்படாத பக்க விளைவு அல்ல. உண்மையில் பூப்பு உரோமமும், கையடி உரோமமும் இந்த மணங்களை உறிஞ்சி வைத்திருக்கின்றன. ஏனெனில் இந்த மணம் பாலியல் ரீதியில் கூடிய கவர்ச்சியை ஊட்டுகிறது. குறைவாக அல்ல. இந்த மணங்களுக்கு நாம் நேரடியாகச் செயல்படுகிறோம். ஆனால் நாம் இதனை உணர்வுபூர்வமாக அறிவதில்லை. இன்னமும் மிருக உணர்வு மனிதரிடையே தொடர்ந்தும் இருக்கிறது.

அநேக விலங்குகள் பாலியல் ரீதியில் நிறம்பியும் பாலியல் உறவுக்குத் தயார் நிலையிலும் உள்ளது என்பதை உடல் மணம் உணர்த்துகிறது. அநேகமானவையின் மணத்தை உணரும் இயல்பு மனிதர்களைக் காட்டிலும் கூடுதலானது. உண்மையில் பிறோமோன்கள் இனக்கவர்ச்சியை ஊட்டுகின்றன.

மனிதர்கள் பிராணிகள் போல இன்றி நிலையான மணத்தையே கொண்டவர்கள். எந்நேரமும் பாலியல் உறவுகொள்ளத் தயார் நிலையில் உள்ளனர். ஆனால் கருக்கட்டும் நிலையிலும் கர்ப்பம் தரித்த நிலையிலும் பெண்களின் உடல் மணம் சற்று மாறுபட்டு இருக்கும்.

உடல் மணத்தைப் போக்க வேண்டுமாயின் என்ன செய்ய வேண்டும்?

முதலில் தினமும் குளித்துவிட்டு கை அக்கிளை நன்கு சுரண்டிக் குளிக்க வேண்டும். மிகவும் மோசமான மணத்தைத் தருவது நாட்பட்ட கைஅக்கிள் வியர்வையும், நாட்பட்ட மாதவிடாய் வெளியேற்றமும். கைஅக்கிள் மணம் போக்க மணம் நீக்கி உருண்டைகளைப் பயன்படுத்துவது சிறந்தது. தெளிப்பான்கள் பயன்படுத்தினால் அன்ரார்டிகாவில் ஓசோன் படையை தாக்கும் குற்றத்திற்கு உள்ளாவீர்கள். இவை சாதாரணமாக நிறம் அகற்றி அல்லது வியர்வை எதிரி. மணம் தரும் வியர்வையை நிறுத்திவிடும். கோலோன் அல்லது நறுமணப் பொருளைப் பயன்படுத்துவதால் பயனொன்றுமில்லை. இவற்றைப் பயன்படுத்தினால் இருவேறு வித மணங்கள் அதாவது நன்நாற்றமும் துர்நாற்றமும் வீசும். ஏனெனில் அவை துர்நாற்றத்திற்கு எதிராகச் செயல்படாது. முகத்திற்குப் பூசும் மாவையோ அல்லது வேறேதும் மாவையோ பயன்படுத்தாதீர். அவை வியர்வை நாளங்களை அடைத்து வேனிற் பருக்களையும் கொப்புளங்களையுமே ஏற்படுத்தும்.

தாய்ப்பாலுக்கும் அக்கிள் வியர்வைக்கும் இடையிலான தொடர்புபற்றிய தகவல் தெரியுமா? இதனால் தான் தாய்ப்பால் கோடை காலங்களில் கூடிய தண்ணீர்த் தன்மையாகவுள்ளது. இது குழந்தையின் நீர்த்தாகத்தைத் தணிக்க உதவுகிறது. (தாய்ப்பால் ஊட்டப்படும் பிள்ளைகளுக்குத் தாகம் தீர்க்க மேலதிகமாக நீர் பருக்கத் தேவையில்லை)

பையன்கள் பிரமாண்டமான வியர்வை நாளங்களைப்பற்றி அதிசயப்படுகிறார்கள்.

பூப்புப் பிரதேசத்திலுள்ள துர்நாற்றத்தைப் போக்க நித்தம் குளிப்பதனால் திருப்திப்படாவிட்டால் அமெரிக்காவில் தற்போது தயாரிக்கப்படும் தெளிப்புகளையோ காம்புவடிவில் தயாரிக்கப்பட்ட மருத்துவத் தயாரிப்புகளையோ யோனி வாயிலில் வைத்து விடலாம். சுத்தம் செய்வது, அமெரிக்காவில் பிளாஸ்ரிக் பையிலுள்ள திரவமொன்றை பிளிந்து யோனிக்குள் செலுத்தி சுத்தம் செய்கிறார்கள். இயற்கையான மணத்தை நீங்கள் இவ்வளவு தூரம் ஏன் வெறுக்கிறீர்கள் என்பதை ஆராய வேண்டும். உங்கள் சிறு பெண் தோற்றம் நீங்கி பருவம் ஆகும் நிலையை அடையும்போது இப்படியான மாற்றம் ஏற்படுவது இயல்பானதேயாகும்.

ஆனாலும் உங்கள் யோனியின் மணம் மாறுபட்டு இருக்கும் போதும் மஞ்சள் அல்லது பச்சை அல்லது வெள்ளை நிறக்கட்டியாகவும் தோன்றினால் குருப்பித்துவிட்டது என்று கருத்து. இதனை மாற்ற உங்கள் வைத்தியர் மருந்து தருவார்.



பருவமானவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2010 11:36 pm

உடல் உரோமம் (BODY HAIR)

எமது அக்கிளிலும் கால்களிலும் தோன்றும் உரோமம்

கால்களிலும் அக்கிளிலும் உரோமம் தோன்றக் காரணம் அன்ட்றோஜன் என்கின்ற ஆண் இன ஓமோன். பெண்களில் பருவம் ஆகும் போதும் செயல்படுகிறது. உங்கள் கால்களிலோ அல்லது அக்கிளிலோ வளர்ந்துள்ள உரோமம் அதிகமானது என்று கருதுவீர்களாயின் அவற்றை அகற்ற இதோ சில வழிகள். சவரம் செய்து விடலாம். சவர்க்காரத்தை நுரைக்கச் செய்து வெந்நீர்க் குளிப்பு போட்ட பிறகு சவரம் செய்துவிட்டால் வெட்டுக்களோ கீறல்களோ இன்றி மிருதுவாக எடுபட்டு விடும்.

நீங்கள் மின்சார சவரப்பொறியையும் பயன்படுத்தலாம். அப்படியாயின் சவர்க்காரத்தையும் நீரையும் பயன்படுத்தத் தேவையில்லை.

மற்ற வழி ரோமம் நீக்கிக் களிகயையும் பயன்படுத்தலாம். இது உரோமத்தை மிருதுவாக்கிவிடும். அதன் பின் மெழுகு மூலம் அகற்றலாம். எப்படியெனில் சூடான (அல்லது சூடற்ற) மெழுகை காலிற் பூசி பின் மெழுகை அகற்றுவதனால் ஒட்டிக்கொண்டிருக்கும் உரோமமும் அகலுகிறது. ஆனால் உரோமம் முரட்டுத்தன்மை அற்றதாயின் பிடுங்கும் போது முறிந்து தோலுக்கு அடியில் வளர ஆரம்பிக்கும். அல்லது ஓரளவு வெளிற்றி விட்டால் குறைத்துக் காட்டும். இதற்கு உரோமத்தை வெளிறச் செய்யும் குழம்பு பாவிக்கப்படலாம். இது ஹைதரசன் பெர்ஒட்சைடு, அமோனியா கலவை ஆகும். (இதனைக் கொண்டு பூப்பு ரோமத்தை வெளிறச் செய்யக்கூடாது) இக்குழம்பு யோனித் துவாரத்திற்குள் புகுந்து அமிலம் போல எரிச்சல் ஊட்டும். உங்கள் மீசை உரோமம் கருமைநிறமாகத் தொடங்கினால் வெளிறச் செய்யலாம் அல்லது உரோமம் அகற்றும் களியைக் கொண்டு அகற்றிவிடலாம். சவரம் செய்துவிட வேண்டாம். மெழுகு பூச வேண்டாம். ஏனெனில் கூடுதலான வலிப்பைத தரும்.

அல்லது நீங்கள் அப்படியே விட்டுவிட நினைக்கக் கூடும். சிலருக்கு அக்கிள் ரோமம் என்றால் நல்ல விருப்பம். சிறிய உரோமக் கட்டு பார்க்க விரும்பத்தக்கது. அக்கிளில் கூட கால் உரோமம் கருமைநிறம் அடையாமல் மிருதுவாக இருப்பின் அதனை அப்படியே விட்டுவிடுவது இயற்கையான தோற்றத்தைத் தரும். தேவை என்று கருதினால் உடல் உரோமங்களை அகற்றி விடுங்கள். உங்கள் நண்பர்கள் செய்கிறார்களே என்று செய்ய வேண்டாம். உங்களுக்கு இருப்பது போல அவர்களுக்கும் வளர்ந்துள்ளதோ தெரியாது. அப்படியே விட்டுவிடட்டும்.



பருவமானவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2010 11:37 pm

பெற்றோரிடமிருந்து விடுதலை

பருவமான பிள்ளைகளைப் பற்றிப் பெற்றோர் கவலைப்படுவதை விட்டுவிட வேண்டுமா?


வழமையாக அப்படியில்லை. முழுமையாக அல்லவே. சகல விதமான பாதுகாப்பும் அரவணைப்பும் வழங்கிவந்த பிள்ளைகளைத் திடீரெனக் கைவிடுவது சுலபமான காரியமல்ல. அவர்கள் மீது காட்டிய அக்கறையை உடனடியாக உதறித்தள்ளுவதோ, குஞ்சைக் கூட்டைவிட்டுத் துரத்தி விடுவதோ இயலாத காரியம். பருவமானவர் எல்லோரும் வயதுவந்தோரைப் போல வேலை செய்து தனியாகவாழக்கூடிய நிலையை அடையாதவர்கள். பலரும் மாணவப் பருவத்திலேயே உள்ளவர்கள்.

ஆனால் முரண்பாடுகள் ஏற்படக் காரணமாயிருப்பது இதுதான். பருவமானவர்கள் சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள். தாங்களாகவே முடிவு எடுக்கவும், தவறுகளை இழைக்கவும், பெற்றோரின் மேற்பார்வையிலிருந்து விலகி வாழவும் விரும்புகிறார்கள்.

இந்த முரண்பாடு எம்மால் தவிர்க்கக் கூடியதா?


பார்ப்பதற்கு விநோதமாகத் தோன்றுகின்ற போதிலும் இது உண்மையில் நன்மையானதே. பருவமானவர் வெறுமனே கீழ்ப்படிவான பிள்ளையாக இருப்பதால் ஒரு பயனும் இல்லை. பருவமானவர் கூறுவதை எல்லாம் மறுப்பெதுவும் இன்றி ஏற்றுக்கொண்டு இருப்பதுதானா பெற்றோரின் கடமை. பருவமானவர் பெற்றோரிடமிருந்து எதிர்பார்ப்பது வழிகாட்டலே... ஆனால், இறுதியில் தாம் விரும்பியதைச் செய்யவே சம்மதம் தரவேண்டும்.

பருவமானவருக்கும் பெற்றோருக்கும் இடைப்பட்ட முரண்பாடு தந்தையரின் அன்புக்குள்ளாகிய பெண் குழந்தையும் தாயின் அன்பிற்குப் பாத்திரமான ஆண்குழந்தையும் என்ற நிலை மாறி தங்களை ஒத்த குழுவினரின் கவர்ச்சிக்குளாகின்றனர்.

பருவமானவர்களும் கூட உளரீதியான மாற்றங்களுக்கு உள்ளாகத்தான் வேண்டுமா?

ஆம். பாரிய மாற்றம் என்னவென்றால் தன்னைப் பற்றிய சிந்தனை உந்தப்படுகிறது. திடீரெனத் தம்மையே வெளியிலிருந்து பார்க்கத் தலைப்படுகின்றனர். தன்னை ஒரு காட்சிப் பொருளாகக் கொண்டு பார்த்து ஆராய முற்படுவர். இது ஏனெனில் உடலியல் மாற்றமேயாகும். உங்களை நீங்களே அவதானித்து கவர்ச்சியுள்ளவரா என்று ஆராய முற்படுவீர்கள். பெற்றோர் ஊட்டிய நம்பிக்கைகள் மீது தெளிவு பெற முயல்வீர்கள்.

முரண்பாடுகளினால் தந்தையாரைத் தனையன் தலைவர் எனத் துதிசெய்கின்ற நிலையிலிருந்தும் மகள் தனது தாயாரைத் துதி செய்கின்ற நிலையிலிருந்தும் விடுபட்டு தாமே தமது பாதையை வகுக்கின்ற நிலைக்கு வருவார்கள். பருவம் அடைந்தவர்கள் நன்கு சிந்தித்து செயல்படத் தொடங்குவதோடு பெற்றோர் செய்து வந்த தவறுகளையும் இனம் காணும் நிலையை அடைவர்.

சிந்தனைத் தெளிவானவர்கள் பெற்றோரா பருவமானவரா?

இந்த முரண்பாட்டில் ஒருவருமே இல்லை என்றே கூறலாம். பருவமானவர்கள் தங்கள் தனித்தன்மையை நிலைநாட்டி பெற்றோரின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கான போராட்டத்தில் முனைந்துள்ளனர் என்பது ஒரு புறத்தில் உள்ளது.

மறுபுறம் பெற்றோர் தாம் நீண்ட காலமாகவே கட்டிக்காத்த சிறுபிள்ளைகளை தற்போது இழந்து தாம் தமது முதுமைக் காலத்தில் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ள விரும்புவதில்லை.



பருவமானவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2010 11:39 pm

மார்பகங்கள்: (BREASTS)

மார்பகங்கள் என்றால் என்ன? இவை எதனால் ஆனவை?

மார்பகங்களின் பால்சுரப்பிகள் கொழுப்பால் சூழப்பட்டவை. மரவேர்களைப் போல முலைக் காம்பின் பின்புறம் பால்ச்சுரப்பிகள் உள்ளன. சிறியவை சிறியவைகளாக அமைந்துள்ளன. உண்மையில் மார்பகங்களை சூழ்ந்துள்ள கொழுப்பே அவற்றின் அமைப்பை நிர்ணயிக்கின்றது. பெரியதோ சிறியதோ என்று தீர்மானிக்கப்படுகிறது. பாலைக் கொடுப்பதைப் பொறுத்தவரை பெரியதோ சிறியதோ எல்லாமே சிறந்தவைதாம்.

ஒரு மார்பகம் மற்றையதைக் காட்டிலும் பெரிதாய் இருப்பது சாதாரணமானதுதானா?

ஆம். கைகளோ அல்லது கால்களோ அல்லது புருவங்களோ ஒரே மாதிரி இருப்பதில்லையே. பருவம் அடையும் போது மார்பகங்களின் அளவில் பெரிய வித்தியாசம் காணப்படும். இரண்டுமே வளர்கின்ற போதிலும் ஒரே அளவில் வளர்ச்சியுறுவதில்லை. சில வேளைகளில் ஒன்று முற்றாக வளர்ந்தபிறகே மற்றது வளரத் தொடங்குகிறது. பெரிதானது பெரிதாகவே இருக்க மற்றது அதனை நெருக்கிக் கொண்டபடி இருக்கும். இதற்காகக் கவலைப்படத் தேவையில்லை.

மார்பகங்கள் உருக்குலைந்து காணப்பட்டால் என்ன?

வளர்ந்து வரும் போது மார்பகங்கள் உருக்குலைந்து தான் காண்ப்படும். அதனால் மார்புப் புற்றுநோய் ஏற்பட்டு விட்டதோ என்று நினைக்கத் தேவையில்லை. மார்புப் புற்றுநோய் பருவம் ஆகி நீண்ட காலத்திற்குப் பிறகே வருகிறது.

இரு மார்பகங்களும் பாரதூரமாக வித்தியாசப்பட்டுக் காணப்பட்டால் ஒரு குழந்தை வைத்தியரையோ பிள்ளைப்பேற்று நிபுணரையோ அணுக வேண்டும்.

மார்பகங்கள் வந்தவுடன் மார்புக்கச்சை தேவை தானா?

எல்லாப் பெண்பிள்ளைகளுக்கும் தேவையில்லை. மிகவும் சிறியவையாக இருக்கும்போது தொங்கிப் போய்விடுமோ என்ற பயத்திற்கே இடமில்லை.

மார்பகங்கள் மிகவும் பெரியவையாக உள்ளபோது மட்டுமே தொங்கிவிடுமாதலால் மார்புக் கச்சு தேவை. வேகமாக நடக்கும் போதும் ஓடும் போதும் மார்புக் கச்சை அணிந்திருப்பது வசதியாய் இருக்கும்.

முலைக்காம்புகள் கவிழ்ந்து இருப்பதனாலென்ன?

கவிழ்ந்துள்ள முலைக்காம்புகளுக்குக் காரணம் முலைக்காம்புகளை உள்ளுக்குள் இழுத்து வைக்கும் திசுக்களே ஆகும். கவிழ்ந்துள்ள முலைக்காம்புகளால் உள்ள பிரச்சினை குழந்தைக்குப் பால் ஊட்டும் போது சிரமம் தரும். கர்ப்பம் தரிக்கும் போதும் முலைக்காம்புகள் தாமாகவே திரும்பிவிடும். சிலவேளைகளில் முலைக்காம்புகளை நடுப்புறம் நோக்கி விரல்களால் இழுத்துவிட உதவும். இது இறுக்கமான திசுவை இளக்கி முலைக்காம்புகளை திருப்பி விடுகிறது.

கட்டாயகமாக பால் ஊட்ட தேவைப்படாவிட்டால் கவிழ்ந்துள்ள முலைக்காம்புகள் சாதாரணமானவையே. ஒருவித பிரச்சினையும் இல்லை.

பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணர்கள் எப்படி மார்பகங்களைப் பெரியனவாகச் செய்கின்றனர்?

இந்தச் சத்திர சிகிச்சையானது பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனை ஆகும்.

முதலில் சத்திரசிகிச்சை நிபுணர்கள் மார்பகத்தின் கீழ்ப்பகுதியை வெட்டுகின்றனர். (வெட்டிய அடையாளம் தெரியாமலிருக்க) அதன் பின் ஒவ்வொரு மார்பகத்திலும் பைநிறைய சிலிகோனை நிரப்பி இந்தப் பைகள் விலாவுடன் தைக்கப்படுகின்றன. இதனால் பால் சுரப்பிகளின் கொள்கலன்கள் வெட்டப்படுகின்றன. எனவே குழந்தைக்குப் பால் ஊட்ட இயலாமல் போய்விடும். இந்தச் சத்திரசிகிச்சைக்கு உட்பட்ட பெண்கள் பல மாதங்களுக்குப் பிறகும் உறுத்துவதாகவும் முலைக்காம்புகள் இன்பம் ஊட்டும் தன்மையை மீண்டும் பெறுவதில்லை என்றும் குறைப்படுகின்றனர். இந்த சத்திர சிகிச்சை செய்து கொள்வது பாலியல் hPதியில் கூடிய கவர்ச்சியை ஊட்ட வேண்டும் என்பதற்காகவே. ஆதலால் இது பெரிதும் வெட்கப்படக் கூடியதாகவுள்ளது.

மற்றொரு பிரச்சினை யாதெனில் பெருப்பிக்கப்பட்ட மார்பகம் என மற்றையோரால் கண்டு அறியக் கூடியதாகவுள்ளது. மார்பகக் கவர்ச்சியாகக் கொள்ளும் துள்ளும் தன்மையை அவை இழந்து விடுகின்றன. நீங்கள் முதுகுபடப் படுத்திருக்கும் போது சற்று ஒரு புறமாகச் சரிவதில்லை. பீரங்கிகளைப் போல குத்தென நிற்கும். சிலவருஷங்களுக்குப் பிறகு மார்பகங்கள் உருக்குலைந்து கோலம் கெட்டுவிடும். திசுக்களில் வடுக்கள் தோன்றுவதால் இது ஏற்படுகிறது. அநேக பெண்கள் தமது சிலின்கோ பைகளை அகற்றுகின்றனர். அவற்றைத் தயாரித்த நிறுவனங்கள் பெரும் தொகையான பணத்தை நஷ்ட ஈடாகக் கொடுக்க வேண்டியுள்ளன.

சிலிக்கோன்பைகளை உள்ளே வைத்துக்கொண்டவர்களுக்கு மார்புப் புற்றுநோய் வர ஏதுவாகும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மார்பகங்களை பெரிதாக்க ஏதாவது எளிய முறை உண்டா?

இதற்கான உடற்பயிற்சி ஒன்றும் இல்லை. ஏனெனில் மார்பகத்தில் தசையொன்றுமில்லை. விலாவின் பின் புறத்தில்தான் தசை உள்ளது.

மார்பகங்கள் கொழுப்பாலானவையாதலால் உடல் கொழுத்து நிறைகூடினால் மார்பகங்கள் பெருக்க இடமுண்டு.

மார்பகங்களை ஊதவைக்கும் ஒரே மருந்து எஸ்ரேஜன் என்கின்ற பெண்ணுக்குரிய ஓமோன் ஆகும். இது கருத்தடை மாத்திரையிலுள்ளது. உங்களுடைய புதிய மார்பகங்கள் சிறிது நோவுடையதாயிருக்கும். (வீங்கியும் மிருதுவாகவும் இருப்பதனால்) முழுமையான நிறை 5 கிலோகிராமுக்குக் கூடுதலாக இருக்கும். உங்களுக்கு ஏன் பெரிய மார்பகங்கள் வேண்டும். பெரிய மார்பகங்களை உடைய பெண்கள் மெலிந்த சிறிய மார்பகங்களை உடைய பெண்களைப் பார்த்துப் பொறாமைப்படுவது தெரியுமா? ஏனெனில் மெலிவானவர் நாகரிக உடையில் அழகாகத் தோற்றம் அளிக்கிறார்;. அதோடு மெலிந்து சிறிய மார்பகங்களை உடையவர்கள் மார்புக்கச்சை அணியாமல் உல்லாசமாகத் திரியலாம்.

முலைக்காம்புகள் பெரிதாகவிருந்தால் என்ன?

எத்தனையோ பெண்கள் இந்தக் கேள்வியைக் கேட்கின்றார்கள் என்பதை அறிய ஆச்சரியப்படுவீர்கள். தமது முலைக்காம்புகள் மிகவும் பெரியவையாகவுள்ளன என்று ஏன் நினைக்கிறார்கள்? ஏனெனில் நிர்வாணப் பெண்களின் படங்களில் சிறிய நிமிர்ந்த முலைக்காம்புகள் உடையவர்களாகத் தோற்றுவர். எல்லோருக்கும் சிறு பிள்ளைகளாக உள்ளபோது அப்படித்தான் இருக்கும்.

முலைக்காம்புகளுக்கு கீழ் உள்ள பகுதி மட்டும் வளர்ச்சியுறுவதில்லை. முலைக் காம்புகளும் கூட முதலில் வளர்ச்சியுறுகின்றன. அவை பெருத்து கருமைநிறம் அடைகின்றன. அவை தீண்டப்படும் போது எழுச்சி பெறுகின்றன. சிறிய அளவினதாகி கூர்மையாகத் தோன்றும். இப்புகைப்படங்களில் மட்டுமே குத்தாகவுள்ளன. மற்றெல்லா நேரங்களிலும் அல்ல.

அநேக படப்பிடிப்பாளர்கள் கையில் பனிக்கட்டியை வைத்திருந்து முலைக்காம்புகளைச் சுருங்கச் செய்து நிமிர்ந்து இருக்க வைத்துப் படம் பிடிக்கின்றனர். பனிக்கட்டி இல்லாதபோது அவர்களும் மற்றவர்கள் போலவே தோற்றமளிப்பர்.

மார்பகங்கள் மிகப் பெரியதாக இருந்தால்...

பெரிய மார்பகங்களை உடைய சில பெண்கள் பிரகாசிப்பதற்கும் வேறுசிலர் அலங்கோலமாகவும் தோற்றமளிப்பதும் ஆச்சரியம் ஊட்டவில்லையா? இரண்டாம் வகைக்குக் காரணம் சோகமே.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டுவது சில மார்புக் கச்சைகளை வைத்து சாய்ந்துவிடாது பாருங்கள். புவி ஈர்ப்பு எமக்கு அறிவுறுத்துவது இதுதான். பாரமான மார்பகங்கள் மார்புக் கச்சை இல்லாவிட்டால் சாய்ந்து தொங்கும். சிறிய அளவினதே விரும்பப்படுகிறது. ஆனால் அப்படிச் செய்யலாகாது. ஏனெனில் அது உருவத்தைச் சிதைத்து அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது . சரியான அளவானதைப் பயன்படுத்தும் போது எவ்வளவு அழகாகத் தோற்றமளித்தீர்கள் என்பதை கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

பெரிய மார்பகங்களைச் சிறியவை ஆக்க சத்திரசிகிச்சை உண்டு. இது அநேக வடுக்களை ஏற்படுத்திவிடும். பாரம் அதிகமாகி முதுகுவலி ஏற்படுமாயின் இதனைச் செய்ய யோசிக்கலாம்.

சாய்ந்து தொங்கிப் போவதைப் பற்றிய பேச்சு

அநேகமாக எல்லா மார்பகங்களும் ஒரளவு சாய்ந்து தொங்கிப் போகும். நிமிர்ந்து மேல் நோக்கி உள்ளவை கூட ஆராய்ந்து பார்த்தால் கொழுப்பெல்லாம் கீழ்முகமாகவும் முலைக்காம்பு வளைவின் மேற்பகுதியில் இருப்பதையும் காணலாம்.

அநேக நிர்வாணப் புகைப்படங்களில் கைகளை மேலே உயர்த்தி தோள்களைப் பின்னுக்குத் தள்ளியும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படவில்லையா? ஏனெனில் இது மார்பகங்களை உயர்த்துகிறது. இதனால் தொங்குவது குறைவாகத் தென்படுகிறது. அதனால் நிர்வாணக் காட்சிப்பொருள்கள் கூட தங்கள் மார்பகங்களைப் பற்றி திருப்தியற்றுத் தென்படுகிறது. ஒருபோதும் தொங்காத மார்பகங்கள் சத்திரசிகிச்சைக்கு உட்பட்டவையே. நாம் புகைப்படங்களில் காணும் அழகிகள் அனைவரும் சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்களே. அப்படிப்பட்ட பெண்களின் தோற்றங்கள் வெறும் போலித் தோற்றங்களே.

இது எல்லாம் சாதாரணமே. பறவைகள் கூட தமது கூட்டில் வைக்கப்பட்டுள்ள வண்ண வண்ண பிளாஸ்ரிக்குகளின் மீது தமது சொந்த முட்டைகளைக் காட்டிலும் கூடிய கவர்ச்சி கொள்ளுவதைக் காணலாம்.



பருவமானவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக