ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன்

+7
திவா
muthupandian82
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
உதயசுதா
balakarthik
அருண்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் Empty "குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன்

Post by அருண் Tue Jul 27, 2010 10:32 am

மதுரை : ""குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்று, ரத்தத்தை மண்சட்டியில் பிடித்து வறுத்தேன். அதை, ஊதுபத்தி வைக்கும் சில்வர் குழாயில் வைத்து அடைத்தேன்,'' என மதுரை குழந்தையை "நரபலி' கொடுத்த கொடூரன், பகீர் வாக்குமூலம் அளித்தான்.

மதுரை எஸ். ஆலங்குளத்தை சேர்ந்த செரின்பாத்திமாவின் ஆண் குழந்தை காதர்யூசப்பை (1) கடத்தி கொலை செய்து, நரபலி கொடுத்த கொடூரன் அப்துல்கபூர் (30) போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் மகதூம் தெருவை சேர்ந்த சமையல் மாஸ்டர் மீராசாகிப். இவரது நான்காவது மகனான நான் (அப்துல்கபூர்), அங்குள்ள சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தேன். தந்தை வெளிநாட்டில் வேலைக்கு சென்றார். படிப்பு வராததால் ஊர் சுற்றி வந்தேன். மது, கஞ்சா பழக்கம் இருந்தது. பத்தாண்டுக்கு முன், முத்தையாபுரத்தை சேர்ந்த அசன்மரக்காயர் மகள் சையது அலி பாத்திமாவிற்கும், எனக்கும் திருமணம் நடந்தது. பாத்திமா நஸ்ரின் என்ற மகள் இருக்கிறார். கருத்து வேறுபாடால், ஐந்தாண்டுகளுக்கு முன், மனைவியை விட்டு பிரிந்தேன். தாயின் பாதுகாப்பில் மகள் உள்ளார். மனைவியை பிரிந்ததால், மனம் வருத்தப்பட்டேன்.

இதனால், சமையல் வேலைக்கு செல்லவில்லை. என் மீது குடும்பத்தினர் வெறுப்படைந்தனர். எப்போதாவது வேலைக்கு சென்று, மது குடித்து வந்தேன். காசு இல்லாத நேரம் மனம் வருத்தப்படும். பட்டினியோடு திரிவேன். உடல் நிலை மோசமடைந்தது. எங்கள் ஊரை சேர்ந்தவர்கள், ஏர்வாடி தர்கா சென்றால், உடல் குணமாகும்; கெட்ட பழக்கம் மாறிவிடும் என்றனர்.

இரண்டாவது திருமணம்:ஐந்தாண்டுகளுக்கு முன், ஏர்வாடி சென்று தர்காவில் தங்கினேன். அங்கு தரும் உணவை சாப்பிட்டேன். ஒரு மாதத்திற்கு முன், என்னைப்போல் உடல் நிலை பாதிக்கப்பட்ட முத்தையாபுரத்தை சேர்ந்த, விவாகரத்து பெற்ற ரமீலாபீவி, ஏர்வாடி தர்காவிற்கு வந்தார். அவருக்கு பல உதவிகளை செய்தேன். எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. தர்காவிலேயே, நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். ஏர்வாடியில், 200 ரூபாய்க்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கினோம்.தர்காவிற்கு வருவோர் கொடுக்கும் காசுகளை சேகரித்து வந்தேன். அந்த வருமானத்தில் "சோமாஸ்' செய்து, ரமீலாவிடம் கொடுத்து விற்று வரச்சொல்வேன். அதில் கிடைத்த வருமானத்தில் சாப்பிட்டோம். தலை பிள்ளையை கொன்று ரத்தத்தை எடுத்து ஒரு குழாயில் அடைத்தும், அந்த குழந்தையின் தலையை தனியாக எடுத்து, கடற்கரையில் புதைத்து வைத்து, ரத்தத்தை பூஜை செய்து கடலில் எறிந்தால் உடல் நிலை சரியாகும் என சிலர் சொல்ல கேட்டேன்.இது குறித்து ரமீலாவிடம் கூறினேன். அவரும், இதுபோல் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார். சமயம் வரும்போது செய்வோம் என முடிவு செய்தோம். ஏர்வாடியில் சோமாஸ் வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தை வைத்து, பல தர்காக்களுக்கு சென்று பாத்தியா ஓதி வந்தோம்.

தர்காவில் குழந்தை கடத்தல்:கடந்த ஜூன் 30ம் தேதி கோரிப்பாளையம் தர்காவிற்கு வந்தோம். அங்கு தங்குவதற்கு பதிவு செய்ய வேண்டும். அதற்காக, பணம் கட்ட வேண்டும் என்றனர். எனக்கும், ரமீலாவிற்கும் சேர்த்து தலா 150 ரூபாயை தர்காவில் செலுத்தினேன். தர்காவில் 41 நாட்கள் தங்கலாம் என்றனர். கடந்த ஜூலை 1ம் தேதி தங்கினோம். கைக்குழந்தையுடன், பெண்ணும், பாட்டி ஒருவரும் தர்காவில் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்தக் குழந்தையை கடத்த திட்டமிட்டோம். இதற்காக, குழந்தைக்கு அருகிலேயே நாங்களும் படுத்துக் கொண்டோம்.இரவு 10 மணிக்கு தர்காவின் கதவுகளை பூட்டினர். அதிகாலை நான்கு மணிக்கு குழந்தை அழுதது. குழந்தைக்கு தாயார் பாலூட்டினார். பின், குழந்தையை படுக்க வைத்து, அருகிலேயே அவரும், பாட்டியும் படுத்துக் கொண்டனர். அதிகாலை 4.30 மணிக்கு பாங்கு சொல்லும் போது, கதவை திறந்தனர். தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வந்தோம்.

குழந்தையை கொன்று நரபலி:மதுரையில் இருந்து பஸ்சில் திருநெல்வேலி சென்றோம். குழந்தையை வெளியில் வைத்து கொலை செய்தால் தெரிந்து விடும் என ரமீலா சொன்னார். லாட்ஜில் அறை எடுத்து, அங்கு குழந்தையை கொல்ல முடிவு செய்தோம். இதன்படி, தூத்துக்குடி அருகே ஏரல் என்ற ஊருக்கு வந்தோம். பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள லாட்ஜில் அறை எடுத்தோம். குழந்தையின் வெள்ளி கொலுசு, வெள்ளி அறைஞாண்கயிரை கழற்றினேன். அதை விற்று வரும்படி ரமீலாவிடம் கொடுத்து அனுப்பினேன். அதை, 2,000 ரூபாய்க்கு ரமீலா விற்றார்.அறையில் இருந்த பாத்ரூமில் குழந்தையை ரமீலா பிடித்துக் கொண்டார். நான், கத்தியால் குழந்தையின் கழுத்தை அறுத்து, ரத்தத்தை ஒரு சில்வர் டப்பாவில் பிடித்தேன். உடலை ஒரு பெரிய தூக்குவாளியிலும், தலையை ஒரு சின்ன தூக்குவாளியிலும் போட்டு மூடினோம். அறையை காலி செய்து விட்டு, ஏர்வாடியில் நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு வந்தோம். ரத்தத்தை மண் சட்டியில் போட்டு வறுத்தோம். ரத்தம் லேகியம் போல் ஆனதும், அதை ஊதுபத்தி வைக்கும் சில்வர் குழாயில் வைத்து அடைத்தோம். சில நாட்கள் கழித்து, குழந்தையின் உடலை வீட்டிற்குள் குழி தோண்டி புதைத்தோம்.எனது தாயார், சிறு வயதில் என்னை தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழி தர்காவிற்கு அழைத்து செல்வார். எனவே, குழந்தையின் தலையை, தர்கா அருகிலேயே புதைக்க திட்டமிட்டோம். இதன்படி, குழந்தையின் தலையை வைத்திருந்த தூக்குவாளி, ரத்தம் அடைத்து வைத்திருந்த சில்வர் குழாய், குழந்தையின் கழுத்தை அறுக்க பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை எடுத்து கொண்டு கல்லாமொழிக்கு சென்றோம். கடற்கரையில், ரத்தம் அடைத்த குழாயை, ரமீலாவின் தலையை சுற்றி கடலில் எறிந்தேன். தலை வைக்கப்பட்டிருந்த தூக்குவாளியை, ரமீலா தலையை சுற்றி கடற்கரையில் தலையை புதைத்தேன். கத்தி, வாளியை கடலில் வீசினேன்.பின், தினமும் அங்கு சென்று பூஜை செய்து தொழுது வந்தேன்.கடந்த 24ம் தேதி இரவு 8 மணிக்கு, தர்காவில் தூங்கி கொண்டிருந்த என்னையும், ரமீலாவையும் போலீசார் பிடித்தனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.இவருக்கு உறுதுணையாக இருந்து குழந்தையை நரபலி கொடுத்தது குறித்து ரமீலாவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 364 (கொலை செய்யும் நோக்கில் கடத்துதல்), 302 (கொலை), 201 (தடயங்கள், சாட்சியங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ், மதுரை தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசன் வழக்குப்பதிவு செய்தார்.இருவரையும், மதுரை இரண்டாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி முன் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு ஆஜர்படுத்தினார். மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, அப்துல்கபூர் மதுரை சிறையிலும், ரமீலா திருச்சி சிறையிலும் ரிமாண்ட் செய்யப்பட்டனர்...........
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் Empty Re: "குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன்

Post by balakarthik Tue Jul 27, 2010 11:47 am

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்


ஈகரை தமிழ் களஞ்சியம் "குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் Empty Re: "குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன்

Post by உதயசுதா Tue Jul 27, 2010 11:53 am

எத்தனை கொடுர எண்ணம் இவனுக்கு.சே இந்த செயலுக்கு ஒரு பெண்ணும் துணை போய் இருக்காளெ.அதை நினைத்து ஒரு பெண்ணாக நான் வருந்துகிறேன். இவங்க இரண்டு பேரயும் விசாரணையெ இல்லாம தூக்குல போடணும். படிக்கும்போதெ மனது கலங்குதெ. அந்த குழந்தைய
பெத்தெடுத்த பெண் எப்படி துடித்து போவார்?


"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் U"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் D"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் A"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் Y"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் A"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் S"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் U"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் D"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் H"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் Empty Re: "குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன்

Post by பிளேடு பக்கிரி Tue Jul 27, 2010 11:57 am

"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் Icon_eek "குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் Icon_eek



"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் Empty Re: "குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன்

Post by அருண் Tue Jul 27, 2010 12:11 pm

உதயசுதா wrote:எத்தனை கொடுர எண்ணம் இவனுக்கு.சே இந்த செயலுக்கு ஒரு பெண்ணும் துணை போய் இருக்காளெ.அதை நினைத்து ஒரு பெண்ணாக நான் வருந்துகிறேன். இவங்க இரண்டு பேரயும் விசாரணையெ இல்லாம தூக்குல போடணும். படிக்கும்போதெ மனது கலங்குதெ. அந்த குழந்தைய
பெத்தெடுத்த பெண் எப்படி துடித்து போவார்?
சரியாக சொன்னிர்கள் அக்கா............
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் Empty Re: "குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன்

Post by அன்பு தளபதி Tue Jul 27, 2010 12:34 pm

கடவுளே இறைவன் இவனுக்கு ஏன் மனித பிறப்பை கொடுத்தார்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் Empty "குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன்

Post by muthupandian82 Tue Jul 27, 2010 12:42 pm

இந்த நேரத்தில் நம் காவல்துறையின் திறமையை நாம் பாராட்டியாக வேண்டும். நன்றி
muthupandian82
muthupandian82
பண்பாளர்


பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Back to top Go down

"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் Empty Re: "குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன்

Post by திவா Tue Jul 27, 2010 1:41 pm

மதங்களின் மூடநம்பிக்கையால் ஏற்படும் பாதிப்புக்கு இன்னோர் உதாரணம் சோகம்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் Empty Re: "குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன்

Post by மீனா Tue Jul 27, 2010 1:49 pm

"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் Affraid


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் Empty Re: "குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன்

Post by மஞ்சுபாஷிணி Tue Jul 27, 2010 2:10 pm

அந்த குழந்தையின் முகத்தை பார்க்கும்போது மனதில் கொஞ்சம் கூடவா கருணை தோன்றவில்லை?? சோகம்

சாதாரணமா வெளியில் நாம எதுனா குழந்தையை பார்த்தால் கூட சட்டுனு கொஞ்ச தானே தோணும்?

இவர்கள் கணவன் மனைவி இருவருமே ஏன் இப்படி இரக்கமில்லாம சோகம்

பெண் என்பவள் மென்மையான மனம் படைத்தவள்னு தானே கேள்விப்பட்டிருக்கேன்? சோகம்

தான் பெற்ற குழந்தையா இருந்தால் இப்படி செய்யத்தோன்றுமா பாவிகளுக்கு சோகம்

கடைத்தேங்காய் எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தது போல யாரோ வலியுடன் பெற்று எடுத்த செல்வத்தை இப்படி ...மனிதம் எங்க போனது சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

"குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன் Empty Re: "குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 2 நாய், 7 கோழிகளை கொன்று ரத்தத்தை குடித்தார் இளம்பெண்...........
» ஈரோடு அருகே பரிதாபம் 3 குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொ
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு
» கயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது
» திருத்தணியில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை: ஒரே புடவையில் தூக்கில் தொங்கினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum