ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி

Go down

மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி Empty மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?-கருணாநிதி

Post by ரபீக் Sun Jul 25, 2010 10:39 am

ஜெயலலிதா தனது அறிக்கையை முடிக்கும்போது "ஊரார் உடைமைக்கு பேயாய் பறப்பதாக'' என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். சமூகநீதிக் கொள்கை ஊரார் உடைமை அல்ல. திராவிட இயக்கத்தின் கொள்கை. ஆனால் ஊரார் உடைமைக்குப் பேயாய் பறப்பவர்கள் யார் என்பதைப் பற்றி நான் விளக்க வேண்டுமா என்ன? அது ஊரார் அறிந்த ரகசியமாயிற்றே! பேய், பூதம், பிசாசு இந்த மூன்றுக்கும் சொல்லப்படும் இலக்கணத்தின் மொத்த உருவமே! மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல? என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

உளறிக் கொட்டுகிறார்

இடஒதுக்கீடு பிரச்சினை பற்றி உச்சநீதிமன்றம் கடந்த 13-7-2010 அன்று வெளியிட்ட தீர்ப்புகள் குறித்தும் அதன் விளைவுகள் என்ன என்பதை விவரித்தும், இந்தப் பிரச்சினையில் கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்களையெல்லாம் விரிவாகத் தொகுத்தும் இரண்டு கடிதங்களை நான் எழுதியிருந்தேன்.

உச்சநீதிமன்ற வழக்கு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் தொடர்பானது என்றும், எனவே அந்தத் தீர்ப்பைப் பற்றி எழுதினால் ஜெயலலிதாவுக்கு புகழ் கிடைத்து விடுமோ என்பதற்காக நான் அதை இருட்டடிப்பு செய்யும் வகையில் மவுனமாக இருந்தேன் என்றும், தற்போது அவருக்கு ஏதோ பாராட்டு விழா நடத்த சில பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் முடிவு செய்த செய்தியை ஏடுகளிலே பார்த்துவிட்டு, நான் இந்த இரண்டு கட்டுரைகளில் நஞ்சைக் கக்கியிருப்பதாகவும் ஜெயலலிதா அவருக்கே உரிய பாணியில் உளறிக் கொட்டியிருக்கிறார்.

நஞ்சைக் கக்குவது - கபட நாடகம் என்று கூறுவது - எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவது - உதிர்ந்த ரோமம் என்பது - பதிபக்தி இல்லாதவர் என்று விமர்சிப்பது - ஏனைய அரசியல் கட்சித் தலைவர்களையெல்லாம் மரியாதை இல்லாமல் பேசுவது - ஆளுநர் கையைப் பிடித்து இழுத்தார் என்று வாய்கூசாமல் புளுகுவது - இவைகள் எல்லாம் ஜெயலலிதா என்ற தனிப்பட்ட ஒரு பெண்மணிக்கே உரிய வாசகங்கள் ஆகும்.

ஜெயலலிதா ஆட்சியில் இயற்றிய சட்டம் என்பதை நான் ஏதோ மறைத்து விட்டதாகச் சொல்லியிருக்கிறார். இது உண்மையா? நான் எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது பற்றியும், சட்டம் நிறைவேற்றப்பட்டது பற்றியும், அந்தத் தீர்மானத்தை வடிவமைத்துக் கொடுத்ததே திராவிடர் கழக தலைவர் வீரமணி என்பதை நினைவூட்டியும், ஆனால் அதற்கு அந்த ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு நன்றி சொல்லவில்லை என்றும், அந்தச் சட்டமுன் வடிவு அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு தமிழகச் சட்டமன்றத்திலே நிறைவேற்றப்பட்டதையும் விரிவாகவே எழுதியிருக்கிறேன். எப்போதும் போல எதையும் ஒழுங்காகப் படிக்காமல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது என்பதை நான் இருட்டடிப்பு செய்து விட்டேன் என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்திருக்கிறார்.

நான் என்னுடைய கடிதத்தில் ``18-7-1994 அன்று ஜெயலலிதாவும்; இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இடஒதுக்கீடு பிரச்சினையில் ஆதரவு கோரி கடிதம் எழுதினார்'' என்றும் அரசியல் நாகரிகத்தோடு வரலாற்றை மறைக்கக் கூடாது என்ற வகையில் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் அதைப் புரிந்து கொள்ளாமல் அவர் குதிக்கிறார் என்றால் அதற்கு நான் என்ன செய்வது?

நுனிப்புல் மேய்கிறார்

இடஒதுக்கீடு பிரச்சினையில் ஜெயலலிதா இரட்டைவேடம் போட்டதாக நான் எனது அறிக்கையிலே சொல்லியிருப்பதாகத் தெரிவித்து அதற்கு அவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதிலும் அவர் நுனிப்புல்தான் மேய்ந்திருக்கிறார்.

"இடஒதுக்கீடு பிரச்சினையில் ஜெயலலிதா அரசு அப்போது இரட்டைவேடம் போடுவதைப் போல ஒரு கருத்து பத்திரிகையாளர்கள் மத்தியில் இருந்தது. அதற்குக் காரணம் 22-11-1993 அன்று உச்சநீதி மன்றத்தில் அளித்த ஒப்புதல் பிரமாணப் பத்திரத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையேற்று தமிழ்நாட்டில் 93-94ம் ஆண்டுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க ஜெயலலிதா அரசின் சார்பில் சம்மதம் கொடுத்ததுதான்'' என்றும்; 15-7-1994 தேதிய "ப்ரண்ட்லைன்'' ஏடு நீண்ட கட்டுரையாக அதைப் பற்றி எழுதியிருந்தது என்றும் நான் தெரிவித்திருந்தேனே தவிர, அவர் இரட்டைவேடம் போட்டதாக நான் கூறவில்லை. "ப்ரண்ட் லைன்'' ஏடு தான் அப்படிக் கூறியது.

குணவதியை மக்கள் தெரிந்து கொள்ளட்டும்

இதிலிருந்து ஜெயலலிதா இரட்டை வேடம் போட்டதாக நான் கூறவில்லை என்பதும், ஏடுகள் தெரிவித்த கருத்தைத்தான் தெரிவித்தேன் என்பதும் தெளிவாகிறது அல்லவா? ஆனால் ஜெயலலிதா என் மீது கண்டனம் தெரிவித்திருக்கிறார் என்றால் அந்தக் "குணவதி''யைப் பற்றி மக்கள் புரிந்து கொண்டால் போதும்!

அடுத்து ஒரு இமாலயப் பொய்யை ஜெயலலிதா தனது அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். தாழ்த்தப்பட்டோருக்கு 18 விழுக்காடு இடஒதுக்கீடும், பழங்குடியினருக்கு 1 விழுக்காடு இடஒதுக்கீடும் தமிழகத்தில் காலம்காலமாக பின்பற்றப்பட்டு வந்தது என்று கூறியிருக்கிறார்.

1969ம் ஆண்டு நான் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றபின், ஏ.என்.சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு அளித்த பரிந்துரையினை ஏற்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அதுவரை 16 சதவிகிதம் என்றிருந்த இடஒதுக்கீட்டு அளவை 18 சதவிகிதம் என்று உயர்த்தி 7-6-1971 அன்று ஆணை பிறப்பிக்கச் செய்தேன். அதே ஆணையில்தான் அதுவரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25 சதவிகிதம் என்றிருந்த இடஒதுக்கீட்டை 31 சதவிகிதம் என்று உயர்த்தினேன்.

அதன் பின்னர், அ.தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கான சலுகைகளைப் பெற அவர்களது ஆண்டு வருமானம் 9 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்டு இருக்கக்கூடாது என்று அ.தி.மு.க. ஆட்சி உச்சவரம்பு விதித்து - அதன் காரணமாக அ.தி.மு.க.வின் நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு - 1-2-1980ல் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தினார்கள். அதற்குப் பின் 28-3-1989ல் நான் முதல் அமைச்சராக இருந்தபோது டாக்டர் ராமதாசுடன் விவாதித்து, பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகிதம் தனி ஒதுக்கீடு செய்தேன்.

புளுகுகிறார்

22-6-1990ல் நான் முதல்வராக இருந்தபோதுதான், தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடியினருக்கும் சேர்த்து 18 சதவிகிதம் இடஒதுக்கீடு என்பதில், தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் 18 சதவிகிதம் என்றும் பழங்குடியினருக்கு தனியாக ஒரு சதவிகிதம் என்றும் ஆக்கினேன். ஆனால் ஜெயலலிதா இதையெல்லாம் மறைத்துவிட்டு, அவருடைய மொழியிலே சொல்ல வேண்டுமானால் அப்படியே இருட்டடிப்பு செய்துவிட்டு, தமிழகத்தில் இந்த இடஒதுக்கீடு காலம்காலமாக பின்பற்றப்பட்டு வந்தது என்று தனது பாணியில் புளுகியிருக்கிறார்.

ஜெயலலிதா அறிக்கையிலே மற்றொரு பொய்! மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு 13-8-1990 அன்று ஆணை வெளியிட்டதாகவும், 13-8-1990 முதல் 30-1-1991 வரை ஆட்சியிலே இருந்த நான் மண்டல் கமிஷன் பற்றி தீர்மானம் நிறைவேற்றவில்லை என்றும், 30-9-1991 அன்றுதான் ஜெயலலிதாவின் தீர்மானம் கொண்டுவரப்பட்டது என்றும் ஜெயலலிதாவின் அறிக்கையிலே எழுதிவிட்டு, அவரே 21-8-1990 அன்று மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் ஆணை பிறப்பித்ததற்காக பாராட்டுத் தீர்மானம் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதென்று சொல்லியிருக்கிறார்.

மண்டல் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றிட மத்திய அரசு முன்வர வேண்டுமென்று ஒரு சிறப்புத் தீர்மானத்தை 12-5-1989 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் முன்மொழிந்தவனே நான்தான். 5-2-1990 அன்று நான் டெல்லி சென்றிருந்தபோது, துணைப் பிரதமராக இருந்த தேவிலாலை சந்தித்து மண்டல் கமிஷன் பரிந்துரைகளை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். 12-6-1990 அன்று பிரதமர் வி.பி.சிங் அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் பற்றி கருத்துக்களைக்கேட்டு, அந்த மாத இறுதியிலேயே அதற்கு நான் பதில் எழுதி - அதைப் பற்றி பின்னர் பிரதமர் வி.பி.சிங் கூறும்போது, மத்திய அரசின் சார்பில் எழுதப்பட்ட கடிதத்திற்கு உடனடியாக பதில் எழுதிய மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான் என்று பாராட்டினார்.

26-5-1990 அன்று தஞ்சையில் சமூகநீதி மாநாடு ஒன்றே நடைபெற்றது. அதிலே முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங்கும், தமிழர் தலைவர் வீரமணியும் கலந்து கொண்டார்கள். ஜெயில்சிங் பேசும்போது, "தமிழ்நாட்டு மக்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், கொடுத்து வைத்தவர்கள். ஏனென்றால் திறமைக்கும், வேகத்திற்கும், அன்புக்கும், அருளுக்கும் நல்ல நிர்வாகத் திறமைக்கும் பிரச்சினைகளை அணுகுவதற்கும் உரிய மகத்தான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தலைவர் காலத்தில் நீங்கள் வாழ்கின்றீர்கள். அந்த அருந்தலைவருடைய பெயர்தான் கலைஞர் கருணாநிதி என்பது. அவரிடம் இப்போது நான் ஒரு விண்ணப்பத்தை வைக்கின்றேன். இன்றைக்கு கருணாநிதியின் ஆட்சி டெல்லியிலே நடந்து கொண்டிருக்கிறது. தேசிய முன்னணியின் ஒரு அங்கம் கருணாநிதி. இந்த நேரத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அதை சட்டமாக ஏற்படுத்து வதற்கு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் தேசிய முன்னணியின் அங்கம் மட்டும் அல்ல. நீங்கள் இல்லாவிட்டால் தேசிய முன்னணி ஏது? எனவே தேசிய முன்னணியை உருவாக்கியவர் என்ற முறையில் விண்ணப்பிக்கிறேன். மண்டல் கமிஷன் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு முறையாக அறிவிக்கப்படும் நாளை நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது'' என்றெல்லாம் குறிப்பிட்டது இன்றைக்கும் ஏடுகளிலே உள்ளது.

மண்டல் கமிஷன் பரிந்துரைகள் மீதான ஆணை மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட அடுத்த வாரமே 21-8-1990 அன்று அதனைப் பாராட்டி சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தையும் முன் மொழிந்தவன் நான் தான்.

இடஒதுக்கீடு மசோதா சட்டப்பேரவையில் ஜெயலலிதாவினால் கொண்டுவரப்பட்டு நிறைவேறியதாகவும் - ஆனால் மாநிலங்களவையில் அந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றபோது - தி.மு.க. உறுப்பினர்கள் மூன்று பேர் ஓட்டுப்போடவில்லை என்றும் பங்கேற்கவில்லை என்றும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். அவரோடு தோழமை கொண்டுள்ள ஒரு கட்சியின் "பிரகஸ்பதி''யும், ஜெயலலிதாவை முந்திக் கொண்டு கோவையிலே செய்தியாளர்களிடம் அதையே தெரிவித்திருக்கிறார். இடஒதுக்கீட்டிற்கான தீர்மானம் 9-11-1993 அன்று ஜெயலலிதாவினால் கொண்டுவரப்பட்டது என்றும், 30-12-1993 அன்று சட்டமன்றத்தில் மசோதா ஜெயலலிதா அரசினால் நிறைவேற்றப்பட்டது என்றும் சொல்லியிருக்கிற அவர் யோக்கியராக இருந்தால், அந்த தீர்மானத்தை தி.மு.க. ஆதரித்ததா இல்லையா என்று சொல்லியிருக்க வேண்டும் அல்லவா? அதுபோலவே மாநிலங்களவையில் அந்தத் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, தி.மு.க.வை சேர்ந்த ஐந்து பேர் அந்த வாக்கெடுப்பில் ஆதரித்து வாக்களித்ததைச் சொல்லியிருக்க வேண்டுமல்லவா?

இடஒதுக்கீட்டுக்காக தமிழ்நாட்டின் அரசியல் சட்டத்திருத்தம் நிறைவேற வாக்களிப்போம் என்று தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் விடுதலைவிரும்பியும் கலந்து கொண்ட தேசிய முன்னணி - இடது சாரிக் கட்சிகள் கூட்டம் 11-8-1994 அன்று டெல்லியில் நடைபெற்றபோது முடிவெடுத்தது.

21-8-1994 அன்று நான் விடுத்த அறிக்கையில் மத்திய அரசு மேலும் காலம்தாழ்த்தினால், சமூகநீதிக்காக போராடுகிற அணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஏற்கனவே எடுத்துள்ள முடிவின்படி மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று குறிப்பிட்டேன்.

22-8-1994 அன்று மாநிலங்களவையில் தி.மு.க.வின் சார்பில் பேசிய விடுதலைவிரும்பி, பிரச்சினை தாமதப்படுத்தப்படுமானால் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என்று எங்கள் தலைவர் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான சட்டத்திருத்த மசோதா நடப்புக் கூட்டத் தொடரிலேயே கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் என்பதற்கு அரசு தரப்பில் திட்டவட்டமான உறுதிமொழி அளிக்க வேண்டுமென்றார். தமிழக அரசின் சட்டம் என்றால், அது அ.தி.மு.க. அரசு நிறைவேற்றிய சட்டமாயிற்றே என்றெல்லாம் நினைக்காமல் பிரச்சினையின் முக்கியத்துவத்தை கருதி குரல் கொடுத்தார். அவரது பேச்சிலே அ.தி.மு.க. உறுப்பினர் குறுக்கிட்டு, "மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாகக் கூறக்கூடாது'' என்றார்.

திமுக எம.பிக்கள் போகாதது ஏன்?

24-8-1994 அன்று தமிழக இடஒதுக்கீட்டுச் சட்டத்தை 9வது அட்டவணையில் சேர்ப்பதற்கான அரசியல் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் விவாதம் இன்றியே நிறைவேறியது. அதற்கு ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் விழுந்தன. எதிராக வாக்களித்த இரண்டு பேர் யார் தெரியுமா? சிமன்பாய் மேத்தா, சத்தீஸ் பிரதான் ஆகியோராகும். கலந்து கொண்டு வாக்களித்த தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்கள் எஸ்.விடுதலைவிரும்பி, மிசா ஆர்.கணேசன், பசும்பொன் தா. கிருட்டிணன், முகமது சகி, நாமக்கல் கே.கே.வீரப்பன் ஆகியோராகும். அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திண்டிவனம் வெங்கட்ராமன் மகன் திருமணம் அதே நாளில் என் தலைமையிலே நடைபெற்றதால், அவர் டெல்லிக்கு அன்று செல்லவில்லை.

அதைப்பற்றிக் கூட அந்தத் திருமண விழாவிலே பேசிய நான், அந்த மசோதா நிறைவேற ஒரு வாக்கு முக்கியம் என்ற நிலைமை இருந்தால், திருமணத்தை நாங்கள் நடத்திக் கொள்கிறோம் என்று வெங்கட்ராமனை டெல்லிக்கு அனுப்பியிருப்போம் என்று குறிப்பிட்டது இன்றைக்கும் ஏட்டில் உள்ளது. அதுபோலவே தனது உடல்நலக் குறைவு காரணமாக முரசொலி மாறன் டெல்லி செல்லவில்லை.

ஜெ.எஸ்.ராஜு தனது மகனின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சற்றுத் தாமதமாகச் சென்று கலந்துகொண்டிருக்கிறார். இதையெல்லாம் அப்படியே மறைத்து விட்டு தி.மு.க உறுப்பினர்கள் மூவர் கலந்து கொள்ளவில்லை என்று களங்கம் சுமத்த நினைப்பது ஊரை ஏமாற்றுகின்ற செயல் அல்லவா? மக்களவையிலே 26-8-1994 அன்று இந்தத் திருத்தமசோதா கொண்டுவரப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பே இல்லை. 348 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர்.

இறுதியாக ஒரு கேள்வி

இறுதியாக ஒரு கேள்வி. சமூகநீதியைக் காப்பதில் அ.தி.மு.க.விற்கு நிகர் யாருமில்லை என்று ஜெயலலிதா அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். 16-11-1993 அன்று தமிழகம் தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது என்றும், 26-11-1993 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது என்றும் கூறியிருக்கின்ற ஜெயலலிதா இரண்டுக்கும் இடையில் 22-11-1993 அன்று உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா அரசின் சார்பாக 69 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த மாட்டோம், 50 சதவிகிதத்தையே அமல்படுத்துகிறோம் என்று உறுதிமொழி கொடுக்கப்பட்டதா இல்லையா?

இடஒதுக்கீட்டில் சாதி அடிப்படை கூடாது என்றும், பொருளாதார அளவுகோலே வேண்டும் என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிற்கு ஜெயலலிதா பேட்டி கொடுத்தது உண்டா இல்லையா? அந்தப் பேட்டியில், "பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலும் சிலர், நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் இட ஒதுக்கீட்டுச் சலுகையைப் பெறுவது என்பது இடஒதுக்கீட்டுக் கொள்கையையே கேலிக் கூத்தாக்கி விடும். எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்குச் சலுகைகள் கிடைக்குமாறு செய்ய வேண்டும். அப்போதுதான் அதைச் சமூகநீதி என்று கூறலாம். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகிதம் என மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில் முன்னேறிய வகுப்பினரில் கூட பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு 5 அல்லது 10 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்வது தவறில்லை'' என்று கூறியது உண்டா? இல்லையா? இலங்கைப் பிரச்சினையில்தான் இரட்டை வேடம் போட்டீர்கள்; இடஒதுக்கீட்டிலுமா?

இறுதியாக ஜெயலலிதா தனது அறிக்கையை முடிக்கும்போது "ஊரார் உடைமைக்கு பேயாய் பறப்பதாக'' என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். சமூகநீதிக் கொள்கை ஊரார் உடைமை அல்ல. திராவிட இயக்கத்தின் கொள்கை. ஆனால் ஊரார் உடைமைக்குப் பேயாய் பறப்பவர்கள் யார் என்பதைப் பற்றி நான் விளக்க வேண்டுமா என்ன? அது ஊரார் அறிந்த ரகசியமாயிற்றே! பேய், பூதம், பிசாசு இந்த மூன்றுக்கும் சொல்லப்படும் இலக்கணத்தின் மொத்த உருவமே! மூடிடுக வாயை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல? என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி
» கோபாலபுரம் வீடு தவிர வேறு சொத்துக்களை வாங்கவில்லை : முதல்வர் கருணாநிதி
» எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டியிடம் கருணாநிதி
» கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லை: அமைச்சர் மீது கருணாநிதி காட்டம்
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum