ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்

Go down

பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Empty பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்

Post by ரபீக் Thu Jul 22, 2010 10:29 am

பிகார் சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி சட்டப் பேரவை உறுப்பினர்கள் 67 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மழைக் காலக் கூட்டத் தொடர் முழுமைக்கும் இவர்களை சஸ்பெண்ட் செய்வதாக சட்டப் பேரவைத் தலைவர் உதய் நாராயண் செüத்ரி அறிவித்தார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் 42 பேர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.

மத்திய தலைமை தணிக்கைக் குழு (சிஏஜி) அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டப் பேரவையில் இரண்டாம் நாளாக புதன்கிழமையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

சட்டப் பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தங்கிய உறுப்பினர்கள், புதன்கிழமை அலுவல் தொடங்கியதும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

செவ்வாய்க்கிழமை இரவு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 80 பேரும் சட்டப் பேரவையிலேயே தங்கியது குறிப்பிடத்தக்கது.

சட்டப் பேரவை மற்றும் சட்ட மேலவையில் எதிர்க்கட்சியினர் செவ்வாய்க்கிழமை ரகளையில் ஈடுபட்டனர். நாற்காலிகளை உடைத்தும், மைக்குகளை வீசியும் ரகளை செய்தனர்.

கர்நாடக மாநிலத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதைப் போலவே பிகாரிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

புதன்கிழமை காலையில் அலுவல் தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப் பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டனர்.

மத்திய தலைமை தணிக்கைக் குழு (சிஏஜி) அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மாநிலத்தில் நிதி நிர்வாகத்தில் முறைகேடு நிகழ்வதாக தணிக்கை அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

புதன்கிழமை பேரவை அலுவல் தொடங்கியதும் தர்னாவில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் மீண்டும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையின் அடிப்படையில் முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இவர்களை சமாதானப்படுத்த பேரவைத் தலைவர் முயன்றார். ஆனால் அவர்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

இதையடுத்து அவை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு விளைவிக்க முயற்சிக்கும் உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை பேரவை விவகாரங்களுக்கான அமைச்சர் பிரிஜேந்திர பிரசாத் யாதவ் கொண்டு வந்தார். இது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இது நிறைவேறியது.

சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் 11 பேர் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்தவர்கள். மார்க்சிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியிலிருந்து தலா ஓர் உறுப்பினரும் சுயேச்சை உறுப்பினர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

இவர்கள் அனைவரையும் அவைக் காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

செருப்பு வீச்சு: ரகளையில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றும் பணியில் அவைக் காவலர்கள் ஈடுபட்டனர்.

அப்போது பேரவைத் தலைவர் மீது செருப்பு வீசப்பட்டது. அது இருக்கைக்கு முன்னதாகவே விழுந்தது. இதனால் பேரவைத் தலைவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. செருப்பை வீசியவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.

அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் வெளியேற்ற உத்தரவு: இதையடுத்து தனது இருக்கைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் வெளியேற்றுமாறு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

இதனிடையே தங்களது போராட்டம் தொடரும் என்று சட்டப் பேரவை மற்றும் சட்ட மேலவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஊழல் நிறைந்த அரசு பதவியிலிருந்து வெளியேறும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் சட்டப் பேரவைத் தலைவர் ஷகீல் அகமது கான் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை இரவு தங்கிய உறுப்பினர்களுக்கு இரவு உணவு மற்றும் காலை சிற்றுண்டி உள்ளிட்டவை வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினர். இதிலிருந்தே முதல்வர் நிதீஷ் குமார் புத்தி பேதலித்து செயல்படுகிறார் என்பது புலனாகிறது. சிஏஜி அறிக்கையில் குறிப்பிட்டபடி அவர் ஊழல் புரிந்துள்ளது தெளிவாகியுள்ளது என்று ஷகீல் அகமது கான் குறிப்பிட்டார்.

ராஷ்ட்ரீய ஜனதா தள மேலவை உறுப்பினர் சஞ்சய் பிரசாத் மைக்கை பிடுங்கி வீசினார். இக்கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.சி.பாஸ்வான் காவலர்களால் வெளியேற்றப்பட்டபோது மயங்கி விழுந்தார். உடனே இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சட்ட மேலவையில்செவ்வாய்க்கிழமை ரகளையில் ஈடுபட்ட 14 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


காங்கிரஸ் பெண் மேலவை உறுப்பினர் ரகளை


சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் ஜோதி குமாரி ரகளையில் ஈடுபட்டார்.

மேலவை வளாகத்தில் இருந்த பூத் தொட்டிகளை தூக்கி காவலர்கள் மீது வீசினார். மீண்டும் வளாகத்துக்குள் நுழைய முயன்ற அவரை தடுத்ததற்காக ரகளை செய்தார் ஜோதி குமாரி. மன நலம் பாதிக்கப்பட்டவரைப் போல செயல்பட்ட அவரை பெண் காவலர்கள் இழுத்துச் சென்றனர்.




ரகளைக்கு லாலுவே காரணம் ஐக்கிய ஜனதாதளம் குற்றச்சாட்டு


பிகார் சட்டப் பேரவை மற்றும் மேலவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரகளை செய்து வருவதற்கு ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவே காரணம் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மாநில முதல்வர் நிதீஷ் குமார் அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் நோக்கில் அவர்கள் இத்தகைய ரகளையில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சிவானந்த் திவாரி கூறினார்.

பிகாரில் 15 ஆண்டுகளாக முதல்வராக இருந்த லாலு பிரசாத், மீண்டும் பதவியைக் கைப்பற்றுவதற்காக இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இதனால் முதல்வர் நிதீஷ் குமாரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கியவர் லாலு பிரசாத். ஊழலையும், அவரையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவரது ஆட்சிக் காலத்தில் மாநிலத்தில் லஞ்சம், ஊழல் மலிந்து கிடந்தது. கால்நடைத் தீவன ஊழல் ஒன்றே அவரது ஆட்சிக் கால ஊழலுக்கு முக்கிய சாட்சி. கால்நடைத் தீவனங்கள் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட லாரிகளின் பதிவு எண்கள் அனைத்தும் ஸ்கூட்டர் பதிவு எண்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

ஆனால் தற்போது தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் நிதி முறைகேடு நடந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை. இன்னும் திறம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மட்டுமே பரிந்துரைத்துள்ளது என்றும் திவாரி கூறினார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 6 தே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்: சட்டசபை செயலருக்கு நோட்டீஸ்
» விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்
» நெல்லை கோர்ட்டில் கொலைவழக்கில் 2 டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பி.க்கள் சாட்சியம்
» பிகாரில் மதுவிலக்கு ரத்து: பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு
» பிகாரில் முஸ்லிமுக்கு துணை முதல்வர் பதவி: பாஸ்வான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum