புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_m10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10 
32 Posts - 82%
heezulia
பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_m10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10 
5 Posts - 13%
viyasan
பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_m10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_m10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_m10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10 
209 Posts - 41%
heezulia
பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_m10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_m10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_m10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10 
21 Posts - 4%
prajai
பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_m10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_m10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_m10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_m10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_m10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_m10பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிகாரில் 67 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 22 Jul 2010 - 11:59

பிகார் சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி சட்டப் பேரவை உறுப்பினர்கள் 67 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மழைக் காலக் கூட்டத் தொடர் முழுமைக்கும் இவர்களை சஸ்பெண்ட் செய்வதாக சட்டப் பேரவைத் தலைவர் உதய் நாராயண் செüத்ரி அறிவித்தார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் 42 பேர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.

மத்திய தலைமை தணிக்கைக் குழு (சிஏஜி) அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டப் பேரவையில் இரண்டாம் நாளாக புதன்கிழமையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

சட்டப் பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தங்கிய உறுப்பினர்கள், புதன்கிழமை அலுவல் தொடங்கியதும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

செவ்வாய்க்கிழமை இரவு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 80 பேரும் சட்டப் பேரவையிலேயே தங்கியது குறிப்பிடத்தக்கது.

சட்டப் பேரவை மற்றும் சட்ட மேலவையில் எதிர்க்கட்சியினர் செவ்வாய்க்கிழமை ரகளையில் ஈடுபட்டனர். நாற்காலிகளை உடைத்தும், மைக்குகளை வீசியும் ரகளை செய்தனர்.

கர்நாடக மாநிலத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதைப் போலவே பிகாரிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

புதன்கிழமை காலையில் அலுவல் தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப் பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டனர்.

மத்திய தலைமை தணிக்கைக் குழு (சிஏஜி) அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மாநிலத்தில் நிதி நிர்வாகத்தில் முறைகேடு நிகழ்வதாக தணிக்கை அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

புதன்கிழமை பேரவை அலுவல் தொடங்கியதும் தர்னாவில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் மீண்டும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையின் அடிப்படையில் முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இவர்களை சமாதானப்படுத்த பேரவைத் தலைவர் முயன்றார். ஆனால் அவர்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

இதையடுத்து அவை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு விளைவிக்க முயற்சிக்கும் உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை பேரவை விவகாரங்களுக்கான அமைச்சர் பிரிஜேந்திர பிரசாத் யாதவ் கொண்டு வந்தார். இது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இது நிறைவேறியது.

சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் 11 பேர் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்தவர்கள். மார்க்சிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியிலிருந்து தலா ஓர் உறுப்பினரும் சுயேச்சை உறுப்பினர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

இவர்கள் அனைவரையும் அவைக் காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

செருப்பு வீச்சு: ரகளையில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றும் பணியில் அவைக் காவலர்கள் ஈடுபட்டனர்.

அப்போது பேரவைத் தலைவர் மீது செருப்பு வீசப்பட்டது. அது இருக்கைக்கு முன்னதாகவே விழுந்தது. இதனால் பேரவைத் தலைவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. செருப்பை வீசியவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.

அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் வெளியேற்ற உத்தரவு: இதையடுத்து தனது இருக்கைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் வெளியேற்றுமாறு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

இதனிடையே தங்களது போராட்டம் தொடரும் என்று சட்டப் பேரவை மற்றும் சட்ட மேலவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஊழல் நிறைந்த அரசு பதவியிலிருந்து வெளியேறும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் சட்டப் பேரவைத் தலைவர் ஷகீல் அகமது கான் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை இரவு தங்கிய உறுப்பினர்களுக்கு இரவு உணவு மற்றும் காலை சிற்றுண்டி உள்ளிட்டவை வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினர். இதிலிருந்தே முதல்வர் நிதீஷ் குமார் புத்தி பேதலித்து செயல்படுகிறார் என்பது புலனாகிறது. சிஏஜி அறிக்கையில் குறிப்பிட்டபடி அவர் ஊழல் புரிந்துள்ளது தெளிவாகியுள்ளது என்று ஷகீல் அகமது கான் குறிப்பிட்டார்.

ராஷ்ட்ரீய ஜனதா தள மேலவை உறுப்பினர் சஞ்சய் பிரசாத் மைக்கை பிடுங்கி வீசினார். இக்கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.சி.பாஸ்வான் காவலர்களால் வெளியேற்றப்பட்டபோது மயங்கி விழுந்தார். உடனே இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சட்ட மேலவையில்செவ்வாய்க்கிழமை ரகளையில் ஈடுபட்ட 14 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


காங்கிரஸ் பெண் மேலவை உறுப்பினர் ரகளை


சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் ஜோதி குமாரி ரகளையில் ஈடுபட்டார்.

மேலவை வளாகத்தில் இருந்த பூத் தொட்டிகளை தூக்கி காவலர்கள் மீது வீசினார். மீண்டும் வளாகத்துக்குள் நுழைய முயன்ற அவரை தடுத்ததற்காக ரகளை செய்தார் ஜோதி குமாரி. மன நலம் பாதிக்கப்பட்டவரைப் போல செயல்பட்ட அவரை பெண் காவலர்கள் இழுத்துச் சென்றனர்.




ரகளைக்கு லாலுவே காரணம் ஐக்கிய ஜனதாதளம் குற்றச்சாட்டு


பிகார் சட்டப் பேரவை மற்றும் மேலவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரகளை செய்து வருவதற்கு ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவே காரணம் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மாநில முதல்வர் நிதீஷ் குமார் அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் நோக்கில் அவர்கள் இத்தகைய ரகளையில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சிவானந்த் திவாரி கூறினார்.

பிகாரில் 15 ஆண்டுகளாக முதல்வராக இருந்த லாலு பிரசாத், மீண்டும் பதவியைக் கைப்பற்றுவதற்காக இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இதனால் முதல்வர் நிதீஷ் குமாரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கியவர் லாலு பிரசாத். ஊழலையும், அவரையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவரது ஆட்சிக் காலத்தில் மாநிலத்தில் லஞ்சம், ஊழல் மலிந்து கிடந்தது. கால்நடைத் தீவன ஊழல் ஒன்றே அவரது ஆட்சிக் கால ஊழலுக்கு முக்கிய சாட்சி. கால்நடைத் தீவனங்கள் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட லாரிகளின் பதிவு எண்கள் அனைத்தும் ஸ்கூட்டர் பதிவு எண்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

ஆனால் தற்போது தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் நிதி முறைகேடு நடந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை. இன்னும் திறம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மட்டுமே பரிந்துரைத்துள்ளது என்றும் திவாரி கூறினார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக