புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_m10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10 
40 Posts - 63%
heezulia
அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_m10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_m10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_m10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10 
2 Posts - 3%
viyasan
அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_m10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_m10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10 
232 Posts - 42%
heezulia
அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_m10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_m10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_m10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10 
21 Posts - 4%
prajai
அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_m10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_m10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_m10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_m10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_m10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_m10அவள் நிலமானாள்; அவன் மழையானான்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் நிலமானாள்; அவன் மழையானான்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 18, 2009 6:54 pm

கலைஞர். மு. கருணாநிதி

*"யாயும் ஞாயும் யாரோ கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்!
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே"

(குறுந்தொகை:பாடல்:40 பாடியவர்:செம்புலப் பெயனீரார்)


பொருள் விளக்கம்:
யாய்=தாய். ஞாய்=தாய். எந்தையும் நுந்தையும்= என் தந்தையும் உன் தந்தையும்.
செம்புலம்=செம்மண் நிலம். பெயல்நீர்=மழை


"நட்சத்திரங்கள் முகம்பார்த்து மினுக்கிக் கொள்
நாளெல்லாம் தேடித் தொங்கவிட்ட நிலவென்னும் கண்ணாடியில்,
நம்மிருவர் முகம் பார்க்க முடியாதெனினும்; கண்ணே!
நான் உன் முகத்தை நிலவாகவே பார்க்கின்றேன்!
மெய்யாகவே நிலவைப்போல் இருக்கவேண்டுமென்றுதான் - நீ
மைகொண்டு கண்ணெழுதி, கன்னத்தில் புள்ளியொன்றும் கருநிறத்தில் வைத்துக் கொண்டாய்!
தேங்காய்க் கீற்று போன்ற பிறை காட்டு எனக் கேட்டால்
பாங்காய் உன் முகத்தை என் முகத்தில் பதித்துப் பைங்கிளியே!
நேர்வகுடுக்குக் கீழுள்ள உன் நெற்றியினைக் காட்டிடுவாய்!
நேரிழையே! நீ எனக்கு விளக்க வேண்டும்;
நிலவைக் கறுப்பாக்கும் 'அமாவாசை' ஒன்று வருமே!
நீ அதற்கு விதிவிலக்கா? என நான் கேட்டபோது
என் மடிமீது முகமுழுதும் புதைத்துக்கொண்டு,
உன் கருங்கூந்தல் மட்டுமே நான் காணப் படுத்துக் கொண்டாய்!
அதனை நான் அமாவாசையென எண்ணிக்கொள்ள வேண்டுமென;
அழகோவியமே! நீ உன் விரல் கொண்டு சுட்டிக்காட்ட,
கார்குழலே நான் கோதிக்கொண்டே
கண்மணியே உன் உச்சிமீது முத்தமீந்தேன்!
பாம்பு; நிலவை விழுங்குகின்ற பழம் புராணக் கதையொன்றை
ஆம்பற் கொடியிடையாளே! நம்புவதற்கில்லை யென்றேன்; நீயோ,
மறுத்துரைத்து வாதிட்டு "இதோ, இந்த நிலவின் கன்னத்தை
அறுத்தெடுக்காமல் வாய்க்குள் விழுங்குகின்ற உமது செயலுக்கு என்ன பெயராம்?" எனக்கேட்டு,
"பழம் புராணப் பாம்பு விழுங்கும் கதை பொய் எனினும்;
பழம் போல எனை விழுங்கி விழுங்கி விடுவிக்கும் இந்தப் பள்ளியறைக் கதை மெய்தானே" என்றாய்!
உன் கவிதை நடைப் பேச்சில் மயக்கமுற்று
ஒரு நூறு முத்தங்கள் உடனே தந்தேன்! நீயும் திருப்பித் தந்தாய்!
அதையெல்லாம் மறந்துவிட்டு; உனைப் பிரிந்து
அயலூரில் நெடுநாள் தங்கிவிட்டேன் என்று
ஆருயிரே! அகம் நொந்து நீ ஊடுவது நியாயம்தானா?
ஊடல் புரிவதிலும் ஓர் அழகைத்தான் காணுகின்றேன்.
பாடல் பிறப்பதற்கு இசை கூட்டல் வேண்டுமன்றோ! அதுபோலக்

கூடல் விழா தொடங்குவதற்கு,
ஊடல்தான் கொடியேற்றி வைக்க வேண்டும்!

அதனாலே உன் ஊடல் கண்டு உவகை மிகக் கொள்கின்றேன்!
ஆனாலும் அளவுக்கு மீறிவிட்டால் அமுதமும் நஞ்சாகிவிடுமன்றோ!
தொட்டால் நெருங்காமல் நீ எட்டி விலகும்போது
தொலைவிலிருந்து உன் முழு எழிலைப் பருகுகின்றேன்!
மொட்டாய்க் குவிந்து நிற்கும் மார்பகத்து ஆடையினை நான் நகர்த்த - அது
கட்டோடு பிடிக்காமல் இழுத்துப் போர்த்தி - வாய்
மொழியால் "விடுங்கள்" என்று நீ வெடுக்கென்றுரைத்தாலும் - உன்
விழி மட்டும் ரகசியமாய் ஓர் உடன்பாட்டுக்கு வருதல் கண்டு; இதயம்,
பொழிகின்ற இன்ப மழைச் சுகத்தை நான் என்னென்று சொல்வேன்!
வழிகின்ற தேனருவிப் பக்கம் போவோம் வா! - வீணாய்க்
கழிகின்றதே பொழுது என; நம் வரவுக்காகக்
காத்திருக்கும் மலர் மெத்தையினைப் பார்!
கோத்திருக்கும் முத்தாரப் பல்வரிசைப் பேழையின்
மூடியினைப் புன்சிரிப்புத் திறவுகோலால் திறந்துவிட்டு
ஊடியது போதுமென என் தோளில் ஊஞ்சல் ஆடிடுக!
வாடியதோ என வண்ணத் தமிழ்க்கிளியின் நெஞ்சம்?
தேடியதோ? தேடிப்பின்னர் திகைத்ததோ? ஒருவேளைத்
திரும்ப வருவேனோ, மாட்டேனோ என்று
இரும்படிக்கும் உலைவீழ்ந்த புழுவாகத் துடித்ததோ?"

இவ்வாறு
பிரிந்திருந்த காதலனின் வரவு பார்த்து - மனம்
வருந்தி வீழ்ந்த பெண்மான் ஒன்று - அவன்
வந்தபின்னும் ஊடலுற்றுச் சினந்தபோது, அவளைத் தன்
வசமாக்க வாரியிறைத்திட்டான் வர்ணனைப் பூமாரி!

அவளோ;

இன்னும் ஏனவன் பேசிக்கொண்டு நிற்கின்றான் -
இழுத்தணைத்துப் பசும்புல் தரையில் படுக்கவைத்து
கன்னம் சிவக்க, கனியுதடு மெல்ல வீங்க - முன்போல்
கணக்கென்ன நூறு? முன்னூறு நானூறு முத்தங்கள் கொடுத்திட்டால்
கசக்குதென்று கழுத்தைப் பிடித்துத் தள்ளியா விடுவேன்?
கட்டியணைக்கவே அவன் கரம் தாவாதோ தன்மீதென்று,
தணலைப் போல் கொதிக்கின்ற காதல்தனை
தன் நெஞ்சுக்குள் அடைத்து வைத்துத் தத்தளித்தாள்!

"அன்றென்னை அமளியிற் கிடத்தி
அன்றிலடி நாமிருவர் அரைநொடியும்
பிரிவதில்லை! ஆணையடி அன்பே என்று
விரிவுரைகள் ஆற்றினீரே - என்ன பயன்?
விடிந்தால் ஒரு திங்கள் முடிந்துவிடும் - இவள்
மடிந்தால் மடியட்டுமென்றுதானே கவலையற்று
மறுநாளே வருவதாய்ச் சொன்ன சொல்லை மறந்து போனீர்!
மறப்பது ஆடவர்க்கு இயற்கையெனக் கூறிவிடும்! நானும்; உயிர்
துறப்பதும் மகளிர்க்கு எளிதேயென்று காட்டுகின்றேன்."

இவ்விதம்

சொற்களுக்குச் சோக இசை சேர்த்து - அந்தச்
சொர்ணத்தின் வார்ப்படம் சுளையிதழ்கள் மூடுமுன்பே,
ஓடிவந்து கட்டிக் கொண்டான்! "நான்
தேடிநின்ற தெள்ளமுதே!" என அவளும் ஒட்டிக் கொண்டாள்!
வானூர்ந்த நிலவழகி; முகில் கொண்டு முகம் மறைத்தாள் வெட்கத்தாலே!
மானொன்று நாணமுற்று புதர் மறைவில் ஒதுங்கிற்றாங்கே!
கிள்ளைகளும், புறாக்களும் இணை இணையாய்க்
கிளைகளில் இருந்தெழுந்து "சிறிதேனும் இந்தப்
பிள்ளைகட்கு வெட்கமிலையோ! இத்தனைபேர் நம் மத்தியிலே
வெள்ளை மலர்ப் படுக்கையிலே காம விளையாட்டா? žச்ž" எனக்கூறிப் பறந்தனவே!

ஊடலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு - இன்பக்
கூடல் முடித்து எழுந்தபோது - "இனியொருமுறை
'வாடல்' என்பது வாழ்க்கையில் வாராதே" என்று
ஆடல் தீர்ந்து தோகை மூடிய மயில் கேட்டாள்!

அவன், அவளைப் பார்த்து:

*"உயிரே! ஒன்று கேள்! உன்னையும் என்னையும்
உலகில் பிரிக்கின்ற சக்தி எதுவுமில்லை!
உனைப்பெற்ற தாய் யார் என்றோ
எனையீன்ற தா யார் என்றோ
உன் தந்தைக்கும் என் தந்தைக்கும்
உறவுமுறை என்னவென்றோ
இருவர் நாம் எவ்வழியில் வந்தோர் என்றோ
அறிந்திட விரும்பாமலே அறிமுகமானோம்!
எங்கிருந்தோ வந்தாள் என உன்னை நானும்,
எங்கிருந்தோ வந்தான் என என்னை நீயும்
ஏற்றுக்கொண்டோம்! இதயத்தில்;
ஏற்றிக்கொண்டோம்! இனியவளே!
செம்மண் நிலத்தில் மழை பொழிந்தால் - அந்த
நிலத்தொடு கலந்த நீரில்
சிவப்பு வண்ணத்தைப் பிரிக்க முடியாதன்றோ!
அஃதேபோல் நமது
நெஞ்சங்கள் இரண்டும் இணைந்துவிட்டன!
எனவே பிரிவு எனும் நினைப்பை
இக்கணமே அகற்றிவிடு!"

இந்தக் குறுந்தொகைப் பாடலை
இளங்குமரன் எளிமையாக்கிச் சொன்னவுடன்
மங்கைநல்லாள், மீண்டும் நிலமானாள் - அவன்
மழையானான்!

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 7:00 pm

சூப்பர்

அருமையிலும் அருமை அன்பு மலர்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat Jul 18, 2009 7:03 pm

இருவர் என்ற பாடத்தின் வழி தான் எனக்கு இப்பாடல் தெரியும்...

நறுமுகையே....என்ற பாடல்...இந்த 5 வரிகளில் இவ்வளவி அர்தம்...great!!11

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 7:05 pm

என்னவோ பேசிக்குறாங்க ஆனா என்னன்னு தான் புரியல அநியாயம்

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 7:06 pm

Kraja29 wrote:என்னவோ பேசிக்குறாங்க ஆனா என்னன்னு தான் புரியல அநியாயம்

புரிந்தவர்க்கு கவிதை புரியாதவர்களுக்கு வெறும் எழுத்து :P

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 7:07 pm

எனக்கு தெரிந்த கவிதை , குணா படத்தில் கமல் சொன்னது தான்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat Jul 18, 2009 7:08 pm

சாரி படம்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat Jul 18, 2009 7:13 pm

Kraja29 wrote:எனக்கு தெரிந்த கவிதை , குணா படத்தில் கமல் சொன்னது தான்

அண்ணா..இந்த வரிகள் இருவர் என்ற படத்தில் ஒரு பாடலில் வரும்..

நறுமுகையே...நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்...

அருமையான பாடல்...கண்டிப்பாக நீங்கள் கேட்டுபிற்கள்..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 7:15 pm

மிக நல்ல பாடல்,
தெரியுமம்மா சும்மா நகைச்சுவைக்காக தான் அப்படி சொன்னேன் ,

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Jul 18, 2009 7:15 pm




பாடகன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக