ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றில் பறக்கவிடப்படும் கட்டட விதிமுறைகள்!

Go down

காற்றில் பறக்கவிடப்படும் கட்டட விதிமுறைகள்! Empty காற்றில் பறக்கவிடப்படும் கட்டட விதிமுறைகள்!

Post by ganie006 Tue Jul 20, 2010 10:02 am

கோவை : பெரு நகரங்களைத் தொடர்ந்து கட்டட விதிமீறல்கள் என்பது பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளுக்கும் வந்துவிட்டது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே கட்டட விதிமுறைகளை சீர்தூக்கிப் பார்த்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், மற்ற நேரங்களில் அதைப் பற்றிக் கண்டுகொள்வதில்லை.
அதிகார வரம்புக்கு மீறி உள்ளாட்சி அமைப்புகள் கட்டட அனுமதி வழங்கி வந்த நிலையில், தற்போது கட்டட அனுமதி அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதாக நகர்ப்புற
வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. இது எத்தகைய பலனை அளிக்கப் போகிறது என்று பொதுநல அமைப்புகள் கேள்வி எழுப்புகின்றன.
உள்ளூர் திட்டக் குழுமத்தைச் சார்ந்த பகுதிகளில் 2 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேற்பட்ட அடுக்குமாடிக் கட்டடங்கள் உள்ளூர் திட்டக் குழுமத்திடம் அனுமதி
பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாத கட்டடங்களை இடித்து அகற்றுவதற்கு வழிவகைகள் உண்டு.
ஆனால், அரசின் விதிமுறைகளில் இருந்து மீறுவதற்காக பல்வேறு முறைகேடுகளைச் செய்து கட்டட அனுமதி பெற்று விடுகின்றனர்.
மாநகரப் பகுதிகளில் இருக்கும் அடுக்குமாடிக் கட்டடங்கள், வணிக வளாகங்கள் விதிமீறல்கள் தொடர்ந்து வந்த நிலையில், தற்போது புறநகரப் பகுதிகளிலும் கட்டட விதிமீறல்கள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக கோவையையொட்டி வடவள்ளி பேரூராட்சி, குறிச்சி மூன்றாம் நிலை நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்படும் வணிக வளாகங்களில் விதிமீறல்கள் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
நகரின் மக்கள் தொகை அதிகரித்து வரும் சூழலில், குடியிருப்புக்காக மக்கள் தற்போது புறநகரப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். கோவை மாநகரைச் சுற்றிலும் சுமார் 20 கிமீ சுற்றளவுக்கு உள்பட்ட உள்ளாட்சிகளில் கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும்போது மக்கள் தொகை இருமடங்கு அதிகரித்துள்ளது. நகரின் நிலமதிப்பு உயர்ந்துவிட்ட நிலையில் வீடுகள் வாங்குவோர் புறநகரப் பகுதிகளை நோக்கிச் செல்லத் துவங்கிவிட்டனர். இதனால் புறநகரப் பகுதிகளில் குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் அதிகரித்துவருகின்றன. கட்டட விதிமீறல்களுக்கு இதுவே அடிப்படைக் காரணமாக இருக்கிறது.
இதுவரை பேரூராட்சிகளில் 1000 சதுர மீட்டருக்கு மேற்பட்ட வணிகக் கட்டடங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது என விதிமுறை இருந்தது. இருப்பினும் 10 ஆயிரம் சதுர அடி வரை உள்ள ஒரே கட்டடத்துக்கு பேரூராட்சிகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டடங்களை ஆயிரம், ஆயிரம் சதுர அடிகளாகப் பிரித்து அனுமதி அளிக்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது.
இதனால் மாநகரப் பகுதிகள் மட்டுமின்றி பேரூராட்சி, ஊராட்சிகளிலும் கட்டட விதிமீறில்கள் அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு
பிரச்னைகளுக்குக் காரணமாக அமைகிறது. குறிப்பாக, வணிக வளாகங்கள் எதிலும் வாகன நிறுத்தும் இடங்கள் ஒதுக்கப்படுவதில்லை. இந்த விதிமீறல்களால் நகரப் பகுதிகள் பெரும் நெரிசலைச் சந்தித்து வருகின்றன. அடுத்து 10 ஆண்டுகளில் புறநகர்ப் பகுதிகளிலும் வளர்ச்சியை அடையக்கூடிய சூழலில் அங்கும் நெரிசல் என்பது தவிர்க்க முடியாததாகி விடும்.
"கட்டட விதிமீறல்களைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும். அதைத் தவிர்த்து கட்டட அனுமதிக்கான அதிகார வரம்பை உயர்த்துவதில் முழுமையான பலன்
கிடைக்கப் போவதில்லை' என்கிறார் கோயமுத்தூர் கன்ஸ்யூமர் காஸ் நுகர்வோர் அமைப்பின் செயலர் கே.கதிர்மதியோன்.
கோவையையொட்டி பேரூராட்சிகளால் அனுமதி அளிக்கப்பட்ட பெரும்பாலான வணிகக் கட்டடங்களில் விதிமீறல்கள் இருக்கின்றன. எதிலும் வாகன நிறுத்தும் இடங்கள் கிடையாது. உதாரணமாக வடவள்ளி பேரூராட்சிப் பகுதியில் உள்ள வணிகக் கட்டடங்கள், பேரூராட்சி வரைமுறைக்கு மேற்பட்ட பரப்பில் கட்டப்பட்டிருந்தாலும் அவை பேரூராட்சியால் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. நகரங்களையொட்டிய பேரூராட்சிகளில் இதுபோன்ற விதிமீறல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்றார்.
ஏற்கெனவே அதிகார வரம்புகளைக் கணக்கில் கொள்ளாமல் கட்டட அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அதிகார வரம்பை அதாவது, 2 ஆயிரம் சதுர அடிவரை
அந்தந்த உள்ளாட்சிகளிலேயே அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பினால் பயன் ஒன்றும் ஏற்படப்போவதில்லை. கட்டட விதிமீறல்கள் குறித்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்தாவிட்டால், போக்குவரத்து நெரிசல், விதிமீறிய கட்டடங்களால் ஏற்படும் அசம்பாவிதங்கள் போன்றவற்றைத் தவிர்க்க முடியாததாகிவிடும். அரசு இதில் கவனம் செலுத்துவது அவசியம்.
ganie006
ganie006
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum