ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பெக்ட்ரம் ஊழல், தா.கிருட்டிணன் கொலை வழக்கு பற்றி கருணாநிதி வாய் திறக்கவில்லை: ஜெயலலிதா

2 posters

Go down

ஸ்பெக்ட்ரம் ஊழல், தா.கிருட்டிணன் கொலை வழக்கு பற்றி கருணாநிதி வாய் திறக்கவில்லை: ஜெயலலிதா Empty ஸ்பெக்ட்ரம் ஊழல், தா.கிருட்டிணன் கொலை வழக்கு பற்றி கருணாநிதி வாய் திறக்கவில்லை: ஜெயலலிதா

Post by ரபீக் Mon Jul 19, 2010 9:52 am

மணல் கொள்ளை, ஸ்பெக்ட்ரம் ஊழல், ரேஷன் பொருட்கள் கடத்தல், தா.கிருட்டிணன் கொலை வழக்கு ஆகியவை குறித்தும் கருணாநிதி வாய் திறக்கவில்லை என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. அரசை, "மைனாரிட்டி தி.மு.க. அரசு" என்று நான் வர்ணிப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார் கருணாநிதி. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், மொத்தம் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 118 உறுப்பினர்களை பெற்றுள்ள கட்சி தான் ஆட்சி அமைக்க முடியும். 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாததன் காரணமாக, காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளின் ஆதரவுடன் தி.மு.க. ஆட்சி அமைத்தது.

தற்போது காங்கிரஸ் கட்சி மட்டுமே தி.மு.க-விற்கு ஆதரவு அளித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு தி.மு.க. ஆட்சி அமைத்திருந்தால் அதைக் கூட்டணி ஆட்சி என்று சொல்லலாம். அதை செய்யவில்லை. வெறும் 100 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு ஆட்சியை நடத்தும் தி.மு.க-வை "மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி'' என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்தபடியாக, எனது ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டதையும், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு வளர்ச்சி பெற்று இருக்கிறது என்பதை குறிப்பிட முனைந்திருக்கிறார். ஆனால், இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை வைத்து தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துவிட்டது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

உதாரணமாக, 1986-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற 110 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்திற்கு 1,929 கோடி ரூபாய் செலவாகும் என தி.மு.க. அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நிறைவேறுகிறதோ, இல்லையோ, இந்தத் திட்டத்திற்கான மதிப்பீடு இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு முக்கியக் காரணம் விலைவாசி உயர்வு தான் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இது மட்டுமல்லாமல், அரசின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே வருவதும், அதனால், வருவாய்க்கு ஏற்ப நிதிஒதுக்கீடு அதிகரிக்கப்படுவதும் நடைமுறையில் கடைபிடிக்கப்படும் முறைதான்.

காவல் துறைக்கு எனது ஆட்சிக் காலத்தில் 1,346 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், தற்போது 2,855 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம் தற்போது அமளிக்காடாக மாறிவிட்டதை பற்றி மறுக்கவில்லை. இதில் இருந்து தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

வேளாண் உற்பத்தி குறித்து மிகப் பெரிய புள்ளி விவரத்தை அளித்துள்ளார். சாதாரணமாக 3 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நடக்கும் குறுவை சாகுபடி இந்த ஆண்டு வெறும் 53 ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரப்பில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு இருப்பதாகவும், குறிப்பாக காவேரி டெல்டா பகுதிகளில் வெறும் 14 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு இருப்பதாகவும் வந்திருக்கும் புள்ளி விவரத்தை வசதியாக மறைத்து விட்டார்.

நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதும், புதிய கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் உருவாக்கப்படுவதும் வழக்கமாக எல்லா ஆட்சிக் காலத்திலும் நடைமுறையில் இருந்து வரும் ஒன்று தான். இதையெல்லாம் சாதனையாக குறிப்பிடுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

காவிரி நீர்ப் பங்கீடு குறித்து நடுவர் மன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பினை 25-6-1991 அன்று வழங்கியது. நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பினை எதிர்த்து கர்நாடக அரசு ஓர் அவசரச் சட்டத்தை இயற்றியது. கர்நாடக அரசின் அவசரச் சட்டத்தை முறியடிக்க எனது ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக, அந்தச் சட்டம் செல்லாது என 22-11-1991 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு 10-12-1991 அன்று மத்திய அரசிதழில் எனது முயற்சியால் வெளியிடப்பட்டது.

ஆனால், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007 பிப்ரவரியில் வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இறுதித் தீர்ப்பினை அமல்படுத்த ஒரு துரும்பைக்கூட அவர் கிள்ளிப் போடவில்லை.

இதே போன்று, விஷம் போல் ஏறும் விலைவாசி, கடுமையான மின்சார தட்டுப்பாடு, குடிநீர்த் தட்டுப்பாடு, காலாவதி உணவுப் பொருட்கள் விற்பனை, போலி மருந்து விநியோகம், உர மானியக் குறைப்பு, நூல் விலை உயர்வு, உற்பத்தி குறைவு, வேலையில்லாத் திண்டாட்டம், மணல் கொள்ளை, ஸ்பெக்ட்ரம் ஊழல், ரேஷன் பொருட்கள் கடத்தல், தா.கிருட்டிணன் கொலை வழக்கு ஆகியவை குறித்தும் அவர் வாய் திறக்கவில்லை.

இதில் இருந்து தி.மு.க. அரசின் மீதான என்னுடைய குற்றச்சாட்டுக்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் ஊழல், தா.கிருட்டிணன் கொலை வழக்கு பற்றி கருணாநிதி வாய் திறக்கவில்லை: ஜெயலலிதா Empty Re: ஸ்பெக்ட்ரம் ஊழல், தா.கிருட்டிணன் கொலை வழக்கு பற்றி கருணாநிதி வாய் திறக்கவில்லை: ஜெயலலிதா

Post by kalaimoon70 Mon Jul 19, 2010 10:41 am

தற்போது காங்கிரஸ் கட்சி மட்டுமே தி.மு.க-விற்கு ஆதரவு அளித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு தி.மு.க. ஆட்சி அமைத்திருந்தால் அதைக் கூட்டணி ஆட்சி என்று சொல்லலாம். அதை செய்யவில்லை. வெறும் 100 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு ஆட்சியை நடத்தும் தி.மு.க-வை "மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி'' என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது பற்றி காங்கிரசு தானே சொல்லணும் ..ஏன் இவரு காலம் கடந்து இன்னும் சொல்லிவருகிறார் ?ஆட்சியும் முடிய போகுது

நன்றி தோழரே


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு... இதுவரை...
» ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு-31ம் தேதி ராசா மீது குற்றப்பத்திரிக்கை
» தேர்தல் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு காரணமல்ல : கருணாநிதி பேட்டி
» 2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற பெயரில் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் திரைப்படம் ஆகிறது
» ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum