ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவளப் பாறைகள் மழைக்காடுகளா? : Coral Reef

4 posters

Go down

பவளப் பாறைகள் மழைக்காடுகளா? : Coral Reef Empty பவளப் பாறைகள் மழைக்காடுகளா? : Coral Reef

Post by ganie006 Mon Jul 19, 2010 8:26 am

இந்த பவளப் பாறைகளை (Coral Reefs) நம்மில் நிறைய பேர் அதன் இயற்கையான வாழ்வுப் பகுதிக்கு சென்று பார்த்திருக்க வாய்ப்பில்லை என்னையும் சேர்த்துத்தான். ஏனெனில், இவைகள் கடலுனுள் வாழ்கின்றன. பெரும்பாழும் இவைகள் வசிக்கும் பகுதி பூமத்திய ரோகைக்கு கீழே உள்ள வெப்ப நாட்டு கடல் பகுதிகளில். அதிகமாக சொல்லப் போனால் பசிபிக் மகா சமுத்திரத்தில் என்று கூறலாம். நம்மூரில், அந்தமான் தீவுகளிலும், லக்சத் தீவுகளை ஓட்டிய கடல் பகுதிகளிலும் காணலாம்.

அய்யோ! இவன் சொந்தரவு தாங்கலையே. போட்டுக் கொல்லப் போறனேன்னு, அழுக ஆரம்பிச்சுட்டீங்களா, மக்களே! இவனுங்கள பத்தி நாம எல்லோரும் கண்டிப்பாக தெரிஞ்சுக்கணும். நான் இங்க, தேவையில்லாத விசயத்தை எடுத்திட்டு வாரது இல்லைன்னு ஒரு மிகப் பெரிய சபதமே எடுத்துருக்கிறேன். அப்படி இருக்கும் பொழுது, இந்த பவளப் பாறைகளை பத்தி தெரிஞ்சுக்கிறது ரொம்ப முக்கியமா படுது எனக்கு.

அக்குவாரியங்களில் (Aquariuam) பார்த்திருக்கலாம். இவைகளுக்கெனவே, அங்கு தனி காட்சித் தொட்டிகள் அமைத்திருப்பார்கள். ஒரு முறைப் பார்த்தால் நம் கண்களை விட்டு அகலாமல் இருக்கக் கூடிய பல வண்ன நிறங்களில் பாறையை ஒத்த அமைப்புடன் பல வடிவங்களில் காணலாம் இவைகளை.

அத்தோட, இந்தப் பவளப் பாறைகள் உண்மையிலேயே ஒரு பிராணியா, இல்லை தாவரமா இல்லை அதுவுமில்லை இதுவுமில்லை பல தாதுப் பொருட்களாலான மட்டியா என்று கூட எண்ணத் தோண்டும். அப்படி நம் கண்களையே நம்ப முடியாத அளவிற்கு கொள்ளை அழகுடனும், செயற்கைத்தனமாக செய்து வைக்கப் பட்டதைப் போன்ற பிரமையையும் ஏற்படுத்தி விடும்.

சரி இவைகள் தான் என்ன? இவைகள் ஒரு பிராணியே! கடலினுள் ஒரு மழைக்காடுகள் என்று அழைக்கப் படுவதற்குக் காரணம் - "மழைக்காடுகள்" இயற்கையாகவே உயிர்-பன்முகத்தன்மைக்கு பெயர் போனது. உலகத்தின் அதிகப் படியான தாவர வகைகளும், விலங்குகளும், மற்ற சிறு ஜீவராசிகளும் அக் காடுகளில்தான் அதிகம் வசிக்கிறது.

அது போலவே, இந்த பவளப் பாறைகளை சுத்தி நிறைய வகை மீன் இனங்களும், மற்ற சிறு கடல் வாழ் ஜீவராசிகளும் தனது பாதுகாப்பிற்கெனவும், உணவுத் தேடலுக்கெனவும் இந்த சூழ் நிலையை சார்ந்து வாழ பழகிக் கொண்டது பரிணாமத்னுடையே.
அது மட்டுமல்லாமல் இந்த பவளப் பாறைகள் சுற்றுச் சூழலுக்கு மற்றொரு வகையிலும் பெரும் பங்கு ஆற்றுகிறது. அது, ஒரு தீவின் அமைப்பும், அதன் சீதோஷ்ன நிலையையும் கூட இந்த பவளப் பாறைகளின் கட்டமைப்பும், எண்ணிக்கையையும் (கூட்டமைப்பும்) பொறுத்தே கூட அமைகிறதாம். அப்படியெனில், இந்த ஜீவராசிகளின் முக்கியத்துவம் சொல்லித் தெரிவதற்கில்லை, இல்லையா?

இந்த பவளப் பாறைகள் நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச ஜெல்லி மீன் இருக்கில்ல அந்த வகையை சார்ந்த பேரினமான Cnidaria இனத்தை சேந்ததுகள் தானாம். என்னய்யா, இப்படிச் சொல்லிப் புட்ட ஜெல்லி மீன்களின் வகைதான் இந்தப் பவளப் பாறைகள்னு நின்னைக்கிறீங்களா. அப்படி நினைச்சீங்கன்னா இந்தாங்க இதனையும் பிடிங்க...

இதுகளும் இனப் பெருக்க காலத்தில் உயிரணுவையும், சினை முட்டையையும் தண்ணீரில் விட்டு விடுகின்றன. இந்த ரெண்டும் சந்திச்சுக்கிட்டப்ப டச்சிங் டச்சிங் ஆகி கருவாகி, பிறகு லார்வாவாகிறாய்ங்களாம் இதுக்கு பிளானுலான்னு (Planula) பேராம்.

பிறந்து விழுந்தவுடன் பார்த்தாக்க எல்லா பேபிகளும் பார்க்கிறதுக்கு பூமாதிரி பல விரல்களுடன் ஜெல்லி மீன் போன்ற தோற்றத்துடன் ஆடி, அசைஞ்சு, மிதந்து திரியுதுங்களாம், பிறகு நாட்பட நாட்பட ஒரே இடத்தில அசையாம இருக்கிற மாதிரி ஒரு இடத்த தேர்வு செஞ்சுகிட்டு செட்டில் ஆகிடுதுகளாம். அந்த மாதிரி இடம் ஏற்கெனவே கூட்டமா தன் இனத்தை சேர்ந்த ஆட்கள் இருக்கிற இடமாகக் கூட இருக்கலாமாம்.

அப்புறம் என்ன நடக்குதுன்னு பார்ப்போம். கொஞ்சம் கொஞ்சமா தன்னைச் சுத்தி ஒரு ஓடு கட்டிக்கிடுதுகள். அது எப்படிய்யா நேசி, சாத்தியம் அப்படின்னா, இருங்க அந்த டெக்னிக்கல் பகுதியையும் சொல்லிப் புடுறேன். தண்ணீரில் கரைந்துள்ள கரியமிலா வாயுவையும் (C02)) கால்சியத்தையும் (Ca) கிரகித்து அதனை கால்சியம் கார்பனேட் (CaCo3) ஆக மாற்றி கெட்டியான ஒரு சுண்ணாம்பு மட்டி மாதிரி ஆக்கி புடுதுகள் இந்த சமர்த்துகள் தனது வீடாக.

இது பார்க்கிறதுக்கு ஒரு சின்ன பூஞ் ஜாடி மாதிரியோ, மான் கொம்பு மாதிரியோ (ஓன்றின் மேல் மற்றொன்று அடுக்கடுக்காக கட்டுவதால்) அல்லது பல் வேறு வண்ண மற்றும் அமைப்புகளில் காணப் பெறலாம். அந்த மாதிரி அவ அவன் வீட்டுக்குள்ள அவன் அவனும் இருப்பாய்ங்க தான் சாவுற வரைக்கும்.
இப்படித் தனித்தனியா வூடு கட்டி இருந்தாலும், ஒரே இடத்தில கூட்டமா கட்ட ஆரம்பிச்சு அதுவே மிகப் பிரமாண்டமா அமையப் போய் பார்க்கிறதுக்கு, மலை முகடுகள் மாதிரியும், குகைகளோடவும் இருக்கிறதினால மற்ற கடல் ஜீவராசிகளுக்கு இதுவும் ஒரு புகலிடமா அமைஞ்சுடறது போல. அதினாலேதான் பவளப்'பாறைகள் அப்படின்னு பெயர்க் காரணம் போல.

இதோட பிரமாண்ட கட்டமைப்பைப் பற்றி தெரிஞ்சுக்கிடணுமின்னா, இப்ப எல்லோருக்கும் தெரிஞ்ச நம்ம டைடானிக் கப்பல் இருக்கில்ல அது மேல கூடி இவனுங்க குடும்பம் நடத்த ஆரம்பிச்சானுங்கன்னு வைச்சுக்கோங்க, அதோட சைஸ்க்கு சந்து பொந்தெல்லாம் வலைச்சு வலைச்சு பல நிறங்களில், பல அமைப்புகளில்னு கட்டினா எப்படி இருக்கும் கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க...

இவிங்களும் இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் கோஷ்டிதான். இரவில் தன் வீட்டு வாயிலின் அருகே அமர்ந்து கொட்டாவி விட்டுக் கொண்டு வரப் போற பிளாங்டான்களை சாப்பிட்டுகிடுவாய்ங்களாம். இதிலென்ன நமக்கும் அதுகளுக்கும் ஒரு வித்தியாசமின்னா, நம்மூரில் இன்னும் சில பேர் பகல் நேரத்திலேயே இப்படி உட்கார்ந்து கொண்டே ஊர அடிச்சி உலையில் போட்டு உயிர் வாழுங்க அதுதான்.

ஏற்கெனவே சொன்னேன் இல்லையா, நீரில் கலந்துள்ள கரியமிலா வாயுவைக் கொண்டு ஓடுகள் தயார் பண்ணுகின்றனன்னு; அப்படிங்கும் பொழுது, இந்த கடல் வாழ் ஜீவராசிகளனைத்தும் தண்ணீரில் கரைந்துள்ள பிராணவாயுவை உட் கொண்டு, கரியமிலா வாயுவாக வெளித் தள்ளும் பட்சத்தில், அதில் ஒருத்தர் இந்த கரியமிலா வாயுவை பயன் படுத்தி நீரில் சமநிலைப் படுத்துவது எவ்ளோ அவசியம் பார்த்தீங்களா. அடிச்சேன் சிக்ஸர் இப்போ... :-) இன்னொரு சிக்சரும் அடிசுடறேன் கையோட, கடல் பொங்கி வரும் பட்சத்தில் பெரும் அலைகள் கிளம்பினால் அது பேரலைகளாக கரைக்கு வந்து சேரமல் அடக்கி வாசிக்க வைக்கும் ஒரு சுவர் போலவும் வேலை செய்தாங்கோ...
ஆனா, பாருங்க மக்கா இந்த பவளப் பாறைகளின் மேல் நம்மால் கொண்ட அதீதக் காதல் இதன் நிறத்திர்கெனவும், அமைப்பிற்குகெனவும் அங்கு சென்று திருடியும், மீன்களை வெடி போட்டு பிடிக்கிறேன் என்று இவைகளுக்கும் வெடி வைத்து கட்டமைப்பையே உடைப்பதாலும், மற்றும் சுற்றுப் புறச் சீர்கேடுகளை உற்பத்தித்தும், இந்த கடல் மழைக்காடுகளை மிக வேகமாக அழித்து வருகிறோம்.
ganie006
ganie006
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Back to top Go down

பவளப் பாறைகள் மழைக்காடுகளா? : Coral Reef Empty Re: பவளப் பாறைகள் மழைக்காடுகளா? : Coral Reef

Post by திவா Mon Jul 19, 2010 9:42 am

ஆமாம் இன்று பவளப்பாறைகள் மிக வேகமாக அழிவடைந்து வருகிறது , சோகம்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

பவளப் பாறைகள் மழைக்காடுகளா? : Coral Reef Empty Re: பவளப் பாறைகள் மழைக்காடுகளா? : Coral Reef

Post by ganie006 Mon Jul 19, 2010 9:45 am

////ஆமாம் இன்று பவளப்பாறைகள் மிக வேகமாக அழிவடைந்து வருகிறது /////,ஆம் தோழா மிகவும் வேதனையான விசியம் பவளப்பாறைகள் தான் கடலின் வளத்தை பாதுகாக்கும் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அழுகை
ganie006
ganie006
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Back to top Go down

பவளப் பாறைகள் மழைக்காடுகளா? : Coral Reef Empty Re: பவளப் பாறைகள் மழைக்காடுகளா? : Coral Reef

Post by சபீர் Mon Jul 19, 2010 9:48 am

அரிய அறியாத்தகவல் மிக்க நன்றி தோழரே




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பவளப் பாறைகள் மழைக்காடுகளா? : Coral Reef Empty Re: பவளப் பாறைகள் மழைக்காடுகளா? : Coral Reef

Post by ரிபாஸ் Mon Jul 19, 2010 10:01 am

சபீர் wrote:அரிய அறியாத்தகவல் மிக்க நன்றி தோழரே

சியர்ஸ் சியர்ஸ்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பவளப் பாறைகள் மழைக்காடுகளா? : Coral Reef Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பவளப் பாறைகள் மழைக்காடுகளா? : Coral Reef Empty Re: பவளப் பாறைகள் மழைக்காடுகளா? : Coral Reef

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum