ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்காகவே துடிக்கும்-------....

+7
அன்பு தளபதி
மஞ்சுபாஷிணி
சபீர்
T.N.Balasubramanian
ஹாசிம்
kalaimoon70
Aathira
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உங்களுக்காகவே துடிக்கும்-------.... Empty உங்களுக்காகவே துடிக்கும்-------....

Post by Aathira Sun Jul 18, 2010 5:40 pm


நாடி... அதை நாடு... இல்லாவிட்டால் ஏது இந்த மனித கூடு? இந்த மனிதக் கூட்டுக்கு ஆதாரமானவை அண்டவெளியில் அமைதுள்ள ஐம்பூதங்களே. அண்டவெளியில் உள்ள ஐம்பூதங்களே உடலாகிய உயிர் குடிகொண்ட பிண்ட வெளியிலும் நிறைந்துள்ளன. அவற்றில் இருந்தே வாதம், பித்தம், கபமாகிய நாடிகள் தோன்றுகின்றன என்பதையும் இந்த நாடிகள் பற்றியும் சென்ற பதிவில் ஒரு பருந்துப் பார்வைக் பார்த்தோம். ஆமாம் அந்த நாடி எங்கு உற்பத்தி ஆகிறது? எங்கு செல்கிறது? அதன் நிறம் என்ன? குணம் என்ன? நடை என்ன? என்பதை இந்த பதிவில் காணலாம்.

தொப்புளுக்கு கீழே 4 அங்குல அகலமும், 2 அங்குல நீளமும் உடைய பவளம் போன்ற செந்நிறத்தில், முளை போன்ற தோற்றமுடைய ஒரு இடமே நாடிகளுக்கு மூலஸ்தானம். அதிலிருந்து கிளம்பும் நாடிகளே இலையில் காணலாகும் நரம்புகள் போல பல கிளைகளாகப் பிரிந்து மிகவும் மென்மையாக உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்கின்றன. இவை உடலில் உள்ள ஏழு வகை தாதுக்களில் இடைப்புகுந்து செல்லும் போது அவற்றின் நிறங்களையும் அடைகின்றன. இவற்றுள் சில பருமனாகவும், சில மெல்லியதாகவும், சில முடிச்சுள்ளவையாகவும், சில அடிப்பக்கம் பருத்தும் மேலே வர வர மெலிந்தும், இருக்கின்றன. இவை எல்லாம் ஒன்று சேர்ந்தும் பல திசைகளில் பிரிந்து நுன்மையான நுணிகளை உடையனவாகவும் எல்லாம் ஓட்டை உடையன வாகவும் இருக்கும். நாடி என்பது இரத்தக்குழாய்களில் உண்டாகும் துடிப்புகளின் எண்ணிக்கையோ, தாள அமைதியோ, அழுத்தமோ மட்டுமல்ல. அது ஒவ்வொரு
உடம்பிலும் செயல்படும் உயிரின் முழு இயக்கம். இவை உடம்பின் ஒவ்வோரு
அணுவிலும் செயல்படுகிறது. இதனாலேயே,


”நாடியென்றால் நாடியல்ல; நரம்பில் தானே,
நலமாகத் துடிக்கின்ற துடி தானுமல்ல,
நாடி என்றால் வாத பித்த சிலேற்பணமுமல்ல,
நாடி எழுபத்தீராயிரந் தானுமல்ல,
நாடி என்றால் அண்டரண்டமெல்லாம்
நாடி
எழுவகைத் தோற்றத்து உள்ளாய்
நின்றநாடிய துயராய்ந்து பார்த்தாரானால்
நாடியுறும் பொருள் தெரிந்து நாடுவாரே”

என்று சதக நாடி நூல் உரைக்கும். இதயம் விரியவும் சுருங்கவும் செய்யும்
போது நாடி நரம்புகளும் விரியவும் சுருங்கவும் செய்யும் நாடித்துடிப்புச்
சிறப்பாக இரத்தக் குழாய்களில் பத்து இடங்களில் வெளிப்படையாகத் தெரிகிறது.
அதனால் நாடியைப் பார்க்கும் இடங்கள் பத்தாக உள்ளன. அவையாவன கை, கண்டம், காலின் பெருவிரல், கணுக்கால், கண்ணிச்சுழி, ஆகியன. இவற்றில் கையைப் பார்ப்பதே துல்லியமான கணிப்புக்கு உதவும் இடமாகும். ஆணுக்கு வலக்கையிலும் பெண்ணுக்கு இடக்கையிலும் நாடித்துடிப்புச் சரியாக காணக்கூடும். நாடி பார்க்குமுன் நோயாளியின் கைவிரல்களை நெட்டை எடுத்துவிட்டு, ஒருமுறை உள்ளங்கையில் சூடு பறக்கத் தேய்த்த பின் மூன்று விரல்களால் அழுத்தியும், விட்டும் மாறி மாறிச் செய்யும் போது நாடித்துடிப்பின் வேறுபாடுகளை விரல்களால் நன்கு உணர முடியுமாம்.

பொதுவாக நடையைத்தான் அன்ன நடை, மான் போன்ற துள்ளல் நடை, சிங்க நடை என்றெல்லாம் வர்ணனை செய்து பார்த்திருக்கிறோம். இரத்தக்குழாயில் ஓடும் குருதியின் நடையை வருணிக்கும் நம் சித்த வைத்தியர்களின் கற்பனைனையை எப்படி பாராட்டுவது. அதிலும் சிங்கம் போன்ற ஆண்களுக்கும் அன்னம் போன்ற பெண்களுக்கும் நடை வேறுபாடு உள்ளது போல ஆண்களுக்கும் பெண்களுக்கு நாடி நடையிலும் உள்ள வேறுபாட்டை அழகாக கூறியுள்ள திறம் எண்ணி எண்ணி வியக்கத் தக்கது. ஆண்களுக்கு வாத நாடி, கோழி போலவும், குயில் போலவும், அன்னம் போலவும் நடக்கும். பித்த நாடி, ஆமையைப் போலவும் அட்டையைப் அசைந்து அசைந்து நடக்குமாம். சிலேத்தும நாடி பாம்பு போல ஊர்ந்தும் தவளை போல குதித்தும் செல்லுமாம். பெண்களுக்கு வாதநாடி பாம்பு போலவும், பித்த நாடி தவளை போலவும், சிலேத்தும நாடி அன்னம் போலவும் நடக்குமாம்.

நாடியைப் பார்க்கும் நேரம் மாதங்களுக்கு ஏற்ப மாறுபடும். சித்திரை, வைகாசி
மாதங்களில் அதிகாலையும் (உதயத்தில்), ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகை
மாதங்களில் மதியமும், மார்கழி, தை, மாசி மாதங்களில் மாலையும், பங்குனி,
புரட்டாசி, ஆவனி மாதங்களில் இரவும் நாடியைப் பாக்க வேண்டிய காலங்களாகும். நாடியைப் பார்க்க நாள் நட்சத்திரம் வேறு பார்க்க வேண்டுமா என்று நினைக்கக் கூடாது. எந்தெந்த மாதத்தில் எந்த நேரத்தில் பார்த்தால் நோய் அறிகுறியை மிகத்துல்லியமாக அறியலாம் என்று ஆய்ந்து சொன்ன அவர்களின்
அறிவுக்கூர்மையைப் பார்க்க வேண்டுமல்லவா? பாடலைப் பார்க்கலாமா?

”சித்திரை வைகாசிக்குஞ் செழுங்கதிருப் பிற்பார்க்க
அத்தமாம் ஆனியாடி ஐப்பசி கார்த்திகைக்கும்
மத்தியானத்திற் பார்க்க மார்கழி தைமாசிக்கும்
வித்தகக் கதிரோன் மேற்கே வீழ்கும் வேளையிற் றான்பாரே
தானது பங்குனிக்குந் தனது நல் ஆவனிக்கும்
வானமாம் புரட்டாசிக்கும் அர்த்த ராத்திரியில் பார்க்க
தேனென மூன்று நாடி தெளியவே காணும்”


இவை மட்டுமல்ல எப்போதெல்லாம் நாடிச் சோதனைச் செய்யத் தகுதியற்ற நேரம் என்றும் கூறியுள்ள அவர்களின் திறனை எத்துனைப் பாராட்டினாலும் தகாது. எண்ணெய்க் குளியல் செய்த பின்பு, உடல் ஈரமாக (நனைந்து) உள்ள போது, உணவு உண்ட உடனே, மது அருந்தியுள்ள போது, புகையிலை போன்றவை பயன்படுத்தியுள்ள போது, வேகமாக நடந்த பின்பு, வாதி, பேதி, விக்கல் போன்றவை உள்ள நேரத்தில், உடல் உறவு கொண்ட உடனே எல்லாம் நாடிச்சோதனை செய்தால் நாடியைச் சரியாகக் கணிக்க முடியாது. ஆங்கில மருத்துவத்தில் பொதுவாக வெள்ளை ஆடை அழகிகள் வந்து கண்களால் தன் கையில் கட்டிய கடிகாரத்தையும், கையால் நோயாளியின் கையையும் பிடித்து நாடியை எண்ணி எழுதிவிடுவர். அவ்வளவுதான்.

இங்கே சித்தர்கள் பாருங்கள். வயது, பாலுக்கு ஏற்ப நாடித் துடிப்பு
மாறுவதைக் கணக்கிட்டுச் சொல்லியுள்ள பாங்கை. ஒரு நிமிடத்தில் நாடித்
துடிக்கும் அளவு பிறந்த குழந்தைக்கு 70, அதுவும் சாதாரணமாக 100,
உட்கார்ந்து இருக்கும் போது 40, இளமைப் பருவத்தினருக்கு 75 முதல் 80,
வாலிபப் பருவத்தினருக்கு 90, வயது முதிர்ந்த ஆணுக்கு 70 முதல் 75, அவர்கள்
படுத்து இருக்கும் போது 67, வயது முதிர்ந்த பெண்களுக்கு 75 முதல் 80 என்று
எண்ணிக்கை வேறுபாட்டை எவ்வளவு அழகாகக் கூறியுள்ளனர். இன்னும் எத்தனையோ இருக்கிறது நாடியைப் பற்றிக் கூறிக்கொண்டே போக.

இப்போது நாடித்துடிப்பைக் கண்டு நோய் அறிதல் அற்று போய் விட்டது என்றே கூற வேண்டும். மருத்துவரிடம் சென்றவுடன் நாடித்துடிப்பு பார்க்கும் காலம் மாறி
ஸ்டெத் வந்தது. இப்போது அதற்கெல்லாம் கூட விடை கொடுத்தாகி விட்டது. எடுத்த எடுப்பிலேயே ஸ்கேன் என்ற நிலையில் பழகிவிட்டனர் மருத்துவர்கள். என்பது ஒருபுறம். மறுபுறம் நவ நாகரிக மக்களின் பணத்தை நாடும், பகட்டை நாடும், பேரை நாடும், புகழை நாடும் பேராசை அவர்களை நாடி ஜோசியத்தை நாட வைத்துள்ளது. என்ன செய்தால் கோடிஸ்வரன் ஆகலாம என்ற ஆவல் நாடி ஜோசியத்தின் பக்கம் திசை திருப்பி விட்டுள்ளது. இந்த நம்மையே எண்ணி நமக்காகவே துடிக்கும் நாடியைப் பற்றி எவரும் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை. நாடிக்கடலில் நம் முன்னோர்கள் அராய்ந்து கூறியுள்ள வாத, பித்த, கப நாடிகளின் தன்மைகளையும் அவை மிகினும் குறையினும் உண்டாகும் நோய்களையும் பிரிதொரு பதிவில் பார்க்கலாமா? வரட்டா???.


ஆதிரா..









உங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Tஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Hஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Iஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Rஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உங்களுக்காகவே துடிக்கும்-------.... Empty Re: உங்களுக்காகவே துடிக்கும்-------....

Post by kalaimoon70 Sun Jul 18, 2010 7:05 pm

நாடி பற்றி, தேடி வந்து சொல்லும் கட்டுரை .இன்றைய நாடி நிலை பற்றியும்,நாடியின்,கால நிலை பற்றி ,அதை நம் முன்னோர்கள்,சொன்னதை ,அழகாய் எடுத்துக்காட்டியும் ,நாடி ஜோதிடத்தை அலசியும் ,ஒரு மருத்துவக் கட்டுரையை ,தந்த வழி நடத்துனர் ஆதிராவுக்கு நன்றி .

தொடருங்கள் ....................


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உங்களுக்காகவே துடிக்கும்-------.... Empty Re: உங்களுக்காகவே துடிக்கும்-------....

Post by ஹாசிம் Sun Jul 18, 2010 7:39 pm

தொடர்ந்து அறிய முடிந்தது நன்றி தங்களின் அரிய படைப்புக்கு


நேசமுடன் ஹாசிம்
உங்களுக்காகவே துடிக்கும்-------.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உங்களுக்காகவே துடிக்கும்-------.... Empty Re: உங்களுக்காகவே துடிக்கும்-------....

Post by Aathira Sun Jul 18, 2010 7:39 pm

kalaimoon70 wrote:நாடி பற்றி, தேடி வந்து சொல்லும் கட்டுரை .இன்றைய நாடி நிலை பற்றியும்,நாடியின்,கால நிலை பற்றி ,அதை நம் முன்னோர்கள்,சொன்னதை ,அழகாய் எடுத்துக்காட்டியும் ,நாடி ஜோதிடத்தை அலசியும் ,ஒரு மருத்துவக் கட்டுரையை ,தந்த வழி நடத்துனர் தோழி ஆதிராவுக்கு நன்றி .

தொடருங்கள் ....................


மிக்க நன்றி கலைநிலா..தோழரே.. எப்போது உம்ரா முடித்து திரும்பினீர்கள்..எப்படி இருந்தது பயணம்?


உங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Tஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Hஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Iஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Rஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உங்களுக்காகவே துடிக்கும்-------.... Empty Re: உங்களுக்காகவே துடிக்கும்-------....

Post by T.N.Balasubramanian Sun Jul 18, 2010 9:18 pm

நம்மை நாடி வந்த நல்லதோர் பதிவு. உங்களுக்காகவே துடிக்கும்-------.... 154550 உங்களுக்காகவே துடிக்கும்-------.... 154550 உங்களுக்காகவே துடிக்கும்-------.... 154550 ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்களுக்காகவே துடிக்கும்-------.... Empty Re: உங்களுக்காகவே துடிக்கும்-------....

Post by சபீர் Sun Jul 18, 2010 9:37 pm

உங்கள் இப்பதிவுகள் மூலம் நிறைய விடயங்கள் அறிய முடிந்துள்ளது அக்கா தொடருங்கள் உங்களுக்காகவே துடிக்கும்-------.... 154550 உங்களுக்காகவே துடிக்கும்-------.... 154550 உங்களுக்காகவே துடிக்கும்-------.... 154550 உங்களுக்காகவே துடிக்கும்-------.... 154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உங்களுக்காகவே துடிக்கும்-------.... Empty Re: உங்களுக்காகவே துடிக்கும்-------....

Post by Aathira Mon Jul 19, 2010 7:05 pm

ஹாசிம் wrote:தொடர்ந்து அறிய முடிந்தது நன்றி தங்களின் அரிய படைப்புக்கு
படித்துக் கருத்துப் பகர்ந்தமைக்கு மிக்க நன்றி ஹாசிம்


உங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Tஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Hஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Iஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Rஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உங்களுக்காகவே துடிக்கும்-------.... Empty Re: உங்களுக்காகவே துடிக்கும்-------....

Post by மஞ்சுபாஷிணி Mon Jul 19, 2010 7:10 pm

அடேங்கப்பா நாடி துடிப்பில் இத்தனை விஷயங்களா???

அருமையான பாடல் வரிகளுடன் தொகுத்து விளக்கமாக கொடுத்த அன்பு ஆதிராவுக்கு அன்பு நன்றிகள்.....

எனக்கு தெரிஞ்ச ஒரு கொழந்தை இருக்குப்பா... நல்லா அழகா சிரிப்பா... அழகா பேசுவா.... நேத்து தான் அந்த குழந்தையோட பேசினேன்... ஆனா அந்த கொழந்தை ரொம்ப lazy.. அந்த குழந்தையோட நாடி துடிப்பு எப்படி துடிக்கும்பா?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்களுக்காகவே துடிக்கும்-------.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உங்களுக்காகவே துடிக்கும்-------.... Empty Re: உங்களுக்காகவே துடிக்கும்-------....

Post by Aathira Mon Jul 19, 2010 7:21 pm

மஞ்சுபாஷிணி wrote:அடேங்கப்பா நாடி துடிப்பில் இத்தனை விஷயங்களா???

அருமையான பாடல் வரிகளுடன் தொகுத்து விளக்கமாக கொடுத்த அன்பு ஆதிராவுக்கு அன்பு நன்றிகள்.....

எனக்கு தெரிஞ்ச ஒரு கொழந்தை இருக்குப்பா... நல்லா அழகா சிரிப்பா... அழகா பேசுவா.... நேத்து தான் அந்த குழந்தையோட பேசினேன்... ஆனா அந்த கொழந்தை ரொம்ப lazy.. அந்த குழந்தையோட நாடி துடிப்பு எப்படி துடிக்கும்பா?




இந்த கொழந்தயா...மஞ்சு.. நேத்து உங்க தங்கையோட பேசினேன்..அம்மா வெளியில போயிருக்கரதா சொன்னாங்க.. அம்மாவோட பேசல. உங்களுக்காகவே துடிக்கும்-------.... 440806
Spoiler:


உங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Tஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Hஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Iஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Rஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உங்களுக்காகவே துடிக்கும்-------.... Empty Re: உங்களுக்காகவே துடிக்கும்-------....

Post by மஞ்சுபாஷிணி Mon Jul 19, 2010 7:30 pm

ச்சுவீத்துப்பா இந்த லட்டு குழந்தை..... தூக்கிக்கட்டுமா?? சமர்த்துக்குட்டி..... நேத்து இந்த குழந்தை கிட்ட தாம்பா பேசினேன்... அத்தனை அழகா சிரிச்சுது... அத்தனை அழகா பேசித்து... எனக்கு ரொம்ப இஷ்டமாயிடுத்து..... உங்களுக்காகவே துடிக்கும்-------.... 942

அம்மா தண்டையார்பேட்டை போய் இருந்தாங்கப்பா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்களுக்காகவே துடிக்கும்-------.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உங்களுக்காகவே துடிக்கும்-------.... Empty Re: உங்களுக்காகவே துடிக்கும்-------....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum