Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் காலாமானார்
3 posters
Page 1 of 1
கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் காலாமானார்
மிகவும் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாளின் உயிர் நேற்று பிரிந்தது. அவருக்கு வயது 90. இறுதிச் சடங்குகள் நேற்றைய தினமே நடந்து முடிந்தன.
இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்பிருந்தே இசை உலகில் கொடி கட்டிப்பறந்தவர் டி.கே.பட்டம்மாள். மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு போன்ற பல தேசிய தலைவர்களை நேரில் சந்தித்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றவர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், பாரதியாரின் எழுச்சிப் பாடல்களைப் பாடி மக்களிடையே சுதந்திர உணர்வைத் தூண்டிய பெருமையும் டி.கே. பட்டம்மாளுக்கு உண்டு.
இசை உலகில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக தனது தனித்துவத்தை நிரூபித்துள்ள டி.கே. பட்டம்மாள், திரையிசைப் பாடல்கள் மட்டும் சுமார் நூறு பாடல்கள் பாடி உள்ளார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி, டி.கே.பட்டம்மாள் ஆகியோரை கர்நாடக இசை உலகின் மூன்று இசைமேதைகள் என்று சிறப்பித்துக் கூறுவார்கள்.
சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வந்த டி.கே. பட்டம்மாள், கடந்த சில நாட்களாக உடல்நலம் சுகமில்லாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று பகல் 12.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. இந்த தகவல் கிடைத்ததும், கர்நாடக இசை உலகப் பிரமுகர்களும், சினிமாத் துறையினரும் அவரது இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.
டி.கே.பட்டம்மாளின் உடல் மாலையில், சென்னை மைலாப்பூரில் உள்ள மின்சார சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
டி.கே.பட்டம்மாளின் கணவர் பெயர் ஈஸ்வரன். அவருக்கு 95 வயது ஆகிறது. இவர்களுக்கு சிவகுமார், லட்சுமணன் என்ற 2 மகன்கள் உள்ளனர். சிவகுமாரின் மகள்தான் கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்.
டி.கே. பட்டம்மாளின் வரலாறு
கர்நாடக இசை மேதையாக விளங்கிய டி.கே.பட்டம்மாள் காஞ்சீபுரத்தில் கடந்த 1919-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ந்தேதி தாமல் கிருஷ்ணசாமி தீட்சிதர்-காந்திமதி தம்பதிக்கு மகளாக பிறந்தார். டி.கே.பட்டம்மாளுக்கு பெற்றோர் அலமேலு என்று பெயர் சூட்டி, பட்டம்மாள் என்று செல்லமாக அழைத்தனர். எனவே அவருக்கு பட்டம்மாள் என்ற பெயரே பெயர் வாங்கிக் கொடுத்தது.
சிறு வயதிலேயே கர்நாடக இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட பட்டம்மாள் தனது 10ஆம் வயதிலேயே அகில இந்திய வானொலியில் கர்நாடக இசைப் பாடலைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்தார். 1932-ம் ஆண்டு முதன் முறையாக சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் மேடை ஏறிய பட்டம்மாள் கைதட்டல்களை வாரிக் குவித்தார். பாபநாசம் சிவன் போன்ற இசை மேதைகளிடம் இசை பயின்ற பட்டம்மாள், ஆயிரக்கணக்கான மேடைகளில் கச்சேரி செய்து உள்ளார். பைரவி ராகத்தில் வல்லமை பெற்றவர்.
பாபநாசம் சிவன் மூலம் டி.கே.பட்டம்மாள் திரையிசைப் பாடல்களுக்கு அறிமுகமானார். தியாக பூமி என்ற திரைப்படத்தில் அவர் பாடகியானார். அவரது பாடல்கள் பெரும்பாலும் தேசபக்தி பாடல்களாகவும், பாரதியாரின் பாடல்களாகவுமே இருந்தது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது, ஆங்கிலேயர் ஆட்சியின் தடையை மீறி பல மேடைகளில் பாரதியாரின் எழுச்சிப் பாடல்களைப் பாடி, இந்திய மக்களின் சுதந்திரத்தை தூண்டியப் பெருமையையயும் தனது கர்நாடக இசையின் மூலமாகப் பெற்றார் பட்டம்மாள். இதற்காக அவர், காந்தியடிகள் மற்றும் நேருவின் பாராட்டுகளையும் பெற்றார்.
இந்தியா 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திரம் அடைந்தது. நாடு சுதந்திரம் அடையும் சமயத்தில், அதாவது ஆகஸ்டு 14-ந் தேதி இரவு டி.கே.பட்டம்மாள் அகில இந்திய வானொலியில் ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாரதியாரின் தேச பக்தி பாடலை பாடினார். இது நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து 2 மணி நேரம் அவர் வானொலியில் தேச பக்தி பாடல்களை பாடினார்.
இவர் பாடிய கர்நாடக இசைப்பாடல்களும், தேச பக்தி பாடல்களும் இசைத்தட்டு விற்பனையில் சாதனை படைத்துள்ளன.
ஒரு முறை திருநெல்வேலியில் டி.கே.பட்டம்மாள் இசைக்கச்சேரி நடத்தியபோது பாரதியார் பாடல்களை உணர்ச்சி பூர்வமாக பாடிக்கொண்டு இருந்தார். அதை முதல் வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த பாரதியாரின் மனைவி செல்லம்மாள், கச்சேரி முடிந்ததும் டி.கே.பட்டம்மாளை கட்டிப்பிடித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது.
இசை உலகுக்கு ஆற்றிய சேவைக்காக டி.கே.பட்டம்மாள் 60-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளும் இவரை கெளரவித்துள்ளது. சங்கீத சாகர ரத்னா, சங்கீத கலாநிதி, கலைமாமணி, கான சரஸ்வதி போன்ற பெருமைமிக்க பல விருதுகளையும் பெற்று இருக்கிறார்.
இலங்கை, கனடா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசைக்கச்சேரி நடத்தி உள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாகவும் பதவி வகித்தவர் பட்டம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இசை மேதையின் மரணம், இசை உலகிற்கு ஒரு பேரிழப்பு என்பது மறுக்க முடியாத உண்மை.
அவரது மறைவக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Re: கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் காலாமானார்
மிகவும் வருத்தமான செய்தி
அவரது மறைவக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது மறைவக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Guest- Guest
Re: கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் காலாமானார்
அவரது மறைவக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்
Re: கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் காலாமானார்
தலைவரே "சிவா" நான் உங்களுக்கு முதல் இந்த செய்தியை பதித்துவிட்டேன், அனால் முருகன் வருத்தம் தெரிவிக்க மறந்து பாராட்டு தெரிவித்துவிட்டர்.
eegarai.darkbb.com/ii-oio-f5/oao-yoi-eiu-oaooi-t3436.htm
eegarai.darkbb.com/ii-oio-f5/oao-yoi-eiu-oaooi-t3436.htm
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Similar topics
» குஜராத்தில் பாடகி மீது பண மழை
» எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் !
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
» 4-வது தலைமுறை பாடகி
» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
» எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் !
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
» 4-வது தலைமுறை பாடகி
» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|