ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை சுகன்யாவின் விவாகரத்து வழக்கு-2 மாதத்தில் முடிக்க உத்தரவு-கணவரின் மனு தள்ளுபடி

Go down

நடிகை சுகன்யாவின் விவாகரத்து வழக்கு-2 மாதத்தில் முடிக்க உத்தரவு-கணவரின் மனு தள்ளுபடி Empty நடிகை சுகன்யாவின் விவாகரத்து வழக்கு-2 மாதத்தில் முடிக்க உத்தரவு-கணவரின் மனு தள்ளுபடி

Post by ரபீக் Tue Jul 13, 2010 4:35 pm

நடிகை சுகன்யாவுக்கும், அவரது கணவருக்கும் வெளிநாட்டில் இந்து முறைப்படி திருமணம் நடந்திருப்பதால், சுகன்யா தொடர்ந்துள்ள விவாகரத்து வழக்கை சென்னை கோர்ட்டிலேயே விசாரிக்கலாம். இந்த வழக்கை 2 மாதத்தில் முடிக்க வேண்டும். அவரது கணவர் இதுதொடர்பாக தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நடிகை சுகன்யாவுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த, அமெரிக்க குடியுரிமை பெற்றவரான ஸ்ரீதரன் என்பவருக்கும் கடந்த 2002ம் ஆண்டு நியூஜெர்சியில் உள்ள பாலாஜிகோவிலில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.

கல்யாணம் ஆன கையோடு கணவருடன் குடித்தனத்தை ஆரம்பித்த சுகன்யா 2003ம் ஆண்டே சென்னை திரும்பினார். வந்தவர் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து அவருக்கும், கணவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். சுகன்யா மீண்டும் அமெரிக்காவுக்குப் போகவில்லை.

இந்தச் சூழ்நிலையில் 2004ம் ஆண்டு விவாகரத்து கோரி குடும்ப நல கோர்ட்டை அணுகினார் சுகன்யா. ஆனால் இதுகுறித்து ஸ்ரீதரனுக்குத் தெரிவிக்கப்படவில்லை. கோர்ட்டும் சம்மன் ஏதும் அனுப்பவில்லை. இந்த நிலையில் 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 19ம் தேதி சுகன்யாவுக்கு விவாகரத்து அளிக்கப்பட்டது.

இது தெரியவந்ததும் அதே கோர்ட்டில் ஸ்ரீதரன் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து விவாகரத்து ரத்து செய்யப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்றத்தை அணுகினார் ஸ்ரீதரன்.

அவர் தாக்கல் செய்த மனுவில், அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள என் தொடர்பான விவாகரத்து வழக்கை, சென்னையில் உள்ள குடும்பநல கோர்ட்டு விசாரிக்க அதிகார வரம்பு இல்லை. அமெரிக்காவில் வசிப்பவர்களின் வழக்கை இந்தியாவில் உள்ள கோர்ட் விசாரிக்க முடியாது. எனவே எனது விவாகரத்து வழக்கை சென்னை முதன்மை குடும்பநல கோர்ட் விசாரிக்கக் கூடாது என்று உத்தரவிடக் கோரியிருந்தார்.

இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய சுகன்யாவுக்கு உத்தரவிடப்பட்டது. அவர் தாக்கல் செய்த பதில் மனுவில், கணவரை விட்டுவிட்டு வந்து எந்த இடத்தில் பெண் வசிக்கிறாரோ, அந்த இடத்தில் உள்ள கோர்ட்டில் அந்தப் பெண் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர முடியும். கணவர் வசிக்கும் இடத்தைப் பற்றி பரிசீலிக்கத் தேவையில்லை. ஸ்ரீதரன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எலிபே தர்மாராவ், கே.கே.சசிதரன் அளித்த தீர்ப்பில்,

இந்து திருமண முறைச் சட்டங்களின் அடிப்படையில் நடக்கும் திருமணங்களை இந்தியாவில் உள்ள கோர்ட்டுகள் விசாரிக்கின்றன. இந்தச் சட்டங்களை முன்வைத்து அமெரிக்காவில் உள்ள கோர்ட்டுகளில் நடிகை சுகன்யா வழக்கு தொடர முடியாது. இந்து முறைப்படி நடிகை சுகன்யாவின் கழுத்தில் ஸ்ரீதரன் எப்போது தாலி கட்டினாரோ, அப்போதே அந்த திருமண விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த அதிகார வரம்பு கொண்ட கோர்ட்டும், அந்த சட்டங்களின்படியே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.

இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளதால், அதற்கான இந்து திருமண முறை சட்டப் பிரிவு 13-ன் அடிப்படையில்தான் திருமண பிரச்சினைகளும் தீர்க்கப்பட முடியும். இந்தச் சட்டத்தின்படி, நியூஜெர்சியில்தான் நடிகை சுகன்யா விவாகரத்து வழக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும் என்று ஸ்ரீதரன் கூறவில்லை. அதுபற்றி அந்த சட்டப் பிரிவிலும் தெரிவிக்கப்படவில்லை.

எனவே, நியூஜெர்சி கோர்ட்டில் விவாகரத்து கேட்டு நடிகை சுகன்யா வழக்கு தொடரவில்லை. அப்படி வழக்கு தொடரவும் முடியாது. ஆனால் ஸ்ரீதரன் சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு அவ்வப்போது வந்து சென்றிருக்கிறார். அவருக்கும் சென்னை குடும்பநல கோர்ட்டு எல்லைக்கு உட்பட்டுள்ளார்.

எனவே, கணவர் அமெரிக்காவில் வசிப்பவர் என்றாலும், அவரது மனைவியான நடிகை சுகன்யா தொடர்ந்த விவாகரத்து வழக்கை விசாரிப்பதற்கு சென்னை குடும்பநல கோர்ட்டுக்கு அதிகார வரம்பு உள்ளது. ஸ்ரீதரனின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

2004-ம் ஆண்டில் இருந்து இவர்களின் விவாகரத்து விவகாரம் நிலுவையில் உள்ளது. எனவே இன்னும் 2 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கும்படி குடும்பநல கோர்ட்டுக்கு உத்தரவிடப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெ.,மரண விசாரணை கமிஷன் 3 மாதத்தில் முடிக்க உத்தரவு
» நடிகை சுகன்யா வழக்கு : ஐகோர்ட் உத்தரவு
» அனைத்து விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» விவாகரத்து வழக்கு.. கோர்ட்டில் விந்தியா!
» இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் விவாகரத்து பெறுவதற்காக 55 ஆயிரம் தம்பதிகள் காத்திருப்பு: விரைந்து முடிக்க மத்திய அரசு திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum