Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா
3 posters
Page 1 of 1
எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா
எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா
பட்டுக்கோட்டை அய்யா தியேட்டர். இடைவேளை நேரத்தில், 'இவங்கதான்' என்று ஒரு தாயை நோக்கி கையை காட்டி ரகசியமாக சிலர் கிசுகிசுக்க, ஓடோடி வந்து அந்த தாயின் கையை பிடித்துக் கொள்கிறார்கள் சக தாய்மார்களும் ரசிகர்களும். உங்க புள்ளதான் டைரக்டராமே, நல்லாயிருக்கு தாயி படம்.... ஏதோ இந்த வார்த்தைக்காகவே இத்தனை வருடங்கள் காத்திருந்த மாதிரி அணையை உடைத்துக் கொள்கிறது கண்ணீர். புடவை முந்தானையில் துடைத்துக் கொண்டே அத்தனை பாராட்டையும் ஏற்றுக் கொள்கிற அந்த தாய் அம்சாவின் மூத்த மகன்தான் சற்குணம். களவாணி படத்தின் டைரக்டர்.
46 மார்க் கொடுத்திருக்கிறது ஆனந்த விகடன். 'நன்று' என்கிறது குமுதம். தமிழ் பத்திரிகைகள் மட்டுமல்ல, ஆங்கில பத்திரிகைகளும் விழுந்து விழுந்து பாராட்டுகிற இந்த படத்தின் டைரக்டர் சற்குணம் பத்தாம் வகுப்பு பெயிலானவர்
என்பதுதான் படத்தை விட சுவாரஸ்யமான பிளே!
இந்த படத்தில வர்ற களவாணி நானும் என் தம்பி நந்தகுமாரும்தான். ஒரு குடும்பத்தில ரெண்டு பேரு படிக்காம ஊரு சுத்தறது கேட்கறதுக்கே கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். எங்கப்பா அண்ணாமலை அமெரிக்காவுல இருக்கார். அவரு
அனுப்புற பணத்தில ஜாலியா செலவு பண்ணிட்டு படிக்காம ஊரை சுற்றிக்கிட்டு இருந்தோம். அவரு நாங்க நல்லா படிக்கறதா நினைச்சுகிட்டு அனுப்பிகிட்டே இருந்தார். திடீர்னு அப்பா ஊருக்கு வந்துட்டா நம்ம கதி என்னாகும்னு நினைச்சு பார்த்தேன். அந்த கற்பனையைதான் ஐந்து வருஷத்துக்கு முன்னாடி ஸ்கிரீன் பிளேயா எழுதி வச்சிருந்தேன். இப்ப படமாகவும் எடுத்தேன். இன்னைக்கு பட்டிதொட்டியெல்லாம் களவாணி பிச்சுகிட்டு போகுது. நல்லாயிருக்குன்னு நாலாபுறத்திலே இருந்தும் பாராட்டுகள்.
அமெரிக்காவுலேர்ந்து அப்பாவும் போன் பண்ணினார். அங்க படம் இன்னும் ரிலீஸ் ஆகலையாம். ஆனால், நிறைய கேள்விப்படுறேண்டா. பெருமையா இருக்குன்னு சொன்னார். படிக்காம அவரு நம்பிக்கையில மண்ணை போட்டுட்டேனேன்னு கவலையா இருந்தேன். எப்படியாவது அவரிடம் நல்ல பெயர் எடுக்கணும்னுதான் டைரக்ஷன் துறைக்கே வந்தேன். இத்தனை பாராட்டுகளுக்கு மத்தியில் அவரு பாராட்டு மட்டும் தனியா உசரமா வளர்ந்து நிக்குது நான் படத்தில காட்டிய நாத்து மாதிரியே என்கிறார் சற்குணம்.
ஒரத்தநாடு ஆமலாப்பட்டு கிராமத்திலிருந்து பதிமூணு வருஷத்துக்கு முன்னாடி சென்னைக்கு வந்த சற்குணத்தை பஞ்சநாதன் என்பவர்தான் சிதம்பரம் என்பவரிடம் சொல்லி தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனிடம் சேர்த்துவிட்டாராம். (எல்லார் பேரையும்
சொல்லணும். அதுதான் நன்றிக்கழகு என்கிறார்) அப்புறம் வசனகர்த்தா கலைமணியிடம் காப்பி ரைட்டிங்குக்காக சேர்ந்தாராம். ஒரு நாளும் நான் பொருளாதார பிரச்சனையால் கஷ்டப்பட்டதில்லை. நான் ஐயாயிரம் எதிர்பார்த்தால்
அப்பாவிடமிருந்து இருபத்தைந்தாயிரம் வரும். அவர் தந்த நிழலில் நான் சுகமாகதான் வேலை பார்த்தேன் என்கிற சற்குணம், பின்பு ஏ.எல்.அழகப்பனின் மகன் விஜய்யிடம் இணை இயக்குனராக கிரீடம் படத்தில் பணியாற்றியிருக்கிறார்.
ஹீரோ விமலும் இவரும் பத்து வருட நண்பர்கள். மாப்ளே, நீ முதலில் ஜெயிச்சா எனக்கு வாய்ப்பு கொடு, நான் முதலில் ஜெயிச்சா உனக்கு வாய்ப்பு தர்றேன் என்று பேசிக் கொள்வார்களாம் இருவரும்.
இந்த களவாணி கதை முழுக்க முழுக்க விமலுக்கு தெரியும். இதில ஹீரோயினுக்கு அண்ணனா வர்ற கேரக்டரில்தான் நடிக்கணும் என்று ரொம்ப ஆசைப்பட்டான் விமல். கதையை மாதவனிடம் சொல்வதற்காகதான் அவருடைய மேனேஜர் நசீர் சாரை மீட் பண்ணினேன். கதையை கேட்டவர், இதை நானே தயாரிக்கிறேன் என்றார். அப்போது பசங்க ரிலீஸ்
ஆகவில்லை. அதில ஹீரோவா நடிக்கிற விமல் நடிச்சா நல்லாயிருக்கும்னு நான் சொன்னேன். படம் வர்றதுக்கு முன்னாடி விமலை கமிட் பண்ண நசீருக்கு கொஞ்சம் தயக்கம் இருந்திச்சு. இருந்தாலும் என்னுடைய வற்புறுத்தலால் சம்மதிச்சார்.
நான் எதிர்பார்த்த மாதிரி பசங்க படம் பெரிய ஹிட் ஆனது. நாங்க தைரியமா எங்க படத்தை ஆரம்பிச்சோம் என்று களவாணி உருவான கதையை சுருக்கமாக சொல்கிறார் சற்குணம்.
படத்தில் எல்லாரையும் கவர்ந்த விஷயம் அறிக்கி LC 112 கூட்டு. (புரியாதவர்கள் படம் பார்க்க) இந்த எழுத்துக்களின் மீது சில திருத்தங்கள் செய்தால் மகேஷ் என்று படிக்கலாம். கதாநாயகி மகேஷ்வரியிடம் இதை சொல்லியே மிரட்டுவார் விமல். ஏதோ உரத்தின் பெயராக்கும் என்று ஊர் பெரிசுகளும் பேசிக் கொள்வார்கள். இந்த ஐடியா உருவானது எப்படி என்றால் சுவாரஸ்யமாக சொல்ல ஆரம்பிக்கிறார் சற்குணம்.
நான் டென்த் பெயில் ஆன பிறகு, பெயில் ஆன விஷயத்தை ஊருக்குள் மறை ச்சுட்டு அதுக்காகவே ஐடிஐ யில் சேர்ந்தேன். அப்போ என்னோட படிச்சவன்தான் சுகுமார். அவன் மகேஷ்வரிங்கிற பொண்ணை லவ் பண்ணினான். நோட்டுல இப்படிதான் LC 112 ன்னு எழுதி வச்சிருப்பான். ஒருநாள் அதில் சில கோடுகளை போட்டுக்காட்டி மகேஷ்வரின்னு மாத்தினான். அந்த விஷயத்தைதான் இப்போ படத்தில கொஞ்சம் விரிவாக்கியிருந்தேன். இப்போ துபாய்ல இருக்கான் சுகுமார். டிரெய்லரில்
இந்த விஷ§வலை பார்த்துட்டு அங்கேயிருந்து போன் பண்ணி, மச்சான்... நீ பழசை மறக்கலைடான்னு சந்தோஷப்பட்டான்.
நான் இன்னைக்கு டைரக்டர் ஆனதுக்கு காரணமே இது மாதிரி இன்ஸ்பிரேஷன்ஸ்தான். என் தம்பியோட ஸ்கூல்ல ஒரு பையன் து£ளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கேங்கிற பாடலை அப்படியே ட்யூனை மட்டும் வச்சுகிட்டு வார்த்தைகளை மாற்றி எழுதி பாடி பிரைஸ் வாங்கினான். இதை தம்பி எங்கிட்ட சொல்லவும், நானும் அதே மாதிரி ட்ரை
பண்ணி வேறொரு பையனுக்கு எழுதி கொடுத்தேன். அடிச்சுது பிரைஸ். நமக்கும் ஏதோ திறமை இருக்கு போலிருக்கு. மெட்ராஸ் போனா இதை வச்சு டைரக்டர் ஆகிடலாம்னு வந்தேன். நான் பார்த்த ஒரு சில சாதாரண சினிமாக்களும் என்னை இங்க வர வச்சுது. ஆனால் இங்க வந்த பிறகுதான் மணிரத்னம், பாரதிராஜாங்கிற பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருப்பதையே தெரிஞ்சுகிட்டேன். அவங்க உருவாக்குற சினிமாவே வேறன்னு புரிஞ்சுது. மெல்ல அதை நோக்கி சிந்திக்க ஆரம்பிச்சேன்
என்ற சற்குணத்திடம், நீங்க நேசிச்ச மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தை விட உங்க படம் பெரிய அளவில் பேசப்படுது. அதை பற்றி என்ன நினைக்கிறீங்க என்றால், அப்படி சொல்வதை கூட கேட்க முடியாமல் அதிர்கிறார் சற்குணம்.
மணிரத்னம் சார் இந்தியாவின் அடையாளம். அவரு கொடுத்த ஹிட்டுகள் சாதாரணமானதில்லை. அவர் படங்களோட என் படத்தை கம்பேர் பண்ணவே முடியாது. எல்லா டைரக்டர்களும் எல்லா நேரத்திலும் வெற்றியடைவாங்கன்னு சொல்லவே முடியாது. ஏற்ற தாழ்வுகள் இருக்கவே செய்யும் என்கிற சற்குணம் அதற்கு மேல் அதை பற்றி விவாதிக்கவே
தயங்குகிறார்.
கோடம்பாக்கத்தின் மிக முக்கியமான அத்தனை இயக்குனர்களும் படத்தை பார்த்துவிட்டு சற்குணத்தை பாராட்டினார்களாம். 'ரொம்ப நாளாச்சு, இப்படி சிரிச்சு' என்று பாராட்டியிருக்கிறார் டைரக்டர் பாலா. இதுபோதும் சார். இதுக்காகதான்
காத்திருந்தேன். இன்னும் இரண்டு பேர் பாராட்டிட்டா களவாணி கிரீடத்தை கழற்றி வச்சுட்டு அடுத்த வேலையை பார்க்க போயிடுவேன். அந்த ரெண்டு பேர் பாரதிராஜாவும் பாக்யராஜும். படம் பார்க்க கட்டாயம் வர்றேன்னு சொல்லியிருக்காங்க என்கிறார் ஒரு குழந்தையின் குது£கலத்துடன்.....அடுத்த படத்தில் விரைவில்.......சற்குணம்........
பட்டுக்கோட்டை அய்யா தியேட்டர். இடைவேளை நேரத்தில், 'இவங்கதான்' என்று ஒரு தாயை நோக்கி கையை காட்டி ரகசியமாக சிலர் கிசுகிசுக்க, ஓடோடி வந்து அந்த தாயின் கையை பிடித்துக் கொள்கிறார்கள் சக தாய்மார்களும் ரசிகர்களும். உங்க புள்ளதான் டைரக்டராமே, நல்லாயிருக்கு தாயி படம்.... ஏதோ இந்த வார்த்தைக்காகவே இத்தனை வருடங்கள் காத்திருந்த மாதிரி அணையை உடைத்துக் கொள்கிறது கண்ணீர். புடவை முந்தானையில் துடைத்துக் கொண்டே அத்தனை பாராட்டையும் ஏற்றுக் கொள்கிற அந்த தாய் அம்சாவின் மூத்த மகன்தான் சற்குணம். களவாணி படத்தின் டைரக்டர்.
46 மார்க் கொடுத்திருக்கிறது ஆனந்த விகடன். 'நன்று' என்கிறது குமுதம். தமிழ் பத்திரிகைகள் மட்டுமல்ல, ஆங்கில பத்திரிகைகளும் விழுந்து விழுந்து பாராட்டுகிற இந்த படத்தின் டைரக்டர் சற்குணம் பத்தாம் வகுப்பு பெயிலானவர்
என்பதுதான் படத்தை விட சுவாரஸ்யமான பிளே!
இந்த படத்தில வர்ற களவாணி நானும் என் தம்பி நந்தகுமாரும்தான். ஒரு குடும்பத்தில ரெண்டு பேரு படிக்காம ஊரு சுத்தறது கேட்கறதுக்கே கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். எங்கப்பா அண்ணாமலை அமெரிக்காவுல இருக்கார். அவரு
அனுப்புற பணத்தில ஜாலியா செலவு பண்ணிட்டு படிக்காம ஊரை சுற்றிக்கிட்டு இருந்தோம். அவரு நாங்க நல்லா படிக்கறதா நினைச்சுகிட்டு அனுப்பிகிட்டே இருந்தார். திடீர்னு அப்பா ஊருக்கு வந்துட்டா நம்ம கதி என்னாகும்னு நினைச்சு பார்த்தேன். அந்த கற்பனையைதான் ஐந்து வருஷத்துக்கு முன்னாடி ஸ்கிரீன் பிளேயா எழுதி வச்சிருந்தேன். இப்ப படமாகவும் எடுத்தேன். இன்னைக்கு பட்டிதொட்டியெல்லாம் களவாணி பிச்சுகிட்டு போகுது. நல்லாயிருக்குன்னு நாலாபுறத்திலே இருந்தும் பாராட்டுகள்.
அமெரிக்காவுலேர்ந்து அப்பாவும் போன் பண்ணினார். அங்க படம் இன்னும் ரிலீஸ் ஆகலையாம். ஆனால், நிறைய கேள்விப்படுறேண்டா. பெருமையா இருக்குன்னு சொன்னார். படிக்காம அவரு நம்பிக்கையில மண்ணை போட்டுட்டேனேன்னு கவலையா இருந்தேன். எப்படியாவது அவரிடம் நல்ல பெயர் எடுக்கணும்னுதான் டைரக்ஷன் துறைக்கே வந்தேன். இத்தனை பாராட்டுகளுக்கு மத்தியில் அவரு பாராட்டு மட்டும் தனியா உசரமா வளர்ந்து நிக்குது நான் படத்தில காட்டிய நாத்து மாதிரியே என்கிறார் சற்குணம்.
ஒரத்தநாடு ஆமலாப்பட்டு கிராமத்திலிருந்து பதிமூணு வருஷத்துக்கு முன்னாடி சென்னைக்கு வந்த சற்குணத்தை பஞ்சநாதன் என்பவர்தான் சிதம்பரம் என்பவரிடம் சொல்லி தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனிடம் சேர்த்துவிட்டாராம். (எல்லார் பேரையும்
சொல்லணும். அதுதான் நன்றிக்கழகு என்கிறார்) அப்புறம் வசனகர்த்தா கலைமணியிடம் காப்பி ரைட்டிங்குக்காக சேர்ந்தாராம். ஒரு நாளும் நான் பொருளாதார பிரச்சனையால் கஷ்டப்பட்டதில்லை. நான் ஐயாயிரம் எதிர்பார்த்தால்
அப்பாவிடமிருந்து இருபத்தைந்தாயிரம் வரும். அவர் தந்த நிழலில் நான் சுகமாகதான் வேலை பார்த்தேன் என்கிற சற்குணம், பின்பு ஏ.எல்.அழகப்பனின் மகன் விஜய்யிடம் இணை இயக்குனராக கிரீடம் படத்தில் பணியாற்றியிருக்கிறார்.
ஹீரோ விமலும் இவரும் பத்து வருட நண்பர்கள். மாப்ளே, நீ முதலில் ஜெயிச்சா எனக்கு வாய்ப்பு கொடு, நான் முதலில் ஜெயிச்சா உனக்கு வாய்ப்பு தர்றேன் என்று பேசிக் கொள்வார்களாம் இருவரும்.
இந்த களவாணி கதை முழுக்க முழுக்க விமலுக்கு தெரியும். இதில ஹீரோயினுக்கு அண்ணனா வர்ற கேரக்டரில்தான் நடிக்கணும் என்று ரொம்ப ஆசைப்பட்டான் விமல். கதையை மாதவனிடம் சொல்வதற்காகதான் அவருடைய மேனேஜர் நசீர் சாரை மீட் பண்ணினேன். கதையை கேட்டவர், இதை நானே தயாரிக்கிறேன் என்றார். அப்போது பசங்க ரிலீஸ்
ஆகவில்லை. அதில ஹீரோவா நடிக்கிற விமல் நடிச்சா நல்லாயிருக்கும்னு நான் சொன்னேன். படம் வர்றதுக்கு முன்னாடி விமலை கமிட் பண்ண நசீருக்கு கொஞ்சம் தயக்கம் இருந்திச்சு. இருந்தாலும் என்னுடைய வற்புறுத்தலால் சம்மதிச்சார்.
நான் எதிர்பார்த்த மாதிரி பசங்க படம் பெரிய ஹிட் ஆனது. நாங்க தைரியமா எங்க படத்தை ஆரம்பிச்சோம் என்று களவாணி உருவான கதையை சுருக்கமாக சொல்கிறார் சற்குணம்.
படத்தில் எல்லாரையும் கவர்ந்த விஷயம் அறிக்கி LC 112 கூட்டு. (புரியாதவர்கள் படம் பார்க்க) இந்த எழுத்துக்களின் மீது சில திருத்தங்கள் செய்தால் மகேஷ் என்று படிக்கலாம். கதாநாயகி மகேஷ்வரியிடம் இதை சொல்லியே மிரட்டுவார் விமல். ஏதோ உரத்தின் பெயராக்கும் என்று ஊர் பெரிசுகளும் பேசிக் கொள்வார்கள். இந்த ஐடியா உருவானது எப்படி என்றால் சுவாரஸ்யமாக சொல்ல ஆரம்பிக்கிறார் சற்குணம்.
நான் டென்த் பெயில் ஆன பிறகு, பெயில் ஆன விஷயத்தை ஊருக்குள் மறை ச்சுட்டு அதுக்காகவே ஐடிஐ யில் சேர்ந்தேன். அப்போ என்னோட படிச்சவன்தான் சுகுமார். அவன் மகேஷ்வரிங்கிற பொண்ணை லவ் பண்ணினான். நோட்டுல இப்படிதான் LC 112 ன்னு எழுதி வச்சிருப்பான். ஒருநாள் அதில் சில கோடுகளை போட்டுக்காட்டி மகேஷ்வரின்னு மாத்தினான். அந்த விஷயத்தைதான் இப்போ படத்தில கொஞ்சம் விரிவாக்கியிருந்தேன். இப்போ துபாய்ல இருக்கான் சுகுமார். டிரெய்லரில்
இந்த விஷ§வலை பார்த்துட்டு அங்கேயிருந்து போன் பண்ணி, மச்சான்... நீ பழசை மறக்கலைடான்னு சந்தோஷப்பட்டான்.
நான் இன்னைக்கு டைரக்டர் ஆனதுக்கு காரணமே இது மாதிரி இன்ஸ்பிரேஷன்ஸ்தான். என் தம்பியோட ஸ்கூல்ல ஒரு பையன் து£ளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கேங்கிற பாடலை அப்படியே ட்யூனை மட்டும் வச்சுகிட்டு வார்த்தைகளை மாற்றி எழுதி பாடி பிரைஸ் வாங்கினான். இதை தம்பி எங்கிட்ட சொல்லவும், நானும் அதே மாதிரி ட்ரை
பண்ணி வேறொரு பையனுக்கு எழுதி கொடுத்தேன். அடிச்சுது பிரைஸ். நமக்கும் ஏதோ திறமை இருக்கு போலிருக்கு. மெட்ராஸ் போனா இதை வச்சு டைரக்டர் ஆகிடலாம்னு வந்தேன். நான் பார்த்த ஒரு சில சாதாரண சினிமாக்களும் என்னை இங்க வர வச்சுது. ஆனால் இங்க வந்த பிறகுதான் மணிரத்னம், பாரதிராஜாங்கிற பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருப்பதையே தெரிஞ்சுகிட்டேன். அவங்க உருவாக்குற சினிமாவே வேறன்னு புரிஞ்சுது. மெல்ல அதை நோக்கி சிந்திக்க ஆரம்பிச்சேன்
என்ற சற்குணத்திடம், நீங்க நேசிச்ச மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தை விட உங்க படம் பெரிய அளவில் பேசப்படுது. அதை பற்றி என்ன நினைக்கிறீங்க என்றால், அப்படி சொல்வதை கூட கேட்க முடியாமல் அதிர்கிறார் சற்குணம்.
மணிரத்னம் சார் இந்தியாவின் அடையாளம். அவரு கொடுத்த ஹிட்டுகள் சாதாரணமானதில்லை. அவர் படங்களோட என் படத்தை கம்பேர் பண்ணவே முடியாது. எல்லா டைரக்டர்களும் எல்லா நேரத்திலும் வெற்றியடைவாங்கன்னு சொல்லவே முடியாது. ஏற்ற தாழ்வுகள் இருக்கவே செய்யும் என்கிற சற்குணம் அதற்கு மேல் அதை பற்றி விவாதிக்கவே
தயங்குகிறார்.
கோடம்பாக்கத்தின் மிக முக்கியமான அத்தனை இயக்குனர்களும் படத்தை பார்த்துவிட்டு சற்குணத்தை பாராட்டினார்களாம். 'ரொம்ப நாளாச்சு, இப்படி சிரிச்சு' என்று பாராட்டியிருக்கிறார் டைரக்டர் பாலா. இதுபோதும் சார். இதுக்காகதான்
காத்திருந்தேன். இன்னும் இரண்டு பேர் பாராட்டிட்டா களவாணி கிரீடத்தை கழற்றி வச்சுட்டு அடுத்த வேலையை பார்க்க போயிடுவேன். அந்த ரெண்டு பேர் பாரதிராஜாவும் பாக்யராஜும். படம் பார்க்க கட்டாயம் வர்றேன்னு சொல்லியிருக்காங்க என்கிறார் ஒரு குழந்தையின் குது£கலத்துடன்.....அடுத்த படத்தில் விரைவில்.......சற்குணம்........
raj001- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா
LC 112 இடை எப்படி மாத்தினால் மகேஷ் என்று வரும் படம் பார்க்காதவர் சொல்லுங்கள் பார்க்கலாம்.........
அன்புடன் அருண்.....
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
raj001- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா
![எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» களவாணி – ஒரு பார்வை
» இந்த செல்போன் வந்தாலும் வந்திச்சு….
» எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’
» களவாணி
» அடியே நீ களவாணி
» இந்த செல்போன் வந்தாலும் வந்திச்சு….
» எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’
» களவாணி
» அடியே நீ களவாணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|