புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா Poll_c10எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா Poll_m10எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா Poll_c10 
16 Posts - 59%
heezulia
எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா Poll_c10எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா Poll_m10எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா Poll_c10எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா Poll_m10எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா Poll_c10 
58 Posts - 62%
heezulia
எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா Poll_c10எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா Poll_m10எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா Poll_c10எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா Poll_m10எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா Poll_c10எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா Poll_m10எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா


   
   
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Sat Jul 10, 2010 12:59 pm

எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா

பட்டுக்கோட்டை அய்யா தியேட்டர். இடைவேளை நேரத்தில், 'இவங்கதான்' என்று ஒரு தாயை நோக்கி கையை காட்டி ரகசியமாக சிலர் கிசுகிசுக்க, ஓடோடி வந்து அந்த தாயின் கையை பிடித்துக் கொள்கிறார்கள் சக தாய்மார்களும் ரசிகர்களும். உங்க புள்ளதான் டைரக்டராமே, நல்லாயிருக்கு தாயி படம்.... ஏதோ இந்த வார்த்தைக்காகவே இத்தனை வருடங்கள் காத்திருந்த மாதிரி அணையை உடைத்துக் கொள்கிறது கண்ணீர். புடவை முந்தானையில் துடைத்துக் கொண்டே அத்தனை பாராட்டையும் ஏற்றுக் கொள்கிற அந்த தாய் அம்சாவின் மூத்த மகன்தான் சற்குணம். களவாணி படத்தின் டைரக்டர்.

46 மார்க் கொடுத்திருக்கிறது ஆனந்த விகடன். 'நன்று' என்கிறது குமுதம். தமிழ் பத்திரிகைகள் மட்டுமல்ல, ஆங்கில பத்திரிகைகளும் விழுந்து விழுந்து பாராட்டுகிற இந்த படத்தின் டைரக்டர் சற்குணம் பத்தாம் வகுப்பு பெயிலானவர்
என்பதுதான் படத்தை விட சுவாரஸ்யமான பிளே!

இந்த படத்தில வர்ற களவாணி நானும் என் தம்பி நந்தகுமாரும்தான். ஒரு குடும்பத்தில ரெண்டு பேரு படிக்காம ஊரு சுத்தறது கேட்கறதுக்கே கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். எங்கப்பா அண்ணாமலை அமெரிக்காவுல இருக்கார். அவரு
அனுப்புற பணத்தில ஜாலியா செலவு பண்ணிட்டு படிக்காம ஊரை சுற்றிக்கிட்டு இருந்தோம். அவரு நாங்க நல்லா படிக்கறதா நினைச்சுகிட்டு அனுப்பிகிட்டே இருந்தார். திடீர்னு அப்பா ஊருக்கு வந்துட்டா நம்ம கதி என்னாகும்னு நினைச்சு பார்த்தேன். அந்த கற்பனையைதான் ஐந்து வருஷத்துக்கு முன்னாடி ஸ்கிரீன் பிளேயா எழுதி வச்சிருந்தேன். இப்ப படமாகவும் எடுத்தேன். இன்னைக்கு பட்டிதொட்டியெல்லாம் களவாணி பிச்சுகிட்டு போகுது. நல்லாயிருக்குன்னு நாலாபுறத்திலே இருந்தும் பாராட்டுகள்.

அமெரிக்காவுலேர்ந்து அப்பாவும் போன் பண்ணினார். அங்க படம் இன்னும் ரிலீஸ் ஆகலையாம். ஆனால், நிறைய கேள்விப்படுறேண்டா. பெருமையா இருக்குன்னு சொன்னார். படிக்காம அவரு நம்பிக்கையில மண்ணை போட்டுட்டேனேன்னு கவலையா இருந்தேன். எப்படியாவது அவரிடம் நல்ல பெயர் எடுக்கணும்னுதான் டைரக்ஷன் துறைக்கே வந்தேன். இத்தனை பாராட்டுகளுக்கு மத்தியில் அவரு பாராட்டு மட்டும் தனியா உசரமா வளர்ந்து நிக்குது நான் படத்தில காட்டிய நாத்து மாதிரியே என்கிறார் சற்குணம்.

ஒரத்தநாடு ஆமலாப்பட்டு கிராமத்திலிருந்து பதிமூணு வருஷத்துக்கு முன்னாடி சென்னைக்கு வந்த சற்குணத்தை பஞ்சநாதன் என்பவர்தான் சிதம்பரம் என்பவரிடம் சொல்லி தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனிடம் சேர்த்துவிட்டாராம். (எல்லார் பேரையும்
சொல்லணும். அதுதான் நன்றிக்கழகு என்கிறார்) அப்புறம் வசனகர்த்தா கலைமணியிடம் காப்பி ரைட்டிங்குக்காக சேர்ந்தாராம். ஒரு நாளும் நான் பொருளாதார பிரச்சனையால் கஷ்டப்பட்டதில்லை. நான் ஐயாயிரம் எதிர்பார்த்தால்
அப்பாவிடமிருந்து இருபத்தைந்தாயிரம் வரும். அவர் தந்த நிழலில் நான் சுகமாகதான் வேலை பார்த்தேன் என்கிற சற்குணம், பின்பு ஏ.எல்.அழகப்பனின் மகன் விஜய்யிடம் இணை இயக்குனராக கிரீடம் படத்தில் பணியாற்றியிருக்கிறார்.

ஹீரோ விமலும் இவரும் பத்து வருட நண்பர்கள். மாப்ளே, நீ முதலில் ஜெயிச்சா எனக்கு வாய்ப்பு கொடு, நான் முதலில் ஜெயிச்சா உனக்கு வாய்ப்பு தர்றேன் என்று பேசிக் கொள்வார்களாம் இருவரும்.

இந்த களவாணி கதை முழுக்க முழுக்க விமலுக்கு தெரியும். இதில ஹீரோயினுக்கு அண்ணனா வர்ற கேரக்டரில்தான் நடிக்கணும் என்று ரொம்ப ஆசைப்பட்டான் விமல். கதையை மாதவனிடம் சொல்வதற்காகதான் அவருடைய மேனேஜர் நசீர் சாரை மீட் பண்ணினேன். கதையை கேட்டவர், இதை நானே தயாரிக்கிறேன் என்றார். அப்போது பசங்க ரிலீஸ்
ஆகவில்லை. அதில ஹீரோவா நடிக்கிற விமல் நடிச்சா நல்லாயிருக்கும்னு நான் சொன்னேன். படம் வர்றதுக்கு முன்னாடி விமலை கமிட் பண்ண நசீருக்கு கொஞ்சம் தயக்கம் இருந்திச்சு. இருந்தாலும் என்னுடைய வற்புறுத்தலால் சம்மதிச்சார்.
நான் எதிர்பார்த்த மாதிரி பசங்க படம் பெரிய ஹிட் ஆனது. நாங்க தைரியமா எங்க படத்தை ஆரம்பிச்சோம் என்று களவாணி உருவான கதையை சுருக்கமாக சொல்கிறார் சற்குணம்.

படத்தில் எல்லாரையும் கவர்ந்த விஷயம் அறிக்கி LC 112 கூட்டு. (புரியாதவர்கள் படம் பார்க்க) இந்த எழுத்துக்களின் மீது சில திருத்தங்கள் செய்தால் மகேஷ் என்று படிக்கலாம். கதாநாயகி மகேஷ்வரியிடம் இதை சொல்லியே மிரட்டுவார் விமல். ஏதோ உரத்தின் பெயராக்கும் என்று ஊர் பெரிசுகளும் பேசிக் கொள்வார்கள். இந்த ஐடியா உருவானது எப்படி என்றால் சுவாரஸ்யமாக சொல்ல ஆரம்பிக்கிறார் சற்குணம்.

நான் டென்த் பெயில் ஆன பிறகு, பெயில் ஆன விஷயத்தை ஊருக்குள் மறை ச்சுட்டு அதுக்காகவே ஐடிஐ யில் சேர்ந்தேன். அப்போ என்னோட படிச்சவன்தான் சுகுமார். அவன் மகேஷ்வரிங்கிற பொண்ணை லவ் பண்ணினான். நோட்டுல இப்படிதான் LC 112 ன்னு எழுதி வச்சிருப்பான். ஒருநாள் அதில் சில கோடுகளை போட்டுக்காட்டி மகேஷ்வரின்னு மாத்தினான். அந்த விஷயத்தைதான் இப்போ படத்தில கொஞ்சம் விரிவாக்கியிருந்தேன். இப்போ துபாய்ல இருக்கான் சுகுமார். டிரெய்லரில்
இந்த விஷ§வலை பார்த்துட்டு அங்கேயிருந்து போன் பண்ணி, மச்சான்... நீ பழசை மறக்கலைடான்னு சந்தோஷப்பட்டான்.

நான் இன்னைக்கு டைரக்டர் ஆனதுக்கு காரணமே இது மாதிரி இன்ஸ்பிரேஷன்ஸ்தான். என் தம்பியோட ஸ்கூல்ல ஒரு பையன் து£ளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கேங்கிற பாடலை அப்படியே ட்யூனை மட்டும் வச்சுகிட்டு வார்த்தைகளை மாற்றி எழுதி பாடி பிரைஸ் வாங்கினான். இதை தம்பி எங்கிட்ட சொல்லவும், நானும் அதே மாதிரி ட்ரை
பண்ணி வேறொரு பையனுக்கு எழுதி கொடுத்தேன். அடிச்சுது பிரைஸ். நமக்கும் ஏதோ திறமை இருக்கு போலிருக்கு. மெட்ராஸ் போனா இதை வச்சு டைரக்டர் ஆகிடலாம்னு வந்தேன். நான் பார்த்த ஒரு சில சாதாரண சினிமாக்களும் என்னை இங்க வர வச்சுது. ஆனால் இங்க வந்த பிறகுதான் மணிரத்னம், பாரதிராஜாங்கிற பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருப்பதையே தெரிஞ்சுகிட்டேன். அவங்க உருவாக்குற சினிமாவே வேறன்னு புரிஞ்சுது. மெல்ல அதை நோக்கி சிந்திக்க ஆரம்பிச்சேன்
என்ற சற்குணத்திடம், நீங்க நேசிச்ச மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தை விட உங்க படம் பெரிய அளவில் பேசப்படுது. அதை பற்றி என்ன நினைக்கிறீங்க என்றால், அப்படி சொல்வதை கூட கேட்க முடியாமல் அதிர்கிறார் சற்குணம்.

மணிரத்னம் சார் இந்தியாவின் அடையாளம். அவரு கொடுத்த ஹிட்டுகள் சாதாரணமானதில்லை. அவர் படங்களோட என் படத்தை கம்பேர் பண்ணவே முடியாது. எல்லா டைரக்டர்களும் எல்லா நேரத்திலும் வெற்றியடைவாங்கன்னு சொல்லவே முடியாது. ஏற்ற தாழ்வுகள் இருக்கவே செய்யும் என்கிற சற்குணம் அதற்கு மேல் அதை பற்றி விவாதிக்கவே
தயங்குகிறார்.

கோடம்பாக்கத்தின் மிக முக்கியமான அத்தனை இயக்குனர்களும் படத்தை பார்த்துவிட்டு சற்குணத்தை பாராட்டினார்களாம். 'ரொம்ப நாளாச்சு, இப்படி சிரிச்சு' என்று பாராட்டியிருக்கிறார் டைரக்டர் பாலா. இதுபோதும் சார். இதுக்காகதான்
காத்திருந்தேன். இன்னும் இரண்டு பேர் பாராட்டிட்டா களவாணி கிரீடத்தை கழற்றி வச்சுட்டு அடுத்த வேலையை பார்க்க போயிடுவேன். அந்த ரெண்டு பேர் பாரதிராஜாவும் பாக்யராஜும். படம் பார்க்க கட்டாயம் வர்றேன்னு சொல்லியிருக்காங்க என்கிறார் ஒரு குழந்தையின் குது£கலத்துடன்.....அடுத்த படத்தில் விரைவில்.......சற்குணம்........

raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Sat Jul 10, 2010 1:03 pm

LC 112 இடை எப்படி மாத்தினால் மகேஷ் என்று வரும் படம் பார்க்காதவர் சொல்லுங்கள் பார்க்கலாம்......... ஜாலி ஜாலி ஜாலி அன்புடன் அருண்.....

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 1:11 pm

எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா 678642 எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா 678642




எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jul 10, 2010 1:21 pm

எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா 677196 எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா 677196 மேலும் வளர வாழ்த்துகள்!!! எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா 154550 எப்படி வந்திச்சு LC 112 -களவாணி கலாட்டா 154550



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக