புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோழனா.... துரோகியா.... நிறம் மாறும் கே.பி? Poll_c10தோழனா.... துரோகியா.... நிறம் மாறும் கே.பி? Poll_m10தோழனா.... துரோகியா.... நிறம் மாறும் கே.பி? Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தோழனா.... துரோகியா.... நிறம் மாறும் கே.பி? Poll_c10தோழனா.... துரோகியா.... நிறம் மாறும் கே.பி? Poll_m10தோழனா.... துரோகியா.... நிறம் மாறும் கே.பி? Poll_c10 
3 Posts - 8%
heezulia
தோழனா.... துரோகியா.... நிறம் மாறும் கே.பி? Poll_c10தோழனா.... துரோகியா.... நிறம் மாறும் கே.பி? Poll_m10தோழனா.... துரோகியா.... நிறம் மாறும் கே.பி? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தோழனா.... துரோகியா.... நிறம் மாறும் கே.பி? Poll_c10தோழனா.... துரோகியா.... நிறம் மாறும் கே.பி? Poll_m10தோழனா.... துரோகியா.... நிறம் மாறும் கே.பி? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தோழனா.... துரோகியா.... நிறம் மாறும் கே.பி? Poll_c10தோழனா.... துரோகியா.... நிறம் மாறும் கே.பி? Poll_m10தோழனா.... துரோகியா.... நிறம் மாறும் கே.பி? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தோழனா.... துரோகியா.... நிறம் மாறும் கே.பி?


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 09, 2010 6:56 pm

தோழனா.... துரோகியா.... நிறம் மாறும் கே.பி?


'நல்லவரா... கெட்டவரா?' - ஈழ ஆதரவுத் தமிழர்களைக் கடந்த சில வாரங்களாக மீண்டும் உலுக்கத் தொடங்கிய கேள்வி இது. விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளராகவும், பிரபாகரனின் ஆருயிர் நண்பராகவும் இருந்த கே.பி. என்கிற குமரன் பத்மநாபன் இப்போது சிங்கள அரசின் செல்லப் பிள்ளையாக வலம் வருகிறார் எனக் கிளம்பிய செய்திகளால்தான் இந்தக் கேள்வி!

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட கே.பி., ரகசியமான இடத்தில் இலங்கை அரசால் விசாரிக்கப்பட்டார். அவர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகவும், அவரைக் கொன்றுவிட சிங்கள அதிகாரிகள் முயற்சிப்பதாகவும் அடுத்தடுத்து செய்திகள் கிளம்பின. ஆனால், இடைப்பட்ட காலத்தில் என்ன மன மாற்றங்கள் நிகழ்ந்ததோ... சிங் கள அதிகாரிகள் புடைசூழ
நடை போட்டு வரும் கே.பி., எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகக் களம் இறக்கப்படப்போவதாக அரசுத் தரப்பில் இருந்தே செய்திகள் கசியவிடப் படுகின்றன.


இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்க மூவர் குழுவை அனுப்பி ஐ.நா தீவிரம் காட்டி வரும் நிலையில்... கே.பி., சிங்கள அரசுக்கு நெருக்கமாக மாறியதாகச் சொல்லப்படுவது உலகத் தமிழர்களை அதிரவைத்திருக்கிறது. சமீபத்தில் கே.பி. மூலமாக சர்வதேசத் தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்பது பேரை இலங்கைக்கு வரவழைத்துப் பேசியது சிங்கள அரசு. அதில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான கலாநிதி அருள்குமார் என்பவர்தான் கே.பி-யின் தலைகீழ் மாற்றத்தை வெளியுலகுக்குச் சொல்லி அதிர வைத்திருக்கிறார்.

''கோத்தபய ராஜபக்ஷேவைப் பார்த்ததும் கட்டி அணைக்க முயன்றார் கே.பி. போர்க் காலத் திலேயே கே.பி-யைச் சந்தித்ததாக கோத்தபய சொன்னார். புலம் பெயர்த் தமிழர்கள் எடுத்து வரும் அரசியல் நடவடிக்கைகளை அப்போது கே.பி. குற்றம்சாட்டினார். அப்போது தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என்றும் அங்கிருந்தவர்கள் விமர்சித்தார்கள்'' எனச் சொல்லி இருக்கும் கலாநிதி அருள்குமார், கூடுதலான அதிர்வுகளைத் தக்க நேரத்தில் விளக்கும் முடிவில் இருக்கிறாராம்.

கே.பி-யின் மாற்றம் குறித்து இலங்கையின் தமிழ்ப் பிரதிநிதிகள் சிலரிடம் பேசினோம். ''கே.பி-யின் நிலைப்பாடு என்னவென்று உறுதியாகத் தெரியவில்லை. கே.பி. பிடிபட்டு இத்தனை நாட்கள் ஆகியும் அரசுத் தரப்பு அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. கொழும்பு விசுவபாயவில் உள்ள ஆடம்பர வீட்டில் தங்கவைத்து, எல்லாவித வசதிகளையும் சிங்கள அரசு கே.பி-க்கு வழங்கி வருவதாகவும் ஒரு தகவல். கே.பி-யை வட மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதன் மூலமாக, சர்வதேச சமூகத்தைத் திசை திருப்ப ராஜபக்ஷே திட்டம் போடுகிறார். இதற்காக கே.பி-க்கு பொது மன்னிப்பு வழங்கும் ஏற்பாடுகளும் தீவிரமாக நடக்கின்றன. சிங்கள அரசின் பேச்சாளரும் ஊடகத் துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல பகிரங்கமாகவே, 'கே.பி-க்கு மன்னிப்பு வழங்கப்பட்டால்... அதில் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை!' எனச் சொல்லி இருக்கிறார். இன்னமும் கே.பி-யை நம்பும் புலம் பெயர்த் தமிழர்கள் மூலமாக நிதி திரட்டும் திட்டமும் சிங்கள அரசுக்கு இருக்கிறது.

சர்வதேச அளவில் ஆயுதங்கள் வாங்கியது தொடங்கி, சொத்துப் பராமரிப்பு வரை முக்கியமான பல வேலைகளைப் புலிகளுக்காகச் செய்தவர் கே.பி. ஐந்து கப்பல்கள், 600-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் குறித்து அவரிடம் பல விஷயங்களை சிங்கள அரசு விசாரித்து வருகிறது. அவரை அரசுத் தரப்பு சாட்சியாக்கி, புலிகள் மீது மலைக்கவைக்கும் பழிகளை சிங்கள அரசு பரப்பப்போகிறது. அதற்காக வவுனியாவில் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாமுக்கு சமீபத்தில் கே.பி. அழைத்துச் செல்லப்பட்டார். சந்தேகத்துக்கு இடமான புலிப் பிரமுகர்களை அவர் சந்தித்து இருக்கிறார். கோத்தபய ராஜபக்ஷேவுடன் கே.பி. காட்டும் நெருக்கம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சிங்கள அரசுக்கு இப்போது இரட்டைத் தலைவலியாக இருப்பது போர்க் குற்றப் புகார்களும், நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற் கான முன்னெடுப்புகளும்தான். கே.பி. மூலமாகவே இந்த இரு பிரச்னை களையும் சரிக்கட்டப் பார்க்கிறது சிங்கள அரசு. கருணாவுக்கு மாற் றாக பிரபாகரனால் நம்பிக்கையோடு நியமிக்கப்பட்ட கேணல் ராம் எப்படி சிங்கள அரசின் இயக்குதல்படி காட்டுக்குள் திரியும் புலிகளையும், சர்வதேச ஈழ ஆதரவாளர்களையும் குழப்புகிறாரோ... அதேபோல்தான் கே.பி-யும் சிங்கள அரசின் கைப்பிள்ளையாகி இருக்கிறார்'' எனச் சொன்னவர்கள் கே.பி. பிடிபட்ட
விஷயத்தையும் சந்தேகத்தோடு பார்க்கிறார்கள்.

தோழனா.... துரோகியா.... நிறம் மாறும் கே.பி? P3

''அமைதிக் காலத்திலேயே கே.பி-யுடன் பேசுவதோ, சந்திப்பதோ சாதாரண காரியம் இல்லை. ஆனால், உக்கிரப் போர் முடிந்த தருணத்தில், சிங்கள அரசின் முழுக் கவனமும் கே.பி. பக்கம்தான் திரும்பும் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தச் சூழலில் அவர் மலேசியாவில் பிடிபட்டது நம்புகிற செய்தியே இல்லை. பிரபாகரன் மரணம் குறித்து முதலில் இருக்கிறார் என்றும், பின்னர் இரங் கல் தெரிவிக்கச் சொல்லியும் ஈழ ஆதரவாளர்கள் எல்லோரையும் குழப்பினார் கே.பி. போரின் இறுதி நேரத்தில் புலிகளுடனும் சர்வதேசப் பிரதிநிதிகளுடனும் பேசி கே.பி. எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தார் என்கிற சந்தேகத்தையும் இப்போது தவிர்க்க முடியவில்லை!'' என்கிறார்கள் அதிர்ச்சியைக்கூட்டி.
ஆனால், கே.பி-யை உறுதியாக நம்பும் புலி ஆதரவுப் பிரமுகர்கள் சிலரோ, ''சிங்கள அரசின் இரும்பு வலைக்குள் இருக்கும் கே.பி-யால் அரசுத் தரப்பை எதிர்த்து என்ன செய்ய முடியும்? எப்போதுமே யாராலும் நெருங்க முடியாத அளவுக்கு எச்சரிக்கையாக இருக்கும் கே.பி., சர்வதேச ஈழ ஆர்வலர்களை ஒன்று திரட்டத்தான் வெளியுலகுக்கு வந்தார். அதுதான் அவரைச் சிக்க வைத்தது.

முள்ளிவாய்க்கால் போர் உக்கிரமானபோது தலைவர் பிரபாகரனைத் தப்பவைக்க அவர் எடுத்த முயற்சிகள் தற்போது நாடு கடந்த தமிழீழ அரசை அமைக்கப் போராடும் பிரதிநிதிகளுக்கு நன்றாகத் தெரியும். கடைசிக் கட்டக் காலத்தில் ஆயுதங்களை சேகரித்துக் கொடுக்க முடியாமல் யாருடைய உதவிகளை எல்லாம் அவர் நாடினார் என்பதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. தற்போது முகாம்களில் அடைக்கப்பட்டு இருக்கும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்களை மீட்பதற்காகத்தான் அவர் சிங்கள அரசோடு இணக்கமாக இருக்கிறார் என்பது எங்களின் யூகம்!'' என்கிறார்கள்.
திருப்போரூர் முருகன் கோயிலில் பிரபாகரன் - மதிவதனிக்குத் திருமணம் நடந்தபோது, மாப்பிள்ளைத் தோழனாக இருந்தவர் கே.பி. தோள் கொடுத்த தோழன் துரோகியா இல்லையா என்பது புலித் தலைவரின் மரணம்(?)போலவே புரியாத புதிர்தான்!




தோழனா.... துரோகியா.... நிறம் மாறும் கே.பி? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 09, 2010 7:07 pm

தகவலுக்கு நன்றி தோழனா.... துரோகியா.... நிறம் மாறும் கே.பி? 678642




தோழனா.... துரோகியா.... நிறம் மாறும் கே.பி? Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக