புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவை, "புது' வேலைநிறுத்தம் I_vote_lcapதேவை, "புது' வேலைநிறுத்தம் I_voting_barதேவை, "புது' வேலைநிறுத்தம் I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
தேவை, "புது' வேலைநிறுத்தம் I_vote_lcapதேவை, "புது' வேலைநிறுத்தம் I_voting_barதேவை, "புது' வேலைநிறுத்தம் I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தேவை, "புது' வேலைநிறுத்தம் I_vote_lcapதேவை, "புது' வேலைநிறுத்தம் I_voting_barதேவை, "புது' வேலைநிறுத்தம் I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
தேவை, "புது' வேலைநிறுத்தம் I_vote_lcapதேவை, "புது' வேலைநிறுத்தம் I_voting_barதேவை, "புது' வேலைநிறுத்தம் I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
தேவை, "புது' வேலைநிறுத்தம் I_vote_lcapதேவை, "புது' வேலைநிறுத்தம் I_voting_barதேவை, "புது' வேலைநிறுத்தம் I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவை, "புது' வேலைநிறுத்தம் I_vote_lcapதேவை, "புது' வேலைநிறுத்தம் I_voting_barதேவை, "புது' வேலைநிறுத்தம் I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
தேவை, "புது' வேலைநிறுத்தம் I_vote_lcapதேவை, "புது' வேலைநிறுத்தம் I_voting_barதேவை, "புது' வேலைநிறுத்தம் I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தேவை, "புது' வேலைநிறுத்தம் I_vote_lcapதேவை, "புது' வேலைநிறுத்தம் I_voting_barதேவை, "புது' வேலைநிறுத்தம் I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
தேவை, "புது' வேலைநிறுத்தம் I_vote_lcapதேவை, "புது' வேலைநிறுத்தம் I_voting_barதேவை, "புது' வேலைநிறுத்தம் I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவை, "புது' வேலைநிறுத்தம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 05, 2010 11:29 pm

மிகவும் முக்கியமான பிரச்னைகளில் அரசின் கவனத்தை ஈர்க்கவும், மக்களை ஓரணியில் திரட்டவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேலைநிறுத்தம், போராட்டம் போன்றவை மக்களாட்சியில் தேவைப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மக்களால் ஓர் அரசின் செயல்பாடுகளில் உள்ள தவறுகளுக்காக ஆளும்கட்சியைத் தண்டிக்க முடியும் என்கிற நிலையில், இடைப்பட்ட காலத்தில் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த சட்டப்பேரவை, மக்களவை போன்ற அமைப்புகள் இருந்தாலும் அடிப்படை வாழ்க்கையைப் பாதிக்கும் பிரச்னைகளில் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பைக் காட்டுவதைத் தவறாகக் கொள்ள முடியாது.

கூட்டணி ஆட்சியின் நல்ல அம்சம் என்று கருதப்பட்ட விஷயம், எந்தவொரு கட்சியும் தன்னிச்சையாகச் செயல்படமுடியாது என்பதுதான். பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்யும்போது, சர்வாதிகார முறையில் ஒரு பிரதமரோ, முதல்வரோ செயல்பட முடியாது என்பது நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இந்த நம்பிக்கையைக் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கூட்டணி அல்லது பிற கட்சிகளின் வெளி ஆதரவுடன் செயல்படும் அரசுகள் தகர்த்துவிட்டன.

தவறான அல்லது தங்களுக்கு ஏற்புடையதல்லாத முடிவுகளைப் பிரதமரோ, நிதியமைச்சரோ அல்லது கூட்டாட்சிக்குத் தலைமைதாங்கும் கட்சியோ எடுக்கும்போது கூட்டணிக் கட்சிகளும், ஆதரவு நல்கிடும் கட்சிகளும் சகித்துக்கொண்டு முடிவுகளை மௌனமாக ஏற்றுக்கொண்டதாகத்தான் கடந்த 20 ஆண்டு சரித்திரம் எடுத்துரைக்கிறது. இந்த மனசாட்சி மீறலுக்கு எந்தவொரு கட்சியும் விதிவிலக்கல்ல.

பதவியைத் தக்கவைத்துக் கொள்ளவும், குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடனும்தான் பல மாநிலக் கட்சிகள், ஏன், தேசியப் பார்வையுடன் செயல்படும் கட்சிகளும் கூட பல பிரச்னைகளை அணுகி, ஆளும்கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைக்குத் துணை போயிருக்கின்றன.

எந்தவொரு அரசியல் கட்சி அல்லது தலைவரின் மீதும் முழுமையான நம்பிக்கை இல்லாத காரணத்தால்தான் கடந்த 20 ஆண்டுகளாக சராசரி இந்தியக் குடிமகன் புத்திசாலித்தனமாக வாக்களித்து யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறான். முந்தைய பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானாலும், இன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானாலும், பல மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் செயல்பட வேண்டிய நிர்பந்தத்தை மக்கள் ஏற்படுத்தியதே, ஆட்சியாளர்கள், தன்னிச்சையாக மக்கள் விரோத நடவடிக்கையில், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டு விடலாகாது என்பதால்தான்.

ஆனால், மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையேற்றப் பிரச்னையில் கடந்த 15 ஆண்டுகளாக நடத்தப்படும் மோசடியில் இன்றைய ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் அரசை ஆதரித்த, ஆதரிக்கும் உதிரிக் கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காத பங்களிப்பை நல்கி வந்திருக்கின்றன. அதெல்லாம் பழங்கதை என்றாலும், இப்போது மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் விலையேற்றமும் அதற்கு எதிர்க்கட்சிகள் நடத்தும் பொது வேலைநிறுத்தமும் நமது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்க வைக்கின்றன.

ஒருபுறம், தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் எந்தவித வரம்புகளும் இல்லாமல் மோட்டார் வாகன உற்பத்தி அனுமதிக்கப்படுகிறது. இன்னொருபுறம் பெட்ரோல், டீசல் விலைகளை அவ்வப்போது உயர்த்தி அதன் சுமை பொதுமக்கள் தலையில் சுமத்தப்படுகிறது. ஏற்கெனவே விலைவாசி ஏற்றத்தால் விழி பிதுங்கி, வயிற்றில் ஈரத்துணியுடன் தூங்கவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தின் மீது மீண்டும் ஒரு சுமையாக, சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையும் உயர்த்தப்படுகிறது.

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிக்கின்றனவே தவிர, பெட்ரோலிய அமைச்சரைக் கட்டுப்படுத்தத் தயாராக இல்லை. இந்த விலையேற்றத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கும் கட்சிகளில் பல, ஆளும்தரப்பில் இருந்தபோது இதே நிலையைத்தான் கடைப்பிடித்தன என்பதை நாம் எப்படி மறந்துவிடமுடியும்?

அதனால்தான் பொது வேலைநிறுத்தம் மக்களை பெரிய அளவில் ஈர்க்குமா என்கிற சந்தேகம் வருகிறது. அடிக்கடி நடத்தப்படும் பொது வேலைநிறுத்தங்களும், போராட்டங்களும் வலுவாக நாடு தழுவிய வரவேற்பைப் பெறாமல் போனதற்கு, இந்தக் கட்சிகளின் முந்தைய நிலைப்பாடுகள் ஒரு காரணம். இரண்டாவதாக இதுபோன்ற போராட்டங்களாலும், வேலை நிறுத்தங்களாலும் என்னதான் நடந்துவிடப் போகிறது என்கிற பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சலிப்பும், வெறுப்பும் இன்னொரு காரணம்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலை உயர்வு என்பது ஒரு சில தனியார் நிறுவனங்களை திருப்திப்படுத்த எடுக்கப்பட்டிருக்கும் முடிவு என்பதும் வன்மையாகக் கண்டிக்கப்படுவதுடன் திரும்பப் பெறவேண்டியது என்பதும் சந்தேகத்துக்கு இடமில்லாதவை. மக்களின் எதிர்ப்பையும், அரசின் மீது விலைவாசி உயர்வால் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியையும் எப்படிக் காட்டுவது என்பதில்தான் நமக்கு மாறுபட்ட கருத்து.

பொது வேலைநிறுத்தம் எதிர்க்கட்சி வரிசையில் அணிவகுத்திருக்கும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை வேண்டுமானால் வெளிப்படுத்த உதவுமே தவிர, மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்குமா என்பது சந்தேகமே. உளப்பூர்வமாக எரிச்சலடைந்து இருக்கும் மக்களின் ஆத்திரத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தும் விதத்தில் அல்லவா ஒரு போராட்டம் நடத்தப்பட்டிருக்க வேண்டும்!

நாடு தழுவிய அளவில் ஒரு நாள், 24 மணி நேரம் யாரும் எந்த வாகனத்துக்கும் பெட்ரோலோ, டீசலோ போடுவதில்லை என்று முடிவெடுக்கும்படி மக்களுக்கு அறைகூவல் விடுத்து, அதன்மூலம் விலைவாசி உயர்வுக்கும் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கும் எதிராக ஒட்டுமொத்த இந்தியாவை கைகோக்க வைத்திருக்க வேண்டாமா? 24 மணி நேரம் நாடு தழுவிய அளவில் அத்தனை பெட்ரோல் நிலையங்களும், ஆள் அரவமின்றி காலியாக இருந்தால் அரசுக்குப் புரிந்திருக்கும் சராசரி இந்தியனின் கோபமும், அதிருப்தியும்.

விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலை உயர்வால் ஒட்டுமொத்த இந்தியாவுமே அதிருப்தியிலும் ஆத்திரத்திலும் ஆழ்ந்திருக்கிறது. ஆனால் இன்று நடைபெற இருக்கும் பொது வேலைநிறுத்தம் அந்த உணர்வுகளைப் பிரதிபலிக்குமா என்றால், சந்தேகம்தான். இதனால் ஆளும்கட்சி தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமா என்றால், செய்யாது.

மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட, மக்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்ளும் ஒரு தலைவன் இல்லாத குறை நன்றாகவே தெரிகிறது. காந்தி மகான்கள் அடிக்கடி தோன்றுவதில்லை!


நன்றி :தினமணி




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக