ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு

Go down

தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Empty தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு

Post by ரபீக் Mon Jul 05, 2010 7:07 pm

தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் பாரத் பந்த்துக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை. பள்ளிகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் அனைத்தும் வழக்கம் போல செயல்பட்டன. பேருந்துகள், ரயில்கள் இயங்கின.

கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நிறைந்த மாவட்டங்களில் மட்டுமே பந்துக்கு ஓரளவுக்கு ஆதரவு இருந்தது.

மாநிலம் முழுவதும் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் ஓரளவுக்கு இயங்கின. லாரிகள் தான் முழுமையாக ஓடவில்லை.

பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. அத்தியாவசியப் பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. பால், குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் வினியோகம் தடையின்றி நடைபெற்றது.

தமிழகத்தில் அதிமுக தலைமையில் 7 கட்சிகள் பந்த்தில் கலந்து கொண்டுள்ளன. ஆனால், இந்தப் போராட்டத்தில் பாமக, தேமுதிக பங்கேற்கவில்லை.

தொழிற்கூடங்கள் இயங்கவில்லை:

வணிகர் சங்கப் பேரவை பந்த்தில் கலந்துகொள்ளாது என அறிவித்ததால் தமிழகம் முழுவதுமே பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

திருப்பூர், நீலகிரி, கரூர் ஸ்தம்பிப்பு:

கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் தான் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் நிறைந்த கரூர் மாவட்டத்தில் பந்துக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. தனியார் பஸ்கள் இயங்கவில்லை. வணிக நிறுவனங்கள், டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை கம்பெனிகள், சாயப்பட்டறைகள், டீ கடை போன்றவை முழுவதுமாக மூடப்பட்டிருந்தன.

ஆனால் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் கல்லூரிகள், அரசு பேருந்துகள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவை வழக்கம் போல் இயங்கின.

திருப்பூரில் பந்த் முழு அளவில் இருந்தது. அங்கு பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள் முற்றிலும் இயங்கவில்லை.அரசு பஸ்களில் கூட்டம் இல்லாமல் குறைந்த அளவிலேயே ஓடின.

இங்கு 2.5 லட்சம் பின்னலாடைத் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். சுமார் 10,000 பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.

அவிநாசியில் 1 லட்சம் பனியன் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் முழுமையாக ஈடுபட்டனர்.

வெள்ளக்கோவிலில் கழிவுப் பஞ்சு ஆலைகள் முற்றிலும் மூடப்பட்டன. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

அதே போல தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டிருந்தன.

கோவையில்...:

கோவையிலும் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. தனியார் பேருந்துகள் ஓடவில்லை. அரசுப் பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. இங்கு ஆட்டோக்களும் பெருமளவில் ஓடவில்லை.

அதே போல நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூரிலும் கடைகள் பெருமளவில் அடைக்கப்பட்டிருந்தன..

சின்னசேலம், கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.

சென்னையில்..

சென்னையில் அரசுப் பேருந்துகள் இயங்கின. ஆனால் அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக்கில் பங்கேற்றிருப்பதால் முழு அளவில் பஸ்கள் ஓடவில்லை.

முக்கியச் சாலைகளில் வழக்கமாக காணப்படும் போக்குவரத்து நெரிசல் காணப்படவில்லை. பெருமளவில் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

லாரிகள் ஓடவில்லை

அதே நேரததில் தமிழகம் முழுவதும் லாரிப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

கேரளாவில் பந்த் முழு அளவில் நடைபெறுவதால் கேரளாவுக்கு செல்லும் லாரிகள் அனைத்தும் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டன. அதேபோல கோவை மாவட்டத்தில் வாலையாறு சோதனைச்சாவடியுடன் லாரிகள் அனைத்தும் சாலையோரமாக நிறுத்தப்பட்டன.

பந்தையொட்டி நேற்று முதலே தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்கள் மற்றும் நீண்ட தூரம் செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டு விட்டன. இவை ஆங்காங்கே உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகம், பெட்ரோல் பங்குகள், லாரி பட்டறைகளில் நிறுத்தப்பட்டிருந்தன.

நாமக்கல்லில் இருந்து வெளிமாநிலம் செல்லும் லாரிகள் நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

பலத்த பாதுகாப்பு:

மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக டிஜிபி லத்திகா சரண் தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கடைகளை மூடச் சொல்லி யாரேனும் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பந்த் வெற்றி:

காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் புதுச்சேரியில் பந்த் கிட்டத்தட்ட முழு வெற்றி அடைந்துள்ளது. அங்கு கடைகள் முழு அளவில் அடைக்கப்பட்டிருந்தன.

வர்த்தக நிறுவனங்கள் இயங்கவில்லை. தனியார் பேருந்துள் ஓடவில்லை. தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள் மிகக் குறைந்த அளவிலேயே ஓடின. ஆட்டோக்கள் ஓடவில்லை. போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துப் போயிருந்தது.

காரைக்காலிலும் பந்த் முழு வெற்றி பெற்றுள்ளது. அங்கும் தனியார் பள்ளிகள், பஸ்கள் இயங்கவில்லை. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
» தமிழகத்தில் இன்று 'பந்த்' போராட்டத்தை சமாளிக்கஒரு லட்சம் போலீஸ்
» நாளை பாஜகவின் பாரத் பந்த்: தமிழகத்தில் பஸ்-ரயில்கள் ஓடும்- ஆட்டோக்கள் ஓடாது- கடைகள் திறந்திருக்கும்
» தமிழகத்தில் தொடங்கியது "பந்த்": கடைகள் அடைப்பு; பஸ், ரயில்கள் ஓடுகின்றன
» தமிழகத்தில் மட்டும் தேர்தலை ஒத்திவையுங்களேன்... நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum