புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டில் நுழையும் முன்பு.. Poll_c10வீட்டில் நுழையும் முன்பு.. Poll_m10வீட்டில் நுழையும் முன்பு.. Poll_c10 
5 Posts - 63%
heezulia
வீட்டில் நுழையும் முன்பு.. Poll_c10வீட்டில் நுழையும் முன்பு.. Poll_m10வீட்டில் நுழையும் முன்பு.. Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வீட்டில் நுழையும் முன்பு.. Poll_c10வீட்டில் நுழையும் முன்பு.. Poll_m10வீட்டில் நுழையும் முன்பு.. Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் நுழையும் முன்பு..


   
   
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Sun Jul 04, 2010 10:32 pm

வீட்டில் நுழைய அனுமதி பெறுவது

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது). அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், 'திரும்பிப் போய் விடுங்கள்' என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் - அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன். (24:27-28)

வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (2:189)

யாருமே இல்லாத வீடுகளில் அத்தியாவசியப்பட்ட சமயங்களில் நுழைவது ஆகுமானது, அதாவது அந்த வீட்டினை விருந்தினர்களுக்காகத் தயார் செய்வது, மராமத்து வேலைகளுக்காக ஒழுங்கு செய்வது போன்றவற்றிற்காக அதில் நுழைய அதிகாரம் அல்லது அனுமதி பெற்றிருப்பவர் நுழையலாம்.

(எவரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது உங்கள் மீது குற்றமாகாது செய்வதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நன்கறிவான். (24:29)

உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் உண்பதற்குக் கூச்சப்படாதீர்கள், இன்னும் உறவினர்களின் வீடுகள் மற்றும் நண்பர்களின் வீடுகள் மற்றும் எந்த வீடுகளின் சாவிகள் யாரிடம் உள்ளனவோ அவர்கள் மறுப்புத் தெரிவிக்காத நிலையில் அவர்களது இல்லங்களில் நீங்கள் நுழைவதும் ஆகுமானதே.

(முஃமின்களே! உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீதும் குற்றமில்லை; முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை; உங்கள் மீதும் குற்றமில்லை; நீங்கள் உங்கள் சொந்த வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தைமார் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாய்மார் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரர் வீடுகிறலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயாரின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது எ(ந்த வீட்டுடைய)தின் சாவிகள் உங்கள் வசம் இருக்கின்றதோ (அதிலும்) அல்லது உங்கள் தோழரின் வீடுகளிலோ, நீங்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது. (24:61)

குழந்தைகளிடமும், வீட்டுப் பணியாளர்களிடமும் பெற்றோர்கள் வழக்கமாகத் தூங்கக் கூடிய நேரங்களில், அதாவது பஜ்ருத் தொழுகைக்கு முன்பு, மதிய நேரங்களில், மற்றும் இஷாவுக்குப் பின் உள்ள வேளைகளில் நுழைய வேண்டிய தேவை ஏற்பட்டால், அனுமதி பெற்றே தவிர உள்ளே நுழையக் கூடாது என்பதை அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். சந்தர்ப்பவசமாக அவர்கள் மறைவாக இருக்கும் நிலையில் எதையும் பார்த்து விட்டால், அதில் குற்றமேதுமில்லை, ஏனென்றால் அவர்கள் அந்த வீட்டினுள் வலம் வரக் கூடியவர்களாக இருக்கின்றார்கள், அத்தகையவர்களைத் தடுப்பது சிரமமான காரியம் தான். அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகின்றான் :

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் 'ளுஹர்' நேருத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை; இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்; இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன். (24:58)
அடுத்தவர் வீட்டில் எட்டிப் பார்க்கதீர்கள்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அனுமதி பெறாத நிலையில் எவரொருவர் இன்னொருவருடைய வீட்டினுள் (எட்டிப்) பார்க்கிறாரோ, அவருடைய கண்ணை (குத்தி) வெளியே எடுத்து விடுங்கள், இன்னும் அதற்கு எந்தவித இழப்பீட்டுத் தொகையையோ அல்லது இரத்த இழப்பீட்டையோ வழங்க வேண்டியதில்லை. (அஹ்மத், அல் முஸ்னத் 2-385, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 6046)

ஒரு பெண் முதலாவது அல்லது இரண்டாவது தடவை தலாக் சொல்லப்பட்டிருந்தால் (கணவனால் திரும்ப அழைத்துக் கொள்ளும் சந்தர்ப்பம் இருந்து கொண்டிருக்கும் நிலையில்) அவள் இத்தா இருக்கும் நிலையில் அவள் வீட்டை விட்டு வெளியில் செல்லவோ, அல்லது அவளை வீட்டை விட்டு வெளியேற்றவோ கூடாது, இன்னும் அவளது வாழ்க்கைத் தேவைகளுக்கானதை வழங்கப்பட வேண்டும். அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :

நபியே! நீங்கள் பெண்களைத் 'தலாக்' சொல்வீர்களானால் அவர்களின் 'இத்தா'வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுpக் கொள்ளுங்கள் தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெறியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது. இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்; (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறிய மாட்டீர்.(65:1)

வரம்பு மீறுகின்ற மனைவியை அவளது கணவன் வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் அவளிடமிருந்து விலகி இருக்கலாம், அதாவது இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களில் வழங்கியிருக்கின்ற அனுமதியின்படி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். வீட்டிற்கு உள்ளே விலகி இருப்பது என்பதற்கான திருமறையின் ஆதாரமாவது : ''எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்'' (4:34)

வீட்டிற்கு வெளியே விலகி இருப்பது என்பது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது மனைவிமார்களிடமிருந்து விலகி இருக்க நாடிய பொழுது, அவர்களை அவர்களது இடங்களில் விட்டு விட்டு, மனiவியர்களை விட்டுப் பிரிந்து வீட்டிற்கு வெளியே உள்ள அறைகளில் தங்கினார்கள். (புகாரீ, கிதாப் அல் தலாக், பாப் ஃபில் ஈலா')

இரவு நேரங்களில் ஒருவர் தனியாகத் தனது இல்லத்தில் இருப்பது கூடாது. இப்னு உமர் (ரலி) அவாகள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள் : ''தனித்திருப்பதையும் இன்னும் ஒருவன் இரவு நேரங்களில் தனித்திருப்பதும் கூடாது அல்லது பயணம் செய்வதும் கூடாது. (அஹ்மத் அல் முஸ்னத் 2-91) அதாவது தனித்திருப்பதால் ஏற்படும் தனிமை உணர்வு, எதிரிகளிடமிருந்து அல்லது திருடர்களிடமிருந்து தாக்குதல் நடைபெறுவதற்கான சாத்தியம், இன்னும் நோயாளியாக இருக்கும்பட்சத்தில் தனிமையில் இருப்பதன்றி இன்னொருவரும் அவருக்குத் துணைக்கு இருக்கும் பொழுது உதவ முடியும் என்பதனாலும். (ஃபத்ஹ் அல் ரப்பானீ 5-64)

பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சுவர் இல்லாத வீட்டுக் கூரையில் தூங்கக் கூடாது, அவ்வாறு தூங்கினால் நீங்கள் மேலிருந்து கீழே விழுந்து விட வாய்ப்புண்டு. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''பாதுகாப்பிற்கென (சுற்றுச்) சுவர் இல்லாத வீட்டுக் கூரைகளில் தூங்குபவருக்கு, அவருக்கு நிகழ்கின்ற (விபத்திற்கு) யாரும் பொறுப்பாக முடியாது''. (அபூதாவூது, அல் சுனன் 5041, ஸஹீஹ் அல் ஜாமிஇ 6113. அவ்ன் அல் மஃபூத் 13-384). அயர்ந்து தூங்கக் கூடியவர் உருண்டு கீழே விழுந்து விட வாய்ப்புண்டு, இன்னும் சுற்றுச் சுவர் இல்லையெனும் பொழுது அவர் தவறிக் கீழே விழுந்து கொலை செய்யப்படவும் வாய்ப்புண்டு. இந்த நிலையில் அவரது மரணித்திற்காக எவரையும் குற்றம் சொல்ல முடியாது அல்லது அவரின் கவனயீனத்தின் காரணமாக அல்லாஹ் தன்னுடைய பாதுகாப்பை விலக்கிக் கொண்டான், ஏனென்றால் அவர் படுக்கைக்குச் செல்லு முன்பு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். இதனைத் தான் மேற்கண்ட நபிமொழி நமக்கு விளக்குகின்றது.

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளான பூனை வாய் வைத்த பாத்திரம் மற்றும் அதில் நீர் அசுத்தமாகி விடாது அல்லது அது வாய் வைத்த உணவு நஜீஸாக - அசுத்தமாகி விடும். அப்துல்லா இப்னு அபீ கத்தாதா (ரலி) அவர்கள் தனது தந்தையின் வாயிலாக அறிவிக்கின்றார், அவருக்கென ஒளுச் செய்வதற்காக தண்ணீர் தயாராக வைக்கப்பட்டிருந்தது, அங்கே ஒரு பூனை வந்தது, அதில் உள்ள தண்ணீரை நக்கிக் குடித்தது. (பூனை வாய் வைத்த அந்த) தண்ணீரை எடுத்து, ஒளுச் செய்தார், அப்பொழுது, ஓ.. அபூ கத்தாதாவே..! பூனை அதில் வாய் வைத்து குடித்து விட்டதே..! (என்று கூறப்பட்ட பொழுது), இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன், (அதாவது) பூனை உங்களது குடும்பங்களில் ஒன்றானது, இன்னும் அது உங்களது வீடுகளைச் சுற்றி வலம் வரக் கூடியதாகவும் இருக்கின்றது'' என்றார்கள். (அஹ்மத் அல் முஸ்னத் 5-309, ஸஹீஹ் அல் ஜாமிஇ 3694). இன்னுமொரு நபிமொழியில், அவைகள் (பூனைகள்) அசுத்தமற்றவை, அவை உங்களைச் சுற்றி வலம் வரக் கூடியவை (குழந்தைகளையும், பணியாளர்களையும் இன்னும் இவர்களைப் போல). (முஸ்னத் அஹ்மத் 5-309, ஸஹீஹ் அல் ஜாமிஇ 2437)


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jul 05, 2010 11:03 am

அழகான தெளிவான விளக்கம் தந்த உங்களுக்கு எனது நன்றிகள் வீட்டில் நுழையும் முன்பு.. 154550 வீட்டில் நுழையும் முன்பு.. 154550 வீட்டில் நுழையும் முன்பு.. 154550 வீட்டில் நுழையும் முன்பு.. 154550 வீட்டில் நுழையும் முன்பு.. 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jul 05, 2010 11:40 am

பகிர்வுக்கு நன்றி .தோழரே!



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக