புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உபதேசம்! I_vote_lcapஉபதேசம்! I_voting_barஉபதேசம்! I_vote_rcap 
81 Posts - 62%
heezulia
உபதேசம்! I_vote_lcapஉபதேசம்! I_voting_barஉபதேசம்! I_vote_rcap 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
உபதேசம்! I_vote_lcapஉபதேசம்! I_voting_barஉபதேசம்! I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
உபதேசம்! I_vote_lcapஉபதேசம்! I_voting_barஉபதேசம்! I_vote_rcap 
6 Posts - 5%
eraeravi
உபதேசம்! I_vote_lcapஉபதேசம்! I_voting_barஉபதேசம்! I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
உபதேசம்! I_vote_lcapஉபதேசம்! I_voting_barஉபதேசம்! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
உபதேசம்! I_vote_lcapஉபதேசம்! I_voting_barஉபதேசம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உபதேசம்! I_vote_lcapஉபதேசம்! I_voting_barஉபதேசம்! I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
உபதேசம்! I_vote_lcapஉபதேசம்! I_voting_barஉபதேசம்! I_vote_rcap 
227 Posts - 37%
mohamed nizamudeen
உபதேசம்! I_vote_lcapஉபதேசம்! I_voting_barஉபதேசம்! I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
உபதேசம்! I_vote_lcapஉபதேசம்! I_voting_barஉபதேசம்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உபதேசம்! I_vote_lcapஉபதேசம்! I_voting_barஉபதேசம்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
உபதேசம்! I_vote_lcapஉபதேசம்! I_voting_barஉபதேசம்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
உபதேசம்! I_vote_lcapஉபதேசம்! I_voting_barஉபதேசம்! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உபதேசம்! I_vote_lcapஉபதேசம்! I_voting_barஉபதேசம்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
உபதேசம்! I_vote_lcapஉபதேசம்! I_voting_barஉபதேசம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உபதேசம்! I_vote_lcapஉபதேசம்! I_voting_barஉபதேசம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உபதேசம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 15, 2009 3:19 am

உபதேசம்! Smalarnews90629214049iv2

ஒரு சமயம் சீக்கிய மத ஸ்தாபகரான குருநானக் தன்னுடைய சீடர்களுடன் ஒரு ஊருக்கு உபதேசம் செய்ய சென்றார். அவர் வரும் வழியெல்லாம் தென்பட்ட சிற்றூர்களுக்குள் புகுந்து அறம் செய்ய வேண்டிய அவசியத்தையும் தர்மத்தையும் போதித்தார். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று போதனையில் சொன்னார். அனைவரும் நமது சகோதரர்களே என்று அவர் எடுத்துக் கூறினார்.


ஒரு நாள் ஒரு கிராமத்துக்குள் மாலை வேளையில் அவர் பிரவேசித்தார். அவருக்கும், அவருடன் வந்த சீடர்களுக்கும் கடுமையான பசி, நீர்வேட்கை. இத்துடன் குளிர் வெட வெடக்க வைப்பதாக இருந்தது.


அவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டி உணவும், நீரும், போர்வையும் தரும்படி வேண்டினர். அந்தக் கிராம மக்கள் இவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை; அலட்சியப்படுத்தினர். ஒருவராவது எதுவும் தரவில்லை.


அன்றிரவு முழுவதும் அவர்கள் பசியிலும், தாகத்திலும் குளிரிலும் தவித்தனர். மறு நாள் காலையில் அந்தக் கிராமத்தை விட்டு விடியற்காலையிலேயே கிளம்பினர். அப்போது குருநானக் அந்தக் கிராம மக்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்.


""எல்லாவற்றையும் அறிந்திருக்கக் கூடிய சர்வ வல்லமைப் படைத்த கடவுளே! இந்தக் கிராமத்து மக்கள் இப்படியே, இங்கேயே நலமுடன் இருக்க அருள்புரிய வேண்டுகிறேன்!''


இதைக் கேட்டுக் கொண்டிருந்த சீடர்களின் மனம் கொதித்தது. "ஈவு, இரக்கம், மனிதாபிமானம், தர்ம சிந்தனை ஆகிய எதுவும் இல்லாத இந்தக் கிராம மக்களுக்காக இப்படிப்பட்ட ஒரு பிரார்த்தனை தேவையா?'


"ஏன் இப்படிச் செய்தார் நம் குரு?'


அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. குருவிடம் கேட்கலாமா, வேண்டாமா என்றும் தெரியவில்லை! என்றாலும் எவரும் கேட்கவில்லை. அவர்கள் அங்கிருந்து நடக்கத் துவங்கினர். அன்றைய தினம் மாலையில் அதே போல மற்றொரு கிராமத்தை அவர்கள் அடைந்தனர். அதற்குள் பலருக்கும் பசிக் கிறுகிறுப்பு காதை அடைத்து இருந்தது.


"இங்கு என்ன நிலைமையோ?' என்று பதைபதைப்புடன் இருந்தனர் அவர்கள்.


அந்தக் கிராம மக்கள் குருநானக்கையும், அவருடைய சீடர்களையும் கண்டவுடன், ""வாருங்கள், வாருங்கள்...'' என்று மிக மிக அன்புடன் வரவேற்றனர்.


""சாப்பிடுகிறீர்களா, நீர் அருந்துகிறீர்களா?'' என்று கனிவுடன் விசாரித்தனர். சொன்னதோடு நிற்காமல் செயலிலும் காட்டினர். அவர்களுக்கு உணவு தரப்பட்டது. நீர் தரப்பட்டது. தங்கியிருக்க இடம் தரப்பட்டது. படுக்கை தரப்பட்டது. பசியாறிய அவர்கள் மிகவும் மன மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பிறகு குருநானக்கின் உபதேசங்களைக் கேட்க ஊர் மக்கள் திரண்டனர். குருநானக் மிக அழகிய முறையில் அவர்களுக்கு உபதேசம் செய்தார்.


சீடர்கள் பெருமிதம் அடைந்தனர்.


""இது நல்லவர்கள் வாழும் பூமி, சிறந்த கிராமம்?'' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.


மறுநாள் காலை அந்தக் கிராமத்திலிருந்து அனைவரும் புறப்பட்டனர். குருநானக் அந்தக் கிராமத்து மக்கள் சார்பாகப் பிரார்த்தனை செய்தார்.


""எல்லாரையும் அறிந்திருக்கின்ற ஆண்டவனே இந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்காக நான் உன்னிடம் பிரார்த்தனை செய்கிறேன். இந்தக் கிராமத்தில் வசிக்கக் கூடிய இந்த மக்கள் அனைவரும் இந்தக் கிராமத்தை விட்டுத் தனித்தனியாகப் பிரிந்து மூலைக்கொரு திசையாகப் பிரிந்து போய்விட வேண்டும்!. அதற்கு தாங்கள் தான் அருள்புரிய வேண்டும்.'' என்றார்


இந்தப் பிரார்த்தனையையும் சீடர்கள் கேட்டனர். அவர்கள் மனதில் ஆச்சர்யம் உண்டாயிற்று; அதிர்ச்சி கிளம்பியது.


""என்ன இது இப்படிப்பட்ட பிரார்த்தனையை செய்கிறாரே நம் குரு... இது நியாயமா? முந்தைய கிராமத்தில் இவர் செய்தது ஆசீர்வாதம். இப்போது செய்தது ஆசீர்வாதமல்ல; சாபம். இப்படிச் செய்யலாமா?


""இது நியாயமா, ஏன் இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பிரார்த்தனை செய்கிறார் நம் குரு!'' இதைக் கேட்டு விட வேண்டும்! என்று எண்ணினர். ஆயினும் அவரிடம் கேட்க ஒருவருக்காவது துணிவு இல்லை. சீடர்களின் மன நிலையை அறிந்தார் குரு.


""அன்பானவர்களே என் பிரார்த்தனை உங்களில் சிலருக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கக் கூடும். அற நெறிகளைக் கடைப்பிடிக்காத முந்தையக் கிராமத்தில் உள்ள மக்கள் வேறு ஏதாவது ஒரு இடத்துக்குச் சென்றால் அந்த இடத்தையும் அல்லவோ கெடுத்துவிடுவர். எனவே, தான் அவர்கள் அந்தக் கிராமத்திலேயே இருக்க வேண்டும். வெளியேறி விடக் கூடாது என்று இறைவனிடம் கேட்டுக் கொண்டேன்.


""ஆனால், இந்தக் கிராம மக்களோ தெய்வ பக்தி உடையவர்கள், அறநெறிகளைப் பின்பற்றுகின்றனர். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்களாகவும் திகழ்கின்றனர். பெரியவர்களையும் அறவழி யில் செல்லுபவர்களையும் மதிக்கத் தெரிந்தவர்கள்.


""விருந்தினர்கள் நன்றாக வரவேற்கத் தெரிந்தவர்கள். இப்படிப்பட்ட இவர்கள் ஒரே கிராமத்திலே இருப்பதை விட இந்த ஊர் எங்கும் நகரம் எங்கும், நாடு எங்கும் பரவி இருக்க வேண்டும். அவ்வாறு பரவி இருந்தால் அவர்கள் எல்லாருக்கும் நன்மை செய்பவர்களாக இருப்பர். அவர்களைப் பார்த்து மற்றவர்கள் திருந்துவர். இதற்காகத் தான் இவர்கள் திசைக்கு ஒருவராக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்,'' என்று விளக்கம் கூறினார்.


குருநானக்கின் இந்த விளக்கத்தைக் கேட்ட சீடர்கள் குருவின் நல்ல எண்ணத்தையும் அவருடைய சீரிய சிந்தனையையும் எண்ணி வியந்தனர்.


மனதில் தெளிவு வேண்டும்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jul 15, 2009 4:58 am

மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 15, 2009 8:12 am

சூப்பர் நல்ல கருத்துக்கள் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக