ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கக் குச்சி தேவதை!

Go down

தங்கக் குச்சி தேவதை! Empty தங்கக் குச்சி தேவதை!

Post by சிவா Wed Jul 15, 2009 4:48 am

தங்கக் குச்சி தேவதை! Smalarnews68388003111uv4

வேல்ஸ் என்னும் கடற்கரையோரம் சிற்றூர் ஒன்று இருந்தது. அவ்வூரின் பெயர் மில்போர்ட் ஹேவன். அவ்வூரில் உள்ள மக்கள் அனைவரும் அன்பானவர்கள்; அமைதியானவர்கள். கடை வீதியில் ஒரு சமயம் பல அதிசயிக்கத் தக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மக்களுக்குப் பிரமிப்பையும், அதிர்ச்சியையும் தரத் துவங்கின. வியாபார நிறுவனங்களில் உள்ள பொருட்கள் திடீரென்று மறைந்து போய் விடும். அதற்குப் பதில் அதைவிட மதிப்பு வாய்ந்த பொற்காசுகள் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கும்.


இது ஒரு நாளல்ல, இரண்டு நாளல்ல, தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த மர்ம நிகழ்ச்சி நடந்தாலும், அதனால் யாருக்கும் எவ்விதத் தொல்லையோ, நஷ்டமோ இல்லை. அந்த பஜார் வீதியில் பல்பொருள் அங்காடி ஒன்றை கிரிபித் என்பவன் வைத்திருந்தான். அவன் கடையில் இம்மாதிரி நடைபெறுவது சகஜமாக இருந்தது.


அன்றைய தினமும் அவன் கடையில் அமர்ந்திருந்த போது, அந்த மர்ம நிகழ்ச்சி நடைபெற்றது. அவன் வைத்திருந்த பல பொருட்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கின. அதற்குப் பதில் அவ்விடங்களில் பொற்காசுகள் தோன்றின.


அதை அவன் சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட போது ஒரு பொற்காசு தவறி பூமியில் விழுந்தது. அதைக் கீழே குனிந்து எடுத்தான் அவன். அந்தத் தங்கக் காசுக்கு அருகே தங்கத்தால் செய்யப்பட்ட மெல்லிய பிரம்பு ஒன்று அங்கு காணப்பட்டது. அது கிட்டத்தட்ட இரண்டு அங்குல நீளமுடையதாக இருந்தது.


பொற்காசுகளுடன் தங்கக் குச்சியை எடுத்துத் தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான் அவன். அதன் பின்னர் சில அபூர்வக் காட்சிகள் அவன் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தன. அங்குமிங்குமாகக் கடைக்குள் பல தேவதைகள் பறந்து திரிந்தன.


அவை, அவன் கடையில் தங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு அதற்கு ஈடான பணத்தை வைத்து விட்டு வெளியே பறந்து சென்றன. திடீரென அவனுக்கு, அத்தேவதைகள் தெரிந்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அத்தேவதைகள் எந்த எந்தப் பொருட்களை விரும்பி எடுத்துக் கொள்கின்றன என்பதை நுணுக்கமாகக் கவனித்தான். பின்னர் தினந்தோறும் தேவதைகளைக் கண்காணித்து வந்தான். ஒரு வாரத்திற்குள் தேவதைகளுக்குப் பிடிக்கும் எல்லாப் பொருட்களும் அவனுக்கு அத்துப்படி ஆகிவிட்டன.


ஆகவே, தேவதைகளுக்கு பிடித்தமான பொருட்களைக் கொள்முதல் செய்து வைத்தான். கொள்முதலான அந்தப் பொருட்களைத் தேவதைகளும் அதிகமாக விரும்பி ஏற்றுக் கொண்டன. இதன் காரணமாக வெகு விரைவில் கிரிபித் பெரும் பணக்காரன் ஆனான்.


பெரும்பாலும் பணக்காரர்களுக்கு ஒரு சுபாவம் உண்டு. ஒரு விஷயத்தில் லாபம் அதிகம் கிடைக்கிறது என்றால் மேலும் மேலும் லாபம் பெறத் துடிப்பர்; மேலும் மேலும் பணம் சேர்க்கத் துடிப்பர்.


கிரிபித்தும் இந்த ரகத்தைச் சார்ந்தவனாக இருந்தான்.


ஒரு நாள் தேவதைகளைத் தொடர்ந்து சென்றான். கடற்கரையோரம் சென்றதும் தேவதைகள் கடலின் மேல் பறந்து சென்றன. தூரத்தில் ஒரு பிரகாசிக்கும் தீவு தென்பட்டது. அங்கே அவர்கள் சென்று விடுவதை அவனால் கடற்கரையிலிருந்து பார்க்க முடிந்தது.


மறுநாளே ஒரு கப்பலை வாடகைக்கு பேசினான். எல்லாப் பொருட்களையம் அதில் ஏற்றிக் கொண்டு தீவை நோக்கிப் பயணம் செய்தான். தீவு வந்தவுடன் அதில் இறங்கிக் கொண்டான். அந்தத் தீவுக்குச் செல்ல நம்பிக்கையான பணியாட்களை அமர்த்தி வைத்தான். அந்தத் தீவில் திடீரென தாங்கள் எப்போதும் பார்க்கும் வியாபாரி ஒருவன் வந்து இறங்கியதைக் கண்ட தேவதைகள் திகைத்துப் போயினர்.


""என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்! நானே உங்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப் பொருட்களுடன் வந்து விட்டேன். நீங்கள் சிரமப்பட்டு அங்கு வருவது எனக்கு வருத்தமாக இருக்கிறது,'' என்றான் கிரிபித்.


தேவதைகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். என்றாலும் கிரிபித் கொண்டு வந்த பொருட்கள் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டனர். வேண்டிய பொருட்களைத் தந்தனர். அவன் தீவிலிருந்து விடைபெற்று சென்றான்.


கிரிபித் மனம் நிறையச் சந்தோஷம். எல்லாவற்றையும் விற்று விட்டேன். நான் கோடீஸ்வரனாகிவிட்டேன்!


அவன் சென்றதும் தேவதைகள் எல்லாம் தலைமைத் தேவதையின் கீழ் கூடின.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தங்கக் குச்சி தேவதை! Empty Re: தங்கக் குச்சி தேவதை!

Post by சிவா Wed Jul 15, 2009 4:48 am

""இந்த மனினுக்கு நம்முடைய இருப்பிடம் எப்படித் தெரிந்தது? நாம் எப்படி அவன் கண்களுக்குத் தெரிகிறோம்? புரியாத புதிராக உள்ளதே!''


""நாளை அவன் வரும்போது இதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியது நம் கடமை!'' தேவதைகள் தங்களுக்குள் முடிவு எடுத்துக் கொண்டன.


மறுநாள் கிரிபித் தேவதைகளுக்குத் தேவையான பொருட்களுடன் வந்து சேர்ந்தான். கப்பலுடன் எல்லாச் சரக்குகளையும் வாங்கிக் கொண்டன தேவதைகள்.


அப்போது தேவதைகளில் ஒன்று, ""வியபாரியே! எங்களுக்குச் சேவை செய்ய விரும்பும் உனக்கு இந்தத் தீவைச் சுற்றி காட்ட விரும்புகிறோம். வா! சுற்றிப் பார்க்கலாம்,'' என்று கூறியது.


கிரிபித் சம்மதித்துத் தேவதை பின்னால் சென்றான். தேவதை பேச்சுக் கொடுத்தவாறே தீவைச் சுற்றி காண்பித்தது. அப்போது பேச்சினிடையே, ""எவருக்கும் தென்படாத நாங்களும், எங்கள் தீவும் உன் கண்ணில் மட்டும் எப்படிப்பட்டது?'' என்று கேட்டது.


""எனக்கு அதெல்லாம் தெரியாது. ஒரு நாள் வியாபாரத்தின் போது தங்கக் காசுகளுடன் தங்கக் குச்சி ஒன்றை வைத்து விட்டுச் சென்று விட்டீர்கள். அந்தத் தங்கக் குச்சியைக் கையில் எடுத்தவுடன் உங்கள் உருவம் தென்பட்டது; தீவும் தென்பட்டது. தேவதை அவன் காட்டிய தங்கக் குச்சியைக் கையில் வாங்கிப் பார்த்தது.


"ஓ... இந்தத் தங்கக் குச்சிக்குச் சொந்தக்காரி டெய்ஸி. இது இல்லாததால்தான் அவளால் இங்குவர முடியவில்லை!' என்று மனதுக்குள் எண்ணியது. பின் தேவதை அவனிடம் தங்கக் குச்சியைத் திருப்பித் தந்தது.


""வியாபாரியே... அதோ பார்... நவரத்தினங்கள் கொட்டிக் கிடப்பதை! உனக்கு தேவையானால் நீ எடுத்துக் கொள்ளலாம். பதிலுக்கு நான் கேட்பதை நீ தர வேண்டும்,'' என்று கூறியது.


""சரி!'' என்றான் கிரிபித்.


அவன் கண்களில் அந்த நவரத்தினங்கள் பட்டவுடன் மூச்சே நின்றுவிடும் போலாயிற்று. இவ்வளவும் என்னிடம் இருந்தால் இந்த உலகைப் போல் மூன்று உலகை நான் வாங்குவேன்! நான் அதிர்ஷ்டக்காரன்' என நினைத்துக் கொண்டான்.


நவரத்தினங்கள் மூட்டை மூட்டையாகக் கட்டிக் கப்பலில் சேர்த்தான். எல்லா நவரத்தினங்களும் தீர்ந்தவுடன் தேவதை புன்னகையுடன் கேட்டது.


""இப்போது திருப்தியா?''


""திருப்தி!'' என்றான் கிரிபித்.


""உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்றான் அவன்.


""உன் கையில் உள்ள தங்கக்குச்சி. அது இருந்தால் தான் என் தோழி எங்களுடன் பேசுவாள். இப்போது அவள் காற்றாக உள்ளாள். இது எவர் கைக்குப் போயிருந்தாலும் அதை வைத்திருப்பவர் மனத் திருப்தியுடன் இதைத் திருப்பித் தர வேண்டும். உனக்கு இதற்கு மேலும் திருப்தி ஏற்படாவிட்டால் தங்கக் குச்சி வேண்டாம்,'' என்று கூறினாள்.


""இல்லை, இல்லை! இதோ நான் தருகிறேன். எனக்கு எதற்கு அந்தக் குச்சி, நீங்கள் தேவையான பொருளைத் திருப்தியாகத் தந்து விட்டீர்கள். இந்தாருங்கள்,'' என்று தங்கக் குச்சியை நீட்டினான்.


""நன்றி'' என்று கூறி விட்டுத் தங்கக் குச்சியை வாங்கிக் கொண்டது தேவதை.


கப்பலில் தன் ஊர் திரும்பினான் கிரிபித். கப்பல் செல்லச் செல்ல நவரத்தினங்கள் குறைவதைப் போல் உணர்ந்தான் என்றாலும் அது எப்படிக் குறைகிறது என்பதை அவனால் கண்டறிய முடியவில்லை.


அவனுடைய ஊருக்குச் சென்றடைந்த போது கப்பலில் ஒரு நவரத்தினக் கல் கூட இல்லை. அவனால் அந்தத் தீவையும் பார்க்க முடியவில்லை. தேவதைகளையும் பார்க்க இயலவில்லை.


மறுநாளிலிருந்து தேவதைகள் அந்த ஊரில் உள்ள எந்தக் கடைகளுக்கும் சென்று எந்தப் பொருட்களையும் எடுத்துக் கொள்ளவில்லை. எந்தவித நிகழ்ச்சிகளும் நடைபெறாத கிராமமாக அது மாறிவிட்டது.


"தங்கக் குச்சியை இழந்ததால் தேவதைகளைப் பார்க்கும் சக்தியினையும் தீவு இருக்குமிடத்தையும் பார்க்க முடியவில்லை. நவரத்தினங்களுக்கு ஆசைப்பட்டு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை இழந்தேனே,'' என்று புலம்பினான் கிரிபித்.


மற்றவர்கள் பொருட்கள் விற்கக் கூடாது; தன்னுடைய பொருட்களையே தேவதைகள் உபயோகிக்க வேண்டும் என்று எண்ணிய சுயநலத்தால் நான் வருமானத்தை இழந்தேன் என்று புலம்பியே உயிரைவிட்டான் கிரிபித்.


கிடைத்ததை வைத்துத் திருப்தி அடை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தங்கக் குச்சி தேவதை! Empty Re: தங்கக் குச்சி தேவதை!

Post by Guest Wed Jul 15, 2009 9:47 am

சூப்பர் நல்ல பன்ச்சிங்
avatar
Guest
Guest


Back to top Go down

தங்கக் குச்சி தேவதை! Empty Re: தங்கக் குச்சி தேவதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum