புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_m10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_m10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10 
3 Posts - 7%
heezulia
உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_m10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_m10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_m10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்..


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Mon Jul 05, 2010 1:22 am

ஈகரையின் அன்பு உறவுகளுக்கு இனிய காலை வணக்கம்.

சற்றேறக்குறைய கடந்த ஆறு மாதங்களாக எத்தனையோ இடர்களின் ஊடே பணிச்சுமையாலும், நேரமின்மையாலும் இந்த ஈகரை தளத்தில் பதிவிட முடியாமல் போனது என்றெல்லாம் சொல்ல பெருவிருப்புதான், ஆனால் அவ்வாறெல்லாம் ஒன்றும்இல்லை. எமது வானொலி நிகழ்ச்சிகள் தற்போது மாற்றப்பட்ட நேரத்தில் நேரலையில் ஒளிபரப்பாவதால் பதிவிட முடிவதில்லை அவ்வளவே.இப்பொழுதிருந்து நாளொன்றுக்கு ஒரு பதிவேனும் இடல் வேண்டும் என்று திண்ணிய எண்ணம் கொண்டு பதிவிட முனைகிறேன். இன்று எதைப்பதிவது என்ற குழப்பத்தில் இருந்தபொழுது இனிய நண்பர் பகலவன் அவர்கள் எனக்கு எழுதிய ஒரு கருத்துக்கு பதில் தர முனைந்தேன். அதை ஒரு பதிவாகவும் இட்டால் பலருக்கு பயனளிக்கும் எனத்தோன்றவே அதை அப்படியே இங்கும் பதிகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் பதியவும்-நன்றி

பகலவனின் கருத்து:

வாருங்க‌ள் த‌மிழ் உற‌வே, உங்க‌ளை அன்புட‌ன் ஈக‌ரை சார்பாக‌ வ‌ர‌வேற்ப‌தில்
நானும் ம‌கிழ்ச்சி அடைகின்றேன்.


உத‌யா வ‌ட‌மொழி பெய‌ராக‌
இருந்தாலும் ந‌ல்ல‌ பெய‌ர். ஆனால் உங்க‌ள் பெய‌ரை ஆங்கில‌த்தில் பார்த்த‌
போது ச‌ற்று அதிர்ந்து விட்டேன். உத‌யா என்ப‌த‌ற்கு ப‌தில் உடையார் என்று
இருக்கின்ற‌து.

இன்று த‌மிழ‌ன் சாதியாலும், ம‌த‌த்தாலும் பிரிந்து
சின்ன‌ப்பின்ன‌மாக‌ சித‌றி கிட‌க்கின்றான். அந்த‌ தைரிய‌த்தில் தான்
ஈழ‌த்தில் ந‌ம் உற‌வுக‌ள் சிதைந்துக்கொண்டிருந்த‌ போதும்
சாதி,ம‌த‌ம்,க‌ட்சினு ந‌க்கிகிட்டு கிட‌ந்தானே த‌விர‌ சாலைக்கு வ‌ந்து
போர‌ட‌வில்லை. ஒரு 50 ல‌ட்ச‌ம் த‌மிழ‌ன் சாதி, ம‌த‌ம், க‌ட்சி க‌ட‌ந்து
வ‌ந்து போராடி இருந்தால் ந‌ம் உற‌வுக‌ள் காப்பாற‌ப்ப‌ட்டிருப்பார்க‌ள்.
ஆனால் அர‌சிய‌ல் நாய்க‌ளால் ம‌ழுங்க‌டிக்க‌ப்ப‌ட்டும், சாதி ம‌த‌ உண‌ர்வால்
பிரிக்க‌ப்ப‌ட்டும் கிட‌ந்தான் த‌மிழ‌ன்.

அதான‌லேயே அங்கே ந‌ம்
உற‌வுக‌ள் அனாதையாக்க‌ப்ப‌ட்ட‌து. உங்க‌ள் பெய‌ரைப்பார்த்த‌ போதும்
நீங்க‌ளும் அதே உண‌ர்வோடுதான் வ‌ந்து உள்ளீர்க‌ளோ என்று நினைத்து தான்
உள்ளே வ‌ந்து பார்த்தேன் ஆனால் மிக்க‌ மகிழ்ச்சி நீங்க‌ள் த‌மிழ் உண‌ர்வோடு
தான் வ‌ந்து உள்ளீர்க‌ள் என்று.


ந‌ன்றி..

த‌மிழின்
நேச‌த்துட‌ன்

ப‌க‌ல‌வ‌ன்

என்னுடைய பதில்..

வணக்கம் பகலவன்..

கிட்டதட்ட ஆறு மாதங்களுக்கு முன் நீங்கள் பதிந்ததை
இப்பொழுதுதான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி உங்கள்
கருத்துக்களுக்கு. அதன் தொடர்பில் சில விளக்கங்களை உங்களுக்கு அளிக்க
விரும்புகிறேன்.

என் பெயர் உடையார் தான். ஆனால் இது சாதி, மத
மற்றும் இன தொடர்புகளுக்கு அப்பாற்பட்டது. எங்கள் மரபில் உள்ள ஒரு குட்டி தெய்வத்தின்
பெயரிது. சில தலைமுறைகளாக வாரிசுகள் இன்றியோ அல்லது ஒற்றை வாரிசு மட்டுமே
உடையவர்களாகவோ எங்கள் மூதாதையர்கள் வாழ்ந்துவந்தனர். அதில் சில தலைமுறைகளாக
பெண் வாரிசுகளே இல்லாமலும் இருந்தனர். அப்போது இந்த தெய்வம் தன் பெயரை
வாரிசுகளுக்கு சூட்ட வேண்டும் என்றும் அவ்வாறு சூட்டப்பட்ட குழந்தைகள்
மட்டுமே தலையெடுக்கும் என்றும் என் மூதாதையர்க்குச்சொல்ல (இதற்க்குச்சான்று இல்லை, வாய்வழித்தகவல்தான்) அன்று முதல்
துவங்கியது இந்த பெயரிடல் முறை.காட்டாக என் தந்தையின் பாட்டனிலிருந்து
எங்கள் மரபில் ஒரே ஒரு குழந்தைதான் நிலைத்திருந்தது. அதுவும் ஆண்மகவு
மட்டுமே. எனவே அவர்கள் தங்கள் பெயரோடு உடையார் என இணைத்துக்கொண்டனர். இது
எனக்கு முந்தைய தலைமுறையில் உச்சத்துக்குச்சென்று தங்கள் பெயரை உடையார்
என்றே தனித்து இட்டுக்கொண்டனர்.அதுவே பெண்மகவு என்றால் உடையக்காள் என
இட்டணர்(என் தமக்கையின் பெயரிதுதான்). என் தந்தை பெயரும் உடையார் தான்.
ஆனால் என் தந்தைதான் பள்ளிக்கூடம் சென்ற முதல் குழந்தை எங்கள் மரபில்!
பள்ளிப்படிப்பை முடித்து அவரிணைந்தது பெரியாரின் பள்ளி. எனவே இந்த மூட
வழக்கத்தை மூட நினைத்த அவர். எங்கள் அனைவருக்கும் செந்தமிழ்ப்பெயர்களை
இட்டார். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மன்னனின்பெயரினை இட்டார்.
நெடுஞ்செழியன், இளங்கோவன் என்று பாண்டியனையும் சேரனையும் நினைவு கூர்ந்த
அவர் சோழனை நினைவு கூறும் வகையில் எனக்கு இராசேந்திரன் என பெயரிட்டார். அது
தமிழில் இல்லை என அறிந்து புகழேந்தி என்றொரு பெயரையும் எனக்கு இட்டார்.
காலத்தின் போக்கில் பள்ளியில் கொடுத்த பெயரே நிலைத்தது. என் பெயரில்
இருக்கும் உடையார் என்பது என் தந்தையின் பெயரே. இதில் எனக்கும் சில காலம்
உடன்பாடில்லாமல் இருந்தது. ஏனெனில் தமிழகத்தின் வடக்குப்பகுதியில் அப்படி
ஒரு சாதி இருப்பது எனக்கு பின்னாளில் தெரியவந்தபோது உங்களைப்போலவே நானும்
அதிர்ச்சியடைந்தேன்.எனவே பெயரை மாற்ற விரும்பி என் தமிழாசிரியரிடம்
கலந்தாய்ந்தபோழ்து அவர் சொன்ன தகவல்கள் என்னை
வியப்பிலாழ்த்தின.இராசேந்திரனின் கல்வெட்டைப்பற்றி அப்பொழுது அவர்
இயம்பினார். அதன் தொகுப்பு இதோ..

" இராசேந்திரசோழனின் கல்வெட்டு
அவனின் 19 ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டு,தஞ்சாவூர்
இராசகோபுரத்துக் கருவறையின் தென்புறத்திலுள்ள முதற்படை,இரண்டாம்
படைகளில் உள்ளது. தமிழும், கிரந்தமும் கலந்து அமைந்த கல்வெட்டாக இது
உள்ளது."

இந்த கல்வெட்டில் இரண்டாவது அடுக்கில் 12 வது பத்தியில்
வரும் செய்தி என்னை வியப்பிலாழ்த்தியது. அதில் இராசேந்திர உடையார் என்றே
தன்னை குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறார் இராசேந்திர சோழதேவன்.

"12.(ப்பொ)ரு
தண்டாற்கொண்ட கொப்பாகெஸரி வந்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழதெவர்க்கு
யாண்டு யக(19) ஆவது நாள் இருநூற்று நாற்பத்திரண்டினால்
உடையார் ஸ்ரீ ராஜேந்திரசொழ தேவர் கங்கைகொண்ட சோழபுர-" எனச்செல்கிறது இந்த
கல்வெட்டு.

இந்த கல்வெட்டை ஆய்ந்த பிறகு என் பெயரை
மாற்றிக்கொள்ளும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன். என்பெயரும் இப்பொழுது ஒரு
மாமன்னனின் பெயர்தான் என்ற காரணத்தால்! இவன் கரைகடந்ததால் தானே இன்று
ஈகரையில் இணைந்திருக்கிறோம் நாம்.

பின்னாளில் உடையார் என்ற புதினம் கூட, இதனடிப்படையிலேயே பாலகுமாரனால்
எழுதப்பட்டதும் நினைவிருக்கலாம்.

தவிரவும் ஒலி ஊடகத்தில் நான் உதயா
என்ற பெயரால் மட்டுமே அறியப்படுகிறேன். அவ்வளவே.

படை கொண்டு, கரை
கடந்து தமிழ் வளர்த்த எம்மாமன்னனின் பெயர்கொண்டு, ஈகரை வந்து தமிழ் அறியும்
கார்வண்ணன்!!

இராசேந்திர உடையார்.

அதுபோல தமிழ் ஈழம் குறித்த உங்கள் கருத்திலும் எனக்கு உடன்பாடில்லை. அது குறித்து விரிவாக பேச, "அரசியல் களம்" என்று வெள்ளி தோறும் லண்டன் தமிழ் வானொலியில் நடைபெறும் நேரலை கலந்துரையாடல் நிகழ்வுக்கும் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.( ஜெய் வானொலியின் தமிழ்ப்பண்பலையில் மையக்கிழக்கு நாடுகளுக்கான சிறப்புஓளிபரப்பிலும் இந்நிகழ்வை கேட்கலாம்.)

குறிப்பு:இது எவரையும்
புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல. எனக்குத்தெரிந்த உண்மைகளை உங்களோடு
பகிர்ந்து கொள்ளும் நோக்கிலே மட்டுமே எழுதப்பட்டது அவ்வளவே.



பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 05, 2010 10:46 am

[You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this image.]
avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Mon Jul 05, 2010 12:08 pm

நன்றி திரு. பிளேடு பக்கிரி அவர்களே!!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 05, 2010 8:12 pm

அன்பு மலர் அன்பு மலர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 05, 2010 8:13 pm

அன்பு மலர் அன்பு மலர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 05, 2010 11:49 pm

வணக்கம் உதயா! நீண்ட நாட்களுக்குப் பிறகு மீடும் இணைந்ததில் மகிழ்ச்சி! உங்களின் பெயர் விளக்க மிகவும் நன்று!

நீங்கள் எந்த வானொலியில் பணியாற்றுகிறீர்கள் என்பதை இன்னும் தெரிவிக்கவில்லையே?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Tue Jul 06, 2010 11:24 am

நன்றி திரு.ரபிக் மற்றும் சிவா..

நான் ஜெய் வானொலியின் தமிழ் பண்பலையில் முழுநேரமும், வீரத்தமிழ் வானொலி மற்றும் லண்டன் தமிழ் வானொலி ஆகிய வானொலிகளில் பகுதி நேர அறிவிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் இந்திய செய்திப்பிரிவு தலைவராகவும் இருக்கிறேன் சிவா..

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Tue Jul 06, 2010 11:39 am

நன்றி உடையார் அவர்களே!

உங்கள் வானொலியை இனைய தளத்தின் ஊடாக கேட்க இயலுமா?

எனக்க்கு தெரிய படுத்தவும்



- குடந்தை மணி
[size=18][You must be registered and logged in to see this link.]
[/size]
avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Tue Jul 06, 2010 12:07 pm

நன்றி திரு.மணி அவர்களே!

இவை அனைத்துமே இணையத்தினூடாக கேட்க இயலும்..

[You must be registered and logged in to see this link.]

பழைய பாடல்களுக்கான தனி வானொலி.

நன்றி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 06, 2010 12:10 pm

தங்களுடைய தகவலுக்கு நன்றி சோழரே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக