புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_m10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10 
100 Posts - 48%
heezulia
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_m10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_m10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_m10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_m10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10 
7 Posts - 3%
prajai
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_m10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_m10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_m10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_m10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_m10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_m10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10 
227 Posts - 51%
heezulia
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_m10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_m10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_m10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_m10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10 
18 Posts - 4%
prajai
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_m10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_m10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_m10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_m10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10 
2 Posts - 0%
Barushree
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_m10முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்.3


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 12:41 pm

மாதவிடாய், தொடர் உதிரப்போக்கு, பிரசவம் பற்றியது
1. மாதவிடாய்

பெண்களின் கற்பப் பையின் அடியிலிருந்து நோய் ஏதும் இல்லாத நிலையில் குறிப்பிட்ட நாட்களுக்கு வெளியாகும் இரத்தம் மாதவிடாய் எனப்படும். பெண் களுக்கு இறைவன் இயற்கையாகவே ஏற்படுத்தியுள்ளது தான் மாதவிடாயாகும். பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் கற்பத்திலுள்ள குழந்தைக்கு அதை உணவாக இறைவன் ஆக்கியிருக்கிறான். குழந்தை பிறந்த பின்பு அது பாலாக மாறிவிடுகிறது. ஒரு பெண் கற்பமாகவோ பாலூட்டக்கூடியவளாகவோ இல்லாதபோது அது குறிப்பிட்ட நேரத்தில் வெளியே வந்துவிடுகிறது. பெண்கள் தங்கள் உடல் பழக்கத்தை வைத்து அந்த நாள் எது என்பதை அறிந்து கொள்வார்கள்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 12:42 pm

2. மாதவிடாய்க்கான வயது

பொதுவாக ஒன்பது வயதிலிருந்து ஐம்பது வயது வரை மாதவிடாய் வெளியாகும் வயதாகக் கணிக்கப் படுகிறது.

''மேலும் உங்கள் பெண்களில் எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களின் இத்தாவை கணக்கிடுவது

பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால் அப்பெண்களுக்கும் மாத விடாயே ஏற்படாத பெண்களுக்கும் இத்தா(வின் தவணை) மூன்று மாதங்களாகும்.'' (அல்குர்ஆன்: 65:4)

இந்த வசனத்தில் நிராசையாகிவிட்டவர்கள் என்பது ஐம்பது வயதைத் தாண்டியவர்கள் ஆவர். மாதவிடாய் ஆகாதவர்கள் ஒன்பது வயதிற்குக் கீழ் உள்ளவர்களைக் குறிக்கும் என தீர்மாணித்துக் கொள்ளலாம்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 12:47 pm

3. மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள்

1. பெண்கள் மாதவிடாயாக இருக்கும்போது அவளுடன் உடலுறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்கூறுகிறான்: ''(நபியே!) அவர்கள் உம்மிடம் மாதவிடாய் பற்றியும் கேட்கிறார்கள். அது ஒரு தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் விலம் யிருங்கள், அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணு காதீர்கள் அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர் களிடம் செல்லுங்கள், என்று நீர் கூறும்! நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை விட்டு மீள்பவர்களை நேசிக்கிறான்; தூய்மை யானவர்களையும் நேசிக்கிறான்.'' (அல்குர்ஆன் 2:222)

மாதவிடாய் இரத்தம் வெளியாகி முடிந்து குளிக்கும் வரை இந்தத்தடை நீடிக்கும். காரணம் அல்லாஹ்வுடைய சொல்லாகும்.

'' (மாதவிடாய்) பெண்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள், அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அப்படி அவர்களிடம் செல்லுங்கள்.

மனைவி மாதவிடாயாக இருக்கும் நிலையில் கணவன் உடலுறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டாலும் மர்ம உறுப்புக்கள் சேராதவிதத்தில் மனைவியிடம் இன்பம் அனுபவிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.

''பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் உடலுறவைத் தவிர (விரும்பிய) மற்றதை செய்து கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

2. ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழுவது, நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் அவள் இந்த வணக்கங்களைச் செய்தாலும் அது அங்கீகரிக்கப்படாது.

''ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழாமலும், நோன்பு நோற்காமலும் இருக்க வில்லையா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

ஒரு பெண் மாதவிடாய்க் காலத்தில் விடுபட்டுப் போன தொழுகைகளை அக்காலம் முடிந்தபின் தொழ வேண்டியதில்லை, விடுபட்ட நோன்புகளை மட்டும் நோற்க வேண்டும்.

''நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் விடுபட்ட நோன்பை நோற்றுக் கொள்ளுமாறு நாங்கள் ஏவப்பட்டோம். விடுபட்ட தொழுகையை நிறைவேற்றுமாறு நாங்கள் ஏவப்பட வில்லை'' என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம்)

நோன்பிற்கும் தொழுகைக்கும் இடையில் வேறு படுத்தப்பட்டிருப்பதற்குக் காரணம் உண்டு. தொழுகை நாள் ஒன்றிற்கு ஐவேளைகள் நிறைவேற்றியாக வேண்டிய ஒரு கடமையாகும். தகுந்த காரணங்களுக்காக விடுபட்ட தொழுகையை களா செய்ய வேண்டியது கடமையல்ல, ஆனால் நோன்பு அவ்வாறு அல்ல.

மாதவிடாய் பெண் குர்ஆனை திரையின்றி தொடுவது தடுக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்: ''பரிசுத்தமானவர்களைத் தவிர அதை யாரும் தொடமாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 56:79)

''நபி(ஸல்) அவர்கள் அம்ர் இப்னு ஹஸ்கி என்பவருக் கும் எழுதிய கடிதத்தில் தூய்மையானவர்களைத் தவிர யாரும் முஸ்ஹஃபைத் தொடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.'' (நூல்: நஸயீ)

இது பிரபலமான, சரியான ஹதீஸாகும். துய்மையா னவர்களைத் தவிர மற்றவர்கள் முஸ்ஹஃபைத் தொடக் கூடாது என்பதே நான்கு இமாம்களின் கருத்தாகும்.

மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண் குர்ஆனைத் தொடாத நிலையில் அதை ஓதிக்கொள்ளலாம் என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்துவேறுபாடுகள் உள்ளன. மறந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படும் அத்தியாவசிய மான நிலையில் வேண்டுமானால் குர்ஆனை ஓதலாம்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 12:48 pm

4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒரு பெண் மக்காவிலுள்ள கஅபாவை வலம் வருவதும் தடுக்கப் பட்டுள்ளது.

ஆயிஷா(ரழி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட போது ''ஹாஜிகள் செய்யவேண்டிய எல்லா கிரியை களையும் நீ செய்து கொள்! ஆனால் 'தவாஃப்' மட்டும் செய்யாதே! சுத்தமான பின்பே அதைச் செய்துகொள்! என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.'' (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

5. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் ஒரு பெண் பள்ளி வாசலில் தங்குவதும் கூடாது.

''மாதவிடாய்ப் பெண்ணிற்கும், குளிப்பு கடமையான வர்களுக்கும் பள்ளிவாசலில் தங்குவதை நான் அனுமதிக்க வில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: அப+தா¥த், இப்னுமாஜா)

''நிச்சயமாக பள்ளிவாசல் மாதவிடாய் பெண் ணிற்கும், குளிப்பு கடமையானவருக்கும் ஆகுமானதல்ல, என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேற்கண்ட நபிமொழியில் இடம் பெறுபவர்கள் பள்ளிவாசலில் தங்காது அவசியத்தேவைக்காக அதைக் கடந்து செல்வது மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு ஆயிஷா(ரழி) அவர்களிடம் தொழுவதற்கான பாயை எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார்கள், அப்போது நான் மாதவிடாய்க் காரியாக இருக்கிறேனே என அவர்கள் கூறியதற்கு 'மாதவிடாய் உன்னுடைய கையில் இல்லையே!'' என்று நபி(ஸல்) அவர்கள் (தெளிவுபடக்) கூறினார்கள். (நூற்கள்: முஸ்லிம், திர்மிதீ மற்றும் நஸயீ)

அனுமதிக்கப்பட்ட திக்ருகள், துஆக்களை மாத விடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒருபெண் ஓதிக் கொள்வதில் தவறில்லை. காலை மாலையில் வழக்கமாக ஓதக்கூடியவற்றை ஒதிவருவதும், தூங்கும்போதும், தூக்கத்திலிருந்து எழுந்ததும் துஆக்கள் ஓதுவதிலும், தஃப்ªர், ஹதீஸ், பிக்ஹ் போன்ற நூல்களைப் படிப்பதிலும் தவறில்லை.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 12:48 pm

மஞ்சள், கலங்கல் நிற இரத்தம்

மஞ்சள் நிறச்சீழ் போன்ற இரத்தமோ, கலங்கலான, ஊத்தைத் தண்¡ர் நிறத்தைப் போன்ற இரத்தமோ மாதவிடாய்க் காலத்தில் வெளியாகுமானால் அது மாதவிடாய் இரத்தமாகவே கருதப்படும். மாதவிடாய்க் கான சட்டம்தான் அதற்கும் பொருந்தும். மாதவிடாய் அல்லாத நாட்களில் அது வெளியாகுமானால், மாதவிடாய் இரத்தமாக அது கருதப்படாது. அவள் தூய்மையானவளாகவே கருதப்படுவாள்.

''நாங்கள் மாதவிடாயிலிருந்து தூய்மையான பிறகு வெளியாகும் மஞ்சள் அல்லது கலங்கல் நிற இரத்தத்தை (மாதவிடாய் என) ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என உம்மு அதிய்யா(ரழி) கூறினார்.'' (நூற்கள்: புகாரி, அப+தா¥த்)

இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப் பட்டுள்ளதால் இந்த ஹதீஸ் நபி(ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக பெறப்படும் ஹதீஸின் சட்டமாகும் என்று ஹதீஸ் கலை அறிஞர்களிடம் கருதப்படுகிறது.

மாதவிடாய்க் காலத்தில் மேற்குறிப்பிட்ட இரண்டு விதமான இரத்தமும் வெளியானால் அதுவும் மாதவிடா யாகவே கருதப்படும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 12:49 pm

மாதவிடாய் முடிவை ஒருபெண் அறிவது?

1. இரத்தம் நின்றுவிடுவதன் மூலம் அதை அவள் அறிந்து கொள்வாள், இதற்கு இரண்டு அடையாளங்கள் உள்ளன. ஒன்று மாதவிடாய் இரத்தம் நின்றபின் தொடரும் தண்¡ர் போன்ற வெள்ளை நிற திரவப்பொருள். சிலசமயம் பெண்களின் உடற்கூறைப் பொறுத்து வௌ;வேறு நிறங்களிலும் வெளியாகும்.

2. மர்ம உறுப்பு, திரவங்கள் ஏதும் இன்றி காய்ந்த நிலை யில் காணப்படுவது. அதாவது இரத்தம் வெளியாகும் இடத்தில் பஞ்சு அல்லது துணியை வைத்துவிட்டு வெளியே எடுக்கும்போது அதில் எவ்வித இரத்த முமில்லாமல் காய்ந்த நிலையில் காணப்படுவது.

4. மாதவிடாய் நின்றுவிட்ட பெண் என்ன செய்யவேண்டும்
.

மாதவிடாய் நின்றதும் குளிப்பது கடமையாகும். மாதவிடாய் நின்றதற்கான குளியலை நிறைவேற்றுவதாக நினைத்து (நிய்யத் வைத்து)க் கொள்ளவேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரழி) அவர்களிடம் ''மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு! அது நின்றதும் குளித்துவிட்டு தொழுது கொள்!'' என்று கூறினார்கள். (நூல்: புகாரி)

குளிக்கும்போது அசுத்தத்திலிருந்து தூய்மையாகப் போவதாக மனதில் நினைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் பிஸ்மில்லாஹ் சொல்லி தன் உடல் முழுவதும் தண்¡ர் ஊற்ற வேண்டும். தலைமுடியின் அடிப்பாகங் களை நனையும்படிச் செய்யவேண்டும். தலைமுடி அடர்த்தியாக இருந்து, சடை பின்னப்பட்டிருக்குமானால் அதை அவிழ்க்கவேண்டும் என்ற அவசியமில்லை. அந்த நிலையில் தண்¡ரை தலையில் ஊற்றினாலே போது மானது. இலந்த இலை, மற்றும் உடலை சுத்தம் செய்கிற பொருட்களை உபயோ கிப்பது சிறந்தது. குளித்தபின் பஞ்சில் நறுமணத்தை எடுத்து இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு செய்வதை நபி(ஸல்) அவர்கள் அஸ்மா(ரழி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 12:49 pm

முக்கிய விஷயம்

மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண், அல்லது பிரசவமான பெண் சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்னர் சுத்தமாம் விடுவாளானால் அந்த நாளின் லுஹர், அஸர், தொழுகைகளைத் தொழுவது அவள் மீது கடமையாகும். ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பு சுத்தமாம்விடும் பெண் அந்த இரவின் மக்ரிப், இஷா தொழுகைகளைத் தொழுவது அவள் மீது கடமையாகும். இதுபோன்ற காரணங்கள் ஏற்படும்போது இரண்டாவது தொழுகையின் நேரம் முதல் தொழுகையின் நேரமாக உள்ளது.

இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பில் 22ழூ ழூ434 ல் கூறுகிறார்கள்.

மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண் பகலின் கடைசிப் பகுதியில் தூய்மையாகி விடுவாளானால் அன்றைய லுஹர், அஸர் தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும். இரவின் கடைசியில் தூய்மையாகி விடுவாளா னால், மக்ரிப் மற்றும் இஷாத் தொழுகைகளை சேர்த்துத் தொழவேண்டும். என மாலிக் ஷாஃபியீ, அஹ்மத் போன்ற பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், அப+ஹ{ரைரா, இப்னு அப்பாஸ்(ரழி) போன்ற நபித்தோழர்களும் இவ்வாறே கூறியுள்ளனர்.

'லுஹர்' தொழுகைக்கான நேரம் எஞ்சியிருக்கும் நிலையில் பகலின் கடைசிப் பகுதியில் தூய்மையாகும் பெண், 'அஸர்' தொழுகைக்கு முன்பாக 'லுஹர்' தொழவேண்டும். 'மக்ரிபு'டைய நேரம் எஞ்சி இருக்கும் நிலையில் தூய்மையாகும் பெண் 'இஷா'விற்கு முன் 'மக்ரிப்' தொழவேண்டும்.

தொழுகைக்கான நேரம் வந்த பிறகு அதை நிறைவேற்றுவதற்கு முன்பாக ஒரு பெண் மாதவிடாய்க் காரியாக ஆம்விட்டால், அல்லது அவளுக்கு பிரசவத்தீட்டு ஏற்பட்டுவிட்டால் அவள் அத்தொழுகையை (தூய்மையானதும்) திரும்பத் தொழவேண்டியதில்லை.

ஆதாரத்தின் அடிப்படையில் இமாம் அப+ஹனீஃபா மற்றும் இமாம் மாலிக் அவர்கள் கூறும் கருத்து என்னவென்றால், அந்த பெண் மீது அந்தத் தொழுகையை நிறைவேற்றுவது கடமையில்லை. திரும்ப தொழ வேண்டு மென்பதற்கும் புதிய கட்டளை வேண்டும். ஆனால் இங்கு எந்த கட்டளையும் இல்லை, காரணம் அந்தப்பெண் அந்தத் தொழுகையை அனுமதிக்கப்பட்ட நேரத்தில்தான் பிற்படுத்தினாலே தவிர நேரம் கடந்தும் தொழாமல் இருக்கவில்லை.

தூங்கிவிட்டவன் அல்லது மறந்து விட்டவன் அத்தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பது (களா) திரும்பத் தொழவேண்டும் என்ற அடிப்படையில் அல்ல. தூக்கத்திலிருந்து எழும்போது அல்லது அந்தத் தொழுகை யைப் பற்றிய நினைவு வரும்போதுதான் அதன் நேரம் அவனுக்கு (உண்டாகின்றது) வருகிறது என்பதை அறிய வேண்டும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 12:50 pm

உதிரப்போக்கு

மாதவிடாய் நாட்கள் அல்லாத மற்ற நாட்களில் பெண்களுக்கு வெளியாகும் உதிரப்போக்கை சாதாரன மான இரத்தம் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். மாதவிடாய் இரத்தமும், இந்த இரத்தமும் ஒன்றுபோல் காணப்படுவதால் இரண்டயையும் பிரித்து அறியும் விஷயத்தில் சில சிரமங்கள் உள்ளன.

உதிரப்போக்கு தொடர்ச்சியாக இருந்தால் மாத விடாய் இரத்தம் எது, சாதாரனமான இரத்தம் எது, எந்த இரத்தம் வருவதால் தொழுகையை விட வேண்டும் என்பதையெல்லாம் தெரிவது கடமையாகும். பெண் களுக்கு உதிரப்போக்கு மூன்று நிலைகளில் உள்ளது.

1. ஒரு பெண்ணுக்கு தொடர் உதிரப்போக்கு ஏற்படுவ தற்கு முன்பு ஏற்கனவே மாதத்தின் ஆரம்பத்திலோ, நடுவிலோ அல்லது கடைசியிலோ, ஐந்து, எட்டு, அல்லது குறிப்பிட்ட சில நாட்கள் மாதவிடாய் ஏற்படும் வழக்கமுள்ளவளாக இருப்பாள். இந்நாட்கள் தான் அவளுடைய மாதவிடாய் நாட்கள் என்பதை அறிந்து கொள்வாள். அந்நாட்களில் அவள் தொழுகை மற்றும் நோன்பை விட்டுவிட வேண்டும். குறிப்பிட்ட நாட்கள் முடிந்ததும் அவள் குளித்துத் தூய்மையாகி தொழுகை யைத் தொடரவேண்டும். அதற்குமேல் தொடரும் உதிரப்போக்கை சாதாரனமான இரத்தம் எனக் கருதவேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹபீபா(ரழி) அவர்களி டம், ''உன்னுடைய மாதவிடாய் நாட்களின் அளவு நீதொழாமல் இருந்துகொள்! அதன் பின்னர் குளித்துத் தூய்மையாகி தொழுகையைத் தொடர்ந்து கொள்!'' என்று கூறினார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

2. ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மாதவிடாய் இத்தனை நாட்கள்தான் என்பது திட்டவட்டமாகத் தெரியாது இருக்கும்போது, இரத்தத்தின் நிறம், வாடை ஆகியவற்றை வைத்து உதிரப்போக்கு எது என்பதை தெரிந்து கொள்ளலாம். அது கருப்பு நிறமாகவோ, நாற்றமுடையதாகவோ இருக்குமானால் மாதவிடாய் இரத்தம் என கணிக்கப்படும். மாதவிடாய் இரத்ததைப் பொறுத்த வரையில் அது சிகப்பு நிறமாகவும் இருக்கும். இதை வைத்து ஒரு பெண் தனக்கு ஏற்பட்டுள்ளது மாதவிடாய் இரத்தம்தான் என்பதை அறிந்துகொண்டு அந்நாட்களில் தொழுகை, நோன்பை விட்டு விட வேண்டும். அவள் எதை மாதவிடாய் இரத்தம் எனத் தீர்மானிக்கிறாளோ அந்நாள் முடிந்ததும் குளித்து

விட்டு தொழுகை மற்றும் நோன்பை கடைபிடிக்க வேண்டும்.

இதற்கு ஆதாரம் பாத்திமாபின்த் அபீஹ{பைஷ் அவர்களிடத்தில் நபி(ஸல்) கூறிய ஹதீஸாகும்.

மாதவிடாய் அறியப்படும் விதத்தில் கறுப்புநிற முடையதாக இருந்தால் தொழுகையை விட்டுவிடு, வேறு நிறத்தில் இருந்தால் நீ உளு செய்து தொழுது கொள். (அப+தா¥து, நஸயீ)

3. மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே மாதவிடாய் ஏற்படும் என்ற வழக்கம் இல்லாத ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் மற்றும் உதிரப்போக்கை பிரித்தறிய முடியாத நிலை ஏற்படுமானால், ஒரு மாதத்தில் அதிகப்படியாக மாதவிடாய் ஏற்படும் நாட்களாக ஆறு அல்லது ஏழு நாட்களை மட்டும் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும். அதுதான் அதிகமான பெண் களின் மாதவிடாய் நாட்களாகும்.

ஹம்னா பின்த் ஜஹ்ஷ்(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் ''அது ஷைத்தானால் ஏற்படும் தீட்டாகும். நீ ஆறு அல்லது ஏழு நாட்களை மாதவிடாய் நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்! பின்னர் குளித்துக் கொள்! மாதத்தில் 24 அல்லது 23 நாட்கள் தொழுகை நோன்பு ஆகியவற்றை நிறைவேற்றிக்கொள்! அது உனக்கு போது மானதாகும். இவ்வாறே மற்ற பெண்களைப் போன்று நீ மாதவிடாய் நாட்களைக் கணக்கிட்டுக் கொள்!ம் என்று கூறினார்கள். (நூற்கள்: அப+தா¥த், நஸயீ, திர்மதி, இப்னுமாஜா, அஹ்மது)

சுருங்கக் கூறினால், மாதவிடாய் இத்தனை நாட்கள் தான் என பழக்கப்பட்டவள் அந்நாட்களை மட்டுமே மாதவிடாய் நாட்களாக எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டு இரத்ததையும் வேறுபடுத்தி அறியக்கூடியவள் அதன்படியே செயல்படவேண்டும். இந்த இரண்டு நிலையிலும் இல்லாத ஒருவள், ஆறு அல்லது ஏழு நாட்களை மாதவிடாய் நாட்கள் என எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் தொடர் உதிரப்போக்குள்ள பெண்ணின் விஷயத்தில் வந்துள்ள மேற்கண்ட மூன்று நபிமொழிகளையும் பின்பற்றியவளாகக் கருதப்படுவாள்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 12:51 pm

ஷைகுல்இஸ்லாம் இமாம் இப்னுதைமிய்யா கூறுகிறார். உதிரப்போக்குள்ள பெண்களுக்காக கூறப்பட்ட விஷயங்கள் :

1. வழக்கம்: வழக்கமாகக் கடைபிடித்து வரும் ஒன்று உறுதியானதாகும். இங்கு மாதவிடாய் தான் அடிப் படையே தவிர மற்றவை அல்ல.

2. பிரித்தறிதல்: கருப்பான கட்டியான துர்நாற்றமுள்ள இரத்தம் மாதவிடாயாக இருக்க அதிக வாய்ப்புண்டு. ஏனெனில் சிகப்பு நிற மாதவிடாய் இரத்தத்தை பிரித்தறிய முடியும்.

3. அதிகமான பெண்களின் வழக்கத்தை கவனித்தல்: ஒரு தனிநபர் பொதுவாக அதிக மக்களின் வழக்கத்தைக் கடைபிடிப்பதுதான் அடிப்படை.

இந்த மூன்று அடிப்படைகளுக்கும் ஹதீஸ் ஆதாரம் உள்ளது என்று கூறிவிட்டு மற்ற அடையாளங்களைக் குறிப்பிடுகிறார்.

''இது விஷயத்தில் ஹதீஸில் வந்துள்ள அடை யாளங்களை வைத்து கவனிப்பதுதான் சரியானதாகும், மற்றவற்றை விட்டுவிட வேண்டியதுதான் என 'நிஹாயா'' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதிரப்போக்குடைய பெண் அவள் சுத்தமானவள் என்ற முடிவின் படி அவள் கடைபிடிக்க வேண்டியவை.

1. முன்பு குறிப்பிட்ட விளக்கத்தின் பிரகாரம் மாதவிடாய் முடிந்ததும் குளிப்பது அவள்மீது கடமையாகும்.

2. ஒவ்வொரு தொழுகையின் போதும் இரத்தம் வெளியாகி அசுத்தமாக உள்ள இடத்தை சுத்தப்படுத் திக் கொள்ளவேண்டும். இரத்தம் வரும் துவாரத்தை பஞ்சு போன்ற பொருளால் அடைத்து அது விழுந்து விடாதபடி கட்டி வைக்கவேண்டும். பின்னர் தொழுகை யின் நேரம் வந்ததும் உ@ செய்து தொழவேண்டும்.

உதிரப்போக்குடைய பெண் விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள், ''இப்படிப்பட்ட பெண் அவள் மாதவிடாய் என்று தீர்மானித்த நாட்களில் தொழுகையை விட்டு விடுவாள். பின்னர் குளித்து ஒவ்வொரு தொழுகைக்கும் உ@ச் செய்து கொள்ளவேண்டும்'' என்று கூறினார்கள். (நூற்கள்: அப+தா¥த், இப்னுமாஜா)

உதிரப்போக்குடைய பெண்ணிடம், ''பஞ்சை அந்த இடத்தில் வைத்துக் கட்டிக்கொள்!'' என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதற்கென்றே தற்போது மருத்துவமுறையில் செய்யப்பட்ட பாதுகாப்பான பஞ்சுகள் (யீயனள) கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிரசவ இரத்தம்

பிரசவ இரத்தம் என்பது பிரசவத்தின் போதும், பிரசவம் முடிந்த பின்பும் கற்பப்பையிலிருந்து வெளியா கும் இரத்தமாகும். இந்த இரத்தம் கற்பக் காலத்தில் கற்பப்பையில் தேங்கியிருந்த இரத்தமாகும். பிரசவம் ஆம்விட்டால் இந்த இரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகும்.

பிரசவத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக வெளியாகும் பிரசவத்தின் அடையாள இரத்தமும் பிரசவ இரத்தமாகவே கருதப்படும். இது அதிகமாகவும் பிரசவம் நிகழும் போது தான் வெளியாகும்.

மனித தோற்றம் பெற்று குழந்தை வெளியாவது பிரசவம் எனப்படும். மனித தோற்றம் பெறுவதற்கு குறைந்தது 81 நாட்களோ, அதிகப்படியாக மூன்று மாதங்களோ ஆகும். இதற்கு முன்பாக (81 நாட்கள்) ஏதும் வெளியா னால் அதோடு இரத்தம் வந்தால் அந்த இரத்தத்தை உதிரப்போக்கு இரத்தமாகவே கருத வேண்டும். இது கெட்ட இரத்தம், இதற்காக தொழுகை, நோன்பைவிட வேண்டியதில்லை, சாதாரனமான உதிரப் போக்குடைய பெண்ணின் சட்டம்தான் இவளுக்கும் பொருந்தும்.

பிரசவத்திற்குப் பின்னர் வெளிப்படும் இரத்தம் அதிகப்படியாக நாற்பது நாட்கள் வரை நீடிக்கும்.

''நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பிரசவத்தினால் உதிரப்போக்கு ஏற்படும் பெண்கள் நாற்பது நாட்கள் தொழாமல் இருந்துவிடுவார்கள்'' என உம்முஸலமா(ரழி) அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதீ)

நாற்பது நாட்களுக்கு முன் இரத்தம் நின்று தூய்மையாகிவிட்ட பெண் குளித்துத் தொழுகையைத் தொடர வேண்டும். பிரசவ இரத்தத்தின் குறைந்த நாட்கள் எத்தனை என்பதற்கு வரம்பு ஏதும் இல்லை.

நாற்பது நாட்கள் கழிந்த பின்பும் இரத்தம் நிற்காதி ருந்தால் அந்நாட்கள் அவளுடைய மாதவிடாய் நாட் களாக இருக்குமானால் அந்த இரத்தத்தை மாதவிடாய் இரத்தமாகக் கருதவேண்டும். மாதவிடாய் நாட்களாக இல்லாமலிருப்பின் அதை சாதாரனமான உதிரப்போக் காக எடுத்துக் கொள்ள வேண்டும். நாற்பது நாட்கள் கழிந்த பின்னர் தொழாமலும், நோன்பு நோற்காமலும் இருக்கக்கூடாது.








சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 12:51 pm

பிரசவ உதிரப்போக்குடைய பெண்களுக்கான சட்டங்கள்

பிரசவ இரத்தம் வெளிப்படும் பெண்களுக்கு மாதவிடாய்ப் பெண்களுக்குள்ள சட்டங்கள்தான்.

1. பிரசவ இரத்தம் வெளியாகும்போது அவளுடன் அவளுடைய கணவன் உடலுறவு கொள்வது கூடாது. உடலுறவைத் தவிர மற்ற இன்பங்களை அனுபவிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.

2. பிரசவ இரத்தம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் பெண் தொழுவது, நோன்பு நோற்பது, கஅபாவை வலம் வருவது கூடாது.

3. பிரசவ இரத்தின்போது விடுபட்டுப்போன நோன்பு களை மற்றநாட்களில் நோற்கவேண்டும். பிரசவ இரத்தம் வெளியாகும் பெண்கள் குர்ஆனை தொடு வதும் அதை ஓதுவதும் கூடாது, குர்ஆன் மறந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டாலே ஒழிய

4. மாதவிடாய் இரத்தம் நின்ற பெண் குளிப்பது எவ்வாறு கடமையோ அவ்வாறே பிரசவ இரத்தம் நின்றதும் குளிப்பது பெண்கள் மீது கடமையாகும்.

இதற்கான ஆதாரங்கள்:

1. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பிரசவமான பெண் நாற்பது நாட்களுக்கு தொழாமலிருந்து விடுவாள்கி என உம்முஸலமா(ரழி)அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மது, அப+தா¥து, நஸயி, இப்னுமாஜா, திர்மிதி)

இமாமுல்மஜ்த் இப்னு தைமிய்யா முன்தகா எனும் தம் நூலில் 1ழூ ழூ184 வது பக்கத்தில் குறிப்பிடுகிறார்.

இந்த ஹதீஸின் பொருள் பிரசவ உதிரப்போக்கு ஏற்பட்டிருக்கும் பெண் நாற்பது நாட்கள் தொழாமல் இருக்குமாறு கட்டளையிடப்பட்டிருக்கிறாள். நபி(ஸல்) அவர்களின் மனைவி அறிவிக்கும் செய்தி முரண்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காக மாதவிடாய், பிரசவ உதிரப்போக்கு விஷயத்தில் ஒரு காலத்திலுள்ள பெண் களின் பழக்கம் ஒன்று பட்டிருக்க முடியாது என்றே கூறவேண்டும்.

''நபி(ஸல்) அவர்களுடைய மனைவியரில் ஒருவர் பிரசவத்தின்போது நாற்பது நாட்கள் (காத்து) இருப்பார் கள். அந்நாட்களின் விடுபட்டுப்போன தொழுகையைத் தொழுது கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் அப்பெண் களுக்குக் கட்டளையிட மாட்டார்கள்'' என உம்மு ஸலமா(ரழி) அறிவிக்கிறார். (நூல்: அப+ தா¥த்)

குறிப்பு: ஒருபெண்ணிற்கு பிரசவ உதிரப்போக்கு நாற்பது நாட்களுக்கு முன்பே நின்றுவிடுமானால் அவள் குளித்துவிட்டு தொழுகை மற்றும் நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றிய பின் நாற்பது நாட்கள் முடிவதற்குள் திரும்பவும் உதிரப் போக்கு ஏற்படுமானால் அது பிரசவத்தினால் ஏற்படும் உதிரப்போக்காகவே கருதப்படும். உதிரப்போக்கு நின்றிருந்த நாட்களில் தொழுத தொழுகை மற்றும் நோன்பு போன்றவை ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவே கருதப்படும். செய்து முடித்து விட்ட அக்கடமைகளை மீண்டும் செய்ய வேண்டிய தில்லை.

பார்க்க: ஷேக் முஹம்மத் இப்னு இப்ராஹீமின் ஃபத்வாத் தொகுப்பு 2ழூ ழூ102.

ஷேக் அப்துல்லாஹ் இப்னு பாஸ் அவர்களின் பத்வாத் தொகுப்பான அஸ்ஸாது என்ற நூலின் விளக்கவுரை பக்கம்: 1ழூ ழூ405

பெண்களுக்கான இயற்கை உதிரப்போக்கு பக்கம்: 55,56

ஃபதாவா ஸஅதிய்யா பக்கம்: 137

ஷேக் அப்துர் ரஹ்மான் பின் சஅதி கூறுகிறார்கள்: மேற்கூறப்பட்ட விஷயங்களிலிருந்து பின்வரும் அடிப் படைகள் புலனாகின்றன, பிரசவத் தீட்டிற்கான காரணம் பிள்ளைபேறு ஆகும். தொடர் உதிரப்போக்கு என்பது நோயினால் ஏற்படுவதாகும். மாதவிடாய் இரத்தம்தான் ஒரு பெண்ணிற்கு அடிப்படையாக வரும் இரத்தம், அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

(நூல்: இர்ஷாத் உலுல் அப்ஸார் வல்அல்பாப்1 பக்கம்:24)






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக