ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதையை மாற்றிய பயணச்சீட்டு

4 posters

Go down

பாதையை மாற்றிய பயணச்சீட்டு Empty பாதையை மாற்றிய பயணச்சீட்டு

Post by சிவா Sun Jul 04, 2010 7:36 am

சுமன் எப்போதும் அந்த தனியார் பஸ்ஸில் பள்ளிக்கு செல்லவே விரும்புவான். காரணம் அது எப்போதும் பெரும் கூட்டமாக இருக்கும். அரசுப் பேருந்தில் செல்ல இலவச பஸ் பாஸ் இருந்தாலும், பள்ளி துவங்கும் நேரத்துக்குச் செல்ல தனியார் பேருந்தே ஒத்து வந்ததால் அதிலேயே சென்று வந்தான்.

வீட்டிலும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் தினமும் டிக்கெட்டுக்காக பணம் கொடுத்து விடுவார்கள். அதுதவிர, அவன் அவ்வப்போது கேட்கும் பணமும் முகம் சுளிக்காமல் கொடுக்கப்படும். காரணம், அவன் எண்ணம் முழுவதும் படிப்பிலேயே இருக்க வேண் டும் என்றும், தங்கள் மகன் வருங்காலத்தில் ஒரு பெரிய கல்விமானாக வரவேண்டும் என்றும் பெற்றவர்கள் விரும்பினார்கள்.

ஒவ்வொரு ஸ்டாப்பிலும் பஸ் நிற்கும்போது இறங்கிவிடுவான். நடத்துனரின் விசில் சத்தம் கேட்டு பஸ் கிளம்பும்போது வேகமாக ஓடி படியில் நின்று பயணிப்பான். நடத்துநர் திட்டுவதைக் காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டான். ஆனால் எப்போதும் பயணச்சீட்டு வாங்கியதே இல்லை. கூட்டமாக இருப்பதால் நடத்துநராலும் யார் யார் டிக்கெட் எடுத்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. எப்போதாவது அவனைப் பார்த்து டிக்கெட் கேட்டால் ஏற்கனவே வாங்கி விட்டேனே என்று கூறி விடுவான்.

இப்படியாக பஸ்சில் டிக்கெட் எடுக்காமலும், பெற்றவர்களிடம் செலவுக்காக கேட்டு வாங்கும் பணத்திலும் பள்ளிக்கு செல்லாமல் கட் செய்துவிட்டு நண்பர்களோடு சினிமா வுக்கு சென்று விடுவான். தவறான பழக்கங்களுக்கும் அடிமை ஆனான். இப்படிப் பெற்றவர்களின் ஆசைக்கு நேர் விரோதமாக இருந்ததோடு, நல்லொழுக்கம் போதிக் கும் கல்விக்கே அவன் ஒரு களங்கமாக விளங்கினான். இப்படியாக அவனுடைய பொழுது ஜாலியாகக் கழிந்து கொண்டிருந்தது.

அன்றும் வழக்கம்போல் பயணம் தொடர்ந்தது. அப்போது வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் ஏறினார். சுமன் படியில் நின்று கொண்டிருந்தான். ஒரே கூட்டம். நடத்துனர் டிக்கெட்... டிக்கெட்... என்று கேட்டுத் தொந்தரவு செய்யவே, அன்று ஏமாற்ற வேண்டாம் என்று நினைத்த சுமன் மூன்று ரூபாய் டிக்கெட் ஒன்று வாங்கிக் கொண்டான்.

அப்போது அந்த பெரியவர் டிக்கெட்டுக்கான பணத்தை நீட்டினார். நடத்துனர் அவன் அருகில் இருந்ததால் பெரியவரின் அருகில் இருந்தவர்கள் ஒருவர் கை ஒருவர் மாற்றி கடைசியில் பணத்தை வாங்கி சுமனிடம் கொடுத்து, "தம்பி, பெரியவருக்கு மூன்று ரூபாய் டிக்கெட் ஒன்று வாங்கிக் கொடுப்பா'' என்றார்.

நடத்துனர் முன்புறம் பார்த்து டிக்கெட் கேட்பதில் ஈடுபட்டிருந்தார். அதற்குள் அவன் இறங்க வேண்டிய இடமும் வந்தது. சட்டென தன்னிடம் இருந்த மூன்று ரூபாய் டிக்கெட்டை எடுத்து பெரியவரிடம் கொடுத்துவிட்டு, அந்தப் பணத்தை பெருமையுடன் தன் பையினுள் நுழைத்தான். `ஆகா, இன்னிக்கு நாம முழிச்சது நரி முகத்துல போல இருக்கு... இல்லாட்டி நாம டிக்கெட் வாங்கினாலும் ஏன் அனாவசியமா செலவு செய்தேன்னு சொல்லாம சொல்லி அந்த டிக்கெட்டுக்கான பணத்தை பெரியவர் மூலமா கடவுள் நமக்கு கிடைக்க வெச்சிருப்பாரா...' என்று நினைத்துக் கொண்டு அவன் ஸ்டாப்பில் இறங்கவும், டிக்கெட் பரிசோதகர் வரவும் சரியாக இருந்தது.

"தம்பி, உன் டிக்கெட்டைக் கொடு?''

"சார் வந்து...'' என்று சொல்லியபடி பையினுள் கையைவிட்டு பாசாங்கு செய்தான்.

"என்ன கிடைச்சுதா?''

"இல்ல சார், கூட்டத்துல எங்காச்சும் விழுந்திருக்குமோன்னு நினைக்கிறேன்...''

"இத்தனை பேரும் கூட்டத்துலதானே நின்னுகிட்டு வந்தாங்க. உன்னோட டிக்கெட் மட்டும் எப்படி காணாமப் போச்சு?''

"இல்ல சார், உண்மையிலேயே நான் டிக்கெட் வாங்குனேன்''

"அப்படின்னா டிக்கெட்டைக் காட்டு, இல்லாட்டி 500 ரூபாய் அபராதம் கட்டிட்டு போ''

"சார்... சார்... அவ்வளவு பணம் இல்லீங்க. வேணும்னா டிக்கெட்டுக்கான பணத்தை கொடுத்துடறேன் சார்'' என்று கெஞ்சினான் சுமன்.

"அது ஒத்து வராது தம்பி, 500 ரூபாய் பைன் கட்டு. இல்ல போலீசுக்கிட்ட ஒப்படச்சுடுவோம். என்ன சொல்ற...?''

அவன் தலையைக் குனிந்து கொண்டான்.

"எந்த பள்ளிக்கூடத்துல படிக்கிற?''

பள்ளியின் பெயரைச் சொன்னான் சுமன்.

"ஏம்பா, இதைத்தான் பள்ளியில சொல்லி கொடுத்திருக்காங்களா?'' செக்கர் கோபமாகக் கேட்டார்.

அப்போது பஸ்சிலிருந்து இறங்கிய சுமனின் ஆசிரியர் வேகமாக செக்கரை நோக்கி வந்தார்.

"அய்யா வணக்கமுங்க. நான் இவனோ தமிழ் ஆசிரியர், வகுப்பு ஆசிரியரும் கூட. நாங்க நல்லொழுக்கத்தைத்தான் போதிக்கிறோம். பயணிக்கும் பேருந்தில் பயணச்சீட்டு வாங்க வேண்டாமென்றோ, சாப்பிடும் சிற்றுண்டிக்கு பணம் கொடுக்காதீர்கள் என்றோ போதிப்பதில்லை. உங்களிடம் மாட்டிக்கொண்ட இந்தப் பையன் ஒழுங்கீனமானவன். பள்ளிக்கு பல நாட்கள் கட் அடித்து, தகாத நண்பர்களுடன் ஊர் சுற்றித் திரிபவன். இவனுக்கு நாங்கள் கூறிய புத்திமதிகள் அனைத்தும் கடலில் பெய்த மழை போல வீணாயிற்று. இது ஆசிரியரின் குற்றமோ, பள்ளியின் குற்றமோ இல்லை. இருந்தாலும் இவன் என் மாணவன் என்பதால் இவன் செயலுக்கு வெட்கப்பட்டு, தாங்கள் கேட்கும் அபராதத்தை நானே கட்டி விடுகிறேன்'' என்று கூறி தன் பர்சிலிருந்த பணத்தை எடுத்து பரிசோதகரிடம் கொடுத்தார்.

நல்லொழுக்கம் போதிக்கும் ஆசிரியருக்கும், நற்பண்புகள் வளர்க்கும் கல்விக்கூடத் துக்கும் தன்னுடைய செயலால் கெட்ட பெயர் உண்டானதற்காக மனம் வருந்தி அழுது ஆசிரியரின் கால்களில் விழுந்தான் சுமன். அன்று மாலையே தன் பெற்றவர்களிடம் நடந்ததை மறைக்காமல் கூறி அவர்களிடம் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டான். அத்துடன் நிற்காமல் தன் தந்தையை விட்டே தமிழ் ஆசிரியர் அபராதமாகச் செலுத்திய 500 ரூபாய் பணத்தையும் திருப்பிக் கொடுக்கச் செய்தான். இப்போது பஸ்சில் ஏறிய உடனேயே முதல் ஆளாக டிக்கெட் எடுப்பதுடன், படியில் நின்று பயணிப்பதையும் விட்டு விட்டான் சுமன்.

***


பாதையை மாற்றிய பயணச்சீட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாதையை மாற்றிய பயணச்சீட்டு Empty Re: பாதையை மாற்றிய பயணச்சீட்டு

Post by Aathira Sun Jul 04, 2010 7:41 am

அருமையான நீதிக் கதை... யார் எழுதியது சிவா.. பாதையை மாற்றிய பயணச்சீட்டு 678642


பாதையை மாற்றிய பயணச்சீட்டு Aபாதையை மாற்றிய பயணச்சீட்டு Aபாதையை மாற்றிய பயணச்சீட்டு Tபாதையை மாற்றிய பயணச்சீட்டு Hபாதையை மாற்றிய பயணச்சீட்டு Iபாதையை மாற்றிய பயணச்சீட்டு Rபாதையை மாற்றிய பயணச்சீட்டு Aபாதையை மாற்றிய பயணச்சீட்டு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பாதையை மாற்றிய பயணச்சீட்டு Empty Re: பாதையை மாற்றிய பயணச்சீட்டு

Post by சிவா Sun Jul 04, 2010 7:43 am

Aathira wrote:அருமையான நீதிக் கதை... யார் எழுதியது சிவா.. பாதையை மாற்றிய பயணச்சீட்டு 678642

தங்கமலரில் உள்ள கதை அக்கா! எழுதியவரின் பெயர் கிடைக்கவில்லை!


பாதையை மாற்றிய பயணச்சீட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாதையை மாற்றிய பயணச்சீட்டு Empty Re: பாதையை மாற்றிய பயணச்சீட்டு

Post by நவீன் Tue Jul 06, 2010 6:55 pm

பாதையை மாற்றிய பயணச்சீட்டு 677196 பாதையை மாற்றிய பயணச்சீட்டு 677196 பாதையை மாற்றிய பயணச்சீட்டு 677196 பாதையை மாற்றிய பயணச்சீட்டு 677196 பாதையை மாற்றிய பயணச்சீட்டு 677196 பாதையை மாற்றிய பயணச்சீட்டு 677196 பாதையை மாற்றிய பயணச்சீட்டு 677196 பாதையை மாற்றிய பயணச்சீட்டு 677196 பாதையை மாற்றிய பயணச்சீட்டு 677196 பாதையை மாற்றிய பயணச்சீட்டு 677196 பாதையை மாற்றிய பயணச்சீட்டு 677196 பாதையை மாற்றிய பயணச்சீட்டு 677196 பாதையை மாற்றிய பயணச்சீட்டு 677196 பாதையை மாற்றிய பயணச்சீட்டு 677196 பாதையை மாற்றிய பயணச்சீட்டு 677196 பாதையை மாற்றிய பயணச்சீட்டு 677196 பாதையை மாற்றிய பயணச்சீட்டு 677196 பாதையை மாற்றிய பயணச்சீட்டு 677196 பாதையை மாற்றிய பயணச்சீட்டு 677196 பாதையை மாற்றிய பயணச்சீட்டு 677196 பாதையை மாற்றிய பயணச்சீட்டு 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பாதையை மாற்றிய பயணச்சீட்டு Empty Re: பாதையை மாற்றிய பயணச்சீட்டு

Post by பிளேடு பக்கிரி Tue Jul 06, 2010 6:57 pm

பாதையை மாற்றிய பயணச்சீட்டு 678642 பாதையை மாற்றிய பயணச்சீட்டு 678642 பாதையை மாற்றிய பயணச்சீட்டு 678642



பாதையை மாற்றிய பயணச்சீட்டு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பாதையை மாற்றிய பயணச்சீட்டு Empty Re: பாதையை மாற்றிய பயணச்சீட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum