ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி

+2
கலைவேந்தன்
ரபீக்
6 posters

Go down

தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Empty தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி

Post by ரபீக் Sat Jul 03, 2010 6:02 pm

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர், தமிழ் ஈழம் மலரும் என்றால், அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான் என்று மு.கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:- ஜெயலலிதா அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில் உங்களை "சதிச் செயல் புரியும் மரண வியாபாரி'' என்று வர்ணித்து மற்றும் இலங்கை ராணுவத்தில் பணி புரிந்தோர்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகளாக கருதப்படுகிறார்களோ, அதைப் போல கருணாநிதியும் ஒரு "போர்க்குற்றவாளி'' என்றும் குறிப்பிட்டிருக்கிறாரே, அந்த அறிக்கையைப் பார்த்தீர்களா?

பதில்:- பார்த்தேன். இதயம் உள்ளவர்கள் என்று நான் கருதியிருக்கிற பத்திரிகையாளர்கள் நடத்துகிற ஏடுகளில் அந்த அம்மையாரின் அறிக்கையை பெரிய தலைப்புகளில் பார்த்தேன். தொடர்ந்து உள்ளே படித்தும் பார்த்தேன். அறிக்கை வெளியிட்டுள்ள அம்மையாரும், அதற்கு ஒளிïட்டியுள்ள பத்திரிகை நண்பர்களும் என் இதயமார்ந்த நன்றிக்குரியவர்கள். ஏனென்றால் அந்த அறிக்கையின் கர்த்தாவாகிய அம்மையார் ஜெயலலிதா-இலங்கைப் பிரச்சினையில் ஏடாகூடமாக என்னென்ன பேசியிருக்கிறார், எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறார் என்பதை விளக்குவதற்காக விரிவான பதிலைச் சொல்ல வாய்ப்பளித்திருக்கிறார்கள் அல்லவா? அந்த வாய்ப்பை எண்ணித்தான் அவர்களை நன்றிக்குரியவர்கள் என்று குறிப்பிடுகிறேன்.

"படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்திய நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது'' என்று தமிழகச் சட்டப்பேரவையில் 16-4-2002 அன்று ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் என்பதை இதயம் என ஒன்றிருப்போர் இதற்குள் மறந்துவிட முடியுமா?

இலங்கையில் ராஜபக்சேயின் சிங்களப்படையினர் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த போது, அதனைக் கண்டித்து தமிழகத்தில் ஊர்வலங்களும், மனிதச்சங்கிலிகளும் பொதுக்கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றபோது, "இலங்கைத் தமிழர்களைக் கொல்லவேண்டு மென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விடாமல் விடுதலைப்புலிகள் அவர்களைப்பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்'' என்று 17-1-2009 அன்று அறிக்கை விடுத்த ஜெயலலிதாவின் பேனா முனையின் ஈரம் கூட இன்னும் காய்ந்திருக்காது.

அது மட்டுமா? இலங்கையில் தமிழ் இனப்படுகொலையைக் கண்டித்து, போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியபோது - இதே ஜெயலலிதாதான் "விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள்மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடக்கும் உள் நாட்டுப்போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை'' என்று கூறியதோடு - ``இலங்கையில் நடக்கும் யுத்தம் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் என்னும் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம் என்றும்-அதனால்தான் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் இறந்ததற்கு கருணாநிதி இரங்கற்பா எழுதுகிறார்'' என்றும் ஜெயலலிதா அறிக்கை விடுத்து-அந்த அறிக்கையை இன்றைக்கு ஜெயலலிதாவின் அறிக்கையை வெளியிடுகின்ற ஏடுகள் அல்லது ஏடுகளின் எழுத்தாளர்கள்-எம்மான்கள் - பெம்மான்கள் ஏனோ மறந்துவிட்டனர்.

இலங்கையில் வாழுகின்ற ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகவும்-இரண்டாம் நிலை குடிமக்கள் என்று ஒதுக்கப்படுவதிலிருந்து அந்த மக்கள் இலங்கையில் - எல்லா உரிமைகளையும் பெற்று சமத்துவமாகவும், சமநீதியும் பெற்று வாழும் வகை வகுக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக 1956 முதல் குரல் கொடுத்து வரும் தி.மு.கழகத்தையும் -அந்தக் கழகத்தின் தலைவனாக இருக்கின்ற என்னையும்- வைகோ வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட போது அவர் உரக்க உரக்கக் கூறிய "சூன்யக்காரி'', "சூழ்ச்சிக்காரி'', "சண்டாளி'', "சதிகாரி'' என்ற பட்டங்களுக்கு அன்றின்றெனாதபடி என்றென்றும் உரியவரான ஒருவர்-நல்லோர் நாவில் வராத இத்தகைய நச்சுமொழிகளால் அர்ச்சிப்பதை நான் பொருட்படுத்தவில்லை.

2009-ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது -இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்றால், அதற்காக ஆட்சியை இழக்கக் கூட நாங்கள் தயார் என்று அறிவித்தவன் நான் என்பதை உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்கள் உணருவார்கள்.

அதனால் தான் ஈழத்தந்தை செல்வாவின் அன்புமகன் சந்திரஹாசன் எனக்கெழுதிய கடிதத்தில் "ஈழத் தமிழர் இன்னல், அதையொட்டித் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு இவையெல்லாம் தங்களைப் பாதிக்கும் என்பதை அறிவோம். ஆயினும் தாங்கள் ஆட்சியில் இருப்பதால்தான் இலங்கையில் சிங்களப் பேரினவாதம் ஓரளவுக்கேனும் அடக்கி வாசிக்கிறது. உலகத்தமிழர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளியிட முடிகின்றது'' என்று எழுதினார். இதனை மனதிலே கொண்டுதான் சில "ஜீவன்''களின் விமர்சனங்களை மறந்துவிடுகிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Empty Re: தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி

Post by கலைவேந்தன் Sat Jul 03, 2010 7:29 pm

வாய்ப்பேச்சு வித்தகன்...! தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி 56667



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Empty Re: தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி

Post by antokkuly Sat Jul 03, 2010 9:44 pm

தமிழர்கள் சாகும்போது டெல்லி போகாமல் தன் மகனுக்கு மந்திரி பதவி வேண்டி டெல்லி சென்ற தமிழின தலைவர் (துரோகி). தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி 56667
antokkuly
antokkuly
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 06/02/2010

Back to top Go down

தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Empty Re: தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி

Post by ilakkiyan Sun Jul 04, 2010 2:29 pm

கலை wrote:வாய்ப்பேச்சு வித்தகன்...! தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி 56667
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Empty Re: தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி

Post by பிளேடு பக்கிரி Sun Jul 04, 2010 2:52 pm

antokkuly wrote:தமிழர்கள் சாகும்போது டெல்லி போகாமல் தன் மகனுக்கு மந்திரி பதவி வேண்டி டெல்லி சென்ற தமிழின தலைவர் (துரோகி). தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி 56667

அவன் எல்லாம் ஒரு ஆளா...?அவனக்கு பாராட்டு விழா நடத்தவே நேரம் இல்ல



தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Empty Re: தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி

Post by சரவணன் Sun Jul 04, 2010 3:01 pm

இப்படி பேசி பேசியே தமிழர்கள் தலையில மிளகா அரைப்பதில் இவரை மிஞ்ச வேறு எவரும் இல்லை.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி Empty Re: தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum