ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
இயேசுவின் மகிமை Poll_c10இயேசுவின் மகிமை Poll_m10இயேசுவின் மகிமை Poll_c10 
ayyasamy ram
இயேசுவின் மகிமை Poll_c10இயேசுவின் மகிமை Poll_m10இயேசுவின் மகிமை Poll_c10 
mini
இயேசுவின் மகிமை Poll_c10இயேசுவின் மகிமை Poll_m10இயேசுவின் மகிமை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசுவின் மகிமை

Go down

இயேசுவின் மகிமை Empty இயேசுவின் மகிமை

Post by Admin Wed Oct 08, 2008 10:48 pm

"இயேசுவின் மகிமை"யில் வெளியான- இயேசு செய்த அற்புதங்களில் சில..

"நாங்கள் ஆடிப்போய்விட்டோம்!"

மகளை பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். முதலில் 'நார்மல் டெலிவரி'(சுகபிரசவம்) என்று சொல்லி, ரூ6000 செலவாகும் என்றார்கள்.

பிறகு,'நார்மல் டெலிவரி' ஆகாது. "சிசரியன்"(ஆபரேசன்) செய்துதான் குழந்தையை எடுக்க வேண்டும். இதற்கு ரூ20,000 செலவாகும் என்று கூறிவிட்டார்கள்.

எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இவ்வளவு பணத்துக்கு எங்கே போவோம் என்று ஆடிப்போய்விட்டோம்.

மகளிடம் ஜெப எண்ணையை கொடுத்து போடச்சொல்லி, நான் கண்ணீரோடு இயேசுவை நோக்கி ஜெபிக்க தொடங்கினேன்.

'கர்த்தாவே! உம்மாலே முடியாதது ஒன்றும் இல்லை. மகளுக்கு சுகபிரசவத்தை கொடுக்க உம்மால் முடியும். எங்களுக்கு இரங்கி சுகபிரசவத்தில் குழந்தை பிறக்க செய்து அவளை சுகமாக காத்துக் கொள்ளும்' என்று அழுது, மிகுந்த பாரத்துடன் ஜெபித்தேன்.

எல்லாரும் ஆச்சரியப்படும்படியாக,சில நிமிடத்தில் மகளுக்கு சுகமான பிரசவத்தில் குழந்தை பிறந்தது, நாங்கள் நினைத்தபடியே பெண் குழந்தையை தந்து எங்களை சந்தோஷப்படுத்தினார்.
எங்களை பயத்துக்கும் வீண் செலவுக்கும் விலக்கி காத்து,மகளுக்கு சுகபிரசவத்தை அருளி. எங்களை மகிழச்செய்த தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.

என் 5 வயது பேரனுக்கு நான்கு நாட்களாக கடுமையான ஜுரம் வந்து மிகவும் கஷ்டப்பட்டான். காய்ச்சல் அதிகமாகி வலிப்பு வந்து விட்டது. வாயில் நுரை தள்ளி மயக்கம் அடைந்துவிட்டான்.
மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினோம். வழியில் குழந்தைக்கு 'சீரியஸ்' ஆகி எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்று இயேசுவிடம் கண்ணீரோடே ஜெபித்துக் கொண்டே சென்றோம்.

பேரனை பரிசோதித்த டாக்டர், "பயப்பட தேவை இல்லை. ஜுரம் அதிகமானதால் இப்படி ஆகிவிட்டது" என்று சொல்லி சிகிச்சை அளித்தார். பேரன் மயக்கம் தெளிந்து எழுந்தான். இயேசு,அவனுக்கு நல்ல சுகம் தந்தார். பேரனை,பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிய இயேசுவுக்கு ஸ்தோத்திரம்."

- Mrs.C.லலிதாதேவி,
பெரம்பூர், சென்னை-12.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இயேசுவின் மகிமை Empty Re: இயேசுவின் மகிமை

Post by Admin Wed Oct 08, 2008 10:50 pm

"உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்?"

கிறிஸ்துவுக்கு கடன் பட்ட மகன் A.S.கருணாகரன் ஐதராபாத்தில் இருந்து எழுதும் சாட்சி கடிதம்-

நான் தமிழ் நாட்டை சேர்ந்தவன். ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் "பெல்"(BHEL) என்ற கம்பெனியில் வேலை பார்க்கிறேன். இது மத்திய அரசாங்கத்தின் நிறுவனம்.

எனக்கு மாத சம்பளம் ரூ.20,000/-. என்னிடம் யார் உதவி கேட்டாலும் நான் இல்லை என்று சொல்லாமல் நிறைய பேருக்கு சீட்டு கம்பெனியிலும், பேங்கிலும் பணம் எடுக்க சாட்சி கையெழுத்து போட்டு கொடுத்தேன்.
அவர்கள் சரியாக பணம் கட்டாததால் சீட்டு கம்பெனிகளில் இருந்தும், வங்கிகளில் இருந்தும் என் சம்பளத்தில் கோர்ட்டு மூலமாக பணத்தை பிடித்தம் செய்தார்கள். அதாவது என் சம்பளத்தில் இருந்து அவர்கள் கட்ட வேண்டிய பணத்தை பிடித்துவிட்டார்கள்.

இதனால் என் சம்பளம் மாதம் ஒரு ரூபாய் தான் வரும்.
எனக்கு மூன்று மகன்கள். ஒரு மகள். என் சம்பளத்தில் நானும் என் மனைவியும் 4 பிள்ளைகளும் சாப்பிட வேண்டும்.

ஒரு மாதம் எவ்வளவு செலவாகும் என்பதை நீங்களே நினைத்து பாருங்கள். இப்போதுள்ள விலைவாசியில் பத்தாயிரம்ரூபாய் கூட போதாது. ஒரு ரூபாயில் எப்படி குடும்பத்தை நடத்துவது-?

கர்த்தராகிய இயேசுவின் கிருபையால் பத்து ஆண்டுகள் கஷ்டப்பட்டேன். அந்த கஷ்டத்தை எழுதினால் ஒரு புத்தகமே எழுதலாம். அவ்வளவு சோகக் கதை.
என் பிள்ளைகள் நன்றாக படிக்கும் பிள்ளைகள். இந்த கஷ்டத்திலும் பெரிய மகன் எஞ்ஜினீயரிங் (BE) படித்துமுடித்தான். 2வது மகன் மூன்றாம் ஆண்டு எஞ்ஜினீயரிங் (BE) படிக்கிறான். 3வது மகன் இன்டர் 2-ம் ஆண்டும்(Inter-II Year),மகள் 10ம் வகுப்பும் படிக்கிறார்கள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இயேசுவின் மகிமை Empty Re: இயேசுவின் மகிமை

Post by Admin Wed Oct 08, 2008 10:51 pm

என் பெரிய மகனை "எம்.எஸ்" பட்டப்படிப்பு படிக்க வைக்க வேண்டும். வெளி நாட்டில் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அமெரிக்காவுக்கு(U.S.A) சென்று படிக்க முயற்சி செய்தோம் அதற்கு வேண்டிய பணம் இல்லாததால் 'விசா' கிடைக்கவில்லை.

இதனால் மிகவும் கவலைப்பட்ட நான்,முதல் முதலாக Bro.அம்புரோஸ் அவர்களுக்கு "போன்" செய்து "என் மகன் மேல்படிப்புக்கு பணம் தேவைப்படுகிறது. அதற்காக ஜெபியுங்கள்"என்று கேட்டு கொண்டேன்.
பிரபர் சொன்ன வார்த்தையை அப்படியே எழுதுகிறேன்.

"கருணாகரன்,உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்" என்று சகோதரர் கேட்டார். நான்,"சுமார் 4 லட்சம் வேண்டும்" என்று போனில் கூறினேன்.
அவர் உடனே கர்த்தரிடத்தில் கேட்போம் என்று சொல்லி,அப்படியே"போனில்" எனக்கு பணம் கிடைக்க மனபாரத்துடன்

ஜெபித்தார். ஆனாலும் நான் என் நிலைமைக்கு இவ்வளவு பணம் யார் எனக்கு தருவார்கள் என்று கலங்கனேன்.

இரண்டு நாட்கள் சென்றன. ஒருவர் 5 லட்சம் கொடுத்தார். அத்துடன் எங்களுக்காக(Bank Transaction) வங்கியில் 2 லட்சம்,3 லட்சம்,1 லட்சம் என்று நான்கு பேர்கள் பணம் போட்டார்கள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இயேசுவின் மகிமை Empty Re: இயேசுவின் மகிமை

Post by Admin Wed Oct 08, 2008 10:52 pm

என் மகன் ஒரே நேரத்தில் அமெரிக்காவுக்கும்,லண்டனுக்கும் 'விசா' பதிவு செய்தான். அமெரிக்காவில் இருந்து 'விசா' வரவில்லை. ஆனால் 20 நாட்களில் லண்டனில் இருந்து 'விசா' வந்துவிட்டது. "ஸ்காலர்ஷிப்" மற்றும் சில வசதிகளுடன் கிடைத்தது.

பல போராட்டங்களுக்கு பிறகு,என் மகன் கடந்த ஜனவரி 26-ந் தேதி ஐதராபாத்தில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு பத்திரமாக லண்டன் போய் சேர்ந்தான். இப்போது மகன் காலேஜுக்கு போகிறான். அவனுக்கு அங்கு கர்த்தர் எல்லா உதவிகளையும் செய்து வருகிறார்.

அன்பு சகோதரர் அம்புரோஸ் அவர்களின் மனபாரம் நிறைந்த ஜெபத்தினால் இயேசு என் மகன் வாழ்வில் இந்த வெற்றியை கொடுத்தார்.
நான் கர்த்தருக்கு நன்றி செலுத்தி, பிரதர் குடும்பத்திற்காக அதிகம் ஜெபம் செய்கிறேன்.

இதை படிக்கும் சகோதர,சகோதரிகளுக்கு ஒரு அன்பான குறிப்பு. என் சொந்தக்காரர்கள் வசதியாக இருந்தும் யாரும் எனக்கு ஒரு பைசா கூட தரவில்லை.

ஆனால் பிரதர் அம்புரோஸ் ஜெபத்தினால் என் நண்பர்கள் அளவில்லாமல் எங்களுக்கு பணம் கொடுத்து உதவும்படி இயேசு அற்புதம் செய்தார். அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

-இப்படி தனக்கும் தன் குடும்பதிற்கும் தன் மகனுக்கும் அற்புத உதவிகளை செய்த தேவனை,எல்லா மக்களும் அறியும்படி புகழ்ந்து போற்றுகிறார் அன்பு சகோதரர்

A.S.கருணாகரன்,
"BHEL" ஆஸ்பத்திரி,
ஜதராபாத்-502 032.


"தேவனாலே கூடாத காரியம் ஒன்றும் இல்லை"
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இயேசுவின் மகிமை Empty Re: இயேசுவின் மகிமை

Post by Admin Wed Oct 08, 2008 10:53 pm

"பணத்தின் பின்னால் போகும் மாப்பிள்ளைகள் வேண்டாம்!"

நம் அருமை தகப்பன் இயேசு, தம்மை நோக்கிக் கூப்பிடும் பிள்ளைகளுக்கு, உடனடியாக எப்படி செவிகொடுத்து, பதில் அளிக்கிறார், என்பதை என் வாழ்க்கையில் அனுபவிக்கிறேன்.அவர் செய்த அற்புதங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர் நாமம் மட்டுமே மகிமைப்பட இதை சாட்சியாக இங்கே எழுதுகிறேன்.

நானும் என் அன்பு கணவரும் அருமை தாய், தந்தையும் இயேசு அப்பாவிடம் கெஞ்சி, ஜெபத்தில் கேட்ட பிரகாரம், முதலில் 2 பெண் பிள்ளைகளையும், இரண்டாவதாக இரண்டு ஆண் பிள்ளைகளையும் கொடுத்து எங்களை ஆசீர்வதித்தார்.

அவர்களை இயேசு அப்பாவின் ஊழியத்திற்காக ஒப்புக்கொடுத்தோம். பெண் பிள்ளைகள் இருவரும் குழந்தைகளாக இருக்கும்போதே "இயேசு அப்பா! இந்த குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறும் போது, பணத்தின் பின்னால் போகும் மாப்பிள்ளைகள் எங்களுக்கு வேண்டாம். உங்கள் பின்னால் வரும் பிள்ளைகளையே எங்களுக்குத் தந்து ஆசீர்வதியும் " என்று தினம் தினம் வேண்டிவந்தோம்.

இயேசு அப்பாவே அவர்களுக்கு வாழ்க்கை துணைவர்களை தேடி இணைத்தார்.இதில் என்ன அதிசயம் என்றால், மருமகன்கள் இருவருமே இயேசு அப்பாவுக்கு உண்மையுடன் ஊழியம் செய்யும் பாதிரிமார்கள் ஆகும், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இயேசுவின் மகிமை Empty Re: இயேசுவின் மகிமை

Post by Admin Wed Oct 08, 2008 10:54 pm

அதுபோல 2 மகன்களுக்கும் பாதிரியார்கள் குடும்பத்தில் இருந்தே பெண்களை தேடி கொண்டுவந்து இணைத்தார்.அவர்களின் வாழ்க்கை துணையை தேடி நான் செல்லவில்லை.நம் தகப்பனே தேர்ந்து எடுத்தார்.

ஏன் என்றால் அவர்கள் என்னுடைய பிள்ளைகளே அல்ல. இயேசுப்பாவின் பிள்ளைகள். அவர்கள் அனைவருமே இயேசு அப்பாவுக்கு ஊழியம் செய்து வருகிறார்கள்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

அவர்களை அப்படியே அவருடைய ஊழியத்திகாக ஒப்புக்கொடுத்தேன். பிறகு நம் தகப்பன் எனக்கு பேரப்பிள்ளைகளையும் கொடுத்தார்.

ஊழியத்தை செய்வதற்கு ஆட்கள் கிடைக்காத கொடிய காலம் இது. எனவே இயேசு அப்பா மனம் மகிழும் வண்ணம் ஒவ்வோரு பேரக்குழந்தையும், வயிற்றில் இருக்கும்போதே, அந்த குழந்தையை பெயர்சொல்லி அழைத்து, பிறந்தவுடன் வீட்டிற்கு எடுத்துச்செல்லாமல் நேராக ஆலயத்திற்கு கொண்டு போய் பாதிரியாரிடம் கொடுத்து ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டோம்.
குழந்தை கேட்கும்படியாக பாட்டு பாடி "இது கர்த்தருடைய பிள்ளை" என்று பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று, குழந்தைகளின் தாய்மார்களிடம் கூறுவேன்.

என் தாயாரும் நான் வயிற்றில் குழந்தையாக இருக்கும்போது இவ்வாறே எனக்கு சொல்லி இருக்கிறார்கள்.அதையே நான் என் பிள்ளைகளுக்கும் சொன்னேன்.இப்படி எங்கள் நல்வாழ்விற்கு வழி காட்டியாக இருந்த அருமையாக தாயாரை எங்களுக்கு அளித்த நம் தகப்பனை நன்றியோடு துதிக்கிறேன்(2கொரிந்தியர்1:5)
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இயேசுவின் மகிமை Empty Re: இயேசுவின் மகிமை

Post by Admin Wed Oct 08, 2008 10:54 pm

இயேசுவுக்கு பிரியமானதை செய்து, அவர் மனம் மகிழும்படி, அவரை பின்பற்றி, அவர்காடடும் பாதையில் நடக்க எங்களை முழுமையாக அவரிடத்தில் ஒப்புக்கொடுத்துவிட்டோம்.

சமீபத்தில் எனக்கு வாந்தியும் வயிற்றோட்டமும் ஏற்பட்டு ஆஸ்பத்திரில் சேர்க்கப்பட்டேன்.3 நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றேன்.
அப்போது, என்னிடம் வைத்து இருந்த "கைப்பிரதிகளை" டாகடர்கள், நர்சுகள் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கொடுத்து இயேசுவை பற்றி அவர்களுக்கு கூறினேன்.

மூன்று நாட்களுக்கு பிறகு, சுகம் பெற்று வீடு திரும்பினேன்.நான் ஆஸ்பத்திரியில் இருந்த போதும் என்னை திடப்படுத்தி, பெலப்படுத்தி அவரை குறித்து மற்றவர்களுக்கும் அறிவிக்கும் பாக்கியத்தை எனக்கு தந்த நம் இயேசு அப்பாவுக்கு, என் அன்பின் ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன்.
"நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப் போய், கர்த்தர் உனக்கு இரங்கி, செய்தவைகளை எல்லாம் அவர்களுக்கு அறிவி" - இயேசு(மாற்கு 5:19)
சகோதரி. இந்திராணி மோசஸ்,
சத்துவாச்சாரி,வேலூர்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இயேசுவின் மகிமை Empty Re: இயேசுவின் மகிமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum