ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு

4 posters

Go down

மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Empty மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு

Post by kirikasan Sat Jul 03, 2010 12:33 pm

ஈகரை தமிழ் களஞ்சியத்துக்காக புதிதாக கவி எழுதுவேன். இது ஏற்கனவே எழுதி வைத்த கவிதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வட்ட அலையெழுந்து வாவிதனில் கோலங்களை
இட்டு விளையாடி இருக்கும் ஒரு காலையிலே
நெட்டுயர்ந்தோர் ஆலமரம் நீளப்பரந்தகிளை
விட்டே யெழுந்துபுவி வேர்கொண்ட விழுதுகளாம்

அங்கோர் பொய்கைதனில் அலையெழுந்து துள்ளிவர
மங்கிமறைந்தோடும் மீனினங்கள் நீரொழிக்க
பூமுடித்த மங்கையைப் போல்புது அல்லிசூடி
பொய்கை யிளம்மங்கை புன்னகையால் சலசலத்தாள்

ஆலமரக்கிளையில் அமர்ந்து இருபுள்ளினக்கள்
சாலக்கதை பேசி தம்முள்ளே மகிழ்ந்திருக்க
நீலக்கருவானில் நீந்திவந்த மேகமொன்று
ஆழக்கவலை கொண்டு அழுதிட நீர் கொட்டியது.

முகிலே நீ எங்குச் என்றாய் முகம் வாடிப்போனதென்ன
அழுதே துடிப்பதற்கு அர்த்தமென்ன என்றே
பழகிதுணை கொண்ட வான்குருவி ஆண் கேட்க
நிழலைத்தரு முகிலோ நின்று கதை கூறியது

அய்யோ கொடுமைஇது ஆரறிவார் பாரினிலே’
வெய்யோர் வினை முடிக்க வீரத்தமிழ் சாகுதடா
ஔவை வளர்த்த தமிழ் அகத்தியர் காத்த தமிழ்
தெய்வத்திருநால்வர் தேவாரம் இசைத்த தமிழ்

செங்கண் திறந்தாலும் செருக்கழியா தெதிர் நின்று
பங்கம் உரைத்த தமிழ்பாவலரின் வழியினிலே
பொங்குபுற நானூற்றின் போர்வீரம் ஈதன்றோ
என்றே அதிசயித்த இனமொன்று அழியுதடா

வேங்கை போல்பெருவீரம் விளைந்த தமிழர்தனை
தூங்கவிட்டு கொல்லுகிறார் துடிக்க குழி போடுகிறார்
செங்குருதி வழிந்தோடிச் சிறுஆறாய் மாறுதடா
சீறியே எழுந்த இனம் சிதைக்குள்ளே தீயுதடா

தூர இருந்துதலை தெறித்தோடி வருகிறேன்
ஊரைக்கொழுத்தியவ்ர் உயிரோடுகுழிவெட்டி
தாழப்புதைக்கிறார் தலைவெட்டி பார்க்கின்றார்.
ஆழப் பிறந்தவரை அணிதிரண்டு முழு உலகும்

சேரக்கரம் பிடித்து திட்டமிட்டுசதிசெய்து
வாரிக்கால் விழுத்திஒரு வீரச்சிறுவன் தனை
ஈர்பத்து பயில்வான்கள் இழுத்தடித்து கொல்வதென
நேரற்ற செயலொன்று நிகழக் கண்டேன்நான்

ஊரே எரியுதடா உயிரேதும் மீதியில்லை
பேயே பயந்துதோடி பெரும்கோவில் புகுந்ததடா
என்ன கொடூரம் எடுத்துரைக்க வார்த்தையில்லை
அன்ன செயல்ஒன்று அகிலத்தில் கண்டதில்லை

மேகத்தின் சொல்கேட்டு மேனி நடுநடுங்க
நாகத்தின் நஞ்சைப் பாலிட்டு தின்றதென
ஆவி துடித்து அலறி மனம் பதைபதைக்க
ஆண் குருவி நோக்கி பெண் கூறலாயிற்று…

(குருவி)
அய்யோ கொடுமையிது ஆரறிவார் உலகினிலே
குய்யோ முறையோ என்றே தமிழர் கதறியழு
தெங்கள் உயிர் காத்திடுமென் றேழுலகும் கேட்டும்
பொங்கி எழுந்துலகத் தெருஎங்கும் போராடி

வெம்பிஅழுதும் என்? வினை முடித்துப் போனார்கள்
நம்பி ஓர் நாடுவரும் நாம்பிழைப்போம் என்றவரை
நாசப் பெருங் குண்டும் நச்சுவெடி சிதற இட்டு
மோசக் கொலைபுரிய மூச்சடக்கி நின்றாரே

நீதிக்கு வேண்டாம் நியாயம்தனும்வேண்டாம்
பாதி மனம் இரங்கிப் பாவி இவன் மானிடம்தான்
கொத்தாய் குலையாக் கொடுமைசெய்து உயிர்போக்கும்
எத்தேசம் அறியாப் பேரவலம் என்றிரங்கி

ஏனடா நாயே என்றொரு வார்த்தை கொன்றவனைக்
கேட்காமல் நெஞ்சிறுகி கிடந்ததேன் எமனுக்கு
கப்பந்தான் என்றிவரைக் காவு கொடுத்தாரோ?
ஒப்பந்தம் போட்டிந்த ஊர்அள்ளி கொடுத்தாரோ?

வல்லரசு நாடுகளில் வெள்ளம் புயலென்றால்
எல்லா உலகும் இணைந்து அழுவதுவும்
முள்ளிவாய்க்காலோ மொத்தஉயிர் பன்மடங்காய்
நாள் நேரம் திசைகுறித்து நாற்புறமும் அறிவித்து

சொல்லி உயிர் அழிக்கையிலே செய்கோள் பட‌மெடுத்து
ஐநாவின் உள்ளே அடுக்கி வைத்த‌தன்றி
உற்ற உயிர் காக்க ஒருசெயலும் செய்யாமல்
வாழா விருந்ததனால் வாழ்வழிந்து போனாரே

என்றழுதுகண்ணீரை இட்டிருக்க ஆண்குருவி
தன்சோடி தான் பார்த்து தலையோடு தலைசேர்த்து
நொந்தழுது கண்ணீரை நித்தம் விடுவதே
அந்தோ பரிதாபம் அரும்தமிழர் விதியாச்சு

இந்த நிலைவிட்டு இன்றுஅடி முன்வைத்தார்
மண்ணுக்குள் விதையாகி மறைந்தவரின் கனவுகளை
எண்ணிநிறைவேற்ற இவ்வுலகில் புலம்பெயர்ந்த
மண்ணின் தமிழீழ மக்கள் புறப்பட்டார்

போராட்டம் ஓயாது புழுதியெனப்போகாது
ஆறோடும் பாதையிலே அடித்து எதிர் நீச்சலிட்டோர்
நீரோடு சேர்ந்து இனி நீச்சல் அடித்திடுவர்
போய்சேரும்இடமோ சுதந்திர தாயகமே!

கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Empty Re: மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு

Post by பிளேடு பக்கிரி Sat Jul 03, 2010 12:47 pm

மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 677196 மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 677196 மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 677196 மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 677196



மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Empty Re: மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Dec 14, 2010 5:31 pm

சிந்திக்க வைக்கும் வரிகள் ..
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Empty Re: மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு

Post by Thanjaavooraan Wed Dec 15, 2010 1:27 pm

உலை உருக்கி ஊற்றியது போல், நெஞ்சக்
குலை கொதிக்கிறது கொடுமைகள் கண்டு.

ஈழத்து எம்தமிழர் இன்னல்கள் நீங்கிட
எழுத்துப் போர்தனை தொடுத்திடும் தோழரே

நீவீர் வாழி...ஊழிதோ றூழி... மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 154550
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Empty Re: மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு

Post by kirikasan Wed Dec 15, 2010 1:59 pm

Thanjaavooraan wrote:உலை உருக்கி ஊற்றியது போல், நெஞ்சக்
குலை கொதிக்கிறது கொடுமைகள் கண்டு.

ஈழத்து எம்தமிழர் இன்னல்கள் நீங்கிட
எழுத்துப் போர்தனை தொடுத்திடும் தோழரே

நீவீர் வாழி...ஊழிதோ றூழி... மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 154550


தங்கள் உணர்வுகளுக்கு தலைசாய்த்து இன்னொன்று இதே உணர்வுகளை தரும், ஈகரையில் சேர முன்னர் எழுதிவைத்த ஒரு கவிதையை பகிர விரும்புகிறேன். அடுத்ததாக..
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Empty Re: மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum