புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேவை, "புது' வேலைநிறுத்தம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மிகவும் முக்கியமான பிரச்னைகளில் அரசின் கவனத்தை ஈர்க்கவும், மக்களை ஓரணியில் திரட்டவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேலைநிறுத்தம், போராட்டம் போன்றவை மக்களாட்சியில் தேவைப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மக்களால் ஓர் அரசின் செயல்பாடுகளில் உள்ள தவறுகளுக்காக ஆளும்கட்சியைத் தண்டிக்க முடியும் என்கிற நிலையில், இடைப்பட்ட காலத்தில் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த சட்டப்பேரவை, மக்களவை போன்ற அமைப்புகள் இருந்தாலும் அடிப்படை வாழ்க்கையைப் பாதிக்கும் பிரச்னைகளில் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பைக் காட்டுவதைத் தவறாகக் கொள்ள முடியாது.
கூட்டணி ஆட்சியின் நல்ல அம்சம் என்று கருதப்பட்ட விஷயம், எந்தவொரு கட்சியும் தன்னிச்சையாகச் செயல்படமுடியாது என்பதுதான். பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்யும்போது, சர்வாதிகார முறையில் ஒரு பிரதமரோ, முதல்வரோ செயல்பட முடியாது என்பது நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இந்த நம்பிக்கையைக் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கூட்டணி அல்லது பிற கட்சிகளின் வெளி ஆதரவுடன் செயல்படும் அரசுகள் தகர்த்துவிட்டன.
தவறான அல்லது தங்களுக்கு ஏற்புடையதல்லாத முடிவுகளைப் பிரதமரோ, நிதியமைச்சரோ அல்லது கூட்டாட்சிக்குத் தலைமைதாங்கும் கட்சியோ எடுக்கும்போது கூட்டணிக் கட்சிகளும், ஆதரவு நல்கிடும் கட்சிகளும் சகித்துக்கொண்டு முடிவுகளை மௌனமாக ஏற்றுக்கொண்டதாகத்தான் கடந்த 20 ஆண்டு சரித்திரம் எடுத்துரைக்கிறது. இந்த மனசாட்சி மீறலுக்கு எந்தவொரு கட்சியும் விதிவிலக்கல்ல.
பதவியைத் தக்கவைத்துக் கொள்ளவும், குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடனும்தான் பல மாநிலக் கட்சிகள், ஏன், தேசியப் பார்வையுடன் செயல்படும் கட்சிகளும் கூட பல பிரச்னைகளை அணுகி, ஆளும்கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைக்குத் துணை போயிருக்கின்றன.
எந்தவொரு அரசியல் கட்சி அல்லது தலைவரின் மீதும் முழுமையான நம்பிக்கை இல்லாத காரணத்தால்தான் கடந்த 20 ஆண்டுகளாக சராசரி இந்தியக் குடிமகன் புத்திசாலித்தனமாக வாக்களித்து யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறான். முந்தைய பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானாலும், இன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானாலும், பல மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் செயல்பட வேண்டிய நிர்பந்தத்தை மக்கள் ஏற்படுத்தியதே, ஆட்சியாளர்கள், தன்னிச்சையாக மக்கள் விரோத நடவடிக்கையில், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டு விடலாகாது என்பதால்தான்.
ஆனால், மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையேற்றப் பிரச்னையில் கடந்த 15 ஆண்டுகளாக நடத்தப்படும் மோசடியில் இன்றைய ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் அரசை ஆதரித்த, ஆதரிக்கும் உதிரிக் கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காத பங்களிப்பை நல்கி வந்திருக்கின்றன. அதெல்லாம் பழங்கதை என்றாலும், இப்போது மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் விலையேற்றமும் அதற்கு எதிர்க்கட்சிகள் நடத்தும் பொது வேலைநிறுத்தமும் நமது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்க வைக்கின்றன.
ஒருபுறம், தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் எந்தவித வரம்புகளும் இல்லாமல் மோட்டார் வாகன உற்பத்தி அனுமதிக்கப்படுகிறது. இன்னொருபுறம் பெட்ரோல், டீசல் விலைகளை அவ்வப்போது உயர்த்தி அதன் சுமை பொதுமக்கள் தலையில் சுமத்தப்படுகிறது. ஏற்கெனவே விலைவாசி ஏற்றத்தால் விழி பிதுங்கி, வயிற்றில் ஈரத்துணியுடன் தூங்கவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தின் மீது மீண்டும் ஒரு சுமையாக, சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையும் உயர்த்தப்படுகிறது.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிக்கின்றனவே தவிர, பெட்ரோலிய அமைச்சரைக் கட்டுப்படுத்தத் தயாராக இல்லை. இந்த விலையேற்றத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கும் கட்சிகளில் பல, ஆளும்தரப்பில் இருந்தபோது இதே நிலையைத்தான் கடைப்பிடித்தன என்பதை நாம் எப்படி மறந்துவிடமுடியும்?
அதனால்தான் பொது வேலைநிறுத்தம் மக்களை பெரிய அளவில் ஈர்க்குமா என்கிற சந்தேகம் வருகிறது. அடிக்கடி நடத்தப்படும் பொது வேலைநிறுத்தங்களும், போராட்டங்களும் வலுவாக நாடு தழுவிய வரவேற்பைப் பெறாமல் போனதற்கு, இந்தக் கட்சிகளின் முந்தைய நிலைப்பாடுகள் ஒரு காரணம். இரண்டாவதாக இதுபோன்ற போராட்டங்களாலும், வேலை நிறுத்தங்களாலும் என்னதான் நடந்துவிடப் போகிறது என்கிற பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சலிப்பும், வெறுப்பும் இன்னொரு காரணம்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலை உயர்வு என்பது ஒரு சில தனியார் நிறுவனங்களை திருப்திப்படுத்த எடுக்கப்பட்டிருக்கும் முடிவு என்பதும் வன்மையாகக் கண்டிக்கப்படுவதுடன் திரும்பப் பெறவேண்டியது என்பதும் சந்தேகத்துக்கு இடமில்லாதவை. மக்களின் எதிர்ப்பையும், அரசின் மீது விலைவாசி உயர்வால் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியையும் எப்படிக் காட்டுவது என்பதில்தான் நமக்கு மாறுபட்ட கருத்து.
பொது வேலைநிறுத்தம் எதிர்க்கட்சி வரிசையில் அணிவகுத்திருக்கும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை வேண்டுமானால் வெளிப்படுத்த உதவுமே தவிர, மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்குமா என்பது சந்தேகமே. உளப்பூர்வமாக எரிச்சலடைந்து இருக்கும் மக்களின் ஆத்திரத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தும் விதத்தில் அல்லவா ஒரு போராட்டம் நடத்தப்பட்டிருக்க வேண்டும்!
நாடு தழுவிய அளவில் ஒரு நாள், 24 மணி நேரம் யாரும் எந்த வாகனத்துக்கும் பெட்ரோலோ, டீசலோ போடுவதில்லை என்று முடிவெடுக்கும்படி மக்களுக்கு அறைகூவல் விடுத்து, அதன்மூலம் விலைவாசி உயர்வுக்கும் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கும் எதிராக ஒட்டுமொத்த இந்தியாவை கைகோக்க வைத்திருக்க வேண்டாமா? 24 மணி நேரம் நாடு தழுவிய அளவில் அத்தனை பெட்ரோல் நிலையங்களும், ஆள் அரவமின்றி காலியாக இருந்தால் அரசுக்குப் புரிந்திருக்கும் சராசரி இந்தியனின் கோபமும், அதிருப்தியும்.
விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலை உயர்வால் ஒட்டுமொத்த இந்தியாவுமே அதிருப்தியிலும் ஆத்திரத்திலும் ஆழ்ந்திருக்கிறது. ஆனால் இன்று நடைபெற இருக்கும் பொது வேலைநிறுத்தம் அந்த உணர்வுகளைப் பிரதிபலிக்குமா என்றால், சந்தேகம்தான். இதனால் ஆளும்கட்சி தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமா என்றால், செய்யாது.
மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட, மக்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்ளும் ஒரு தலைவன் இல்லாத குறை நன்றாகவே தெரிகிறது. காந்தி மகான்கள் அடிக்கடி தோன்றுவதில்லை!
நன்றி :தினமணி
கூட்டணி ஆட்சியின் நல்ல அம்சம் என்று கருதப்பட்ட விஷயம், எந்தவொரு கட்சியும் தன்னிச்சையாகச் செயல்படமுடியாது என்பதுதான். பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்யும்போது, சர்வாதிகார முறையில் ஒரு பிரதமரோ, முதல்வரோ செயல்பட முடியாது என்பது நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இந்த நம்பிக்கையைக் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கூட்டணி அல்லது பிற கட்சிகளின் வெளி ஆதரவுடன் செயல்படும் அரசுகள் தகர்த்துவிட்டன.
தவறான அல்லது தங்களுக்கு ஏற்புடையதல்லாத முடிவுகளைப் பிரதமரோ, நிதியமைச்சரோ அல்லது கூட்டாட்சிக்குத் தலைமைதாங்கும் கட்சியோ எடுக்கும்போது கூட்டணிக் கட்சிகளும், ஆதரவு நல்கிடும் கட்சிகளும் சகித்துக்கொண்டு முடிவுகளை மௌனமாக ஏற்றுக்கொண்டதாகத்தான் கடந்த 20 ஆண்டு சரித்திரம் எடுத்துரைக்கிறது. இந்த மனசாட்சி மீறலுக்கு எந்தவொரு கட்சியும் விதிவிலக்கல்ல.
பதவியைத் தக்கவைத்துக் கொள்ளவும், குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடனும்தான் பல மாநிலக் கட்சிகள், ஏன், தேசியப் பார்வையுடன் செயல்படும் கட்சிகளும் கூட பல பிரச்னைகளை அணுகி, ஆளும்கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைக்குத் துணை போயிருக்கின்றன.
எந்தவொரு அரசியல் கட்சி அல்லது தலைவரின் மீதும் முழுமையான நம்பிக்கை இல்லாத காரணத்தால்தான் கடந்த 20 ஆண்டுகளாக சராசரி இந்தியக் குடிமகன் புத்திசாலித்தனமாக வாக்களித்து யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறான். முந்தைய பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானாலும், இன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானாலும், பல மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் செயல்பட வேண்டிய நிர்பந்தத்தை மக்கள் ஏற்படுத்தியதே, ஆட்சியாளர்கள், தன்னிச்சையாக மக்கள் விரோத நடவடிக்கையில், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டு விடலாகாது என்பதால்தான்.
ஆனால், மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையேற்றப் பிரச்னையில் கடந்த 15 ஆண்டுகளாக நடத்தப்படும் மோசடியில் இன்றைய ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் அரசை ஆதரித்த, ஆதரிக்கும் உதிரிக் கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காத பங்களிப்பை நல்கி வந்திருக்கின்றன. அதெல்லாம் பழங்கதை என்றாலும், இப்போது மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் விலையேற்றமும் அதற்கு எதிர்க்கட்சிகள் நடத்தும் பொது வேலைநிறுத்தமும் நமது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்க வைக்கின்றன.
ஒருபுறம், தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் எந்தவித வரம்புகளும் இல்லாமல் மோட்டார் வாகன உற்பத்தி அனுமதிக்கப்படுகிறது. இன்னொருபுறம் பெட்ரோல், டீசல் விலைகளை அவ்வப்போது உயர்த்தி அதன் சுமை பொதுமக்கள் தலையில் சுமத்தப்படுகிறது. ஏற்கெனவே விலைவாசி ஏற்றத்தால் விழி பிதுங்கி, வயிற்றில் ஈரத்துணியுடன் தூங்கவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தின் மீது மீண்டும் ஒரு சுமையாக, சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையும் உயர்த்தப்படுகிறது.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிக்கின்றனவே தவிர, பெட்ரோலிய அமைச்சரைக் கட்டுப்படுத்தத் தயாராக இல்லை. இந்த விலையேற்றத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கும் கட்சிகளில் பல, ஆளும்தரப்பில் இருந்தபோது இதே நிலையைத்தான் கடைப்பிடித்தன என்பதை நாம் எப்படி மறந்துவிடமுடியும்?
அதனால்தான் பொது வேலைநிறுத்தம் மக்களை பெரிய அளவில் ஈர்க்குமா என்கிற சந்தேகம் வருகிறது. அடிக்கடி நடத்தப்படும் பொது வேலைநிறுத்தங்களும், போராட்டங்களும் வலுவாக நாடு தழுவிய வரவேற்பைப் பெறாமல் போனதற்கு, இந்தக் கட்சிகளின் முந்தைய நிலைப்பாடுகள் ஒரு காரணம். இரண்டாவதாக இதுபோன்ற போராட்டங்களாலும், வேலை நிறுத்தங்களாலும் என்னதான் நடந்துவிடப் போகிறது என்கிற பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சலிப்பும், வெறுப்பும் இன்னொரு காரணம்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலை உயர்வு என்பது ஒரு சில தனியார் நிறுவனங்களை திருப்திப்படுத்த எடுக்கப்பட்டிருக்கும் முடிவு என்பதும் வன்மையாகக் கண்டிக்கப்படுவதுடன் திரும்பப் பெறவேண்டியது என்பதும் சந்தேகத்துக்கு இடமில்லாதவை. மக்களின் எதிர்ப்பையும், அரசின் மீது விலைவாசி உயர்வால் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியையும் எப்படிக் காட்டுவது என்பதில்தான் நமக்கு மாறுபட்ட கருத்து.
பொது வேலைநிறுத்தம் எதிர்க்கட்சி வரிசையில் அணிவகுத்திருக்கும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை வேண்டுமானால் வெளிப்படுத்த உதவுமே தவிர, மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்குமா என்பது சந்தேகமே. உளப்பூர்வமாக எரிச்சலடைந்து இருக்கும் மக்களின் ஆத்திரத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தும் விதத்தில் அல்லவா ஒரு போராட்டம் நடத்தப்பட்டிருக்க வேண்டும்!
நாடு தழுவிய அளவில் ஒரு நாள், 24 மணி நேரம் யாரும் எந்த வாகனத்துக்கும் பெட்ரோலோ, டீசலோ போடுவதில்லை என்று முடிவெடுக்கும்படி மக்களுக்கு அறைகூவல் விடுத்து, அதன்மூலம் விலைவாசி உயர்வுக்கும் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கும் எதிராக ஒட்டுமொத்த இந்தியாவை கைகோக்க வைத்திருக்க வேண்டாமா? 24 மணி நேரம் நாடு தழுவிய அளவில் அத்தனை பெட்ரோல் நிலையங்களும், ஆள் அரவமின்றி காலியாக இருந்தால் அரசுக்குப் புரிந்திருக்கும் சராசரி இந்தியனின் கோபமும், அதிருப்தியும்.
விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலை உயர்வால் ஒட்டுமொத்த இந்தியாவுமே அதிருப்தியிலும் ஆத்திரத்திலும் ஆழ்ந்திருக்கிறது. ஆனால் இன்று நடைபெற இருக்கும் பொது வேலைநிறுத்தம் அந்த உணர்வுகளைப் பிரதிபலிக்குமா என்றால், சந்தேகம்தான். இதனால் ஆளும்கட்சி தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமா என்றால், செய்யாது.
மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட, மக்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்ளும் ஒரு தலைவன் இல்லாத குறை நன்றாகவே தெரிகிறது. காந்தி மகான்கள் அடிக்கடி தோன்றுவதில்லை!
நன்றி :தினமணி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|