புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_m10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10 
44 Posts - 59%
heezulia
கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_m10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_m10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_m10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10 
3 Posts - 4%
viyasan
கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_m10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_m10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10 
236 Posts - 42%
heezulia
கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_m10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_m10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_m10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_m10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10 
13 Posts - 2%
prajai
கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_m10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_m10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_m10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_m10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_m10கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல்


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 02, 2010 1:40 pm

ஒவ்வொரு தனி மனிதனின் வெற்றியினதும் தோல்வியினதும் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்களுள் பழக்கவழக்கங்களும் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றன. பழக்கவழக்கங்கள் எனப்படுபவை நாம் வழக்கங்களாக்கிவிட்ட பழக்கங்களையே குறிக்கின்றன.

‘ஒவ்வொருவருடைய பழக்க வழக்கங்களும் அவர்களின் மனப்பாங்கையே பிரதிபலிக்கின்றன’ என்ற கூற்றை ஒருபோதும் மறுக்க முடியாது. ஒருவருடைய மனப்பாங்கைத் தீர்மானிப்பதில், அவர் சார்ந்த சூழல் பெரும்பங்கு வகிக்கிறது.

எமது பழக்கவழக்கங்கள் எம்மை மட்டுமே பாதித்துக் கொண்டிருக்கின்றவரை அவை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தாது. ஏற்படுத்தினாலும் தனி ஒருவரை மட்டுமே பாதிக்கும். அதேசமயம் தனிநபர் ஒருவரின் பழக்கவழக்கங்கள் மற்றவர்களையும் பாதிக்கின்றது என அறியப்படும் பட்சத்தில் அவை மாற்றப்பட வேண்டியது மிக அவசியமாகும்.

சிலர் பிறரைக் கேலி பேசுவர். சிலர் தமது பிழைகளையும் நியாயப்படுத்துவர். சிலர் எதற்கெடுத்தாலும் கோபம் கொள்வர். சிலர் எவருடனும் சாந்தத்துடன் கண்ணியமாகப் பேசுவர்.

சிலர் நல்ல விடயங்களைப் பாராட்டுவர். சிலர் வயது வித்தியாசம் பார்க்காமல் மரியாதையுடன் பழகுவர். ஆனால் சிலரோ யாரைக் கண்டாலும் மரியாதைக் குறைவாகவே பேசுவர். நேரந்தவறாமை சிலரது வழக்கமாக இருக்கும்.

நேரம் தவறுவதே சிலரது வழக்கமாக இருக்கும்.

பிறரிடம் காணப்படும் நல்ல பழக்கவழக்கங்களை நாம் பின்பற்றிக் கொள்ளும் அதேவேளை எம்மிடம் குடிகொண்டிருக்கும் கெட்ட பழக்கங்களை உணர்ந்து மாற்ற முயலவேண்டும்.

அத்தகைய மாற்றப்பட வேண்டிய பழக்கவழக்கங்களுள் கண்ட இடங்களில் துப்புதலும் குப்பைகளைக் கொட்டுதலும் கூட அடங்குகின்றன.

சூழலியல், மற்றும் சுகாதார நோக்கிலே இப்பழக்கவழக்கங்கள் இரண்டும் மாற்றப்படுதல் மிகவும் அவசியமாகிறது.

பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாட்டை, சீனா மேற்கொண்டு வந்த காலங்களில், அதிகாரிகள் சீன மக்களின் சில பழக்க வழக்கங்கள், சீன தேசத்துக்கு அவதூறை ஏற்படுத்திவிடுமோ என அச்சம் அடைந்தனர். துப்புதல், வரிசைகளில் நிற்கும் போது இடையே குறுக்கிடுதல், குப்பைகளைக் கொட்டுதல் ஆகியனவே அதிகாரிகள் அச்சமடைந்த பழக்கவழக்கங்களாகும்.

ஒலிம்பிக் போட்டிகளின் நிமித்தமாவது அவற்றை மாற்றியமைப்பதற்கு ஒலிம்பிக் குழுவினர் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும் வரை ஒவ்வொரு மாதத்தின் 11ஆவது நாளும் வரிசையில் நிற்பதற்கான தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்தினத்திலே அவசரப்படாமல் வரிசையில் நின்று தமது வேலைகளை நிறைவேற்றுவதற்கு மக்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

மக்கள் வீதிகளில் துப்புவதைத் தவிர்க்க ஒவ்வொருவருக்கும் பைகள் இலவசமாக வழங்கப்பட்டு, அப்பைகளினுள் துப்புமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அதனை மீறுபவர்களிடம் தண்டப் பணம் அறவிடப்பட்டது.

இத்தகைய கெட்ட பழக்கங்களைத் தவிர்த்தலை ஊக்குவிக்கு முகமாக பல பதாகைகளும் தொங்கவிடப்பட்டன. இந்தத் தகவலானது, பிரித்தானிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பிரிவின் ஒலிபரப்பிலிருந்து பெறப்பட்டது.

உமிழ் நீரையோ அல்லது வாய்க்குள் இருக்கும் பொருட்களையோ பலவந்தமாக வெளியேற்றுதலைத் ‘துப்புதல்’ என்பர். ஒரு நபர், மற்றொருவர் மீது துப்புவதானது வெறுப்பு, கோபத்தை வெளிப்படுத்தும் செயலாக உலகளாவிய ரீதியிலே கருதப்படுகிறது.

கண்ட இடங்களிலே துப்புவதால் அந்த இடங்கள் அழுக்கடைவதுடன் அவற்றின் அழகும் இழக்கப்பட்டு விடுகிறது. சாதாரண பக்aரியா கொல்லி மருந்துகளுக்குக் குணமாகாத நிமோனியா நோயும் கசமும் வெகுவிரைவாகப் பரவுவதற்கு கண்ட இடங்களில் துப்பும் பழக்கம் காரணமாய் அமைந்துவிடுகிறது. வைரஸ்கள் பரவுவதற்கும் இதே பழக்கம் காரணமாகிறது.

இலங்கையிலே சி1னி1 இன்ஃபுளுவென்சா வைரஸ் பரவுவதற்கான மூலகாரணிகளுள் இப்பழக்கம் முன்னணி வகித்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இவ்வைரஸ் உமிழ் நீரில் ஏறத்தாழ 8 மணித்தியாலங்கள் வரை உயிர் வாழ்வதால், அது நோய் வெகு விரைவாகவும் சுலபமாகவும் பரவ ஏதுவாக அமைந்துவிடுகிறது-

‘துப்புதல்’ என்ற பழக்கம் சி1னி1 இன்ஃபுளுவென்சா மட்டுமன்றி எந்தவொரு சுவாச நோயும் பரவுவதற்குக் காரணமாக அமைகிறது.

இப்பழக்கத்தை கல்வியறிவற்ற வறிய சமுதாயங்களுக்குரியதொரு பழக்கமென வரையறுத்துக் கூறமுடியாது. நவீனரக வாகனங்களிலே பயணிக்கும் பணக்காரர்களையும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களையும் கூட இப்பழக்கம் விட்டு வைப்பதில்லை. கண்ட இடங்களில் துப்புதல் சுகாதாரத்துக்குக் கேடானது என அவ்வாறு துப்புபவர்கள் எவருமே எண்ணுவதில்லை.

வெற்றிலையை மெல்பவர்கள் ஒரு இலக்கை நோக்கித் துப்புவதை கலையாகவே கருதுகின்றனர் என்ற விடயம் மிகவும் வருந்தத் தக்கதாகும். சுட்டு விரலுக்கும் நடு விரலுக்குமிடையே வாயை வைத்து உயர் விசையுடன் துப்புவதை இன்றும் கிராமங்களில் அவதானிக்கலாம்.

துப்புவதை ஒரு பாரம்பரியமாகக் கருதுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களெல்லாம் தாம் உன்னதமாக நினைக்கும் செயற்பாட்டால் உருவாகும் விளைவுகளை அறியாத வர்களாகவே தெரிகின்றனர்.

ஆபிரிக்காவின் மசாய் இன மக்களைப் பொறுத்தவரையிலே, துப்புதல் அதிஷ்டத்துடன் தொடர்புபட்ட விடயமாகக் கருதப்படுகிறது. அதிஷ்டத்துக்காக மட்டுமன்றி, சிறுவர்களைக் கண்டாலோ அல்லது தமக்குப் பிடித்தமானவர்களைக் கண்டாலோ இந்த இன மக்கள், சம்பந்தப்பட்ட நபர்களின் கைகளில் துப்பிய பின்னரே கை குலுக்குவார்கள்.

கிரேக்க கலாசாரத்திலே, ஒருவருக்கு புகழாரம் கிடைத்தால் உடனே அவர் மீது மூன்று தடவை துப்புவார்கள். இது திருஷ்டி கழிக்கும் செயற்பாடாகக் கருதப்படுகிறது. அத்துடன் திருமணங்களின் போது மணமகளின் மீது துப்புவதன் மூலம் நல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வழக்கமும் கிரேக்க மக்களிடம் காணப்பட்டது.

திருஷ்டி கழித்தபின் அதற்கான பொருட்களின் மீது மூன்று தடவைகள் துப்பும் வழக்கம் இன்றும் எம் கிராமங்களில் காணப்படுகிறது.

இன்று பல இடங்களில், ‘இங்கே துப்புதல் தடைசெய்யப்பட்டுள்ளது’ என்ற அறிவித்தலைக் காண முடிகின்றது. கால்பந்து மற்றும் கிரிக்கெட் வீரர்களிடமும் இப்பழக்கம் காணப்படுவதை நாம் அவதானித்திருப்போம். முன்னைய காலங்களிலே, துப்புவதற்கென ‘படிக்கம்’ என்ற சாடியைப் பாவித்தார்கள். பித்தளை, வெண்கலம் போன்ற உலோகங்களினால் ஆக்கப்பட்டிருக்கும் இச்சாடியினுள் மண் போடப்பட்டிருக்கும். துப்ப வேண்டிய தேவையேற்படின், அதனுள் துப்புவார்கள். அதனால் இப்பழக்கம், சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தாது.

எமது பாட்டன், முப்பாட்டன் காலங்களிலே காணப்பட்ட இந்த முறைமை, இன்றைய அவசர உலகிலே, வழக்கொழிந்து போய்விட்டது. எமது முன்னோர்கள் எத்துணை தீர்க்கதரிசனத்துடன் இத்தகைய நடைமுறைகளைக் கையாண்டார்கள் என்பதும் தெளிவாகிறது.

பொது இடங்களிலே இவ்வாறு துப்புபவர்களை நாம் கண்டிருப்போம். பாதைகளில் நடந்து செல்லும் போதும், வாகனங்களில் பயணிக்கும் போது யன்னல்களூடும் துப்புபவர்களை நாம் பல தடவைகள் சந்தித்திருப்போம். அருகிலே நடந்து செல்லும் பொதுமக்கள் பற்றிய அக்கறை அவர்களுக்கு துளியளவேணும் இருப்பதில்லை.

ஒரு நாட்டை உருவகப்படுத்த வேண்டுமாயின் முதலில் தெரிவது அந்த நாட்டில் வாழும் மக்களேயாவர். ஒரு நாட்டைப் பற்றிச் சிந்திக்கும் போது எழிலும் அன்பும் மட்டுமே மனக் கண்ணில் தெரிய வேண்டுமென்பர். வீதிகளில் துப்புபவர்களின் பின்புலம் எப்படிப்பட்டதாக இருக்கும் என, உடனேயே தீர்மானிக்க முடியும். சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் பார்த்த உடனேயே மனம் மகிழ்வுறும்.

ஏனெனில் வீதியோரங்களிலே கூட குப்பைகூளங்களைக் காணமுடியாது. அங்கே, கண்ட கண்ட இடங்களில் எவரும் துப்பமாட்டார்கள். மீறுவோர் பெரிய பெறுமதியைத் தண்டப் பணமாகச் செலுத்தியே ஆக வேண்டும்.இந்த நடைமுறை பல வருட காலங்களாக, சிங்கப்பூரிலே உள்ளது. அதனால் தான் சிங்கப்பூர் அழகு மிளிரும் நாடாகத் தெரிகிறது.

சிங்கப்பூர் போன்ற பல நாடுகளிலே கண்ட இடங்களில், பொது இடங்களில் துப்புதல் சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையிலே அத்தகைய சட்டங்கள் எவையும் இதுவரை உருவாக்கப்படவில்லை. அவ்வாறு சட்டங்கள் உருவாக்கப்பட்டு தண்டப் பணம் அறவிடப்பட்டால் தான் எம் மக்கள் திருந்துவார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது.

ஆனால், இன்றைய இளஞ்சந்ததியினர் இப்பழக்கத்தின் விளைவுகளை அறிந்து திருந்தினால், நாளைய சமுதாயமாவது நாகரிகமான ஆரோக்கியமான சமுதாயமாக இருக்குமெனலாம்.

துப்புதல் போலவே, கண்ட இடங்களில் குப்பைகளை வீசும் வழக்கமும் இன்று எம்மவர் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகிறது. தங்கள் வீட்டுக் குப்பைகளை பொது இடங்களிலே கொட்டிவிட்டு தமது வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதில் வல்லவர்களாகவே யாவரும் இருக்கின்றனர். நாம் பொது இடங்களில் போடுவது சிறு கடதாசித் துண்டாக இருப்பினும், அதனை அகற்றுவதற்கான செலவு அக்குப்பையின் உண்மைப் பெறுமதியை விட அதிகமென்ற உண்மை பலருக்குப் புரிவதில்லை.

பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பொலித்தீன் பைகளின் பாவனை ஒவ்வொருவரது வாழ்வியலிலும் நன்கு ஊடுருவிவிட்டது. பாவனை முடிந்ததும் பொருட்களைத் தூக்கியெறியும் கலாசாரம் சகஜமாகிவிட்டது.

ஆகையால் பொது இடங்களில் சேரும் குப்பைகள் பெருகத் தொடங்கின. அங்கிருக்கும் குப்பைத் தொட்டிகள் மட்டும் வெறுமையாக இருப்பதையும் வேறு தேவைகளுக்காகப் பாவிக்கப்படுவதையும் கூடக் காணமுடிகிறது. குப்பைகளோ நாலா பக்கங்களிலும் சிதறிக் கிடக்கின்றன. இத்தகையதோர் நிலை இலங்கையில் மட்டும் காணப்படுவதான ஒன்றல்ல. பெரும்பாலான வளர்முக நாடுகளில் இதேநிலை தான் காணப்படுகிறது.

சென்னை மாநகரின் பிரதான பஸ் நிலையமாகிய கோயம்பேடு ஒம்னி பஸ் நிலையத்தில் கிடைத்த அநுபவமொன்று ஞாபகத்துக்கு வருகிறது. எங்கு பார்த்தாலும் ‘நகரைச் சுத்தமாக வைத்திருங்கள்!’ என்ற விளம்பரப் பலகைகளைக் காணக் கூடியதாக இருந்தது.

ஆனால் கையிலிருந்த குப்பைகளைப் போடுவதற்காக குப்பைத் தொட்டிகளைத் தேடி கடைசியில் களைப்பு மட்டுமே எஞ்சியது. பின்னர் எமது பயணப்பை தான் அக்குப்பைகளையும் ஏற்றுக் கொண்டது. கண்ட இடங்களிலே குப்பைகள் வீசப்படுவதற்கு இத்தகைய அனுபவங்கள் கூட, காரணமாகிவிடுகின்றன. குறித்த இடத்திலே குப்பைத் தொட்டி இல்லாவிட்டால் என்ன? அது இருக்கும் இடத்தைக் காண்கையில் குப்பைகளை அப்புறப்படுத்த முயலலாமே!

வைத்தியசாலைகளிலும் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றும் சிற்றூழியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபடும் காலங்களில் அவ்வைத்தியசாலைகளின் நிலையைக் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாது. சிற்றூழியர்கள் இருந்தால்கூட, சில வைத்தியசாலைகளின் குப்பைகள் கிரமமாக அகற்றப்படாத நிலையைப் பல இடங்களிலே காணமுடிகிறது. பொது இடங்களில் உள்ள இத்தகைய குப்பைகளைக் கருதுகையில் கண்ணிருந்தும் குருடர்களாகவே இருக்கிறோம்.

இவ்வாறு பொது இடங்களிலே வீசப்படும் குப்பைகள் ஒரு நாட்டிற்கு சுகாதார ரீதியாகவும் நிதி ரீதியாகவும் பெரும் சுமையையே தருகின்றன.

பலதொற்று நோய்கள் பரவுவதற்கும் புதிய பல நோய்கள் உருவாக்கப்படுவதற்கும் கூட, இந்த குப்பை கூளங்கள் காரணமாக அமைந்துவிடுகின்றன. பாவனைக்குதவாதென வீசப்படும் வெற்றுக் கொள்கலன்களில் மழை காரணமாக தேங்கி நிற்கும் தெளிந்த நீர் டெங்கு நுளம்புகளின் இனப்பெருக்கத்துக்குக் காரணமாக அமைந்து விடுகிறது. இதே போல இக்குப்பைகள் பல்வேறு நோய்க்கிருமிகளின் விருத்திக்கும் வழிவகுத்து விடுகின்றன.

நீர்நிலைகளில் கொட்டப்படும் கழிவுகள் நீரை மாசுபடுத்துகின்றன. குப்பைகளினூடு வடிந்தோடும் நீரிலே கரைந்திருக்கும் மாசுக்கள் நிலக் கீழ் நீரை மாசுபடுத்தி விடுகின்றன. அத்துடன் பார உலோகங்களின் செறிவையும் நிலக்கீழ் நீரிலே அதிகரித்து விடுகின்றன.

இவை காரணமாக நீரினால் பரவும் நோய்களும் நீண்டகால நோக்கில் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களும் கூட உருவாகும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.

இதனால், ஒரு நாட்டின் சுகாதாரச் செலவு அதிகரிப்பதுடன் ஆரோக்கியமற்ற மக்கள் சமுதாயம் காரணமாக நாட்டின் அபிவிருத்தியும் பாதிக்கப்படும்.

இக்குப்பைகளைச் சேர்த்து பொருத்தமான இடத்திலே வைத்து அப்புறப்படுத்துவதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் அவற்றை மிக உயர் வெப்பநிலையிலே எரிப்பதற்கான செலவும் மிக அதிகமாகும்.

குப்பை போடுபவர்கள் எவரும், அச்செலவைப் பற்றிச் சிந்திப்பதில்லை யென்பதே வெளிப்படையான உண்மையாகும்.

மக்களின் இத்தகைய மனப்பாங்குகளுக்கு பாடசாலைகளும் பொறுப்பேற்க வேண்டுமென்றே தோன்றுகிறது.

பொது இடங்களிலே குப்பைகளை வீசுதல், துப்புதல் தொடர்பான விழிப்புணர்வு இளஞ்சமுதாயத்திடம் சரியாக ஊட்டப்பட்டாலே போதுமானது. அதற்கான முதலடியை எடுத்து வைக்க வேண்டியவர்கள் பாடசாலைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களேயன்றி வேறெவருமல்லர்.

ஆனால் அது பாடசாலைகளின் வேலையென எண்ணி மற்றையவர்கள் அலட்சியமாக இருத்தலும் உகந்ததல்ல.

எடுத்தற்கெல்லாம் நகர சபைகளையும் அரச அதிகாரிகளையும் குறை கூறாது, நாம் ஒவ்வொருவரும் முயன்றால் குப்பைகளையே காணமுடியாத சிங்கப்பூராக எமது நாட்டையும் மாற்றமுடியுமென்பதில் எதுவித ஐயமுமில்லை!





கோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக