புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_c10இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_m10இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_c10இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_m10இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_c10இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_m10இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_c10இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_m10இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_c10இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_m10இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_c10இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_m10இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_c10இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_m10இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_c10இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_m10இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 02, 2010 1:34 pm

மார்க்கத் தீர்ப்பு
உலகு பல வகையான தீர்ப்புகளைக் காண்கிறது. இறைவன் தீர்ப்பு, மக்கள் தீர்ப்பு, நீதவான் தீர்ப்பு, நிபுணர் தீர்ப்பு, சான்றோர் தீர்ப்பு என அவற்றை அடுக்கிக் கொண்டு போகலாம். ஒவ்வொரு தீர்ப்புக்கும் அது அதற்கே உரிய அலாதியான பரிமாணங்கள் உள.

முஸ்லிம்களுக்கிடையில் பிரபலமான தீர்ப்பு ஒன்று உள்ளது. அதுதான் மார்க்கத் தீர்ப்பு. வெளிக்கொணரப்பட்ட இஸ்லாமிய ஷரீஆவின் சட்டமொன்றை மார்க்கத் தீர்ப்பு என்பர். இதனை ஷரீஆவின் பரிபாஷையில் ‘பத்வா’ எனப்படும். பொதுவாக தீர்ப்புகள் பாரமானவையாக, பாரதூரமானவையாக இருப்பது போன்று பத்வாவும் பாரமானது. பாரதூரமானது.

அல்-குர்ஆன், அல்-ஸ¤ன்னஹ்வில் தேடி ஆதாரங்களைப் பெற்று அவற்றை நன்கு ஐயந்திரிபற படித்துத் தெளிந்து அவற்றின் வெளிச்சத்தில் இஜ்மாஃ, கியாஸ் முதலியவற்றையும் துணைக் கழைத்துக் கொண்டு அல்லாஹ்வை மாத்திரம் அஞ்சிய நிலையில் காய்தல், உவத்திலின்றி விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று பத்வா வழங்கப்பட வேண்டுமென்பது இஸ்லாத்தின் வழிகாட்டலாகும். ஏனெனில் மார்க்கத் தீர்ப்பு அல்லாஹ்வின் சார்பாக வழங்கப்படுகிறது.

இதனால்தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மனிதர்கள் பத்வா வேண்டிய போது ‘அல்லாஹ் உங்களுக்கு பத்வா தருகிறான் என (நபியே) நீர் கூறுக!’ என அல்லாஹ் அறிவுறுத்தி, மார்க்கத் தீர்ப்பு நல்குதல் தனது பொறுப்பு என்பதை தெளிவுபடுத்தினான்.

எனவே பத்வா ஒரு சர்வசாதாரணமான, எளிதான எவரும் துணிந்து செய்ய முடியுமான விடயமன்று, மாறாக பொறுப்பானது, அபாயகரமானது, நிபுணத்துவ திறமை தேவைப்பட்டது. இஸ்லாமிய ஷரீஆவின் துறைகளிலும் துணைத் துறைகளிலும் துறைபோன ஒருவரால் மாத்திரமே இப்பொறுப்பை சரிவர சுமப்பது சாத்தியம்.

தஃப்kர், உலூம் அல்- குர்ஆன், ஹதீஸ், உலூம் அல்-ஹதீஸ், பிக்ஹ், உசூல் அல்-பிக்ஹ், அகீதஹ், kரஹ், தாரீக் முதலாய இமாலய துறைகளுடன் அரபு மொழியை இலக்கண இலக்கியத்துடன், பண்டைய நடையுடன் கசடறக் கற்றுத் தேர்ந்த பண்டிதர்கள் மட்டுமே பத்வா வெளிப்படுத்தும் பொறுப்புக்கு அனுமதிக்கப்படுவர் என்பது ஷரீஆவின் அடிப்படையாகும். அத்துடன் இறையச்சம், தூய எண்ணம், பேணுதல், உலகப் பற்றின்மை, தூய்மை, நேர்மை, நம்பிக்கை, கம்பீரம், இஸ்லாத்தை ஒட்டிய நடைமுறை வாழ்க்கை, துஆஃ, இஸ்திக்ஃபார், நன்னடத்தை,

நிதானம், சாதுரியம், மனிதர்கள், விடயங்கள் பற்றிய பரந்த விரிந்த, ஆழ்ந்த பார்வை, காலதேசவர்த்தமானத்தைக் கவனத்திற்கொள்ளல், தூரதிருஷ்டி, சமயோசிதம், உறுதி, நிபுணத்துவ ஆலோசனை பெறுதல், புறவயநோக்கு போன்றவற்றையும் மார்க்கத் தீர்ப்பு வழங்குவோர் பெற்றிலங்குவது இன்றியமையாதது. இப்பின்னணி கொண்டவரே ஷரீஆவில் முஃப்தி எனப்படுகிறார். யதார்த்தத்தில் அவர் ரஸ¥ல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிரதிநிதியாவார்.

மேற்படி பின்னணி இல்லாதோர் பத்வா நல்க துணிவது முற்றாக தடுக்கப்பட்டுள்ளது. மேலும் எவர் அறிவின்றி பத்வா கொடுக்கப்பட்டாரோ அவரின் பாவம் அவருக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்கியவர் மீதாகும்’ என்பது நபி மொழி (அறிவிப்பவர்) : அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : முஸ்தத்ரக் அல்-ஹாகிம்).

‘உங்களில் பத்வாவுக்கு அதிகம் துணிபவர் உங்களில் நரகுக்கு அதிகம் துணிபவராவார்’ என்றனர் ஆன்றோர். மார்க்கத் தீர்ப்பு நாடுவோர், தேடுவோர் பத்வா வெளிப்படுத்துவதற்குரிய மேற்காட்டப்பட்ட தகைமைகள் பெற்றவரை நன்கு சரியாக இனங்கண்டு அவரிடம் தான் செல்ல வேண்டும். அவருடன் மிக மரியாதையாக, கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்.

நல்ல எண்ணத்துடன் மார்க்கத் தீர்ப்பு வேண்டி அவரை நாட வேண்டும். அவரின் அறிவுத் தராதரத்தைப் பரிசோதிக்க, அறிவீனமான கேள்விகளைத் தொடுத்து அவரை மட்டம்தட்ட, அநாவசியமான வினாக்களைக் கேட்டு அவரின் பொன்னான நேரத்தை மண்ணாக்க, வேறொரு அறிஞர் உங்களின் கருத்துக்கு நேர்மாறாக இப்படி கூறுகிறாரே எனச் சொல்லி அவரை சிக்கலிலாழ்த்த முனைவது பத்வா கோர விழைபவருக்கு அறவே அனுமதிக்கப்பட வில்லை.

ஒவ்வொரு துறைக்கும் அது அதற்குரிய நிபுணர்கள் இருப்பது போல் மார்க்கத் தீர்ப்பு வழங்குவதற்கும் அதற்குரிய நிபுணர்கள் உளர். எவர் எத்துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளார் என்பதை மக்கள் தெரிந்து, தெளிந்து அவரைக்கொண்டு அத்துறை சார்ந்த விடயங்களிலேயே பயன்பெற வேண்டும். அவ்வாறே அவ்வந்த துறையின் நிபுணர்கள் தத்தமது துறையுடன் மாத்திரம் நின்றுகொள்ள வேண்டும். தனக்கு நிபுணத்துவமில்லாத துறையில் தப்பித்தவறியேனும் சம்பந்தப்பட நேரிட்டால் தான் அதற்குரிய ஆளல்ல எனக் கூறி ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.

உரத்த குரலில் பிரசங்கம் செய்வோரெல்லாம் மார்க்கத் தீர்ப்பு வழங்க தகுதியுடையோர் என பொது மக்கள் பொதுவாக எண்ணிக்கொண்டுள்ளனர்.

உரக்க உபந்நியாசம் செய்வது ஒருவரை முஃப்தியாக்கி விடாது. அது போல முஃப்தி என்பது ஒரு பட்டமும் அல்ல. இஸ்லாத்தின் மூலாதாரங்களிலிருந்து சட்டங்களை ஆய்ந்தெடுக்கும் ஆற்றல் பெற்றவரான முஜ்தஹிதே ஆரம்ப காலத்தில் முஃப்தி என அழைக்கப்பட்டார்.

சமகால பத்வாக்களின் உண்மை நிலைதான் என்ன? புராதன காலத்து முஃப்திகள் வழங்கிய பத்வாக்களை அப்படியே அல்லது அவற்றைத் தழுவி அல்லது அவற்றை அடியொற்றி நகல் செய்வது. அவ்வளவு தான்,

எனவே இவை எதார்தத்தத்தில் நவ பத்வாக்கள் என்பதற்கில்லை. அல்-பிக்ஹ் அல்-இஸ்லாமி வஅதில்லத்துஹ் எனும் தனது நூலில் கலாநிதி வஹ்பஹ் அல்- ஸ¤ஹைலி இதனைக் கோடிட்டு காட்டுகிறார்.

எதற்கெடுத்தாலும் விழுந்தடித்துக் கொண்டு மார்க்கத் தீர்ப்பு வழங்கப்படும் ஒரு படு பயங்கரமான காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இணையத்திலும் ஏகப்பட்ட தளங்கள் பத்வாக்கள் வழங்கி வருகின்றன. ஏட்டிக்குப் போட்டியான பத்வாக்களுக்கும் குறைவில்லை.

தனது சொந்த நலனுக்காக தான் சார்ந்துள்ள, ஆதரிக்கின்ற, கூஜா தூக்குகின்ற ஆள், இயக்கம், கட்சி, நிறுவனம், ஊர், நாட்டின் நலனுக்காக பத்வாக்கள் வழ்குவதிலும் பெறுவதிலும் பலர் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை முன்னுக்குப் பின் முரணான பத்வாக்கள் மலிந்து காணப்படுகின்றன. அகவயநோக்கு கொண்ட தற்சாய்வு, பகைக்காய்வு பளிச்சிடும் பத்வாக்கள் பரவிக் கிடக்கின்றன.

இந்நிலை சந்தேகமின்றி வெகு ஆபத்தானது. மக்களின் சமய வாழ்க்கைக்கு வேட்டு வைக்கின்றது. அவர்களை அதலபாதாளத்துக்கு கொண்டு செல்கிறது.

ஆகவே விழித்தெழுவோம்! தெளிவு பெறுவோம்! நிதானமாக சிந்திப் போம்! அசலையும் நகலையும் பிரித்தறிவோம்!





இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக