புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புரோக்கோளி சாப்பிட வாங்க!!!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
புரோக்கோளி சாப்பிடலாம் வாங்க!!!!
நாட்டுக்கோழி, முட்டைக்கோழி, கரிக்கோழி, வெடக்கோழி, உஜாவால் கோழி, ஸ்வேதா கோழி, பியர்ல் கோழி, கினி கோழி(திரைப்படப் பாடலாசிரியர் ப. விஜயின் ஃபேவரேட்) கிரி=நிர்பீக், ஹிட்கரி, வனராஜா, கிரிஷிப்ரோ, அங்களேஷ்வர், அசீல், பர்சா, டங்கி, சிட்டாகாங், தவோதிகிர், காகஸ், ஹர்ரிங்காடா, கருப்பு கதக்நாத், காலஸ்தி, காஷ்மீர் பவிரோலா, மிரி நிக்கோபாரி, பஞ்சாப் பிரெளன், தெள்ளிச்சேரி, வான்கோழி, புரோக்கோளி.....
என்னங்க இது ஒரே கோழியா இருக்குன்னு கேக்கிறீர்களா? இதில் ஒன்று மட்டும் வித்தியாசமானது. சுத்தமான சைவ உணவு. கண்டுபிடிங்க பார்க்கலாம். ம்ம்ம்ம்ம்ம்ம் மிகச்சரியான பதில். சரியா கண்டு பிடிச்சிட்டீங்களே. அதுமட்டும் தான் கோழி இனம் அல்ல. காய்கறி இனம். ஆமாம் புரோக்கோளி (Broccoli) என்பது முட்டைக்கோஸ் குடும்பத்தில் அவதரித்த அடுத்த வாரிசு. அந்தக் குடும்பத்து காலிஃபிளவரும் இதுவும் கலர் மட்டும் கொஞ்சம் மாறுபட்ட டிவின்ஸ்ன்னு சொல்லலாம். இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு கொஞ்சம்தான் வேறுபாடு இருக்கும். ப்ரோக்கோளி பூ காலிஃப்ளவர் பூ போலவே இருக்கும். ப்ரோக்கோளியி அடர்பச்சை, பிரெளன் இரண்டு நிறத்திலும்
இருக்கும்.
இதன் பிறப்பிடம் இத்தாலி என்பதால் இதனை இட்டாலிகா இனம் என்றும் கூறுவர். ப்ரோக்கோளி என்ற பெயரும் Broccolo என்ற இத்தாலிச் சொல்லில் இருந்து பிறந்ததே. இலத்தின் மொழியில் கிளை அல்லது கை என்ற பொருள் தரும் ப்ரோச்சியம்
(brachium) என்ற சொல் மருவி ப்ரோக்கோளியாக உருமாறியது என்று இதற்குப் பெயர் வைத்த கதையைச் சொல்லுவார்கள் அந்தக் குழந்தைக்குச் சொந்த நாட்டுக்காரர்கள்..
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இத்தாலியில் பயிரான ஒரு தாவரம் இது.
1920 வரை அதிகம் மக்களால் பயன்படுத்தப் படாத இத்தாவரம் வழக்கம் போல இங்கிலாந்துக்குப் போய் அங்கிருந்து மீள் அறிமுகம் செய்யப்பட்டது. ஜெ.டி.ஸ்மித் என்பவரே இதனை எடுத்துச் சென்று உலகத்திற்குக் காட்டினார். இது குளிர்காலப்பயிர். குளிர்ச்சியான தட்பவெப்பநிலையில் பயிரடப்படும் இந்த புரோக்கோளியில் எண்ணற்ற சத்துப்பொருகள் நிறைந்துள்ளன. 100 கிராம் புரோக்கோளியில் உள்ள சத்துப் பொருட்களைப் பாருங்க,
கார்போஹைடிரேட்ஸ் 6.64 கிராம்,
சர்க்கரை 1.7 கிராம்,
நார்ச்சத்து 2.6 கிராம்,
நீர்ச்சத்து
89.30 கிராம்,
கொழுப்புச்சத்து
0.37 கிராம்,
புரதம் 2.82 கிராம,
சுண்ணாம்புச்சத்து 5%,
வைட்டமின் ஏ 3%,
வைட்டமின் சி 149%,
வைட்டமின் ஈ 5%,
இரும்புச்சத்து 6%,
மக்னீசியம் 6%,
பாஸ்பரஸ் 6%,
பொட்டாசியம் 7%,
சிங்க் 4%.
பீடா கரட்டின் 3%,
தயாமின் 5%,
ரிபோஃப்ளோவின் 8%
நியாசின் 4%
பேண்டொதேனிக் 11%
அடங்கியுள்ளன. இத்தனைச் சத்துக்களை விட்டு வைக்கலாமா சாப்பிடாமல்? அது என்னென்ன வேலைகளை நம்ம உடலில் செய்கிறது என்று பாருங்கள்.
புற்றுநோய் என்ற கொடுங்கோல் எமதர்மன் இன்ஃப்லமேஷன், ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ், டெடாக்ஸ் என்ற மனித உடலில் நல்லாட்சி புரியும் மூவேந்தர்களை அடிமையாக்குவதன் மூலமாகத் தன் கடுகிய ஆட்சியைப் புரியத் தொடங்குவான். இவர்களைத் தன் படைபலத்தால் காத்தும், புற்று நோய்க் கிராதகனை இவர்களிடம் அண்ட விடாமலும் உடல்நாட்டைக் காக்கும் அருமையான பணியைச் செய்கிறது இந்த புரோக்கோளி. ஒவ்வொரு முறையும் இரண்டு முதல் மூன்று கப் ப்ரோக்கோளி வீதம் வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்து வந்தால் உடலின் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதன் மூலம் புற்றுநோயைக் கிருமிகளை வ(ள)ரவிடாமல் தடுக்கலாம் என்கிறது தற்போதைய ஆய்வு முடிவுகள்.
ஆம், இதுவரை பல கோணங்களில் நடைபெற்ற ஏறத்தாள முந்நூறு ஆய்வுக்ளின் முடிவாக, ப்ரோக்கோளி புற்றுநோயை வராமல் தடுக்கும் மாபெரும் பணியை செய்கிறது என்கின்றனர் ஜெட் பாகே உள்ளிட்ட ஜான் காப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளகள் பலர்.
புற்று நோய்க்குச் சமமாக இன்றையச் சூழலில் மக்களை அதிகமாக அச்சுறுத்தி வரும் நோய் மாரடைப்பு. ப்ரோக்கோளியில் உள்ள பிகாம்ப்ளக்ஸும் வைட்டமின் எ,சி,ஈ, ஆகிய உயிர்ச்சத்துக்களும் இதய நோயிலிருந்தும் இதயத்தைக் காக்கிறதாம். உடனடி மாரடைப்பு வராமலும் தடுக்கிறதாம்.
தைராய்டு எனப்படும் முன்கழுத்துக் கழலைக்கு ப்ரோக்கோளி மிகச்சிறந்த மருந்தாகும் இதனைப் பச்சையாக தின்று வந்தால் தைராய்டு சுரப்பியின் செயற்பாடு கட்டுக்குள் இருக்குமாம்.
விழி பாதுகாப்புக்குத் தேவையாக வைட்டமின்கள் அனைத்தும் இதில் உள்ளதால் விழியைப் பாதுகாப்பதிலும் சிறந்த சேவையை ஆற்றுகிறதாம். முக்கியமாக காட்ராக்ட் வராமல் தடுக்கிறதாம்.
சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் அலஜியையும் தடுக்கிறதாம். உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும் சரும நோய்க்கிருமிகளைக் குறைப்பதால் தோல்வியாதி உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்துப் பொருளாகிறது என்கிறது தற்போதைய ஆராய்ச்சி.
இரும்புச் சத்து அதிகம் உள்ள இந்த புரோகோலிக்கு அல்சர் நோய் வராமல் தடுக்கும் வல்லமையும் உண்டு.
பத்து கலோரி ப்ரோக்கோளியில் சுமார் 1கிராம் நார்ச்சத்து இருப்பதால் இது ஜீரணசக்தியை அதிகரிக்கும் நற்பணியைச் செய்யும் நல்ல தாவரமாகும். அதுமட்டுமல்ல ப்ரோக்கோளியைப் பச்சையாகப்ப் பயன்படுத்துவதால் வயிற்றில் தேவையற்று வளரும்
சில தசைகளின் வளர்ச்சியைக் குறைக்கிறதாம்.
சிங்கும் வைட்டமின் ஈயும் நோய் எதிர்ப்பாற்றலைத் தருவதால் பல நோய்களில் இருந்து காப்பாற்ற இந்த இரு சத்தும் நிறைந்த ப்ரோக்கோளி பயன் படுகிறது.
ப்ரோக்கோளியைச் சமைக்கும் முறை. ஒன்றும் பெரிதாக இல்லை. காளிஃபிளவரை சமைக்கும் முறை அனைத்தும் ப்ரோக்கோளிக்கும் பொருந்தும். காளிஃப்ளவரைப் போலவே பூவிலிருந்து ஒவ்வொரு இதழாகப் பிரித்து கொள்ளவேண்டும். பெரிய இதழ்களாக (கொண்டைகளாக) இருந்தால் அவற்றைச் சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளலாம். அதனை உப்பு போட்டுக் காய்ச்சிய வெந்நீரில் போட்டு கழுவிச் சுத்தம் செய்த பின்பு சமைக்க வேண்டும். காளிஃப்ளவரில் காணப்படுவது போல சிறு புழுக்கள் இதிலும் இருக்க வாய்ப்புள்ளதால். நீரில் வேகவைப்பதை விட ஆவியில்
வேகவைப்பது சரியான சமையல் முறை.
சரி.. இத்தனை பயன்பாடுகள் உள்ள இந்தக் கோளி இங்கு கிடைக்குமா என்றால்..... கண்டிப்பாக கிடைக்கிறது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட இந்தக்கோளி விமானத்தில் பயணித்து சென்னை நீல்கிரிஸ், ரிலையன்ஸ் போன்ற கடை வரைக்கும் வந்து விட்டது. பிற இடங்களில் தெரியவில்லை. சென்னை வாசிகளெல்லாம் எப்பொழுதோ சாப்பிடவும்
ஆரம்பித்து விட்டார்கள்.
ஒரு முக்கியமான செய்திங்க.. இதை மறந்திடாதீங்க.. இதனை குளிர்ச்சாதனப் பெட்டியில் வைத்து பத்து நாட்கள் வரை பயன்படுத்தலாம். ஆனால் வைக்கும் போது நீரில் கழுவிவிட்டு வைக்கக் கூடாது. ஏனெனில் நீர் இதனைக் கெட்டுப்போக வைக்கும். அதே போல பிரித்து வைத்த ப்ரோக்கோளியை இரண்டு நாட்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பதும் நல்லது.
கறிக்கோழி, முட்டைக்கோழி, வெடக்கோழி கினிக்கோழியெல்லாம் சாப்பிடும் போது இந்தப் ப்ரோக்கோளி மட்டும் என்ன பாவம் பண்ணிச்சு.. எத்தனையோ சாப்பிட்டுட்டோம்....இதையும் சாப்பிட்டு வைக்கலாமே.... நாங்க தொடங்கிட்டோம்...... நீங்க??....
ஆதிரா..
நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்
நாட்டுக்கோழி, முட்டைக்கோழி, கரிக்கோழி, வெடக்கோழி, உஜாவால் கோழி, ஸ்வேதா கோழி, பியர்ல் கோழி, கினி கோழி(திரைப்படப் பாடலாசிரியர் ப. விஜயின் ஃபேவரேட்) கிரி=நிர்பீக், ஹிட்கரி, வனராஜா, கிரிஷிப்ரோ, அங்களேஷ்வர், அசீல், பர்சா, டங்கி, சிட்டாகாங், தவோதிகிர், காகஸ், ஹர்ரிங்காடா, கருப்பு கதக்நாத், காலஸ்தி, காஷ்மீர் பவிரோலா, மிரி நிக்கோபாரி, பஞ்சாப் பிரெளன், தெள்ளிச்சேரி, வான்கோழி, புரோக்கோளி.....
என்னங்க இது ஒரே கோழியா இருக்குன்னு கேக்கிறீர்களா? இதில் ஒன்று மட்டும் வித்தியாசமானது. சுத்தமான சைவ உணவு. கண்டுபிடிங்க பார்க்கலாம். ம்ம்ம்ம்ம்ம்ம் மிகச்சரியான பதில். சரியா கண்டு பிடிச்சிட்டீங்களே. அதுமட்டும் தான் கோழி இனம் அல்ல. காய்கறி இனம். ஆமாம் புரோக்கோளி (Broccoli) என்பது முட்டைக்கோஸ் குடும்பத்தில் அவதரித்த அடுத்த வாரிசு. அந்தக் குடும்பத்து காலிஃபிளவரும் இதுவும் கலர் மட்டும் கொஞ்சம் மாறுபட்ட டிவின்ஸ்ன்னு சொல்லலாம். இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு கொஞ்சம்தான் வேறுபாடு இருக்கும். ப்ரோக்கோளி பூ காலிஃப்ளவர் பூ போலவே இருக்கும். ப்ரோக்கோளியி அடர்பச்சை, பிரெளன் இரண்டு நிறத்திலும்
இருக்கும்.
இதன் பிறப்பிடம் இத்தாலி என்பதால் இதனை இட்டாலிகா இனம் என்றும் கூறுவர். ப்ரோக்கோளி என்ற பெயரும் Broccolo என்ற இத்தாலிச் சொல்லில் இருந்து பிறந்ததே. இலத்தின் மொழியில் கிளை அல்லது கை என்ற பொருள் தரும் ப்ரோச்சியம்
(brachium) என்ற சொல் மருவி ப்ரோக்கோளியாக உருமாறியது என்று இதற்குப் பெயர் வைத்த கதையைச் சொல்லுவார்கள் அந்தக் குழந்தைக்குச் சொந்த நாட்டுக்காரர்கள்..
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இத்தாலியில் பயிரான ஒரு தாவரம் இது.
1920 வரை அதிகம் மக்களால் பயன்படுத்தப் படாத இத்தாவரம் வழக்கம் போல இங்கிலாந்துக்குப் போய் அங்கிருந்து மீள் அறிமுகம் செய்யப்பட்டது. ஜெ.டி.ஸ்மித் என்பவரே இதனை எடுத்துச் சென்று உலகத்திற்குக் காட்டினார். இது குளிர்காலப்பயிர். குளிர்ச்சியான தட்பவெப்பநிலையில் பயிரடப்படும் இந்த புரோக்கோளியில் எண்ணற்ற சத்துப்பொருகள் நிறைந்துள்ளன. 100 கிராம் புரோக்கோளியில் உள்ள சத்துப் பொருட்களைப் பாருங்க,
கார்போஹைடிரேட்ஸ் 6.64 கிராம்,
சர்க்கரை 1.7 கிராம்,
நார்ச்சத்து 2.6 கிராம்,
நீர்ச்சத்து
89.30 கிராம்,
கொழுப்புச்சத்து
0.37 கிராம்,
புரதம் 2.82 கிராம,
சுண்ணாம்புச்சத்து 5%,
வைட்டமின் ஏ 3%,
வைட்டமின் சி 149%,
வைட்டமின் ஈ 5%,
இரும்புச்சத்து 6%,
மக்னீசியம் 6%,
பாஸ்பரஸ் 6%,
பொட்டாசியம் 7%,
சிங்க் 4%.
பீடா கரட்டின் 3%,
தயாமின் 5%,
ரிபோஃப்ளோவின் 8%
நியாசின் 4%
பேண்டொதேனிக் 11%
அடங்கியுள்ளன. இத்தனைச் சத்துக்களை விட்டு வைக்கலாமா சாப்பிடாமல்? அது என்னென்ன வேலைகளை நம்ம உடலில் செய்கிறது என்று பாருங்கள்.
புற்றுநோய் என்ற கொடுங்கோல் எமதர்மன் இன்ஃப்லமேஷன், ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ், டெடாக்ஸ் என்ற மனித உடலில் நல்லாட்சி புரியும் மூவேந்தர்களை அடிமையாக்குவதன் மூலமாகத் தன் கடுகிய ஆட்சியைப் புரியத் தொடங்குவான். இவர்களைத் தன் படைபலத்தால் காத்தும், புற்று நோய்க் கிராதகனை இவர்களிடம் அண்ட விடாமலும் உடல்நாட்டைக் காக்கும் அருமையான பணியைச் செய்கிறது இந்த புரோக்கோளி. ஒவ்வொரு முறையும் இரண்டு முதல் மூன்று கப் ப்ரோக்கோளி வீதம் வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்து வந்தால் உடலின் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதன் மூலம் புற்றுநோயைக் கிருமிகளை வ(ள)ரவிடாமல் தடுக்கலாம் என்கிறது தற்போதைய ஆய்வு முடிவுகள்.
ஆம், இதுவரை பல கோணங்களில் நடைபெற்ற ஏறத்தாள முந்நூறு ஆய்வுக்ளின் முடிவாக, ப்ரோக்கோளி புற்றுநோயை வராமல் தடுக்கும் மாபெரும் பணியை செய்கிறது என்கின்றனர் ஜெட் பாகே உள்ளிட்ட ஜான் காப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளகள் பலர்.
புற்று நோய்க்குச் சமமாக இன்றையச் சூழலில் மக்களை அதிகமாக அச்சுறுத்தி வரும் நோய் மாரடைப்பு. ப்ரோக்கோளியில் உள்ள பிகாம்ப்ளக்ஸும் வைட்டமின் எ,சி,ஈ, ஆகிய உயிர்ச்சத்துக்களும் இதய நோயிலிருந்தும் இதயத்தைக் காக்கிறதாம். உடனடி மாரடைப்பு வராமலும் தடுக்கிறதாம்.
தைராய்டு எனப்படும் முன்கழுத்துக் கழலைக்கு ப்ரோக்கோளி மிகச்சிறந்த மருந்தாகும் இதனைப் பச்சையாக தின்று வந்தால் தைராய்டு சுரப்பியின் செயற்பாடு கட்டுக்குள் இருக்குமாம்.
விழி பாதுகாப்புக்குத் தேவையாக வைட்டமின்கள் அனைத்தும் இதில் உள்ளதால் விழியைப் பாதுகாப்பதிலும் சிறந்த சேவையை ஆற்றுகிறதாம். முக்கியமாக காட்ராக்ட் வராமல் தடுக்கிறதாம்.
சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் அலஜியையும் தடுக்கிறதாம். உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும் சரும நோய்க்கிருமிகளைக் குறைப்பதால் தோல்வியாதி உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்துப் பொருளாகிறது என்கிறது தற்போதைய ஆராய்ச்சி.
இரும்புச் சத்து அதிகம் உள்ள இந்த புரோகோலிக்கு அல்சர் நோய் வராமல் தடுக்கும் வல்லமையும் உண்டு.
பத்து கலோரி ப்ரோக்கோளியில் சுமார் 1கிராம் நார்ச்சத்து இருப்பதால் இது ஜீரணசக்தியை அதிகரிக்கும் நற்பணியைச் செய்யும் நல்ல தாவரமாகும். அதுமட்டுமல்ல ப்ரோக்கோளியைப் பச்சையாகப்ப் பயன்படுத்துவதால் வயிற்றில் தேவையற்று வளரும்
சில தசைகளின் வளர்ச்சியைக் குறைக்கிறதாம்.
சிங்கும் வைட்டமின் ஈயும் நோய் எதிர்ப்பாற்றலைத் தருவதால் பல நோய்களில் இருந்து காப்பாற்ற இந்த இரு சத்தும் நிறைந்த ப்ரோக்கோளி பயன் படுகிறது.
ப்ரோக்கோளியைச் சமைக்கும் முறை. ஒன்றும் பெரிதாக இல்லை. காளிஃபிளவரை சமைக்கும் முறை அனைத்தும் ப்ரோக்கோளிக்கும் பொருந்தும். காளிஃப்ளவரைப் போலவே பூவிலிருந்து ஒவ்வொரு இதழாகப் பிரித்து கொள்ளவேண்டும். பெரிய இதழ்களாக (கொண்டைகளாக) இருந்தால் அவற்றைச் சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளலாம். அதனை உப்பு போட்டுக் காய்ச்சிய வெந்நீரில் போட்டு கழுவிச் சுத்தம் செய்த பின்பு சமைக்க வேண்டும். காளிஃப்ளவரில் காணப்படுவது போல சிறு புழுக்கள் இதிலும் இருக்க வாய்ப்புள்ளதால். நீரில் வேகவைப்பதை விட ஆவியில்
வேகவைப்பது சரியான சமையல் முறை.
சரி.. இத்தனை பயன்பாடுகள் உள்ள இந்தக் கோளி இங்கு கிடைக்குமா என்றால்..... கண்டிப்பாக கிடைக்கிறது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட இந்தக்கோளி விமானத்தில் பயணித்து சென்னை நீல்கிரிஸ், ரிலையன்ஸ் போன்ற கடை வரைக்கும் வந்து விட்டது. பிற இடங்களில் தெரியவில்லை. சென்னை வாசிகளெல்லாம் எப்பொழுதோ சாப்பிடவும்
ஆரம்பித்து விட்டார்கள்.
ஒரு முக்கியமான செய்திங்க.. இதை மறந்திடாதீங்க.. இதனை குளிர்ச்சாதனப் பெட்டியில் வைத்து பத்து நாட்கள் வரை பயன்படுத்தலாம். ஆனால் வைக்கும் போது நீரில் கழுவிவிட்டு வைக்கக் கூடாது. ஏனெனில் நீர் இதனைக் கெட்டுப்போக வைக்கும். அதே போல பிரித்து வைத்த ப்ரோக்கோளியை இரண்டு நாட்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பதும் நல்லது.
கறிக்கோழி, முட்டைக்கோழி, வெடக்கோழி கினிக்கோழியெல்லாம் சாப்பிடும் போது இந்தப் ப்ரோக்கோளி மட்டும் என்ன பாவம் பண்ணிச்சு.. எத்தனையோ சாப்பிட்டுட்டோம்....இதையும் சாப்பிட்டு வைக்கலாமே.... நாங்க தொடங்கிட்டோம்...... நீங்க??....
ஆதிரா..
நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்
ப்ரோக்கோலி பற்றிய இந்த தகவல் எல்லாருக்குமே கண்டிப்பாக பயன் தரும் தகவல்பா....
இங்க வாங்க ஒரு ரகசியம் சொல்றேன்.... அம்மா சொல்லி நாங்க போன வாரம் தான் ப்ரோக்கோலி வாங்கினோம்... இங்க சீசன் வந்தால் ப்ரோக்கோலி தான் வீட்டில் ராஜ்ஜியம்.....
ப்ரோக்கோலி பக்கோடா , ப்ரோக்கோலி உருளை ஸ்டஃப்ட் கேப்சிகம் , ப்ரோக்கோலி உசிலி இப்படி வெரைட்டி செய்து சாப்பிடுவோம்... எனக்கு இதன் சுவை பிடிக்கலன்னாலும் வேற வழி இல்லை அம்மாக்கு பயந்து சாப்பிடுவேன் ஆனால் இதில் இத்தனை அருமையான சத்து இருக்குன்னு பானு சொன்னப்பின் சந்தோஷமா சிரிச்ச முகத்தோட சாப்பிடுவேனாக்கும்...
அருமையான பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் பானு....
இங்க வாங்க ஒரு ரகசியம் சொல்றேன்.... அம்மா சொல்லி நாங்க போன வாரம் தான் ப்ரோக்கோலி வாங்கினோம்... இங்க சீசன் வந்தால் ப்ரோக்கோலி தான் வீட்டில் ராஜ்ஜியம்.....
ப்ரோக்கோலி பக்கோடா , ப்ரோக்கோலி உருளை ஸ்டஃப்ட் கேப்சிகம் , ப்ரோக்கோலி உசிலி இப்படி வெரைட்டி செய்து சாப்பிடுவோம்... எனக்கு இதன் சுவை பிடிக்கலன்னாலும் வேற வழி இல்லை அம்மாக்கு பயந்து சாப்பிடுவேன் ஆனால் இதில் இத்தனை அருமையான சத்து இருக்குன்னு பானு சொன்னப்பின் சந்தோஷமா சிரிச்ச முகத்தோட சாப்பிடுவேனாக்கும்...
அருமையான பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் பானு....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி wrote:ப்ரோக்கோலி பற்றிய இந்த தகவல் எல்லாருக்குமே கண்டிப்பாக பயன் தரும் தகவல்பா....
இங்க வாங்க ஒரு ரகசியம் சொல்றேன்.... அம்மா சொல்லி நாங்க போன வாரம் தான் ப்ரோக்கோலி வாங்கினோம்... இங்க சீசன் வந்தால் ப்ரோக்கோலி தான் வீட்டில் ராஜ்ஜியம்.....
ப்ரோக்கோலி பக்கோடா , ப்ரோக்கோலி உருளை ஸ்டஃப்ட் கேப்சிகம் , ப்ரோக்கோலி உசிலி இப்படி வெரைட்டி செய்து சாப்பிடுவோம்... எனக்கு இதன் சுவை பிடிக்கலன்னாலும் வேற வழி இல்லை அம்மாக்கு பயந்து சாப்பிடுவேன் ஆனால் இதில் இத்தனை அருமையான சத்து இருக்குன்னு பானு சொன்னப்பின் சந்தோஷமா சிரிச்ச முகத்தோட சாப்பிடுவேனாக்கும்...
அருமையான பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் பானு....
மஞ்சு ஒரு ரகசியம் சொல்லவா? நான் இதுவரை இதைச் சாப்பிட்டதே இல்லை. எல்லாம் ஊருக்குத்தான்.
இனிமே புரோக்கோளி பக்கோடா , ப்ரோக்கோலி உருளை ஸ்டஃப்ட் கேப்சிகம் , ப்ரோக்கோலி உசிலி எல்லாம் சாப்பிடும் போதெல்லாம் என் முகம்தான் நினைவு வரனும் சரியா மஞ்சு?
அன்பான பதிலுக்கு என் மனமார்ந்த நன்றி மஞ்சு.
நானும் என்னமோ புறா கோழி போன்ற பறப்பனவற்றின் அருமை பெருமைகளைச் சொல்லும் கட்டுரை என்று ஓடி வந்து பார்த்தால்... இது என்ன புது வகை கொலி.? ஒரு கோஹ்லி கிரிக்கெட்டில் சுத்திக்கிட்டு இருக்குன்னு தெரியும்... சின்னவயதுல கோலியும் விளையாண்டு இருக்கேன்...
ஹூம் ... என்னமோ சொல்றிங்க... நீஙக யாராவது புண்ணியவதிங்க சமைச்சுக் கொடுத்தா நன்னா இருக்கும்...
அது சரி.... இந்த கோலியின் கால் வறுப்பாங்களா... பொரிப்பாங்களா..?
ஹூம் ... என்னமோ சொல்றிங்க... நீஙக யாராவது புண்ணியவதிங்க சமைச்சுக் கொடுத்தா நன்னா இருக்கும்...
அது சரி.... இந்த கோலியின் கால் வறுப்பாங்களா... பொரிப்பாங்களா..?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
புதுசால்ல இருக்கு! நாங்க பொறிச்ச கோழில்ல செஞ்சி சாப்பிடுவோம்.... பகிர்வுக்கு நன்றிகள்
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|