புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு தாயின் ஆவல்!  Poll_c10ஒரு தாயின் ஆவல்!  Poll_m10ஒரு தாயின் ஆவல்!  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஒரு தாயின் ஆவல்!  Poll_c10ஒரு தாயின் ஆவல்!  Poll_m10ஒரு தாயின் ஆவல்!  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு தாயின் ஆவல்!  Poll_c10ஒரு தாயின் ஆவல்!  Poll_m10ஒரு தாயின் ஆவல்!  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஒரு தாயின் ஆவல்!  Poll_c10ஒரு தாயின் ஆவல்!  Poll_m10ஒரு தாயின் ஆவல்!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு தாயின் ஆவல்!  Poll_c10ஒரு தாயின் ஆவல்!  Poll_m10ஒரு தாயின் ஆவல்!  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஒரு தாயின் ஆவல்!  Poll_c10ஒரு தாயின் ஆவல்!  Poll_m10ஒரு தாயின் ஆவல்!  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு தாயின் ஆவல்!  Poll_c10ஒரு தாயின் ஆவல்!  Poll_m10ஒரு தாயின் ஆவல்!  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஒரு தாயின் ஆவல்!  Poll_c10ஒரு தாயின் ஆவல்!  Poll_m10ஒரு தாயின் ஆவல்!  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தாயின் ஆவல்!


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 11:46 am

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
ஹாரிஸா பின் சுராகா (ரலி) அவர்களின் தாயரான உம்மு ருபய்யிஉ பின் பராஉ (ரலி) அவர்ள்
நபி (ஸல்) அவர்களிடம் வந்து
, ''அல்லாஹ்வின் தூதரே! ஹாரிஸாவைப் பற்றி எனக்கு நீங்கள் கூற மாட்டீர்களா?
அவர் பத்ருப் போரன்று
கொல்லப்பட்டிருந்தார். எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று அவர் மீது தாக்கியிருந்தது.

அவர்சுவர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையைக் கைக் கொள்வேன். அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது
இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்"" என்று கூறினார்கள். (இதைக்
கேட்ட) நபி (ஸல்) அவர்கள்
, ஹாரிஸாவின் தாயே! சுவர்க்கத்தில் பல்வேறு (படித்தரங்களைக் கொண்ட)
சுவனச் சோலைகள் உள்ளன. உங்கள் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த
'பிர்தவ்ஸ்" எனும் சுவனச் சோலையைப்
பெற்றுக் கொண்டார்கள்"" என்று பதிலளித்தார். (புகாரீ)


ஓர் இலட்சியத் தாயின் ஆவல் இந்த ஹதீஸில் பிரதிபலிக்கிறது. புவிமேற்பரப்பில் கால்பதித்து
நின்றாலும் சுவனத் தேடலும்
, இறைதிருப்தியை பெற்றுக் கொள்ளும் அவாவும் அக்கால தாய்மார்களின்
நெஞ்சங்களில் ஆழமாகப் பதிந்திருந்தன.



பத்ரு யுத்தம் சத்தியத்தை வாழ வைத்த யுத்தம். இஸ்லாமிய ஆட்சியின் அடித்தளங்களை
ஆட்டங் காணச்
n சய்து அதனை முழுமையாக வேரறுத்து விடுவதற்கான முழுமையான யுத்த முஸ்தீபுகளுடன் இறைநிராகரிப்பாளர்கள்
பத்ருக் களம் நோக்கி வந்திருந்தனர். எதிர்பாராத விதமாக போராட்டத்தில் குதிக்க வேண்டிய நிலையில் இருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மனித வளத்தையும்
, பௌதீக வளத்தையும் அங்கசம்பூரணமாகப்
பிரயோகித்தார்கள். நபித்தோழர் பெருமக்களில் ஹாரிஸா பின் சுராகா (ரலி) அவர்களும் ஒருவர்.




ஹாரிஸா பின் சுராகா (ரலி) அவர்கள், தான் வீர மரணம் அடைய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களிடத்தில்
பிரார்த்தனை செய்யுமாறு வேண்டிக் கொண்டவர். ஹிஜ்ரி
2 ம் ஆண்டு நடந்த பத்ருப் போரில் கலந்து
கொண்டார். போரின் போது தண்ணீர் அருந்துவதற்காக நீர்த் தொட்டிக்கு அவர் வந்த சமயத்தில்
ஹிப்பான் இப்னு அரிகா என்பவர் தொலைவிலிருந்து எய்த அம்பொன்று ஹாரிஸாவின் குரல் வளையைத்
தாக்கியதில் அவர் வீரமரணம் அடைந்தார்.


பத்ரு யுத்தம் இஸ்லாத்தினதும், முஸ்லிம்களினதும் இலக்கையும், இருப்பையும் உறுதி செய்தது. இஸ்லாத்திற்கான
ராட்சத பங்களிப்பில் தன்னை உட்படுத்திக் கொண்ட ஹாரிஸாவின் நிலை குறித்து அவர்களது அருமைத்தாய் அண்ணலாரிடம் வினவுகிறார்கள். ஒரு முஸ்லிமின் வாழ்வில் அவன் இறுதி மூச்சை விட்ட
நிலை அவனது மறுவுலக வாழ்வைத் தீர்மானிக்கிறது.

எனவே தான் அந்தத் தாய்
, ''ஹாரிஸா குறித்துக் கூற மாட்டீர்களா?என்று கவலை குரல் வளையை அடைக்க ஏக்கப் பெருமூச்சுடன் வினாத் தொடுக்கிறார்கள். ''எனது மகன் சுவனத்தில் இருப்பாரென்றால்நான் பொறுமையைக் கைக் கொள்வேன்"" என்ற அந்தத் தாயின் கூற்று அவர்களது இலட்சியவாத
வாழ்வை அழகாகச் சித்தரிக்கிறது. தனது மகன் மரணித்து விட்டதை அவள் ஏற்கனவே அறிந்து கொண்டாள்.
அதற்காக அவள் கவலைப்படவில்லை. அண்ணலாரை சந்திப்பதற்கு முன்னர் ஒரு நபித்தோழரை சந்தித்து
மகனின் மரணச் செய்தியை அறிந்து கொண்டு
'அல்லாஹ{ அக்பர்" என்று உரக்கக் கூறினார்கள். அவர்களது கவலை
எல்லாம் மகனின் மறுவுலக வாழ்வு குறித்ததாகவே இருந்தது.

ஏனெனில், மகன் சுவனத்தில் இருந்தால் அவன் சுவனச் சோலையின் சுகந்தத்தைச் சுவாசிப்பேன். பேரின்பகரமான
உணவை உட்கொள்வான்
, பாலாறு, தேனாறு போன்றவற்றிலிருந்து அருந்தி மகிழ்வான். வசந்தம் கொழிக்கும் வாலிபப் பருவத்தை
அனுபவிக்கு முன்னரே உயிர்த்தியாகம் செய்தவன் சுவன வசந்தத்தை என்றும் இளமை மாறாத நிலையில் வாழ்ந்து அனுபவிப்பான்.
'{ருல் ஈன்" எனும் கண்ணழகிகளுடன் கொஞ்சி விளையாடுவான்.

நோய்
,மரணம், களைப்பு, சோர்வு, வறுமை, முதுமை எதுவுமே அவனை அணுகப்
போவதில்லை. மேலும் இன்னோரன்ன சுகபோகங்கள் அவனை சுற்றி வளைத்திருக்கும். அத்தோடு இறைதிருப்தி
அவனது நெஞ்சத்தை நிறைத்திருக்கும்.


இந்தக் கனவு கலைந்து கவலைப் பாறைகள் தொண்டைக்குழியை அடைத்து விடக் கூடாது என்பதற்காகவே
அண்ணலாரிடம் அந்தத் தாய் மகனின் இறுதி நிலை தொடர்பாக தனது உளக் குமுறலைக் கொட்டினார்கள்.
எந்தக் கண்ணும் பார்த்திராத
, எந்தக் காதும் செவியேற்றிராத, எந்தவொரு மனித உள்ளமும் உணர்ந்திராத
சுவனத்தை எனது அடியார்களுக்காக நான் சித்தப்படுத்தியுள்ளேன் என்று அல்லாஹ் கூறுவதாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ
{ல் குத்ஸீ வர்ணிக்கும் சுவனத்தை எனது மகன் வெகுமதியாகப்
பெற்று விட்டால் நான் பொறுமை சாதிப்பேன். என்னை எனது மகனின் பிரிவுத்துயர் வாட்டி வதைக்கப்போவதில்லை என்பதே அந்தத் தாயின் நிலைப்பாடு.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 11:47 am

'அதுவல்லாத (துன்ப) நிலையில் அவர் இருப்பாரென்றால் நான் கடுமையான அழுவேன்"
என்ற அந்தத் தாயின் கூற்று பிள்ளைப் பாசத்தை அப்படியே கொப்பளிக்கிறது. அதுவல்லாத நிலை
என்றால் நரகம் தானே! ஜஹன்னம்
, ஜஹீம் என்ற வார்த்தைகளைக் கூற நா எழவில்லை. அந்தத் தாய் நரகத்திற்குரிய
பெயர்களைத் தானும் கூற விரும்பவில்லையென்றால் அவள் எப்படி தனது மகன் நரகத்தின் புகை
மண்டலத்தில் இருந்து வரும் நச்சுக் காற்றைச் சுவாசிப்பதை விரும்புவாள்
? இதுவே இஸ்லாமியத் தாயின் ஆவல்!
தனது மகனின் இறுதி இலக்கை அவனுக்கு சரியாக வரித்துக் கொடுத்த தாயின் இலட்சியவாத வாழ்வு!
மகனின் பிரிவால் வாழ்வு கசந்து போக விரக்தியின் விளிம்புக்குச் சென்று விடாத அஞ்சா
நெஞ்சம் கொண்ட வீரத்தாயின் தணியாத தாகம்! அவள் உருவாக்கியது சரிசாரி மனிதப் பிண்டத்தை
அல்ல. மாறாக
, தீனுல் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக செந்நீர் வார்க்கத் துணிந்து விட்ட வீரப் புருஷனை!
ஹாரிஸா (ரலி) அவர்களது தாய் தனது மகனின் மரணத்தை பேரிழப்பாகக் கருதவில்லை.


பத்ரு யுத்த சத்தம் ஓய்ந்தாலும் அந்தத் தாயின் சத்தம் இன்னும் தணியவில்லை! அது
ஒரு நொந்து போன உள்ளம். தனது மகனின் இறுதிப் பெறுபேற்றை எதிர்பார்த்து நிற்கும் முதல்
பாடசாலை! அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அதரங்கள் உதிர்த்த வார்த்தைகள் :

''ஹாரிஸாவின் தாயே! சுவனத்தில் பல்வேறு (படித்தரங்கள் கொண்ட) சோலைகள் உண்டு. உங்கள்
மகன் உயரிய பிர்தவ்ஸ் என்ற சுவனச் சோலையை தனதாக்கிக் கொண்டார்"" தூதர் மொழிகள்
அவளுக்கு ஒத்தடமாய் அமைந்தன. அந்த முதல் தர சித்தி கண்டு அந்த முதல் பாடசாலை அகமகிழ்ந்தது.
அவளை சமாளித்து அனுப்புவதற்காக அவ்விடத்தில் புனையப்பட்ட ஆறுதல் வார்த்தைகளல்ல அவை
,
நஊதுபில்லாஹி மின்ஹா,
அவை வஹியின் ஊடாக நபி
(ஸல்) அவர்கள் பெற்றுக் கொண்ட பேருண்மை. அவற்றில் நபித்தோழர்களுக்கு அசைக்க முடியாத
விசுவாசம் இருந்தது. எனவே தான்
, இளைஞர் பட்டாளம் களம் காணத் துடித்துக் கொண்டிருந்தது. களம்
காணும் ஆசையை
, ஆவலை இளம் உள்ளங்களில் அன்னையர் விதைத்தனர்.



இஸ்லாத்தை வாழ வைக்க இளம் உள்ளங்களை அன்று தூண்டியவை மாவீரர் தினங்களோ,
மாவீரர் துயில் கொள்ளும்
இல்லங்களோ அல்லது இனவெறியை வரிக்குவரி கொப்பளிக்கும் கீதங்களோ அல்ல. மாறாக வேதவரிகளும்
,
தூதர் மொழிகளும்,
தாய்மார்களது அகன்று
விரிந்து கிடந்த உள்ளங்களுமே களம் நோக்கி அவ்விளைஞர்களை உந்தித் தள்ளி நகர்த்தின.


இலட்சியங்களை இலட்சியமாய் வரித்துக் கொள்ளாத, பெரிய இடத்து சம்பந்தத்திற்காக மாப்பிள்ளையைச்
சந்தைப் பொருளாக்கும் சராசரி சடவாதச் சிந்தனைப் போக்குள்ள தாய்மார்கள் அல்ல அக்கால
தாய்மார். உழைப்பு
, உத்தியோகம், சமூக அங்கீகாரம், அந்தஸ்து, பதவிநிலை போன்றவற்றை முதன்மைப்படுத்தி பிள்ளைகளை சடவாதச் சகதியில் மூழ்கடிக்கின்ற
பெற்றோரை இன்று பரவலாக நாம் அவதானிக்கின்றோம். அன்று சுவனமும்
, இறைதிருப்தியும் பெற்றோர்களினால்
பிள்ளைகளுக்கு முதன்மைப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டன. எதிர்காலத்தில் தமது பிள்ளைகள்
பெரிய சுகபோகத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக பெற்றோரினால் வழிகாட்டல் வழங்கப்பட்டதாக
நாம் அறிய முடியாது. அப்படியான நிலைப்பாடு ஜனரஞ்சகமாக இருந்திருக்குமென்றால் ஹாரிஸாவையும்
,
இஸ்லாமிய வரலாறு சந்தித்திருக்க
முடியாது. இஸ்லாமிய புவியில் மேலோங்கியிருக்கவும் முடியாது.


ரபீஅத்துர் ரஃயீ என்ற இமாமின் தாயிடம் ஊரவர்கள், 'உங்கள் மகன் கற்பிக்கும் தகையையைப்
பெற்றுள்ளார். அவருக்கு ஒரு தொழிலை நீங்கள் செய்து கொடுத்தால் என்ன
?" என்று கேட்டனர். அதற்கு அந்தத்
தாய்
, '' எனது
மகனின் ஈருலக வாழ்வுக்கு இயைந்து வரக் கூடிய ஒன்றைத் தெரிவு செய்து கொடுக்குமாறு நான்
அல்லாஹ்வை வேண்டுகிறேன்" என்றார்கள்.

இலட்சியவாத தாய்மார்களும், பிள்ளைகளும் காலத்தின் தேவையாக
அமைந்து விட்டான். எமது பிள்ளைகளை சுவனப் பிரியர்களாக வளர்ப்பதற்கு எமது இன்றைய நடைமுறை
வாழ்வையும்
, சிந்தனையையும், நோக்கையும்
போக்கையும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியின் அடிப்படையில் மறுசீரமைக்க வேண்டிய தேவை அதிகரித்து
வருகிறது. இது ஒரு காலத்தின் அறைகூவல்! நவயுகத்தின் சவால் இலகுவாக நிலைநாட்ட முடியாத
சாதனை என்றால் அது மிகையாகது






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 04, 2010 11:51 am

மிகவும் சிறந்த தொகுப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jul 05, 2010 11:05 am

ரபீக் wrote:மிகவும் சிறந்த தொகுப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தோழரே நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 30, 2010 1:05 pm

நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக