புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகப் போர்கள் - Page 6 Poll_c10உலகப் போர்கள் - Page 6 Poll_m10உலகப் போர்கள் - Page 6 Poll_c10 
284 Posts - 45%
heezulia
உலகப் போர்கள் - Page 6 Poll_c10உலகப் போர்கள் - Page 6 Poll_m10உலகப் போர்கள் - Page 6 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
உலகப் போர்கள் - Page 6 Poll_c10உலகப் போர்கள் - Page 6 Poll_m10உலகப் போர்கள் - Page 6 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகப் போர்கள் - Page 6 Poll_c10உலகப் போர்கள் - Page 6 Poll_m10உலகப் போர்கள் - Page 6 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகப் போர்கள் - Page 6 Poll_c10உலகப் போர்கள் - Page 6 Poll_m10உலகப் போர்கள் - Page 6 Poll_c10 
19 Posts - 3%
prajai
உலகப் போர்கள் - Page 6 Poll_c10உலகப் போர்கள் - Page 6 Poll_m10உலகப் போர்கள் - Page 6 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உலகப் போர்கள் - Page 6 Poll_c10உலகப் போர்கள் - Page 6 Poll_m10உலகப் போர்கள் - Page 6 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உலகப் போர்கள் - Page 6 Poll_c10உலகப் போர்கள் - Page 6 Poll_m10உலகப் போர்கள் - Page 6 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகப் போர்கள் - Page 6 Poll_c10உலகப் போர்கள் - Page 6 Poll_m10உலகப் போர்கள் - Page 6 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகப் போர்கள் - Page 6 Poll_c10உலகப் போர்கள் - Page 6 Poll_m10உலகப் போர்கள் - Page 6 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகப் போர்கள்


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:10 am

First topic message reminder :

முதல் உலகப்போர்


இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சி இரண்டாம் உலகப் போர். உலக நாடுகள், இரு பிரிவாகப் பிரிந்து 1939 முதல் 1945 வரை போர் புரிந்தன. இந்தப் போரில், ஜப்பான் மீது இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டு, லட்சக் கணக்கான மக்கள் மாண்டனர். இரண்டாம் உலகப் போரைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், முதல் உலகப்போரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இரண்டு போர்களுக்கும் தொடர்பு உண்டு.


முதல் உலகப்போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. விமானங்களும், போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில்தான் பயன்படுத்தப் பட்டன. ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாத்தும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28ந்தேதி) சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டவன், செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியா வுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன.

செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா, ஆகியவை போரில் ஈடுபட்டன. 1914 ஆகஸ்ட் 4ந்தேதி முதலாம் உலகப்போர் மூண்டது. ஆரம்பத்தில் அமெரிக்கா நடுநிலை வகித்தது. ஆயினும் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்தது. அதனால் ஆத்திரம் அடைந்த ஜெர்மனி, அமெரிக்கக் கப்பல்கள் மீது குண்டு வீசியது. கப்பல்கள் கடலில் மூழ்கின. இதன் காரணமாக, ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்கா போரில் குதித்தது.


avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:51 am

பெர்லின் சுவர் என்று இது அழைக்கப்பட்டது. அமெரிக்காவின் உதவியுடன் மேற்கு பெர்லின் நகரம் புதுப்பிக்கப்பட்டது. உலகின் அழகிய நரங்களில் ஒன்றாக அந்த நகரம் கம்பீரமாக எழுந்தது. ஆனால் கிழக்கு பெர்லின் நகரம் மிக மிக மெதுவாகவே வளர்ச்சி அடைந்தது. இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் ஜெர்மனி மக்கள் உணர்ச்சியால் ஒன்றுபட்டவர்கள்தானே. இரண்டு நாடுகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்பினார்கள். இரண்டு ஜெர்மனிகளையும் ஒன்றாக இணைப்பது என்று இரு நாடுகள் இடையேயும் 1990-ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி 1990 அக்டோபர் 3-ந் தேதி இரு ஜெர்மனிகளும் ஒரே நாடாக இணைந்தன.

பெர்லின் சுவர் இடித்துத் தள்ளப்பட்டது. அணுகுண்டு வீச்சினால் பேரழிவுக்கு உள்ளான ஜப்பான் அந்த சோதனைகளை எல்லாம் எதிர்கொண்டு பொருளாதார துறையில் படிப்படியாக முன்னேறியது. ஜப்பானிய மக்களின் அயராத உழைப்பினால், இன்று உலகிலேயே எலக்ட்ரானிக் துறையில் தலை சிறந்து விளங்குகிறது. உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. போரின் போது அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் தோளோடு தோன் நின்று ஹிட்லரை எதிர்த்துப் போர் புரிந்த ஸ்டாலின், பின்னர் ரஷியாவில் தன் எதிரிகளை ஒழித்துக்கட்டிவிட்டு சர்வாதிகாரியானார். ரஷியாவில் நடப்பது வெளி உலகுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டன. ரஷியாவில் இரும்புத்திரை போடப்பட்டு விட்டதாக சர்ச்சில் வர்ணித்தார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:51 am

இரண்டாவது உலகப்போரின்போது இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. போர் முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை இங்கிலாந்து கோரியது. போர் முயற்சிகளில் பிரிட்டனுக்கு இந்தியா ஆதரவாக இருந்தால் இந்தியாவுக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் டொமினியன் அந்தஸ்து கொடுக்கப்படும் என்று அறிவித்தது. இது சம்பந்தமாக 1942 மார்ச் மாதத்தில் இங்கிலாந்து மந்திரி கிரிப்ஸ் இந்தியாவுக்கு வந்து காந்தியையும், மற்ற தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். ஆனால் பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. உலகப்போரில் ஹிட்லருடன் சேர்ந்திருந்த ஜப்பான், தொடக்கத்தில் பல வெற்றிகளைப் பெற்றது. பிரிட்டன் வசம் இருந்த மலாயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை கைப்பற்றியது. இந்தியா மீதும் ஜப்பான் படையெடுக்கலாம் என்றும் கருதப்பட்டது.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி இருந்து வருவதால்தான் ஜப்பானியர் இந்த நாட்டின் மீது படையெடுக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்தியாவில் இருந்து பிரிட்டிஷார் உடனே வெளியேற வேண்டும் என்று காந்தி அறிக்கை வெளியிட்டார். வெள்ளையனே வெளியேறு என்று புகழ் பெற்ற தீர்மானத்தை 1942 ஆகஸ்டு மாதத்தில் காங்கிரஸ் நிறைவேற்றியது. எனினும் இந்திய இளைஞர்கள் பெருமளவில் ராணுவத்தில் சேர்ந்து போர் முனைக்கு சென்றார்கள். குறிப்பாக ஜப்பானை எதிர்த்துப் போர் புரிய சிங்கப்பூர், மலாயா, பர்மா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட படைகளில் இந்திய இளைஞர்கள் அதிக அளவில் இருந்தனர். யுத்த காலத்தில் இந்தியாவில் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவுக்கு ரேஷன் கொண்டு வரப்பட்டது.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:52 am

தமிழ்நாட்டில் அரிசிக்கு ரேஷன் அமுலாகியது. வரவர அரிசியின் அளவு குறைக்கப்பட்டு கோதுமை, மக்காச்சோளம் ஆகியவை தரப்பட்டன. கடைகளில் ரொட்டி வாங்க வேண்டும் என்றால் கூட அரிசியைக் குறைத்துக் கொண்டு அதற்கு சமமான கூப்பனை பெற்றுக்கொண்டு அதைக் கொடுத்துத்தான் ரொட்டி வாங்க முடியும், சென்னை, மதுரை, திருச்சி, கோவை முதலிய நரங்களில் பாதுகாப்பு குழிகள் வெட்டப்பட்டன. அடிக்கடி அபாயச் சங்கு ஊதி ஒத்திகை பார்ப்பார்கள். அப்போது ரோட்டில் நடந்து போகிறவர்கள். பதுங்குக் குழிகளில் ஒளிந்து கொள்ள வேண்டும்.

இரவில் விளக்கு வெளிச்சம் எதிரி விமானங்களுக்கு தெரியக் கூடாது என்பதற்காக, தெரு விளக்குகளுக்கு மேல் கறுப்பு மூடிகள் போடப்பட்டன. கச்சா பிலிமுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், சினிமா படங்களை நீளமாகத் தயாரிக்க தடை போடப்பட்டது. 13 ஆயிரம் அடிக்குள் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவு விடப்பட்டது. இந்த உத்தரவு, நல்லதாகவும் அமைந்தது. படங்களில் பாடல்கள் குறைக்கப்பட்டு விறுவிறுப்பு கூடியது. மிகப்பெரிய வெற்றிப் படங்களான ஹரிதாஸ் ஸ்ரீவள்ளி நாம் இருவர் ஆகியவை இந்தக் காலக் கட்டத்தில் குறைந்த நீளத்தில் தயாரிக்கப்பட்டவைதான்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:56 am

இரண்டாம் உலகப்போர் (போர் டைரி-1942 )


ஜன.1: 26 உறுப்பினர்களுடன் ஐ.நா.சபை உருவாயிற்று.

ஜன.2: பிலிப்பைன்ஸ் தீவில்உள்ள மணிலா நகரத்தை ஜப்பானியர் கைப்பற்றினர்.

ஜன.19: ஜெர்மணி படைகள் இருந்த பகுதிக்குள் ரஷிய பாராசூட் படையினர் குதித்து திடீர் தாக்குதல் நடத்தினர்.

ஜன.31: சிங்கப்பூரை ஜப்பான் படைகள் முற்றுகையிட்டன.

பிப்.8: சிங்கப்பூருக்குள் ஜப்பான் படைகள் புகுந்தன. சிங்கப்பூர் வீழ்ந்தது

பிப்.15: ஜப்பானிடம் சிங்கப்பூர் சரண் அடைந்தது

மார்ச்.7: ஜப்பானிடம் ஜாவா சரண் அடைந்தது.

ஏப்.1: இலங்கை மீது ஜப்பான் விமானங்கள் குண்டு வீச்சு.

ஏப்.18: ஜப்பான் தலைநகர் டோக்கியோ மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தியது.

ஏப்.30: ஹிட்லரும் முசோலினியும் சந்தித்துப் பேசினார்கள் ( லெனின்கிராட் நகரில் மட்டும் ஏப்பரல் மாதத்தில் 1 லட்சம் பேர் மாண்டனர் )

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:56 am

மே.2: பர்மாவில் உள்ள மாண்டாலே நகரை ஜப்பான் கைப்பற்றியது.

மே.4: மடகாஸ்கர் தீவை பிரிட்டீஷ் படைகள் கைப்பற்றின.

மே.31: ஆஸதிரேலியாவில் உள்ள சிட்னி துறைமுகத்தின் மீது ஜப்பானின் நீர்மூழ்கி கப்பல்கள் தாக்குதல் நடத்தின. ( இந்த மே மாதத்தில் மட்டும் 1,30,000 யூதர்கள் விஷவாயு மூலமாகவும் துப்பாக்கியால் சுட்டும் ஜெர்மானியர்கள் கொன்றனர். )

ஜுன்.10: போலந்து நாட்டில் ஏராளமான மக்களை ஜெர்மனி தூக்கிலிட்டது.

ஜுன்.16: மத்திய தரைக்கடலில் பிரிட்டீஷ் போர்க்கப்பல்களும் 3 இத்தாலி போர்க்கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டன ஐசோனவர்

ஜுன்.25: ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க படைகளுக்கு தளபதியாக ஐசனோவர் (பிற்காலத்தில் ஜனாதிபதியானவர்) நியமிக்கப்பட்டவர்.

( ஜுன் மாதத்தில் வட அட்லாண்டிக் கடலில் நேச நாடுகளின் 124 கப்பல்களை ஜெர்மனி தாக்கி மூழ்கடித்தது )

ஜுலை.27: ரஷியாவுக்கு யூழைந்த ஜெர்மணிப்படைகள் டான் சூஆற்றைக்கடந்து காகசஸ் நகரை நோக்கி முன்னேறின. ஒரு அடிக்கூட பின்வாங்கக்கூடாது என்று ஸ்டாலின் தனது படைகளுக்கு கட்டளையிட்டார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:56 am

ஆக.9: காகசஸ் நகருக்கு அருகில் எண்ணெய் கிணறுகள் உள்ள முக்கிய பகுதிக்குள் ஜெர்மணிப்படைகள் யூழைந்தன.

ஆக.13: இங்கிலாந்துப்பிரதமர் சர்ச்சில் ரஷுயாவுக்கு சென்று ஸ்டாலினை சந்தித்து பேசினார்

ஆக.23: ஸ்டாலின் கிரேடுக்கு வடக்கே உள்ள வால்கா என்ற பகுதியை ஜெர்மனிப்படைகள் அடைந்தன.

செப்.13: ஸ்டாலின் கிரேடு நகருக்குள் ஜெர்மனி படைகள் புகுந்தன.

செப்.22: ஸ்டாலின் கிராடு மையப்பகுதியை ஜெர்மனிப்படைகள் அடைந்தன. இரு தரப்பு படைகளுக்கும் இடையே கடும் போர் நடந்தது. ஜெர்மனி ரானுவம் திணறல்

நவ.22: ஸ்டாலின் கிராடு நகரில் புகுந்த ஜெர்மனிப்படைகளை ரஷ்யப்படைகள் சுற்றி வளைத்து தாக்கின.

டிச.11: ரஷ்யாவில் காகசஸ் நகரை பிடித்த ஜெர்மனி ரானுவம் அங்கிருந்து பின்வாங்கியது.

டிச.19: ஸ்டாலின் கிராடில் அகப்பட்டுக் கொண்ட தனதுரானுவத்தை மீட்க ஜெர்மனி செய்த முயற்சி தோல்வி அடைந்தது. ( டிசம்பர் மாதத்தில் மட்டும் 18 ஆயிரம் ரஷிய யுத்தக் கைதிகளை ஜெர்மனி ரானுவம் பட்டினி போட்டுக் கொன்றது. 1942-ல் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை 30 லட்சம் )

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:59 am

இரண்டாம் உலகப்போர் (போர் டைரி-1945)


ஜன,12 போலந்துக்குள் ரஷிய படைகள் முன்னேறின.

ஜன.27 மூடப்பட்டிருந்த பர்மா ரோடு திறக்கப்பட்டது.

ஜன.30 ஜெர்மனியில் கடும் உணவுப் பஞ்சம் தாண்டவம் ஆடியது. பெர்லின் நகரில் உணவுக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

ஜன.30 அகதிகளை ஏற்றிச்சென்ற ஜெர்மனி கப்பல்களை ரஷியாவின் நீர்மூழ்கிக்கப்பல்கள் மூழ்கடித்ததால். 6 ஆயிரம் பேர் பலியானார்கள்.

பிப். 234 பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், ஒரு லட்சம் மக்களை ஜப்பான் கொன்று குவித்தது.

மார்ச். 3 பிலிப்பைன்ஸ் தலைநகரம் ஜப்பானிடம் இருந்து மீட்கப்பட்டது. மார்ச். 19 பர்மாவில் உள்ள மாண்டலே நகரில் இருந்து ஜப்பானியப் படைகள் வெளியேறின.

மார்ச் 25 ஜப்பானிய நகரங்கள் மீது நேசப்படைகள் தீவிரமாக விமானத்தாக்குதல் நடத்தின.

மார்ச் 29 ஆஸ்திரியாவுக்குள் ரஷியப்படை நுழைந்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 2:00 am

ஏப்.7; ஜப்பானின் மிகப்பெரிய போர்க்கப்பல் யமாட்டோ மூழ்கடிக்கப்பட்டது.

ஏப்11 : ரஷியாவும், செக்கோஸ்லேவியாவும் நட்புறவு ஒப்பந்த்தில் கையெழுத்திட்டன.

ஏப். 12 அமெரிக்க ஜனாதிபதி ரூஸ் வெல்ட் திடீரென்று காலமானார். அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியாக ட்ரூமன் பதவி ஏற்றார். ஏ

ப். 13 ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவை ரஷியா கைப்பற்றியது.

ஏப். 25 ஐ.நா. சபையின் முதல் கூட்டம் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்தது. அதில் 46 நாடுகள் கலந்து கொண்டன.

ஏப். 28 இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவரும், ஹிட்லரின் நண்பருமான முசோலினி சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஏப். 29 இத்தாலியில் இருந்த ஜெர்மனி படைகள் சரண் அடைந்தன.
ஜெர்மனிக்குள் புகுந்த ரஷியப்படைகள் பெர்லின் நகரை கைப்பற்றின.,

ஏப்.30 ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.

மே 3. பர்மா தலைநகரான ரங்கூனை இங்கிலாந்து படைகள் மீட்டன.

மே. 7 ஜெர்மனி நிபந்தனையின்றி சரணாகதி அடைந்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 2:00 am

மே. 15 செக்கோஸ்லேவியா நாட்டில் மிஞ்சியிருந்த ஜெர்மனியர்கள் சரன் அடைந்தனர்.

ஜூன். 20 யுத்தம் தொடருவதைக் கண்டு, ஜப்பான் மன்னர் ஹிரோ ஹிட்டோ கவலை அடைந்தார். போரை முடிவுக்கு கொண்டுவர சமாதான பேச்சு நடத்தப்பட வேண்டும் என்று வற்புறுத்தினார்.

ஜுலை. 17 ஜெர்மனியில் உள்ள போட்ஸ்டாம் நகரில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன், இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில், ரஷிய அதிபர் ஸ்டாலின் ஆகிய முப்பெரும் தலைவர்கள் சந்தித்தனர். நிபந்தனை இன்றி சரண் அடையும் படி ஜப்பானுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

ஜுலை. 26 இங்கிலாந்தில் நடந்த பொதுத் தேர்தலில், யாரும் எதிர் பாராதவிதமாக ஆளும் கட்சி தோல்வி அடைந்தது. பிரதமராக இருந்த சர்ச்சில் விலக தொழில் கட்சியைச் சேர்ந்த ஆட்லி பிரதமர் ஆனார்.

ஜுலை 26; சரண் அடைய முடியாது என்று ஜப்பான் அறிவித்தது.

ஆக 6; ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மீது, அமெரிக்கா அணுகுண்டு வீசியது.

ஆக. 9 அமெரிக்காவின் இரண்டாவது அணுகுண்டு, ஜப்பானின் நாகசாகி நகரின் மீது வீசப்பட்டது.

ஆக. 15 ஜப்பான் சரண் அடைவதாக ஜப்பான் மன்னர் ஹிரோ ஹிட்டோ அறிவித்தார்.

ஆக. 28 நேசப்படைகளின் தளபதி மக்ஆர்தர், ஜப்பானுக்கு விரைந்தார்.

செப். 2 அமெரிக்காவின் மிசவுரி என்ற போர்க்கப்பலுக்கு ஜப்பானிய தளபதிகள் சென்று சரணாகதி பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 07, 2011 10:11 am

மூன்றாவது உலகப்போருக்கு உலக நாடுகள் தயாராகி விட்டது! அதுகுறித்த கட்டுரையை வெளியிட நாங்களும் தயாராகிவிட்டோம்!



உலகப் போர்கள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக