புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகப் போர்கள் - Page 2 Poll_c10உலகப் போர்கள் - Page 2 Poll_m10உலகப் போர்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகப் போர்கள்


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:10 am

First topic message reminder :

முதல் உலகப்போர்


இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சி இரண்டாம் உலகப் போர். உலக நாடுகள், இரு பிரிவாகப் பிரிந்து 1939 முதல் 1945 வரை போர் புரிந்தன. இந்தப் போரில், ஜப்பான் மீது இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டு, லட்சக் கணக்கான மக்கள் மாண்டனர். இரண்டாம் உலகப் போரைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், முதல் உலகப்போரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இரண்டு போர்களுக்கும் தொடர்பு உண்டு.


முதல் உலகப்போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. விமானங்களும், போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில்தான் பயன்படுத்தப் பட்டன. ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாத்தும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28ந்தேதி) சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டவன், செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியா வுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன.

செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா, ஆகியவை போரில் ஈடுபட்டன. 1914 ஆகஸ்ட் 4ந்தேதி முதலாம் உலகப்போர் மூண்டது. ஆரம்பத்தில் அமெரிக்கா நடுநிலை வகித்தது. ஆயினும் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்தது. அதனால் ஆத்திரம் அடைந்த ஜெர்மனி, அமெரிக்கக் கப்பல்கள் மீது குண்டு வீசியது. கப்பல்கள் கடலில் மூழ்கின. இதன் காரணமாக, ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்கா போரில் குதித்தது.


avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:21 am

இன்னும் 50 மைல் தூரம்தான் பாக்கி. விரைவில் மாஸ்கோ வீழ்ந்து விடும் என்றே எல்லோரும் நினைத்தனர். மாஸ்கோவில் இருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினார்கள். நகரமே காலியாகிக் கொண்டிருந்தது. ஊரை விட்டு பத்திரமான இடங்களுக்கு செல்லுமாறு மந்திரிகளுக்கு ஸ்டாலின் கட்டளையிட்டார். ஆனால் அவர் மட்டும் ஊரை விட்டு வெளியேறாமல், தன் மாளிகையிலேயே தங்கியிருந்தார்!

இந்த சமயத்தில் ஸ்டாலினுக்கு இயற்கை கை கொடுத்தது. ரஷியாவில் அது மழை காலம். கடும் மழையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஜெர்மனி வீரர்கள் திணறினார்கள். கடும் குளிர் வேறு. உணவு இல்லை; மாற்று உடை இல்லை. ஆயிரக்கணக்கான ஜெர்மனி வீரர்கள், குளிர் தாங்க முடியாமல் பிணமானார்கள். பட்டினியால் செத்தவர்கள் ஏராளம். தொற்று நோயினால் கணக்கற்றவர்கள் மடிந்தனர்.

மழையில் நனைந்துபோன துப்பாக்கி குண்டுகள், வெடிக்காமல் சதி செய்தன. ரஷிய வீரர்கள், கடும் குளிரை தாங்கி பழக்கப்பட்டவர்கள். எனவே, "இதுதான் சமயம்" என்று ஜெர்மனி படையை விரட்டி விரட்டி தாக்கினார்கள். மாஸ்கோவுக்கு 20 மைல் தூரம் வரை முன்னேறிய ஜெர்மனி படையினர், "உயிர் தப்பினால் போதும்" என்று, பின்வாங்கி ஓடினார்கள். அவர்களை ரஷிய வீரர்கள் ஓடஓட விரட்டினார்கள்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:21 am

போர் டைரி:

1939 செப். 1: போலந்து மீது ஜெர்மனி படையெடுத்தது.

செப். 3: ஜெர்மனி மீதான போர் பிரகடனத்தை இங்கிலாந்தும், பிரான்சும் வெளியிட்டன.

செப். 5: போரில் அமெரிக்கா நடு நிலை வகிக்கும் என்று ஜனாதி பதி ரூஸ்வெல்ட் அறிவித்தார்.

செப். 7: பிரான்ஸ் நோக்கி ஜெர் மனி படைகள் விரைந்தன.

செப். 17: போலந்தை ஜெர்மனி கைப்பற்றியது.

அக். 31: போரில் ரஷியா நடுநிலை வகிக்கும் என்று, ரஷிய வெளி விவகார மந்திரி மாலடோவ் அறிவித்தார்.

நவ. 4: போரில் அமெரிக்கா நடுநிலை வகித்தாலும், இங் கிலாந்துக்கும் பிரான்சுக்கும் ஆயுதங்களை விற்றது.
ஹிட்லரை கொல்ல முயற்சி

நவ. 8: ஹிட்லர் மீது குண்டு வீசப் பட்டது. அதில் அவர் மயிரிழை யில் தப்பினார்.

நவ. 24: ஹிட்லருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய செக்கசுலோவக்கியா நாட்டைச் சேர்ந்த 130 மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:23 am

இரண்டாம் உலகப்போர் (போரில் அமெரிக்கா...)


அமெரிக்க வசம் இருந்த "பெர்ல் ஹார்பர்" மீது ஜப்பான் நடத்தியவிமானத் தாக்குதல் 1941-ம் ஆண்டு டிசம்பர் 7ந்தேதி. அன்றுதான், உலகப் போரில் எதிர் பாராத திருப்பம் ஏற்பட்டு, வரலாறே மாறியது. அதுவரை உலகப் போரில் அமெரிக்கா கலந்து கொள்ளாமல், மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

ஜெர்மனியின் நட்பு நாடான ஜப்பான், அன்றைய தினம் அமெரிக்காவுக்கு சொந்தமான ஹவாய் தீவில் உள்ள "பெர்ல்" துறைமுகத்தை தாக்கியது. (பசுபிக் பெருங்கடலில் அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் இடையே உள்ளது ஹவாய் தீவு) அந்தத் பேர்ல் ஹார்பர் பகுதியில் ஜப்பான் வீசிய குண்டு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 8 அமெரிக்கப் போர்க்கப்பல்களும், 200 விமானங்களும் ஜப்பான் விமானத்தாக்குதலில் அழிந்தன. 3 ஆயிரம் அமெரிக்க வீரர்களும் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்காபோரில் குதித்தது.


ஜப்பான் மீதும், ஜெர்மனி மீதும் போர்ப் பிரகடனம் செய்தார் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட். இதன் மூலம் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ரஷியா ஆகிய 4 வல்லரசு நாடுகளும் ஓரணியில் நின்று ஜெர்மனி மீதும், ஜப்பான் மீதும் தாக்குதல் நடத்தின.

இதனால் யுத்தம் தீவிரம் அடைந்தது. 1942 பிப்ரவரி 15-ந்தேதி பிரிட்டிஷ் காலனியான சிங்கப்பூரை ஜப்பான் கைப்பற்றியது. அங்கிருந்த இங்கிலாந்து ராணுவம், ஜப்பானிய ராணுவத்திடம் சரண் அடைந்தது. "சூரியன் அஸ்தமிக்காக ராஜ்ஜியம்" என்று புகழ் பெற்றிருந்த இங்கிலாந்து, சிங்கப்பூரில் ஜப்பானிடம் சரண் அடைய நேரிட்டது.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:23 am

சிங்கப்பூருக்கும், மலாயாவுக்கும் இடையே உள்ள கடலின் நீளம் ஒரு மைல்தான். சிங்கப்பூரில் இருந்த பிரிட்டிஷ் வீரர்களில் பலர், கடலில் நீந்தி, மலாயாவுக்குத் தப்பிச் சென்றனர். 54 நாள் நடந்த கடும் போருக்குப்பின் மலாயாவையும் ஜப்பான் கைப்பற்றியது. அங்கு இங்கிலாந்து தரப்பில் 25,000 பேர் மாண்டனர். ஏராளமான ஆயுதங்களும் அழிந்தன. ஜப்பானுக்கு ஏற்பட்ட உயிர் சேதம் 5 ஆயிரம் மட்டுமே. ஜப்பான் படைகள் பர்மாவையும் (தற்போதைய மியான்மீர்) தாக்கின. பர்மா தலைநகருக்கு 40 மைல் தூரத்தில் உள்ள பெகு என்ற நகரம், ஜப்பானியர் வசம் ஆகியது. பர்மாவில் இருந்த இங்கிலாந்து ராணுவத்தினர், திறமையானவர்கள் அல்ல. எனவே, அவர்களை ஜப்பானியர் எளிதாக முறியடிக்க முடிந்தது.

தற்போதைய இந்தோனேஷியா அக்காலத்தில் "டச்சு கிழக்கிந்திய தீவுகள்" என்று அழைக்கப்பட்டது. கிழக்கிந்திய தீவுகளையும் ஜப்பான் கைப்பற்றியது. டச்சு போர்னியோவில் பெட்ரோல் கிணறுகள் இருந்தன. எனவே, அந்த நாட்டையும் கைப்பற்ற ஜப்பான் முடிவு செய்தது. ஜப்பான் பாரசூட் படையினர், போர்னியோவுக்குள் குதித்து, அந்த நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். கிழக்கிந்தியத் தீவுகளிலும், போர்னியோவிலும் இருந்த டச்சு படையினர் சரண் அடைந்தனர். இந்த நாடுகளில் சுமார் ஒரு லட்சம் பேர்களை, ஜப்பான் ராணுவத்தினர் "போர்க்கைதி களாக" கைது செய்தனர்.

1942 ஏப்ரல் 1-ந்தேதி, இலங்கை மீது ஜப்பான் தாக்குதல் நடத்தியது. பெர்ல் துறைமுகத்தை தாக்கிய ஜப்பான் கடற்படை தளபதி அட்மிரல் நாகுமோ தலைமையில் இந்த தாக்குதல் நடந்தன. ஜப்பான் தாக்குதல் நடத்தப்போகிறது என்பதைத் தெரிந்து கொண்ட இங்கிலாந்து, முன் எச்சரிக்கையாக தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:24 am

கொழும்பிலும், முக்கிய கடற்படை தளமான திரிகோண மலையிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்களை, பத்திரமான இடங்களுக்கு அனுப்பிவிட்டது. கொழும்பு மீது பறந்த ஜப்பான் போர் விமானம், அங்கு தாக்குதல் நடத்த எதுவுமே இல்லாததால், குண்டு வீசாமல் திரும்பியது. அப்போது, கடலில் ஒரு கப்பல் போய்க்கொண்டிருந்தது. அதன் மீது குண்டு வீசி அதை மூழ்கடித்துவிட்டு, ஜப்பான் விமானம் திரும்பிச் சென்றது. இலங்கை தீவாக இருந்ததால், ஜப்பான் தனது தரைப் படையை அங்கு அனுப்ப இயலவில்லை.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:24 am

போர் டைரி 1940:

ஜன. 8: இங்கிலாந்தில் உணவு ரேஷன் அமலுக்கு வந்தது.

ஏப். 9: டென்மார்க், நார்வே ஆகிய நாடுகள் மீது ஜெர்மனி தாக்குதல் நடத்தியது.

ஏப். 30: பெர்ல் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படையின் கப்பல்கள் நிறுத்தப்பட்டன. இங்கிலாந்து பிரதமர் ராஜினாமா மே 10: போரை சரிவர சமாளிக்கத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டப் பட்டதால் இங்கிலாந்து பிரதமர் சேம்பர் லைன் ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக, புதிய பிரதமராக சர்ச்சில் பதவி ஏற்றார்.

மே 28: ஜெர்மனியிடம் பெல்ஜியம் சரண் அடைந்தது.

ஜுன் 14: ஜெர்மனியிடம் பிரான்சு சரண் அடைந்தது.

ஜுலை 24: இங்கிலாந்துக்கு நவீன போர் விமானங்களை கொடுக்க அமெரிக்கா முன் வந்தது.

ஆக. 19: இங்கிலாந்து வசம் இருந்த சோமாலிலாந்தை, ஜெர்மனி கைப்பற்றியது. லண்டன் மீது தாக்குதல்.

ஆக. 27: இங்கிலாந்து நாட்டின் 20 நகரங்கள் மீது ஜெர்மனி விமானங்கள் தாக்குதல் நடத்தின.

செப். 7: லண்டன் நகரத்தின் மீது ஜெர்மனி விமானங்கள் குண்டு மாரி பொழிந்தன.

செப். 27: ஜெர்மனியுடன் சேர்ந்து, ஜப்பான் போரில் ஈடுபட்டது.

அக். 28: கிரீஸ் மீது ஜெர்மனி தாக்குதல் நடத்தியது. நவ. 3: இங்கிலாந்து மீது குண்டு வீசிய ஜெர்மனி விமானங்களை, இங்கிலாந்து பீரங்கிகள் சுட்டுத்தள்ளின. இதுவரை 2,433 ஜெர்மனி விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்" என்று இங்கிலாந்து அறிவித்தது.

நவ. 5: அமெரிக்க ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக ரூஸ் வெல்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:26 am

இரண்டாம் உலகப்போர் (இந்திய எல்லையில் ஜப்பான்.. )


உலகப்போரில், இங்கிலாந்து படையில் இந்தியர்கள் பங்கு கொண்டார்கள். போர் முனையில் வீர தீரச் செயல் களில் ஈடுபட்டார்கள். இந்தியா மீது ஹிட்லருக்கு ஒரு கண் இருந்தது. இந்திய மக்கள் இங்கிலாந்து ஆதிக்கத்தை எதிர்த்து சுதந்திரப் போராட்டம் நடத்தி வந்தனர்.

உலகப் போரின் போதும், இந்தப் போராட்டம் நீடித்த ஜெர்மனியை அடக்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், ரஷிய அதிபர் ஸ்டாலின் மூவரும்சந்தித்துப் பேசினர்.

இந்திய மக்களின் நம்பிக்கையை பெற்றுவிட்டால், இந்தியாவை சுலபமாகக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தார் ஹிட்லர். ஆனால் அவருடைய முயற்சி பலிக்கவில்லை. "இந்தியா இங்கிலாந்து ஆதிக்கத்தில் இருந்து கஷ்டப்படுகிறது. நாங்கள் இந்தியாவை விடுவிப்போம்" என்று 1942 ஏப்ரலில் ஜப்பான் அறிவித்தது.

அதற்கு உடனடியாக நேரு பதில் அளித்தார். "இந்திய மக்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்வார்கள். அதற்கான வீரமும், விவேகமும் இந்திய மக்களுக்கு உண்டு. எனவே இந்திய மக்களின் விடுதலைக்கு ஜப்பான் உதவி தேவை இல்லை" என்று அறிவித்தார். இந்தியாவுக்கு இங்கிலாந்து எதிரி என்றபோதிலும் ஹிட்லரும், ஜப்பானும் உலகத்துக்கே எதிரிகளாக இருந்தார்கள். எனவேதான் ஜப்பானின் உதவி தேவை இல்லை என்று நேரு கூறினார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:26 am

பர்மாவைக் கைப்பற்றிக் கொண்ட ஜப்பான் ராணுவம், 1944 மார்ச் மாதத்தில் இந்தியாவை நோக்கித் திரும்பியது. மார்ச் 30-ந்தேதி இம்பால் நகரத்தை முற்றுகையிட்டது. (இம்பால் நகரம் இப்போது மணிபுரி மாநிலத்தில் உள்ளது). இம்பாலில் இருந்த இங்கிலாந்து படையில் இந்தியர்களும் இருந்தார்கள். அவர்கள் ஜப்பானியரை எதிர்த்து வீரப்போர் புரிந்தனர்.

இதனால் இம்பால் நகருக்குள் ஜப்பான் படை Žழைய முடியவில்லை. ஆனாலும், எப்படியாவது இம்பாலைப் பிடித்துவிட்டு, இந்தியாவுக்குள் Žழைந்து விடவேண்டும் என்ற உறுதியுடன் ஜப்பானியர் 2 மாத காலம் முற்றுகையிட்டனர். இந்த சமயத்தில், இம்பாலுக்குள் சிக்கியிருந்த இங்கிலாந்து வீரர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்கள், மருந்துகள் முதலியவற்றை பிரிட்டிஷ் விமானங்கள் கொண்டு வந்து போட்டன.

ஆனால் முற்றுகையிட்டிருந்த ஜப்பானிய படைகளுக்கு உணவுப் பொருள்களோ, மருந்துகளோ கிடைக்காததோடு, வெடி பொருட்களும் தீர்ந்துபோய் விட்டன. இதன் காரணமாக, ஜப்பான் படைகள் தோல்வியைத் தழுவின. இம்பாலை தாக்கிய ஜப்பான் வீரர்கள் எண்ணிக்கை 85 ஆயிரம். அவர்களில் பெரும் பான்மையோர் போரில் பலியாகிவிட, மீதிப்பேர் பின்வாங்கிச் சென்றார்கள்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:27 am

ஏற்கனவே மாஸ்கோவை கைப்பற்ற முயன்று, ரஷியாவிடம் மூக்கறுபட்ட ஹிட்லர், ரஷியாவை எப்படியாவது அடிபணியச்செய்ய எண்ணி, ஸ்டாலின் கிராட் நகரைத் தாக்குமாறு தன் படைகளுக்குக் கட்டளையிட்டார். 1942 ஜுலை மாதத்தில், ரஷியாவில் உள்ள ஸ்டாலின் கிராட் நகரத்தை ஜெர்மனி படைகள் சூழ்ந்து கொண்டன. ஆனால், ரஷிய மக்கள் அஞ்சாமல் எதிர்த்து நின்றனர். சுலபமாக ஸ்டாலின் கிராடை கைப்பற்றி விடலாம் என்று ஜெர்மன் படைகள் நினைத்தது பகல் கனவு ஆயிற்று. அவர்களுக்கு உணவுப்பொருள்களும், மருந்துகளும் கிடைக்கவில்லை. இதனால் ஜெர்மனி வீரர்கள், ஒரு விநாடிக்கு 7 பேர் செத்து விழுந்ததாக மதிப்பிடப்படுகிறது.

1943 ஜனவரி 31-ந்தேதி ஹிட்லர், "எக்காரணம் கொண்டும் ஜெர்மனி தளபதியாக இருப்பவர் சரண் அடையக்கூடாது. அதைவிட தற்கொலை செய்து கொள்ளலாம்" என்று, ஸ்டாலின் கிராடில் இருந்த பீல்டுமார்ஷல் வான் பவ்லஸ் என்பவருக்கு தகவல் அனுப்பினார். ஆனால், தளபதி பவுலஸ் சுமார் 1,00,000 ஜெர்மனி ராணுவத்தினருடன் சரண் அடைந்தார்.

ஜெர்மனியையும், ஜப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், ரஷிய அதிபர் ஸ்டாலின் ஆகிய மூவரும் சந்தித்துப் பேசினார்கள். இந்த சந்திப்பு 1943 நவம்பர் 26-ந்தேதி, பாரசீக நாட்டில் டெஹ்ரான் நகரில் நடந்தது. உலகத்தையே மிரட்டிக் கொண்டிருந்த ஹிட்லரை முறியடிப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:27 am

ரஷியாவைப் பிடித்து விடலாம் என்று நினைத்த ஹிட்லர் தோல்வி அடைந்தார். ஆப்பிரிக்காவை கைப்பற்ற நினைத்த ஹிட்லரின் நண்பரான இத்தாலி சர்வாதிகாரி முசோலினியும் தோற்றுப் போனார். அவருக்கு உதவுவதற்காகச் சென்ற ஜெர்மனி ராணுவத்தினர் 2 லட்சம் பேர் சரண் அடைந்தனர். ஜெர்மனி கைப்பற்றியிருந்த ரஷிய பகுதிகளை மீட்க, ரஷியப் படைகள் மின்னல் வேகத்தாக்குதல் நடத்தின. அதில் ஒரு லட்சம் ஜெர்மனி வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜெர்மனியின் ஏராளமான டாங்கிகளும், பீரங்கிகளும், விமானங்களும் அழிக்கப்பட்டன. தொடர்ந்து நடந்த போரில் ஜெர்மனி படைகளுக்குத் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டது.

Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக