ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட ஜனாதிபதியிடம் சட்ட அனுமதி பெற தி.மு.க. அரசு தவறி விட்டது; மதுரை பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு

Go down

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட ஜனாதிபதியிடம் சட்ட அனுமதி பெற தி.மு.க. அரசு தவறி விட்டது; மதுரை பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு  Empty உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட ஜனாதிபதியிடம் சட்ட அனுமதி பெற தி.மு.க. அரசு தவறி விட்டது; மதுரை பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு

Post by ரபீக் Thu Jul 01, 2010 1:10 pm

தமிழை உயர்நீதிமன்றங்களில் வழக்கு மொழியாக அறிவிக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் மதுரையில் பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு மதுரை மாவட்ட வக்கீல்கள் சங்க செயலாளர் ஏ.கே.ராமசாமி தலைமை தாங்கினார். ம.தி.மு.க. நகர் மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன், தமிழ் தேசிய இயக்க நகர தலைவர் பிச்சை கணபதி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், ம.நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் வைகோ பேசியதாவது:-

இந்தி எதிர்ப்பு போராட்டம் மதுரையில் நடந்தபோது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தாக்கப்பட்டனர். அதன் விளைவாக இன்று வரை காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியவில்லை.

இப்போது தமிழுக்காக போராடும் வக்கீல்கள் தாக்கப்படுகிறார்கள். சென்னை ஐகோர்ட்டிலும் வக்கீல்கள் தாக்கப்பட்டனர். உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க போராடிய வக்கீல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்ணகி நீதிக்கேட்ட மதுரையில் தமிழ் மொழிக்காக வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தமிழில் வாதாடலாம் என்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் கூறி உள்ளனர். அது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் வேறு நீதிபதிகள் வரும்போது சட்டப்படி தமிழில் வாதாட உத்தரவாதம் இல்லை என்று கூறினால் என்ன செய்ய முடியும். எனவே உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட சட்டபூர்வ அங்கீகாரம் தேவை.

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடினால் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீடு சென்றால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க சிரமம் வரும் என்று கூறுவது விதண்டா வாதம் ஆகும். இது கண்டிக்கத்தக்கதாகும்.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக முதல்- அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.

இலங்கை பிரச்சினை உள்பட பல கடிதங்கள் மத்திய அரசுக்கு கருணாநிதி எழுதிய நிலையில் அவை அனைத்தும் கோப்புகளாக மட்டுமே பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசுக்கு கருணாநிதி கடிதம் எழுதுவதால் எந்த நடவடிக்கையும் ஏற்பட்டு விடாது. அது நம்ப கூடியதும் இல்லை.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மத்திய அரசை அறிவிக்க செய்து அந்த கோப்பை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்.

தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வந்த ஜனாதிபதியிடம் இதுபோன்ற அறிவிப்பை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.

எனவே தமிழ் வழக்கு மொழியாக்கும் முயற்சியில் ஜனாதிபதியின் சட்ட அனு மதியை பெற தி.மு.க. அரசு தவறி விட்டது. எனவே தமிழ்நாட்டில் தமிழுக்காக போராட்டம் நடத்த வேண்டிய நிலை தொடர்ந்துள்ளது. எனவே வக்கீல்களின் போராட் டத்துக்கு தமிழக மக்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும்.

இவ்வாறு வைகோ பேசினார்.

பொதுக்கூட்டத்தில் ஐகோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக்க உண்ணாவிரதம் இருந்த 6 வக்கீல்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வீரவாள் பரிசு வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மக்கள் உரிமை கூட்டமைவப்பு தலைவர் மாணிக்கம், வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் நெடுஞ்செழியன், சின்னராஜா, வக்கீல்கள் ரஞ்சித்குமார், செந்தில்குமார். குணசேகரன் எம்.எல்.ஏ., மகபூப்ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வக்கீல் மனோகரன் நன்றி கூறினார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்?
» தமிழில் வழக்காட அனுமதி கோரி ஜனாதிபதியிடம் ஜெ-வைகோ-தா.பாண்டியன் மனு!
» புலிகளுக்கு தடை: வைகோ ஆஜராகி வாதாட அனுமதி மறுப்பு
» நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட அனுமதி வேண்டும்-வைகோ
» காவிரி நீர் பிரச்சினை: தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது- வைகோ ஆவேச பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum