Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலையாகும் செம்மொழி நிலம்
2 posters
Page 1 of 1
பாலையாகும் செம்மொழி நிலம்
பாலையாகும் செம்மொழி
நிலம்
ப. குணசேகரன்
First Published : 01 Jul 2010 12:21:00 AM
IST
தமிழுக்குச் செம்மொழி
எனும் தகுதிப்பாடு உருவாக முழுமுதற் காரணமாக இருப்பது சங்க
இலக்கியம்தான். அந்தச் சங்க இலக்கியங்கள் திணைக்கோட்பாடுகளை
அடிப்படையாகக் கொண்டவை. தமிழ் நிலம் குறிஞ்சி, முல்லை,
மருதம், நெய்தல், பாலை என ஐவகைத் திணைகளாகப்
பகுக்கப்பட்டுள்ளன. இந்த ஐவகைத் திணைகளுக்கும் நிலம் என்பது
பொதுக் கூறாக உள்ளது. அவற்றோடு நீர் சேருகிற அளவைப் பொறுத்தே திணை
வேறுபாடு உணரப்படுகிறது.
நீரே இல்லாத வறண்ட நிலம்
பாலையாகவும், நீர் வளம் நிரம்பிய வயல் சூழ்ந்த நிலம்
மருதமாகவும், அலைமேவும் கடற்கரை நிலம் நெய்தலாகவும்,
மழைப்பொழிவு மிகுந்த வனப்பகுதி முல்லையாகவும், மழைப்பொழிவும்
பனியும் கொண்ட மலை நிலம் குறிஞ்சியாகவும் கொள்ளப்படுகிறது.
இங்கு திணையைத் தீர்மானிக்கும் சிறப்புக்கூறாக இருப்பது
நீர்தான்.தமிழைச் செம்மொழியாகக் கொண்டாடுகிற அரசு,
தமிழ் நிலத்தையும் அதன் நீர்வள ஆதாரங்களையும் பாதுகாக்க என்ன
செய்திருக்கிறது என்பது விடையற்ற கேள்வியாக நம்முன் விரிகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் நீர்வள மேலாண்மைத்
திறனை வியந்து போற்றிய தமிழக முதல்வர், தமது ஆட்சியில்
நிகழ்த்தப்படும் நீர்வள ஆதாரங்களின் மீதான வன்முறை எத்தகைய
வரலாற்று எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கவனிக்கத்
தவறிவிட்டார். இப்பொழுது அரசு மேற்கொண்டுவரும் நீர்வள ஆதாரப்
பராமரிப்புத் திட்டங்களெல்லாம் கைப்புண்ணுக்கு மருந்து போடும்
தாற்காலிக வேலையே தவிர, புரையோடிப்போன புற்றுநோயைக்
குணப்படுத்தக் கூடியதல்ல. தமிழகத்தின் முக்கியமான
நீர்வள ஆதாரங்களான நதிகள் அனைத்தும் மிகக் கடுமையான
சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஆட்பட்டுள்ளன. அவற்றிலிருந்து
நதிகளை மீட்டெடுக்கக்கூடிய தொலை நோக்குத்திட்டம் எதுவும்
அரசிடம் இல்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது.
தொழிற்சாலைக் கழிவுகளால் நதிகள் நஞ்சாக்கப்படுவது
ஒருபுறமென்றால் மறுபுறம் மணற்கொள்ளை தொடருவதால் நதிகள் தமது
அடையாளத்தை இழந்து நிற்கின்றன. முல்லைப் பெரியாறு
பிரச்னையில் கேரள அரசும், காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் கர்நாடக
அரசும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்துவிட்டதாகக்
கூறிவரும் தமிழக முதல்வர் மட்டும் என்ன உச்ச நீதிமன்றத்தின்
தீர்ப்பை மதிக்கவா செய்கிறார்? கடந்த ஜனவரி 6-ம் தேதி முதல்
நொய்யலாற்றில் திருப்பூர் சாயக்கழிவை வெளியேற்றாவண்ணம் தடுக்க
(ழங்ழ்ர் ஈண்ள்ஸ்ரீட்ஹழ்ஞ்ங்) முறையை அமல்படுத்த உச்ச நீதிமன்றம்
தீர்ப்புரைத்தது. அந்தத் தீர்ப்பு சாக்கடையில் கரைத்த சந்தனமாக
மாறிவிட்டது. இன்றளவும் நொய்யலாற்றில் திருப்பூர் சாயக்கழிவு
நீர் வெளியேற்றப்படுவது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை
அலட்சியப்படுத்துகிற மாநில அரசின் மெüன சம்மதத்தோடுதான்
என்றால் அது மிகையாகாது.அண்மையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர்
தயாநிதி மாறன் தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டியதன் அவசியம்
குறித்துப் பேசினார். நதிகளை இணைப்பதற்கு முன்னர் நதிகளில்
கலக்கப்பட்டுவரும் தொழிற்சாலைக் கழிவுகளைத் தடுக்க வேண்டியது
அவசியம் என்பதனை தயாநிதி புரிந்துகொள்ள வேண்டும். இப்போதைய
சூழலில் தமிழகத்தின் எந்த நதியும் இணைப்புக்கு ஏற்றதாக இல்லை.
அந்த அளவுக்கு நதிகளின் சுற்றுச்சூழல் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளது. பவானி-நொய்யல் இணைப்பு தோல்வியடைந்ததன்
பின்னணி இதற்குத் தக்க சான்றாக உள்ளது. 1953-ம் ஆண்டு
கட்டப்பட்ட கீழ்பவானி அணையின் நீர், பாசனத்துக்குப்
பயன்படுத்தியது போக உபரியாக உள்ள நீர் நொய்யலாற்றுக்குத்
திருப்பிவிடப்பட்டது. இவ்வாறு நொய்யலாற்றில்
திருப்பிவிடப்பட்ட நீரின் அளவு 2.76 டிஎம்சி ஆகும். இந்த 2.76 டிஎம்சி
நீரையும் சின்னமுத்தூர் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில்
தடுத்து ஒன்பது கி.மீ. நீளமுள்ள இணைப்புக் கால்வாயின் மூலமாக
ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்பட்டு, கரூர்
மாவட்டத்திலுள்ள அஞ்சூர், துக்காட்சி, அத்திப்பாளையம்,
தென்னிலை, மண்மங்களம், புஞ்சைப்புகழூர், மின்னம்பள்ளி,
குப்பச்சிபாளையம் முதலிய இருபதுக்கும் மேற்பட்ட வருவாய்
கிராமங்களிலுள்ள 19,406 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுவந்தன.
ஆனால் திருப்பூர் சாயக்கழிவு நீர் தொடர்ந்து நொய்யலாற்றில்
வெளியேற்றப்படுவதனால் கீழ்பவானியின் உபரி நீர் நொய்யலாற்றில்
திருப்பிவிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும்
ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தின் பயனாளிகளான விவசாயிகளே
கழிவு நீர் கலந்துள்ள நொய்யலாற்று நீரை ஆத்துப்பாளையம் அணைக்கு
வருவதைத் தடுத்து வைத்திருக்கிற அவலம் நிகழ்ந்துள்ளது.
ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கம் எந்த நோக்கத்துக்காகக்
கட்டப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாமலேயே சீமைக் கருவேலன்
புதர்கள் மண்டிப்போயுள்ளன.
புவி அமைப்பியல்படி பூமியின்
மேற்பரப்பில் ஒரு செ.மீ. மணல் உருவாவதற்கு 100 முதல் 200
ஆண்டுகளாகும். இவ்வாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உருவான
மணற்பரப்பு தொடர்ந்து அள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில
ஆண்டுகளில் அள்ளி முடிக்கப்பட்டுவிடும் என்பதில் எவ்வித
சந்தேகமுமில்லை. மேட்டூர் அணையிலிருந்து கல்லணை வரை காவிரியின்
நீர்வழித்தடம் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட
இப்பொழுது சராசரியாக 12 அடி பள்ளமாகிவிட்டது. இதன்காரணமாக
காவிரியாற்றின் இருகரைகளிலுமுள்ள பல்வேறு பாசனக்
கால்வாய்களுக்கு நதியின் நீர் செல்வது தடைபட்டுள்ளது.
கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் பல்லாயிரம்
ஏக்கர் விளை நிலங்களின் பாசனத் தேவையை நிறைவு செய்த கட்டளைத்
தென்கரை கால்வாயைக் காட்டிலும் காவிரி ஆறு இப்பொழுது
பள்ளமாகிவிட்டது. இப்பிரச்னையைச் சமாளிக்க தமிழக அரசு, கரூர்
மாவட்டம் மாயனூர் அருகே 180 கோடி ரூபாய் செலவில் கதவணை அமைத்து
வருகிறது.
"ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும்
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்' என்று ஆற்று மணலின் நீர்
பிடிப்புத்தன்மையைப் போற்றுகிறது செம்மொழித் தமிழ் இலக்கியமான
மூதுரை. இத்தகைய அருமை வாய்ந்த ஆற்று மணல் தொடர்ந்து
அள்ளப்படுவதனால் காவிரிப் படுகையின் நிலத்தடி நீர் மட்டம்
வெகுவாகக் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் மதுரை,
திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் முதலிய பல்வேறு
மாவட்டங்களுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் காவிரியின்
கரையிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மணல்
அள்ளப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டு நிலத்தடி நீர்மட்டம்
பாதுகாக்கப்படாவிட்டால் பல நூறு கோடி ரூபாய் செலவில்
தொடங்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டங்களெல்லாம்
பயனற்றுப் போகும்.
பல்வேறு மாநிலங்களில் மணலுக்கு
மாற்றான கட்டுமானப் பொருளாக பாறைத் துகளைப் பயன்படுத்துவது
அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் மணல்
விற்பனையைத் தொடரும் அரசின் கொள்கை நிலைப்பாடு நீர்வள
ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டியது பற்றிய தொலை நோக்கின்மையையே
காட்டுகிறது.
நாகரிகம் வளர்த்த நம் நதிகளையெல்லாம் வெறும் மணற்
குவாரிகளாக மாற்றிய பெருமை திராவிட ஆட்சியாளர்களையே சாரும்.அரசு
நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்துக்காக தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது
மதுபானத் தொழிற்சாலைகள் தயாரித்தளிக்கும் மதுபானங்கள்
போதாமல் பத்தாவதாகத் தஞ்சை வடசேரியில் மதுபானத் தொழிற்சாலை
அமைக்கத் தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது.
விவசாயத்தையே
வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள வடசேரி கிராமத்தினரின் கடுமையான
எதிர்ப்பையும் பொருள்படுத்தாமல் அதற்கு அரசு நிர்வாகம்
அனுமதியளித்திருப்பதன் பின்னணி மக்கள் நலமா? சுய நலமா?
உள்ளூர் மக்களை காவல்துறையை ஏவி விரட்டியடித்துவிட்டு வெளியூர்
மக்களைக் கொண்டு ஆலை வளாகத்துக்குள்ளேயே தமக்கு ஆதரவான ஒரு
கருத்துக்கேட்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். முப்போகம் நெல்
விளைகிற வடசேரி கிராமத்தின் சிறப்பே ஐந்தடி ஆழத்தில் நிலத்தடி
நீர்மட்டம் இருப்பதுதான்.
சராசரியாக இரண்டு ஏக்கருக்கு ஓர்
ஆழ்துளைக் கிணறு அமைத்து விவசாயத்துக்கு நிலத்தடி நீரைப்
பயன்படுத்துவதைக் காட்டிலும் நாற்பது ஏக்கர் பரப்பளவில்
அமைந்துள்ள மதுபானத் தொழிற்சாலைக்கு மூன்று ஆழ்துளைக்கிணறுகள்
மட்டுமே அமைத்து நாளொன்றுக்கு 17 லட்சம் லிட்டர் நீரைப்
பயன்படுத்துவதாகக் கூறும் ஆலை நிர்வாகமும் அதற்கு ஒப்புதல்
அளித்துள்ள தமிழ்நாடு நிலத்தடி நீர் வாரியமும் ஓர் உண்மையை
மறைத்துவிட்டன. விவசாயிகள் எவ்வளவு நீரைப்
பாசனத்துக்காக நிலத்தின் அடியிலிருந்து எடுத்தாலும் பயிருக்குத்
தேவையானது போக மீதமுள்ள நீர் மீண்டும் நிலத்துக்கடியில்
செல்வதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவுபடாமல்
பாதுகாக்கப்படும். இது சாதாரண அறிவுக்கும் எட்டக்கூடிய
அறிவியல் உண்மை.
ஆனால், மதுபானத் தொழிற்சாலை உறிஞ்சி எடுக்கும் 17
லட்சம் லிட்டர் நீரும் மதுபானமாக மாற்றப்பட்டு, பாட்டில்களில்
அடைக்கப்பட்டு செந்தமிழர் நாடு முழுவதும் விற்பனைக்கு
அனுப்பப்படும். இதனால் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம்
ஒருசில ஆண்டுகளில் பல நூறு அடி கீழே சென்றுவிடும் என்பதில்
ஐயமில்லை.
நன்றி : தினமணி
நிலம்
ப. குணசேகரன்
First Published : 01 Jul 2010 12:21:00 AM
IST
தமிழுக்குச் செம்மொழி
எனும் தகுதிப்பாடு உருவாக முழுமுதற் காரணமாக இருப்பது சங்க
இலக்கியம்தான். அந்தச் சங்க இலக்கியங்கள் திணைக்கோட்பாடுகளை
அடிப்படையாகக் கொண்டவை. தமிழ் நிலம் குறிஞ்சி, முல்லை,
மருதம், நெய்தல், பாலை என ஐவகைத் திணைகளாகப்
பகுக்கப்பட்டுள்ளன. இந்த ஐவகைத் திணைகளுக்கும் நிலம் என்பது
பொதுக் கூறாக உள்ளது. அவற்றோடு நீர் சேருகிற அளவைப் பொறுத்தே திணை
வேறுபாடு உணரப்படுகிறது.
நீரே இல்லாத வறண்ட நிலம்
பாலையாகவும், நீர் வளம் நிரம்பிய வயல் சூழ்ந்த நிலம்
மருதமாகவும், அலைமேவும் கடற்கரை நிலம் நெய்தலாகவும்,
மழைப்பொழிவு மிகுந்த வனப்பகுதி முல்லையாகவும், மழைப்பொழிவும்
பனியும் கொண்ட மலை நிலம் குறிஞ்சியாகவும் கொள்ளப்படுகிறது.
இங்கு திணையைத் தீர்மானிக்கும் சிறப்புக்கூறாக இருப்பது
நீர்தான்.தமிழைச் செம்மொழியாகக் கொண்டாடுகிற அரசு,
தமிழ் நிலத்தையும் அதன் நீர்வள ஆதாரங்களையும் பாதுகாக்க என்ன
செய்திருக்கிறது என்பது விடையற்ற கேள்வியாக நம்முன் விரிகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் நீர்வள மேலாண்மைத்
திறனை வியந்து போற்றிய தமிழக முதல்வர், தமது ஆட்சியில்
நிகழ்த்தப்படும் நீர்வள ஆதாரங்களின் மீதான வன்முறை எத்தகைய
வரலாற்று எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கவனிக்கத்
தவறிவிட்டார். இப்பொழுது அரசு மேற்கொண்டுவரும் நீர்வள ஆதாரப்
பராமரிப்புத் திட்டங்களெல்லாம் கைப்புண்ணுக்கு மருந்து போடும்
தாற்காலிக வேலையே தவிர, புரையோடிப்போன புற்றுநோயைக்
குணப்படுத்தக் கூடியதல்ல. தமிழகத்தின் முக்கியமான
நீர்வள ஆதாரங்களான நதிகள் அனைத்தும் மிகக் கடுமையான
சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஆட்பட்டுள்ளன. அவற்றிலிருந்து
நதிகளை மீட்டெடுக்கக்கூடிய தொலை நோக்குத்திட்டம் எதுவும்
அரசிடம் இல்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது.
தொழிற்சாலைக் கழிவுகளால் நதிகள் நஞ்சாக்கப்படுவது
ஒருபுறமென்றால் மறுபுறம் மணற்கொள்ளை தொடருவதால் நதிகள் தமது
அடையாளத்தை இழந்து நிற்கின்றன. முல்லைப் பெரியாறு
பிரச்னையில் கேரள அரசும், காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் கர்நாடக
அரசும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்துவிட்டதாகக்
கூறிவரும் தமிழக முதல்வர் மட்டும் என்ன உச்ச நீதிமன்றத்தின்
தீர்ப்பை மதிக்கவா செய்கிறார்? கடந்த ஜனவரி 6-ம் தேதி முதல்
நொய்யலாற்றில் திருப்பூர் சாயக்கழிவை வெளியேற்றாவண்ணம் தடுக்க
(ழங்ழ்ர் ஈண்ள்ஸ்ரீட்ஹழ்ஞ்ங்) முறையை அமல்படுத்த உச்ச நீதிமன்றம்
தீர்ப்புரைத்தது. அந்தத் தீர்ப்பு சாக்கடையில் கரைத்த சந்தனமாக
மாறிவிட்டது. இன்றளவும் நொய்யலாற்றில் திருப்பூர் சாயக்கழிவு
நீர் வெளியேற்றப்படுவது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை
அலட்சியப்படுத்துகிற மாநில அரசின் மெüன சம்மதத்தோடுதான்
என்றால் அது மிகையாகாது.அண்மையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர்
தயாநிதி மாறன் தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டியதன் அவசியம்
குறித்துப் பேசினார். நதிகளை இணைப்பதற்கு முன்னர் நதிகளில்
கலக்கப்பட்டுவரும் தொழிற்சாலைக் கழிவுகளைத் தடுக்க வேண்டியது
அவசியம் என்பதனை தயாநிதி புரிந்துகொள்ள வேண்டும். இப்போதைய
சூழலில் தமிழகத்தின் எந்த நதியும் இணைப்புக்கு ஏற்றதாக இல்லை.
அந்த அளவுக்கு நதிகளின் சுற்றுச்சூழல் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளது. பவானி-நொய்யல் இணைப்பு தோல்வியடைந்ததன்
பின்னணி இதற்குத் தக்க சான்றாக உள்ளது. 1953-ம் ஆண்டு
கட்டப்பட்ட கீழ்பவானி அணையின் நீர், பாசனத்துக்குப்
பயன்படுத்தியது போக உபரியாக உள்ள நீர் நொய்யலாற்றுக்குத்
திருப்பிவிடப்பட்டது. இவ்வாறு நொய்யலாற்றில்
திருப்பிவிடப்பட்ட நீரின் அளவு 2.76 டிஎம்சி ஆகும். இந்த 2.76 டிஎம்சி
நீரையும் சின்னமுத்தூர் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில்
தடுத்து ஒன்பது கி.மீ. நீளமுள்ள இணைப்புக் கால்வாயின் மூலமாக
ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்பட்டு, கரூர்
மாவட்டத்திலுள்ள அஞ்சூர், துக்காட்சி, அத்திப்பாளையம்,
தென்னிலை, மண்மங்களம், புஞ்சைப்புகழூர், மின்னம்பள்ளி,
குப்பச்சிபாளையம் முதலிய இருபதுக்கும் மேற்பட்ட வருவாய்
கிராமங்களிலுள்ள 19,406 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுவந்தன.
ஆனால் திருப்பூர் சாயக்கழிவு நீர் தொடர்ந்து நொய்யலாற்றில்
வெளியேற்றப்படுவதனால் கீழ்பவானியின் உபரி நீர் நொய்யலாற்றில்
திருப்பிவிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும்
ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தின் பயனாளிகளான விவசாயிகளே
கழிவு நீர் கலந்துள்ள நொய்யலாற்று நீரை ஆத்துப்பாளையம் அணைக்கு
வருவதைத் தடுத்து வைத்திருக்கிற அவலம் நிகழ்ந்துள்ளது.
ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கம் எந்த நோக்கத்துக்காகக்
கட்டப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாமலேயே சீமைக் கருவேலன்
புதர்கள் மண்டிப்போயுள்ளன.
புவி அமைப்பியல்படி பூமியின்
மேற்பரப்பில் ஒரு செ.மீ. மணல் உருவாவதற்கு 100 முதல் 200
ஆண்டுகளாகும். இவ்வாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உருவான
மணற்பரப்பு தொடர்ந்து அள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில
ஆண்டுகளில் அள்ளி முடிக்கப்பட்டுவிடும் என்பதில் எவ்வித
சந்தேகமுமில்லை. மேட்டூர் அணையிலிருந்து கல்லணை வரை காவிரியின்
நீர்வழித்தடம் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட
இப்பொழுது சராசரியாக 12 அடி பள்ளமாகிவிட்டது. இதன்காரணமாக
காவிரியாற்றின் இருகரைகளிலுமுள்ள பல்வேறு பாசனக்
கால்வாய்களுக்கு நதியின் நீர் செல்வது தடைபட்டுள்ளது.
கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் பல்லாயிரம்
ஏக்கர் விளை நிலங்களின் பாசனத் தேவையை நிறைவு செய்த கட்டளைத்
தென்கரை கால்வாயைக் காட்டிலும் காவிரி ஆறு இப்பொழுது
பள்ளமாகிவிட்டது. இப்பிரச்னையைச் சமாளிக்க தமிழக அரசு, கரூர்
மாவட்டம் மாயனூர் அருகே 180 கோடி ரூபாய் செலவில் கதவணை அமைத்து
வருகிறது.
"ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும்
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்' என்று ஆற்று மணலின் நீர்
பிடிப்புத்தன்மையைப் போற்றுகிறது செம்மொழித் தமிழ் இலக்கியமான
மூதுரை. இத்தகைய அருமை வாய்ந்த ஆற்று மணல் தொடர்ந்து
அள்ளப்படுவதனால் காவிரிப் படுகையின் நிலத்தடி நீர் மட்டம்
வெகுவாகக் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் மதுரை,
திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் முதலிய பல்வேறு
மாவட்டங்களுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் காவிரியின்
கரையிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மணல்
அள்ளப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டு நிலத்தடி நீர்மட்டம்
பாதுகாக்கப்படாவிட்டால் பல நூறு கோடி ரூபாய் செலவில்
தொடங்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டங்களெல்லாம்
பயனற்றுப் போகும்.
பல்வேறு மாநிலங்களில் மணலுக்கு
மாற்றான கட்டுமானப் பொருளாக பாறைத் துகளைப் பயன்படுத்துவது
அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் மணல்
விற்பனையைத் தொடரும் அரசின் கொள்கை நிலைப்பாடு நீர்வள
ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டியது பற்றிய தொலை நோக்கின்மையையே
காட்டுகிறது.
நாகரிகம் வளர்த்த நம் நதிகளையெல்லாம் வெறும் மணற்
குவாரிகளாக மாற்றிய பெருமை திராவிட ஆட்சியாளர்களையே சாரும்.அரசு
நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்துக்காக தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது
மதுபானத் தொழிற்சாலைகள் தயாரித்தளிக்கும் மதுபானங்கள்
போதாமல் பத்தாவதாகத் தஞ்சை வடசேரியில் மதுபானத் தொழிற்சாலை
அமைக்கத் தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது.
விவசாயத்தையே
வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள வடசேரி கிராமத்தினரின் கடுமையான
எதிர்ப்பையும் பொருள்படுத்தாமல் அதற்கு அரசு நிர்வாகம்
அனுமதியளித்திருப்பதன் பின்னணி மக்கள் நலமா? சுய நலமா?
உள்ளூர் மக்களை காவல்துறையை ஏவி விரட்டியடித்துவிட்டு வெளியூர்
மக்களைக் கொண்டு ஆலை வளாகத்துக்குள்ளேயே தமக்கு ஆதரவான ஒரு
கருத்துக்கேட்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். முப்போகம் நெல்
விளைகிற வடசேரி கிராமத்தின் சிறப்பே ஐந்தடி ஆழத்தில் நிலத்தடி
நீர்மட்டம் இருப்பதுதான்.
சராசரியாக இரண்டு ஏக்கருக்கு ஓர்
ஆழ்துளைக் கிணறு அமைத்து விவசாயத்துக்கு நிலத்தடி நீரைப்
பயன்படுத்துவதைக் காட்டிலும் நாற்பது ஏக்கர் பரப்பளவில்
அமைந்துள்ள மதுபானத் தொழிற்சாலைக்கு மூன்று ஆழ்துளைக்கிணறுகள்
மட்டுமே அமைத்து நாளொன்றுக்கு 17 லட்சம் லிட்டர் நீரைப்
பயன்படுத்துவதாகக் கூறும் ஆலை நிர்வாகமும் அதற்கு ஒப்புதல்
அளித்துள்ள தமிழ்நாடு நிலத்தடி நீர் வாரியமும் ஓர் உண்மையை
மறைத்துவிட்டன. விவசாயிகள் எவ்வளவு நீரைப்
பாசனத்துக்காக நிலத்தின் அடியிலிருந்து எடுத்தாலும் பயிருக்குத்
தேவையானது போக மீதமுள்ள நீர் மீண்டும் நிலத்துக்கடியில்
செல்வதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவுபடாமல்
பாதுகாக்கப்படும். இது சாதாரண அறிவுக்கும் எட்டக்கூடிய
அறிவியல் உண்மை.
ஆனால், மதுபானத் தொழிற்சாலை உறிஞ்சி எடுக்கும் 17
லட்சம் லிட்டர் நீரும் மதுபானமாக மாற்றப்பட்டு, பாட்டில்களில்
அடைக்கப்பட்டு செந்தமிழர் நாடு முழுவதும் விற்பனைக்கு
அனுப்பப்படும். இதனால் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம்
ஒருசில ஆண்டுகளில் பல நூறு அடி கீழே சென்றுவிடும் என்பதில்
ஐயமில்லை.
நன்றி : தினமணி
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» Kb கும் KB கும் உள்ள வித்தியாசம்
» தாத்தாவின் செம்மொழி மாநாடும்... பேரனின் 'குவாட்டர் கட்டிங்'கும்!
» எங்(கே)கும் கடவுள்
» திரையரங்குகள் இல்லை: 25 திரைப்படங்கள் முடங்கும் அபாயம்
» சூடுபிடிக்கும் மாநிலங்களவைத் தேர்தல்
» தாத்தாவின் செம்மொழி மாநாடும்... பேரனின் 'குவாட்டர் கட்டிங்'கும்!
» எங்(கே)கும் கடவுள்
» திரையரங்குகள் இல்லை: 25 திரைப்படங்கள் முடங்கும் அபாயம்
» சூடுபிடிக்கும் மாநிலங்களவைத் தேர்தல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|