Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"துதியரங்கம்' ஆக மாறிய கவியரங்கம்
3 posters
Page 1 of 1
"துதியரங்கம்' ஆக மாறிய கவியரங்கம்
கோவை : கோவை செம்மொழி மாநாட்டில் நேற்று கவியரங்கம் நடந்தது.
தலைப்புக்கு சற்றும் பொருத்தமில்லாமல், முதல்வரை துதி பாடவும், அரசியல்
பேசவும் மட்டுமே பயன்பட்ட இந்த கவியரங்கில், ஈழத்தமிழர் பிரச்னையும்
ஆங்காங்கே எட்டிப் பார்த்தது. பேசிய அனைத்து கவிஞர்களும், முதல்வர்
கருணாநிதி தான் தமிழுக்கு காவல்காரன் எனக் கூறி அவரை மகிழ்ச்சியில்
ஆழ்த்தினர்.
கோவையில் நடைபெற்று வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்,
"தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற கவியரங்குக்கு, கவிஞர் வாலி தலைமை
தாங்கினார். பங்கேற்ற அனைவரும், முதல் வரிசையில் அமர்ந்திருந்த முதல்வர்
கருணாநிதியை துதி பாடும் களமாகவே மேடையை பயன்படுத்திக் கொண்டனர்.
தலைமை வகித்து பேசிய கவிஞர் வாலி, ""தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல,
தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் கலைஞர் தான் காவல். அதனால் தான், அவரது
நிழலில் ஒதுங்க எல்லாருக்கும் ஆவல்,'' என்றார். சமீபத்தில் அ.தி.மு.க.,
கட்சியில் இருந்து தி.மு.க.,வுக்கு தாவிய முன்னாள் அமைச்சர்கள்
முத்துசாமியையும், சின்னசாமியையும் தனது கவிதையில் புகுத்த மறக்கவில்லை
வாலி. ""ஆலயம் தானே சாமிகளுக்கு இடம். அதனால் தானோ, "சாமிகள்' அறிவாலயம்
நோக்கி வருகின்றன. கலைஞர் தான் தமிழுக்கு காப்பு; அவருக்கு ஒரு கைகூப்பு,''
என்றார்.
கவியரங்கை துவக்கி வைத்து கவிஞர் மேத்தா பேசுகையில், ""இதுவரை
தமிழ் உலகை பேசியது. இப்போது உலகமே தமிழைப் பற்றி பேசுகிறது. தமிழ்த்
தலைவரைப் பற்றி பேசுகிறது. பேசப்படும் தலைவரைப் பற்றி நான் பேசாமல்
வணங்குகிறேன். குழந்தைக்கு தாய் குவளையில் பால் ஊட்டுவாள்.ஒரு குவளை
தமிழ்த் தாய்க்கே பால் ஊட்டியது; அது திருக்குவளை. நாத்திகன் என்றாலும்
அவர் தினமும் ஆலயம் போய் வருவார்; அறிவாலயம் எனும் ஆலயத்துக்கு.
இலக்கியத்தில் தலை கொடுக்க முன் வந்தார் குமணன்; குடியிருக்கும் வீட்டையே
கொடையாகத் தந்து குமணனை வென்றார் கலைஞர். இப்போது அவர், கோடானுகோடி
தமிழர்களின் இதயத்தில் குடியிருக்கிறார்,'' என்றார்.
முதல்வருடன் அமர்ந்திருந்த துணை முதல்வர் ஸ்டாலினையும் விட்டு
வைக்கவில்லை. ""இவர் துணை முதல்வர் தான். ஒரு வழியில் இவர் முதல்வர்.
சுரேகாவின் வீட்டுக் கதவை முதலில் தட்டி கண் பார்வை கொடுத்ததில் முதல்வர்.
அகவை இவருக்கு 58; இவர் உதவிக்கு அழைத்தால் ஓடி வரும் 108. வாழும்
வள்ளுவருக்கே குறள் சொல்பவர். தமிழ் படித்தால் வேண்டும் இங்கே
வேலைவாய்ப்பு; தமிழுக்கும் வேண்டும் இங்கு வேலைவாய்ப்பு,'' என்றார்.
கவிஞர் தணிகாசலம் பேசுகையில், ""இன்று காவிரியை கடக்க ஓடம்
வேண்டாம்; ஒட்டகம் போதும். அம்மா மண்டபம் அடியோடு காலி. இந்த மாமண்டபம்
நிறைந்து வருவதே இன்றைய செய்தி. கணவனை இழந்த கண்ணகியின் சீற்றத்தில்
நியாயம் இருந்தது. ஈழத்தில் அனைத்தையும் இழந்த எங்கள் கோபமும் நியாயம்,
நியாயம்,'' என்றார்.
கவிஞர் இளம்பிறை பேசுகையில், ""கடல் அலையாக பொங்கும் உணர்வை
கம்பி வலைகளா தடுக்கும்? படுகாயங்கள் சருகாய் உருகும். விடுதலை பயிர்கள்
விளையும். பதறி பறந்த பறவைகள் மீண்டும் ஒன்றாய் சேரும். தமிழினத்துக்கு
இல்லை வீழ்ச்சி; அதற்கு இந்த மாநாடே சாட்சி,'' என்றார்.
கவிஞர் பழனிபாரதி பேசுகையில், ""நீ சுவாசிப்பது காற்றை அல்ல;
தமிழ்ப் பாட்டை. முத்தமிழுக்கு தலைவன் என உன்னைக் கூறினால் ஏற்க மாட்டேன்.
நாடகத் தமிழ், கட்டுரைத் தமிழ், கலைஞர் தமிழ், பாட்டுத் தமிழ் போன்ற அத்தனை
தமிழுக்கும் நீதான் தலைவன். வீடு வரை உறவு; வீதி வரை மனைவி, காடு வரை
பிள்ளை; கடைசி வரை கலைஞர். நேற்று கட்சி துவங்கியவர்கள் எல்லாம் முதல்வராகி
விடுவதாகக் கூறுகின்றனர். நீ பிரதமர் ஆகலாம்; உன் உயரம் சூரியனின்
உயரம்,'' என்றார்.
இறுதியாக பேசிய கவிஞர் பா.விஜய், தனது கவிதையால் முதல்வரை
நனைத்தெடுத்தார். அவர் பேசுகையில், ""கலைஞர் கூட கோவைக்காரர் தான்.
கோவைக்காரர்கள் தங்கள் பேச்சில், "ஏனுங்கண்ணா, என்னங்கண்ணா' போட்டு
பேசுவர். கலைஞரும் "அண்ணா, அண்ணா' என்று பேசுவதால் அவரும் கோவைக்காரர்
தான். எனக்கு மூச்சில் தமிழ்; உனக்கு மூச்சே தமிழ். கலைஞருடன் நெருங்கி
பழகுபவர் அனைவரும் பெரிய கவிஞர் ஆகி விடுவர். விரைவில் வெளிவரும் குஷ்பு
எழுதிய குட்டிக்கவிதை புத்தகம். தமிழ்நாட்டில் செல்போன் போல் கட்சிகள்.
எத்தனை கட்சிகள் இருந்தாலும் அனைத்துக்கும் ரிங் டோன் கலைஞர் தான்.
செம்மொழி மாநாடு மிச்ச சாதனை அல்ல; உனது உச்ச சாதனை,'' என்றார்.
இவ்வாறு இறுதி வரை பேசியவர் எவரும், தலைப்பை மருந்துக்குக் கூட
தொடவில்லை. அனைவரின் பாராட்டுப் பத்திரங்களையும் முதல்வர் கருணாநிதி
முன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.இறுதியில் மேடையை விட்டு இறங்கிய
அனைவரும், முதல்வர் அருகில் வந்து நலம் விசாரித்து, கூட நின்று புகைப்படம்
எடுத்துக் கொண்டனர்.
தலைப்புக்கு சற்றும் பொருத்தமில்லாமல், முதல்வரை துதி பாடவும், அரசியல்
பேசவும் மட்டுமே பயன்பட்ட இந்த கவியரங்கில், ஈழத்தமிழர் பிரச்னையும்
ஆங்காங்கே எட்டிப் பார்த்தது. பேசிய அனைத்து கவிஞர்களும், முதல்வர்
கருணாநிதி தான் தமிழுக்கு காவல்காரன் எனக் கூறி அவரை மகிழ்ச்சியில்
ஆழ்த்தினர்.
கோவையில் நடைபெற்று வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்,
"தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற கவியரங்குக்கு, கவிஞர் வாலி தலைமை
தாங்கினார். பங்கேற்ற அனைவரும், முதல் வரிசையில் அமர்ந்திருந்த முதல்வர்
கருணாநிதியை துதி பாடும் களமாகவே மேடையை பயன்படுத்திக் கொண்டனர்.
தலைமை வகித்து பேசிய கவிஞர் வாலி, ""தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல,
தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் கலைஞர் தான் காவல். அதனால் தான், அவரது
நிழலில் ஒதுங்க எல்லாருக்கும் ஆவல்,'' என்றார். சமீபத்தில் அ.தி.மு.க.,
கட்சியில் இருந்து தி.மு.க.,வுக்கு தாவிய முன்னாள் அமைச்சர்கள்
முத்துசாமியையும், சின்னசாமியையும் தனது கவிதையில் புகுத்த மறக்கவில்லை
வாலி. ""ஆலயம் தானே சாமிகளுக்கு இடம். அதனால் தானோ, "சாமிகள்' அறிவாலயம்
நோக்கி வருகின்றன. கலைஞர் தான் தமிழுக்கு காப்பு; அவருக்கு ஒரு கைகூப்பு,''
என்றார்.
கவியரங்கை துவக்கி வைத்து கவிஞர் மேத்தா பேசுகையில், ""இதுவரை
தமிழ் உலகை பேசியது. இப்போது உலகமே தமிழைப் பற்றி பேசுகிறது. தமிழ்த்
தலைவரைப் பற்றி பேசுகிறது. பேசப்படும் தலைவரைப் பற்றி நான் பேசாமல்
வணங்குகிறேன். குழந்தைக்கு தாய் குவளையில் பால் ஊட்டுவாள்.ஒரு குவளை
தமிழ்த் தாய்க்கே பால் ஊட்டியது; அது திருக்குவளை. நாத்திகன் என்றாலும்
அவர் தினமும் ஆலயம் போய் வருவார்; அறிவாலயம் எனும் ஆலயத்துக்கு.
இலக்கியத்தில் தலை கொடுக்க முன் வந்தார் குமணன்; குடியிருக்கும் வீட்டையே
கொடையாகத் தந்து குமணனை வென்றார் கலைஞர். இப்போது அவர், கோடானுகோடி
தமிழர்களின் இதயத்தில் குடியிருக்கிறார்,'' என்றார்.
முதல்வருடன் அமர்ந்திருந்த துணை முதல்வர் ஸ்டாலினையும் விட்டு
வைக்கவில்லை. ""இவர் துணை முதல்வர் தான். ஒரு வழியில் இவர் முதல்வர்.
சுரேகாவின் வீட்டுக் கதவை முதலில் தட்டி கண் பார்வை கொடுத்ததில் முதல்வர்.
அகவை இவருக்கு 58; இவர் உதவிக்கு அழைத்தால் ஓடி வரும் 108. வாழும்
வள்ளுவருக்கே குறள் சொல்பவர். தமிழ் படித்தால் வேண்டும் இங்கே
வேலைவாய்ப்பு; தமிழுக்கும் வேண்டும் இங்கு வேலைவாய்ப்பு,'' என்றார்.
கவிஞர் தணிகாசலம் பேசுகையில், ""இன்று காவிரியை கடக்க ஓடம்
வேண்டாம்; ஒட்டகம் போதும். அம்மா மண்டபம் அடியோடு காலி. இந்த மாமண்டபம்
நிறைந்து வருவதே இன்றைய செய்தி. கணவனை இழந்த கண்ணகியின் சீற்றத்தில்
நியாயம் இருந்தது. ஈழத்தில் அனைத்தையும் இழந்த எங்கள் கோபமும் நியாயம்,
நியாயம்,'' என்றார்.
கவிஞர் இளம்பிறை பேசுகையில், ""கடல் அலையாக பொங்கும் உணர்வை
கம்பி வலைகளா தடுக்கும்? படுகாயங்கள் சருகாய் உருகும். விடுதலை பயிர்கள்
விளையும். பதறி பறந்த பறவைகள் மீண்டும் ஒன்றாய் சேரும். தமிழினத்துக்கு
இல்லை வீழ்ச்சி; அதற்கு இந்த மாநாடே சாட்சி,'' என்றார்.
கவிஞர் பழனிபாரதி பேசுகையில், ""நீ சுவாசிப்பது காற்றை அல்ல;
தமிழ்ப் பாட்டை. முத்தமிழுக்கு தலைவன் என உன்னைக் கூறினால் ஏற்க மாட்டேன்.
நாடகத் தமிழ், கட்டுரைத் தமிழ், கலைஞர் தமிழ், பாட்டுத் தமிழ் போன்ற அத்தனை
தமிழுக்கும் நீதான் தலைவன். வீடு வரை உறவு; வீதி வரை மனைவி, காடு வரை
பிள்ளை; கடைசி வரை கலைஞர். நேற்று கட்சி துவங்கியவர்கள் எல்லாம் முதல்வராகி
விடுவதாகக் கூறுகின்றனர். நீ பிரதமர் ஆகலாம்; உன் உயரம் சூரியனின்
உயரம்,'' என்றார்.
இறுதியாக பேசிய கவிஞர் பா.விஜய், தனது கவிதையால் முதல்வரை
நனைத்தெடுத்தார். அவர் பேசுகையில், ""கலைஞர் கூட கோவைக்காரர் தான்.
கோவைக்காரர்கள் தங்கள் பேச்சில், "ஏனுங்கண்ணா, என்னங்கண்ணா' போட்டு
பேசுவர். கலைஞரும் "அண்ணா, அண்ணா' என்று பேசுவதால் அவரும் கோவைக்காரர்
தான். எனக்கு மூச்சில் தமிழ்; உனக்கு மூச்சே தமிழ். கலைஞருடன் நெருங்கி
பழகுபவர் அனைவரும் பெரிய கவிஞர் ஆகி விடுவர். விரைவில் வெளிவரும் குஷ்பு
எழுதிய குட்டிக்கவிதை புத்தகம். தமிழ்நாட்டில் செல்போன் போல் கட்சிகள்.
எத்தனை கட்சிகள் இருந்தாலும் அனைத்துக்கும் ரிங் டோன் கலைஞர் தான்.
செம்மொழி மாநாடு மிச்ச சாதனை அல்ல; உனது உச்ச சாதனை,'' என்றார்.
இவ்வாறு இறுதி வரை பேசியவர் எவரும், தலைப்பை மருந்துக்குக் கூட
தொடவில்லை. அனைவரின் பாராட்டுப் பத்திரங்களையும் முதல்வர் கருணாநிதி
முன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.இறுதியில் மேடையை விட்டு இறங்கிய
அனைவரும், முதல்வர் அருகில் வந்து நலம் விசாரித்து, கூட நின்று புகைப்படம்
எடுத்துக் கொண்டனர்.
Re: "துதியரங்கம்' ஆக மாறிய கவியரங்கம்
கவிஞர் வாலி:கலைஞர் தான் தமிழுக்கு காப்பு; அவருக்கு ஒரு கைகூப்பு,''
பிச்ச: நீ போப்பு(போ அப்பு), உனக்கு இருக்கு ஆப்பு!
பிச்ச: நீ போப்பு(போ அப்பு), உனக்கு இருக்கு ஆப்பு!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: "துதியரங்கம்' ஆக மாறிய கவியரங்கம்
பிச்ச wrote:கவிஞர் வாலி:கலைஞர் தான் தமிழுக்கு காப்பு; அவருக்கு ஒரு கைகூப்பு,''
பிச்ச: நீ போப்பு(போ அப்பு), உனக்கு இருக்கு ஆப்பு!
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» கவியரங்கம்..!
» டுபாக்கூர் கவியரங்கம்
» கனவிலோர் கவியரங்கம்
» தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் கவியரங்கம்
» 75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் !
» டுபாக்கூர் கவியரங்கம்
» கனவிலோர் கவியரங்கம்
» தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் கவியரங்கம்
» 75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|